Monday, January 04, 2016

On Monday, January 04, 2016 by Tamilnewstv in    
திருச்சி 4.1.16
சுதந்திர போராட்ட வீரர் பரதன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சிகளின் சார்பில் அஞ்சலி ஊர்வலம்

  திருச்சி மாவட்டம் திருச்சியில் நேற்று இரவு டெல்லியில் மரணமடைந்த சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளருமான எ.பி.பரதனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகளின் சார்பில் மவுனஊர்வலம் நடந்தது. திருச்சி புத்தூர் 4ரோடு சாலையில் இருந்து ; திருச்சி மாநகர செயலாளர் சுரேஷ் தலைமையில் துவங்கிய ஊர்வலம் கடைவீதி வந்;து உறையூர்குறத்தெரு அருகே முடிவடைந்தது. அங்குவைக்கப்பட்டிருந்த ஏ.பி.பரதனின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் மதி.மு.க. தமிழ்மாநில காங்கிரஸ் ஆகிய கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

0 comments: