Wednesday, September 23, 2015
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
நமக்கு நாமே சுற்றுப்பயணத்தின் நான்காம் நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு துறையைச் சேர்ந்த மக்களிடம் உரையாடினார். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் விவசாய மக்களுடன் உரையாடினார். அங்கு 46ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் எப்படி 7ஆயிரம் ஏக்கர் என்ற அளவுக்கு சுருங்கிப்போயிற்று இதை கேட்கும்போதும், இந்த ஆட்சியில் விவசாயத்தின் வீழ்ச்சியை கண்ணுறுவதும் மிக்க வேதனையைத் தருகிறது என்றார்.
தொடர்ந்து அவர் தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தங்களுடைய வணிகத்துக்கு அரசு கடன்கள் வழங்காதது குறித்தும், சுய உதவிக்குழுவின் கட்டமைப்பு எவ்வாறு படிப்படியாக சரிந்து வருகிறது என்பதையும் பகிர்ந்துகொண்டனர். அ.தி.மு.க. அரசு, சுய உதவிக் குழுக்களுக்கு 25 சதவிகித மானியத்தில் 10 லட்ச ரூபாய் கடன்கள் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அதுபோன்ற கடன்கள் எதுவும் இந்தப் பகுதியிலுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படவில்லை என்றார்.
தொடந்து தூத்துக்குடியில் உள்ள உப்பளத்திற்கு சென்று தொழிலாளர்களை சந்தித்தார். கடினமான இந்த தொழிலுக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது. எப்பொழுதும் வேலை கிடைக்கிறதா என்பது பற்றி கேட்டறிந்தார். பின்னர் தூத்துக்குடி வஉசி மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சென்றார். பின்னர் அவர், ஹோட்டல் பானு பிரிந்தாவனில் மாணவர்களோடு கலந்துரையாடி, அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.
அப்போது மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிகளை விரைவாக அறிவிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்களை விடுத்துனர். அப்போது ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதில் எங்களைவிட நீங்கள் நம்பிக்கையாக இருக்கிறீர்கள். உங்களின் நம்பிக்கை நிறைவேறும். அப்போது உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment