Wednesday, September 23, 2015
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
நமக்கு நாமே சுற்றுப்பயணத்தின் நான்காம் நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு துறையைச் சேர்ந்த மக்களிடம் உரையாடினார். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் விவசாய மக்களுடன் உரையாடினார். அங்கு 46ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் எப்படி 7ஆயிரம் ஏக்கர் என்ற அளவுக்கு சுருங்கிப்போயிற்று இதை கேட்கும்போதும், இந்த ஆட்சியில் விவசாயத்தின் வீழ்ச்சியை கண்ணுறுவதும் மிக்க வேதனையைத் தருகிறது என்றார்.
தொடர்ந்து அவர் தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தங்களுடைய வணிகத்துக்கு அரசு கடன்கள் வழங்காதது குறித்தும், சுய உதவிக்குழுவின் கட்டமைப்பு எவ்வாறு படிப்படியாக சரிந்து வருகிறது என்பதையும் பகிர்ந்துகொண்டனர். அ.தி.மு.க. அரசு, சுய உதவிக் குழுக்களுக்கு 25 சதவிகித மானியத்தில் 10 லட்ச ரூபாய் கடன்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அதுபோன்ற கடன்கள் எதுவும் இந்தப் பகுதியிலுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவில்லை என்றார்.
தொடந்து தூத்துக்குடியில் உள்ள உப்பளத்திற்கு சென்று தொழிலாளர்களை சந்தித்தார். கடினமான இந்த தொழிலுக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது. எப்பொழுதும் வேலை கிடைக்கிறதா என்பது பற்றி கேட்டறிந்தார். பின்னர் தூத்துக்குடி வஉசி மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சென்றார். பின்னர் அவர், ஹோட்டல் பானு பிரிந்தாவனில் மாணவர்களோடு கலந்துரையாடி, அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.
அப்போது மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிகளை விரைவாக அறிவிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்களை விடுத்துனர். அப்போது ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதில் எங்களைவிட நீங்கள் நம்பிக்கையாக இருக்கிறீர்கள். உங்களின் நம்பிக்கை நிறைவேறும். அப்போது உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment