Wednesday, September 23, 2015
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் எதிர்வரும் 26.9.2015 அன்று முதல் தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் அரசு பொருட்காட்சி நடைபெற உள்ளது.
இப்பொருட்காட்சியில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட தொழில் மையம், மாநகராட்சி, உள்ளிட்ட 26 அரசு துறைகள் கடந்த 4 ஆண்டுகளில் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சாதனைகள், குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ள அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இவைமட்டுமன்றி, அம்மா சிமெண்ட், தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட 6 அரசுத்துறை பொது நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் இடம் பெறுகின்றன.
மேலும், தனியார் கடைகள், உணவு கூடங்கள், ராட்டினங்கள், தாஜ்மகால் மாதிரி அமைப்பு மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளது. இவற்றிற்கான கட்டுமானம் மற்றும் விளம்பர பதாதைகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் இன்று (23.9.2015) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரங்குகளில் அமைக்கப்படும் கண்காட்சி அமைப்புகளை எதிர்வரும் 25.9.2015 அன்று மாலைக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 26.9.2015 அன்று நடைபெற உள்ள தொடக்க விழாவில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும், அரசு பொருட்காட்சிக்கு வருகை தரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) திரு.வே.ஜெயக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இப்பொருட்காட்சியில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட தொழில் மையம், மாநகராட்சி, உள்ளிட்ட 26 அரசு துறைகள் கடந்த 4 ஆண்டுகளில் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சாதனைகள், குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ள அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இவைமட்டுமன்றி, அம்மா சிமெண்ட், தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட 6 அரசுத்துறை பொது நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் இடம் பெறுகின்றன.
மேலும், தனியார் கடைகள், உணவு கூடங்கள், ராட்டினங்கள், தாஜ்மகால் மாதிரி அமைப்பு மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளது. இவற்றிற்கான கட்டுமானம் மற்றும் விளம்பர பதாதைகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் இன்று (23.9.2015) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரங்குகளில் அமைக்கப்படும் கண்காட்சி அமைப்புகளை எதிர்வரும் 25.9.2015 அன்று மாலைக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 26.9.2015 அன்று நடைபெற உள்ள தொடக்க விழாவில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும், அரசு பொருட்காட்சிக்கு வருகை தரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) திரு.வே.ஜெயக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment