Wednesday, September 06, 2017

On Wednesday, September 06, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி             6.9.17

SDPI கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைப்பெற் ளது. இக் கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர் பேசுகையில்

மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்விலிருந்து உடனடியாக தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க அளிக்க வேண்டும் தற்காலிக தீர்வு அல்ல.

உயர்நீதிமன்றம் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்திருப்பதை SDPI கட்சி வரவேற்கிறது. அது போல் தமிழக அரசு திருமுருகன் காந்தி வழக்கை விரைந்து நடத்த முயற்சி எடுக்க வேண்டும்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் கொத்து கொத்தாக பல்லாயிரக் கணக்கோர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் மத்திய அரசு மியான்மார் அரசை கண்டிக்க வேண்டும் இந்தியாவில் வாழும்  ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு உரிய உரிமையும், குடியுரிமை வழங்க வேண்டும் உயிரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசல் ஒட்டுநர் உரிமம் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களுருவில் நேற்று மாலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என SDPI கட்சி கேட் கொள்கிறது என தெரிவித்தார்.

பேட்டி  : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் (SDPI கட்சி)

0 comments: