Showing posts with label Tiruchchirappalli. Show all posts
Showing posts with label Tiruchchirappalli. Show all posts
Monday, November 24, 2014
திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமான பயணிகளிடம் நடந்து வருகிறார்கள்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தென்பகுதி ஏழை ஆண், பெண் இருபாலரிடம் இவர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி அதிகபிரசிங்கிதனமான கேள்விகளை கேட்டு மனக்கஸடத்தை ஏற்படுத்தி அசிங்கபடுத்துகின்றனர்.
விமான பயணிகள் ஏதேனும் புரியாமல் விளக்கம் கேட்டால் இங்கேயே இப்படி ? அங்கே போய் என்ன புடுங்கபோற என்கிறார் ஒரு அதிகாரி
வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று அவர்கள் ஈட்டும் சிறுசேமிப்பில் வாங்கும் 4 அல்லது 5 பவுனை சோதனை செய்த பின் இது பொண்டாட்டிக்கா இல்லை வப்பாட்டிக்கா என கேட்கும் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.
அதுவும் இவர்கள் மலேசிய குடியுரிமை தமிழர்களிடம் பழகும் பாங்கு இருக்கிறதே ? நல்ல வேலை நம்ம தாத்தா காலத்திலேயே நாம இங்கிருந்து போய்விட்டோம் என்று அவர்கள் வாயலயே சொல்லுற அளவுக்கு இருக்கு...
இது எல்லாம் முடிந்த பிறகு ஏதாவது குடுத்துட்டு போயான்னு கேட்கும் கடைநிலை காவலர்கள், பணம் கையில் இல்லை என்றால் குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்க மறந்தயா ? சரக்கு வாங்க மறந்தயா ? என அநாகரிகமான கேள்விகள்...
உள்ளயே வரும் கரண்சி புரோக்கர்கள்...
தரம் குறைந்த தண்ணீரே வராத கழிப்பறைகள்...
மரியாதை இல்லாத காவலர்கள்...
இப்படி மிகவும் கீழ்த்தரமாக திருச்சி விமான நிலைய நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
தரம் குறைந்த தண்ணீரே வராத கழிப்பறைகள்...
மரியாதை இல்லாத காவலர்கள்...
இப்படி மிகவும் கீழ்த்தரமாக திருச்சி விமான நிலைய நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
Saturday, November 22, 2014
Thursday, November 20, 2014
On Thursday, November 20, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
On Thursday, November 20, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
On Thursday, November 20, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
On Thursday, November 20, 2014 by முதல்வர் தளபதி in Tiruchchirappalli
Saturday, September 20, 2014
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள குளக்குடிபட்டியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை(வயது 60). இவருடைய அண்ணன் பெரியசாமி(வயது 65) விவசாயி. இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்தது. இந்தநிலையில் கடந்த 19.3.2013 அன்று பெரியசாமிக்கும், சங்கப்பிள்ளையின் மகன் பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி அரிவாளால் பிரகாசை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் இறந்தார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, பெரியசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி உத்திராபதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், "குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும்" விதித்தார்.
திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் தட்டு ரிக்ஷாக்களில் மோட்டார்கள் பொருத்தி அதிவேகமாக இயக்கி வருவதாகவும், இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கு புகார்கள் வந்தது. தட்டு ரிக்ஷாக்களில் மோட்டார் பொருத்தி இயக்கக்கூடாது என்று உத்தரவு அமலில் இருந்தபோதும், இதுபோன்ற வாகனங்கள் அதிகமாக இயக்கப்பட்டு வந்ததால், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகர போலீசாருக்கு கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து திருச்சி மாநகரில் காந்திமார்க்கெட், கண்டோன்மெண்ட், கோட்டை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறை மீறி மோட்டார்களுடன் இயக்கப்பட்ட தட்டு ரிக்ஷாக்களை மடக்கி பிடித்து காந்திமார்க்கெட் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு தட்டு ரிக்ஷாக்களில் பொருத்தி இருந்த மோட்டார்கள் அகற்றப்பட்டன. நேற்று ஒரேநாளில் காந்திமார்க்கெட்டில் 22, கண்டோன்மெண்ட்டில் 3, கோட்டையில் 2 ஆகியவை சேர்த்து மொத்தம் 27 தட்டுரிக்ஷாக்களில் மோட்டார்கள் அகற்றப்பட்டன. மாநகர பகுதிகளில் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
திருச்சி மாநகர காவல்துறையில் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றாற்போல், ‘வாட்ஸ்அப், ‘பேஸ்புக்‘ மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் கூறினார்.
இது குறித்து அவர் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நவீன தொழில்நுட்பம்
திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது புதிதாக ‘வாட்ஸ்அப்’ மூலம் புகார் தெரிவிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தநேரமும் வாட்ஸ்அப்பில் தகவல்களை கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். தற்போது இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. காவல்துறையிலும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் 9626273399 என்ற எண்ணுக்கு ஈவ்டீசிங், போக்குவரத்து நெரிசல், விபத்து, குற்ற சம்பவங்கள் குறித்து தகவல்களை அனுப்பலாம்.
இதனை சுழற்சி முறையில் எந்நேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இது தவிர மாநகர போலீசில் பேஸ்புக் மூலமும் தகவல்களை தெரிவிக்க முடியும். சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் போலீஸ்நிலையங்கள் உள்பட மொத்தம் 24 போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா 3 கேமரா வீதம் 72 கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்தந்த போலீஸ் நிலையங்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் கண்காணிக்கப்படும்.
ஓட்டுனர் உரிமம் ரத்து
கடந்த 2013-ம் ஆண்டு 44 கொள்ளை வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 25 கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டில் 20 கொலை வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 13 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 12 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதாய கொலை ஒன்று மட்டும் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது. ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 127 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 110 பேர் இறந்துள்ளனர். கட்டுப்பாடு இல்லாமல் வாகனம் ஓட்டியது, விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 52 வழக்குகளில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 64 பேருடைய உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் இவர்கள் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்பதால், அவர்களின் எதிர்கால நலன் கருதி, பெற்றோரை அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, துணை கமிஷனர்கள் அபினவ்குமார், ஜெயந்தி, கூடுதல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது குறித்து அவர் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நவீன தொழில்நுட்பம்
திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது புதிதாக ‘வாட்ஸ்அப்’ மூலம் புகார் தெரிவிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தநேரமும் வாட்ஸ்அப்பில் தகவல்களை கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும். தற்போது இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. காவல்துறையிலும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் 9626273399 என்ற எண்ணுக்கு ஈவ்டீசிங், போக்குவரத்து நெரிசல், விபத்து, குற்ற சம்பவங்கள் குறித்து தகவல்களை அனுப்பலாம்.
இதனை சுழற்சி முறையில் எந்நேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இது தவிர மாநகர போலீசில் பேஸ்புக் மூலமும் தகவல்களை தெரிவிக்க முடியும். சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் போலீஸ்நிலையங்கள் உள்பட மொத்தம் 24 போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா 3 கேமரா வீதம் 72 கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்தந்த போலீஸ் நிலையங்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் கண்காணிக்கப்படும்.
ஓட்டுனர் உரிமம் ரத்து
கடந்த 2013-ம் ஆண்டு 44 கொள்ளை வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 25 கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டில் 20 கொலை வழக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 13 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 12 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதாய கொலை ஒன்று மட்டும் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது. ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் 127 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 110 பேர் இறந்துள்ளனர். கட்டுப்பாடு இல்லாமல் வாகனம் ஓட்டியது, விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 52 வழக்குகளில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 64 பேருடைய உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் இவர்கள் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்பதால், அவர்களின் எதிர்கால நலன் கருதி, பெற்றோரை அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, துணை கமிஷனர்கள் அபினவ்குமார், ஜெயந்தி, கூடுதல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
வையம்பட்டி பகுதியில் குடிநீர் வசதி கோரி காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
வையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.வையம்பட்டி மற்றும் கருப்பரெட்டியபட்டி காலனி ஆகிய பகுதிகளில் சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், மரியபிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
முற்றுகை முயற்சி
இதே போல் கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெஸ்டோ நகர் பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி அப்பகுதி மக்கள் நேற்று மதியம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.இது பற்றி அறிந்த ஆணையர் லதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவங்களால் மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
வையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.வையம்பட்டி மற்றும் கருப்பரெட்டியபட்டி காலனி ஆகிய பகுதிகளில் சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், மரியபிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
முற்றுகை முயற்சி
இதே போல் கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெஸ்டோ நகர் பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி அப்பகுதி மக்கள் நேற்று மதியம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.இது பற்றி அறிந்த ஆணையர் லதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவங்களால் மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
Friday, September 19, 2014
திருச்சியில் 13–வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகள் நேற்று கண்களை கறுப்பு துணியால் கட்டி கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், கைகளில் கம்பு, சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நதிகளை இணைத்து தேசிய நதிவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகள் திருச்சி அண்ணாசிலை அருகில் கடந்த 5–ந்ம் தேதி முதல் மாநில துணை தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஒவ்வெரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 13–வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. அப்போது விவசாயிகள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், ஒரு கையில் கம்புடனும், மற்றொரு கையில் சட்டி ஏந்தியும் போராட்டம் செய்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.
நூதன போராட்டம்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நதிகளை இணைத்து தேசிய நதிவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகள் திருச்சி அண்ணாசிலை அருகில் கடந்த 5–ந்ம் தேதி முதல் மாநில துணை தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஒவ்வெரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 13–வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. அப்போது விவசாயிகள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், ஒரு கையில் கம்புடனும், மற்றொரு கையில் சட்டி ஏந்தியும் போராட்டம் செய்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...