Tuesday, March 31, 2015
புகார்களில் முகாந்திரம் இருந்தும் வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதே நடவடிக்கை குறித்துதான் மதுரைக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த டி ஜி பி அசோக் குமார் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்துள்ளார் .மேலும் நீதிமன்ற உத்தரவில் காவல்நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டிய தேவையில்லை. புகார் உண்மை இல்லை என்று தெரியவந்தால் புகார் முடிக்கப்பட்டதற்கான காரணத்தை புகார்தாரருக்கு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்.
ஊழல், வணிக குற்றங்கள், குடும்பத்தகராறு, மருத்துவம் மீதான புகார்கள் மீது 7 நாட்களுக்குள் முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும். அனைத்து புகார்களின் விவரங்களையும் குறிப்பேட்டில் குறிப்பிட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தமிழக காவல்துறை இயக்குநர் தெரிவிக்க வேண்டும். அதனை போலீசார் சரியாக நடைமுறைப்படுத்துகிறார்களா என்று குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் போலீசார் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்
ஆனால் இது எந்த அளவில் நடைமுறைக்கு சாத்தியம் என்பது மில்லியன் டாலர் கேள்வி
ஏனென்றால் இன்று சாமான்ய மக்களுக்கு உடனடி நியாயம் கிடைக்கிற இடமாக தமிழகத்தில் காவல் நிலையங்கள் இல்லை என்பதே வெட்ட வெளிச்சமான உண்மை
ஒருவர் சாதரணமாக திருட்டு புகார் கொடுக்க சென்றாலே வெள்ளை பேப்பர் ,டீ ,செலவுக்கு காசு என அடுக்கி அவர்களிடம் இருந்து முழுதாக உரித்து விடுவதால் புகார் கொடுக்க வருகிறவர்களின் நிலை பரிதாபத்திற்குரிய நிலை ஆகி விடுகிறது .
வண்டி தொலைந்து போன புகார்களில் ஆளாளுக்கு புகார் கொடுத்தவர் பந்தாடப்பட்டு கடைசியில் வண்டியை மறக்க வேண்டிய சூழலே ஏற்படுகிறது" காவல் துறை உங்கள் நண்பன் உண்மைதான்
நண்பனால் மட்டும்தான் உரிமையாக காசு கேட்க முடியும் … "என்ற வரிகள் சொல்வது போல் சில காவல்துறை அதிகாரிகளை தவிர பெரும்பாலும் காவல்நிலையங்களில் பணியாற்றுவோர்கள் எப்படி காசு பார்க்கலாம் என்ற நிலையிலே பணி செய்கின்றனர் .
பெண்கள் தனியாக புகார் அளிக்க வந்தால் அவர்களுக்கு தரப்படும் வேறு மாதிரியான கவனிப்புகள் பெண்களை காவல்துறை அதிகாரிகள் என்றாலே மிரண்டு ஓட செய்து விடுகிறது
ஆர்ப்பாட்டம் ,பொதுக் கூட்டங்களில் ஆங்காங்கு கரை வேட்டிகளிடம் காசு பார்த்திடும் இவர்கள் புகார் கொடுக்க வரும் அப்பாவி பொது மக்களையும் கடைசி மூச்சு வரை காசு வாங்காமல் விடுவதில்லை
மக்கள் சேவகர்கள் என்பதை மறந்து போய் அதிகார தொனியிலேயே பொதுமக்களை அணுகுகின்றனர் .சில நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கும் திருந்தாத புல்லுருவிகளால் கெட்ட பெயரே மிஞ்சுகிறது
மக்கள் கொடுக்கும் புகாரினை காவல் துறையினர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. காவல் துறையினர்தங்கள் முன் வரும் புகார்களில் முகாந்திரங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு CSR அல்லது திமிஸி பதிவு செய்வது அவசியம். அவ்வாறாக பதிவு செய்ய மறுப்பது சட்டத்தின் முன் ஏற்புடைய செயல் அல்ல. பதிவு செய்ய மறுக்கும் பட்சத்தில் தலைமை காவல் அலுவலருக்கு பதிவு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ புகாரை அனுப்பி பதிவு செய்யலாம். அப்படியும் பதிவு செய்யப்படவில்லை எனில் நீதிமன்ற ஆணை பெற்று பதிவு செய்ய சட்டத்தில் வழிஉண்டு. காவல் துறையினர் புகாரை பதிவு செய்வதுடன் முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகலை புகார் கொடுப்பவருக்கு இலவசமாக அளிப்பது சட்டப்படி அவசியம்.
சட்டங்களும், காவலை துறை விசாரிப்புகளும் எளிமையானால் மக்கள் தைரியமாக புகார் கொடுப்பார்கள் இவர்கள் மாற வாய்ப்பு இருப்பதாக எள்ளளவும் நம்பிக்கை இல்லை என்பதே கசப்பான உண்மை !
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment