Monday, August 17, 2015
சிவகாசியில் அரசு சார்பில் நடந்த விழாவில் 3131 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை அமைச்சர் வழங்கினார்.
சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில்
விலையில்லா பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
இதில், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது: ஏழை மக்கள்
பயனடையும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வருகிறார்.
அதன் அடிப்படையில் 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு
விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சிறப்புத் திட்டத்தின்
மூலம் கடந்த மூன்றாண்டுகளில் 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை
வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 4,5ஆம் கட்டமாக மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு
வருகிறது. இவ்விழாவில் 3131 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவை உறுப்பினர்
டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்தா, மாவட்ட ஊராட்சி
துணைத்தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
சி.சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் சுடர்வள்ளி,
சிவகாசி நகராட்சித் தலைவர் கதிரவன், துணைத் தலைவர் அசன்பக்ருதின், மாவட்ட
ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீராதாரங்களில் 2.40 டி.எம்.சி., கையிருப்பு உள்ளதால், சென்னையில், இரண்டரை மாதத்திற்கு குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. கடந...
0 comments:
Post a Comment