Thursday, August 31, 2017

On Thursday, August 31, 2017 by Tamilnewstv in ,    
அ தி மு க 
கூட்டத்தில்
கத்தியுடன் வந்த வாலிபரை போலீசார் துரத்தியதால் பரபரப்பு


அதிமுக அம்மா அணியில் திருச்சி மாவட்ட புதிய செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னாள் சட்டமன்ற கொறடா மனோகரன் மற்றும் புறநகர் மாவட்ட செயலளாராக ராஜசேகர் ஆகியோரை டி.டி.வி.திவாகரன் நியமித்துள்ளார் இதனை தொடர்ந்து இன்று காலை 10.00 மணிக்கு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜிஆர்  சிலைக்கு மாலை அணிவிப்பதாக
தெரிவித்திருந்தனர். இதனால் அப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட கட்சியினர் திரண்டிருந்தனர்.
அப்போது ஒரு வாலிபர் கத்தியுடன் அங்கு வந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அழைத்த போது அவர் அங்கிருந்து தப்பியோடினர். அவரை பிடிக்க முயன்றவர்களை கத்தியை காட்டி மிரட்டி விட்டு அருகில் இருந்த 10 மாடி கட்டிடத்திற்குள் ஒடி ஒளிந்து கொண்டார்.
இதனையடுத்து போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் முரளி என்றும் வயலூரை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது.
மேலும் வாலிபர் அங்கு கத்தியுடன் வந்த காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியுடன் வந்த வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: