Monday, August 17, 2015
சிவகாசியில் அரசு சார்பில் நடந்த விழாவில் 3131 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை அமைச்சர் வழங்கினார்.
சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில்
விலையில்லா பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
இதில், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது: ஏழை மக்கள்
பயனடையும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வருகிறார்.
அதன் அடிப்படையில் 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு
விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சிறப்புத் திட்டத்தின்
மூலம் கடந்த மூன்றாண்டுகளில் 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை
வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 4,5ஆம் கட்டமாக மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு
வருகிறது. இவ்விழாவில் 3131 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவை உறுப்பினர்
டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்தா, மாவட்ட ஊராட்சி
துணைத்தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
சி.சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் சுடர்வள்ளி,
சிவகாசி நகராட்சித் தலைவர் கதிரவன், துணைத் தலைவர் அசன்பக்ருதின், மாவட்ட
ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர் திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட...
-
கிராமங்களில் அழிந்து வரும் கலைகளை பாது காக்கவும், புத்துணர்வு அளிப்பதற்காகவும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசிய அளவில் கலை விழா போட்டிகள் நட...
-
திருச்சியில் பிஜேபியின் சார்பாக தேர்தல் ஆலேசானை கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் தலைவர் முரலிதர ராவ் மற்றும...
0 comments:
Post a Comment