Showing posts with label ராமேசுவரம். Show all posts
Showing posts with label ராமேசுவரம். Show all posts

Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
பதிவு செய்த    
ராமேஸ்வரம்: இலங்கையில் உள்ள படகுகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வர் மீனவர்கள் கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by Unknown in ,    
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஆய்வுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் கோவிலின் 4 நுழைவு வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவிலுக்குள், வட மாநில பக்தர்களுடன், அய்யப்ப பக்தர்கள் கூட்டமும் மிகுந்து காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் கோவிலில், இன்று ஆய்வு கூட்டம் நடந்தது.
போலீஸ் துணை கமிஷனர் சமந்த்ரோகன் ராஜேந்திரா, கோவிலின் நிர்வாக அதிகாரி நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவிலில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூடுதலாக எந்தெந்த இடங்களில் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவாடானையில் புதி தாக கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு மையத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத் தார்.

புதிய கட்டிடம்

திருவாடானையில் ஊரக உட்கட்டமைப்பு இடை நிரப்பு நிதி 2013-14ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மையம் ரூ.5½ லட் சம் செலவில் புதிதாக கட்டப் பட்டுள்ளது. இந்த கட்டி டத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத்தார். திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு 3 சக்கர மிதி வண் டிகளை வழங்கினார். அத னைத்தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளால் தயாரிக்கப் படும் கைவினைப் பொருட் களை பார்வையிட்டார். அதன் பின்னர் மாற்றுத்திற னாளி மையம் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும், மையத் துக்கு புதிதாக சுற்றுச்சுவர் கட்டித்தரப்படும் என்று தெரி வித்தார்.

அதனை தொடர்ந்து திரு வாடானையில் ரூ.1.54 கோடி செலவில் புதிதாக கட்டப் பட்டு வரும் பஸ் நிலைய கட் டிடப்பணிகளை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பஸ் நிலை யத்தின் வரைபடத்தை பார் வையிட்டு ஆய்வு செய்த அவர் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் பஸ் நிலையத்தில் திருவாடானை ஊராட்சி சார்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.

ஆய்வு

திருவாடானை அரசு ஆஸ் பத்திரிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்கு செவிலி யர்களிடம் பணியாளர்கள், நோயாளிகள் வருகை குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங் கினார். திருவாடானை யூனி யன் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கோர்ட்டு, நீதிபதி குடி யிருப்பு, நூலகம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி, வட்டார குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் பல்வேறு அலுவலக கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் யூனியன் அலுவல கத்துக்கு புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பாக அதி காரிகளுடன் ஆலோசனை செய்தார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் பழனி, யூனியன் தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கள் காந்தி மாறன், ஊராட்சி தலைவர்கள் முத்து, காளை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பொதுமக்கள் உணவாக பயன்படுத்தாமல் தென்னை மரங்களுக்கு உரமாக மாறுவது சங்காயம் எனப்படும் மீன்கள்தான்.

சங்காயம் மீன்கள்

ராமேசுவரம், பாம்பன் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கும் பலவகையான மீன்கள் உணவுப்பொருளாக உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் மீனவர்கள் பிடித்து வரும் சங்காயம் என்ற பெயருடைய சிறிய வகை மீன்கள் உணவாக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக இவை கோழித் தீவனமாகவும், தென்னை மரங்களுக்கு உரமாகவும் பயன்படுத்தப்படுவதுடன், இதற்காகவே ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் அனைவரும் நேற்று காலை மீன்களுடன் கரை திரும்பினர். அவர்களில் ஒரு சிலரின் படகுகளில் சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரை சங்காயம் மீன்கள் சிக்கியிருந்தன.

இந்த மீன்கள் முழுவதும் கடற்கரையிலேயே உலர வைக்கப்பட்டன. இந்த பணியில் மீனவர்களும், மீனவ பெண்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

தென்னை மரங்களின் உரம்

சங்காயம் மீன்கள் அதிக அளவில் கிடைத்தது குறித்து பாம்பனை சேர்ந்த மீன் வியாபாரி ஸ்டீபன் என்பவர் கூறியதாவது:-

விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் சங்காயம் மீன்களை மொத்த விலைக்கு வாங்குவோம். பின்னர் அவற்றை கடற்கரையிலேயே உலர வைத்து லாரி, வேன் மூலம் நாமக்கல், சேலம் போன்ற இடங்களுக்கு கோழித் தீவனத்திற்கு அனுப்பி வைப்போம். அத்துடன் தென்னை மரங்களுக்கு உரமாகவும் சங்காயம் மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவை கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த மீன்களை உப்புடன் சேர்த்து தென்னை மரத்தின் அடிப்பகுதியில் குழி தோண்டி புதைத்து வைத்தால் மரம் நன்றாக வளர்ச்சி அடைவதுடன், விளைச்சலும் அதிகமாக இருக்கும். இதனால் தமிழகத்தில் ஏராளமான ஊர்களுக்கு சங்காயம் மீன்கள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மீன் உலர்த்தப்பட்ட நிலையில் 1 கிலோ ரூ.32 முதல் ரூ.35 வரை விலை போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களுக்கும் இந்த மீன்கள் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்தனர். இவர்கள் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்தோணிசாமி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 5 மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் காப்பாற்றி தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகையும் 9 மீனவர்களையும் பிடித்துச் சென்றனர். அவர்களை ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். நேற்று 9 மீனவர்களும் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 30–ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து சிறையில் அடைத்தனர்.