Thursday, August 31, 2017
அ தி மு க
கூட்டத்தில்
கத்தியுடன் வந்த வாலிபரை போலீசார் துரத்தியதால் பரபரப்பு
அதிமுக அம்மா அணியில் திருச்சி மாவட்ட புதிய செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னாள் சட்டமன்ற கொறடா மனோகரன் மற்றும் புறநகர் மாவட்ட செயலளாராக ராஜசேகர் ஆகியோரை டி.டி.வி.திவாகரன் நியமித்துள்ளார் இதனை தொடர்ந்து இன்று காலை 10.00 மணிக்கு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக
தெரிவித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டிருந்தனர்.
அப்போது ஒரு வாலிபர் கத்தியுடன் அங்கு வந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அழைத்த போது அவர் அங்கிருந்து தப்பியோடினர். அவரை பிடிக்க முயன்றவர்களை கத்தியை காட்டி மிரட்டி விட்டு அருகில் இருந்த 10 மாடி கட்டிடத்திற்குள் ஒடி ஒளிந்து கொண்டார்.
இதனையடுத்து போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் முரளி என்றும் வயலூரை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.
மேலும் வாலிபர் அங்கு கத்தியுடன் வந்த காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியுடன் வந்த வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment