Monday, September 14, 2015
விதை ஆய்வு துணை இயக்குநர் சி.கிருஷ்ணகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்து விவசாயப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி, பயறு வகை விதைகள் இருப்பில் உள்ளன. இவற்றில் விதை ஆய்வு பிரிவின் மூலம் 659 விதை மாதிரிகள் இப்பருவத்தில் சேகரிக்கப்பட்டு தர ஆய்வு நடைபெற்று வருகிறது.
விவசாயிகள், விதைகளை வாங்கும்போது விற்பனைப் பட்டியல் அல்லது ரசீதை கேட்டு வாங்க வேண்டும். விதையின் காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை கவனிக்க வேண்டும்.
சான்றுபெற்ற தரமான விதைகளையேப் பயன்படுத்த வேண்டும். விதை விற்பனையாளர் விதை விவரப் பலகையை பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். விற்பனைப் பட்டியலில் விவசாயியின் முழு முகவரி, குவியல் எண் விவரங்களைக் குறிப்பிட்டு விவசாயியிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விலைக்கு விதைகளை விற்கக்கூடாது. விதைச் சட்டங்களை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் தற்போது தனியார் விதைக் கடைகளில் மானாவாரிக்கு ஏற்ற கே–8 15 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக சோளம் சுமார் 16 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. மேலும், மக்காச்சோளம் வீரிய ஒட்டு ரகம் சுமார் 40 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக பருத்தி (பி.டி. பருத்தி) சுமார் 5 மெட்ரிக் டன், பயறு வகைகள் சுமார் 26 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதர வீரிய ஒட்டு ரக சோளங்களை வாங்கி பயிரிடவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பெய்து விவசாயப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், விற்பனை நிலையங்களில் மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி, பயறு வகை விதைகள் இருப்பில் உள்ளன. இவற்றில் விதை ஆய்வு பிரிவின் மூலம் 659 விதை மாதிரிகள் இப்பருவத்தில் சேகரிக்கப்பட்டு தர ஆய்வு நடைபெற்று வருகிறது.
விவசாயிகள், விதைகளை வாங்கும்போது விற்பனைப் பட்டியல் அல்லது ரசீதை கேட்டு வாங்க வேண்டும். விதையின் காலாவதி நாள், பயிரிட ஏற்ற பருவம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை கவனிக்க வேண்டும்.
சான்றுபெற்ற தரமான விதைகளையேப் பயன்படுத்த வேண்டும். விதை விற்பனையாளர் விதை விவரப் பலகையை பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். விற்பனைப் பட்டியலில் விவசாயியின் முழு முகவரி, குவியல் எண் விவரங்களைக் குறிப்பிட்டு விவசாயியிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும். கூடுதல் விலைக்கு விதைகளை விற்கக்கூடாது. விதைச் சட்டங்களை மீறும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் தற்போது தனியார் விதைக் கடைகளில் மானாவாரிக்கு ஏற்ற கே–8 15 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக சோளம் சுமார் 16 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. மேலும், மக்காச்சோளம் வீரிய ஒட்டு ரகம் சுமார் 40 மெட்ரிக் டன், வீரிய ஒட்டு ரக பருத்தி (பி.டி. பருத்தி) சுமார் 5 மெட்ரிக் டன், பயறு வகைகள் சுமார் 26 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதர வீரிய ஒட்டு ரக சோளங்களை வாங்கி பயிரிடவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment