Monday, September 25, 2017

On Monday, September 25, 2017 by Tamilnewstv in    
திருச்சி – 25.09.17

கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்

திருச்சி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குபவர்களுக்கு தங்கநாணயம் வழங்குதல் என மாநகராட்சி தூய்மை பேணிகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனிடையே திடக்கழிவு மேலாண்மையினை மேம்படுத்தவும் தூய்மை திருச்சி தூதுவராக இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் தில்லைநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக குப்பைகளை அப்புறப்படுத்திய ரெசிடென்சிக்கு விருது வழங்கப்பட்டது, தொடர்ந்து பொதுமக்களுக்கு மக்களும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதற்கு இருவண்ண குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பசுமையினைப்பேணும்வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் பேசிய ஜேம்ஸ்வசந்தன், திருச்சியினை தூய்மையாக வைத்திருக்க அனைவரும்பாடுபடவேண்டும், தொடர்ந்து தூய்மை பட்டியலில் திருச்சி தக்கவைப்பதன்மூலம் நம்மை பாதுகாக்க முடியும் என்றார், மேலும் கமலஹாசன் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதாகவும், அவரது அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாகவும், நல்லது செய்யும் எண்ணமுடைய எவரும் அரசியலுக்கு வரலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

0 comments: