Monday, January 04, 2016
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சியை சேர்ந்தவர் செல்வா (வயது 38). இவர் ஏரலில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜபதியை சேர்ந்த சீதா (36) என்பவருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கொங்கராயக்குறிச்சியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குரும்பூரை அடுத்த சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் ஒரு வாடகை வீட்டிற்கு செல்வா, தனது மனைவி சீதாவுடன் குடிவந்தார். அவர்கள் தங்கள் குழந்தைகள் இருவரையும் கொங்கராயக்குறிச்சியில் உள்ள செல்வாவின் பெற்றோரிடம் விட்டு விட்டு வந்தனர். சீதா வீட்டில் இருந்தபடியே தையல் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்– மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் அவர்கள் சண்டை போட்டுள்ளனர். இன்று அதிகாலையில் செல்வா வீட்டிற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்து விட்டு உடனே திரும்பி சென்றது.
இதனால் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டினுள் கட்டிலில் சீதா பிணமாக கிடந்தார். அவர் அருகில் தலையணை ஒன்று கிடந்தது. சீதா உடலில் காயங்கள் ஏதும் இல்லை. வீட்டில் இருந்து செல்வா தலைமறைவாகி இருந்தார். இதையடுத்து அவர்கள் குரும்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதிகாலை நேரத்தில் செல்வாவிற்கும், சீதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அப்போது செல்வா தலையணையால் சீதாவின் முகத்தில் அமுக்கி உள்ளார். இதில் சீதா மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக செல்வா ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.
ஆம்புலன்ஸ் வந்தபோது சீதா இறந்து விட்டார். இதனால் ஆம்புலன்ஸ் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளது. அந்த நேரத்தில் செல்வா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய செல்வாவை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். செல்வா தன் மனைவியை ஏன் கொலை செய்தார் என்பது தெரியவில்லை. மனைவிக்கும் அவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததால் அதனாலேயே கொலை நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் செல்வா போலீசில் சிக்கினால் தான் இந்த கொலை குறித்த முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment