Tuesday, September 16, 2014
பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் கருணாநிதி பேசினார்.
தி.மு.க. முப்பெரும் விழா
தந்தை பெரியாரின் பிறந்தநாள், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தி.மு.க.வின் பிறந்தநாள் என 3 விழாக்களையும் சேர்த்து, முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, மேல்நிலைப்பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சான்றிதழ், பணமுடிப்பு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
விருதுகள்
மேலும், பெங்களூரைச் சேர்ந்த வி.டி.சண்முகத்திற்கு பெரியார் விருதையும், முனவர் ஜானுக்கு அண்ணா விருதையும், புதுக்கோட்டை விஜயாவுக்கு பாவேந்தர் விருதையும், நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருதையும் அவர் வழங்கினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். விழாவில், விருது மற்றும் பரிசுகளை வழங்கி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
எல்லோரும் பாடுபடவேண்டும்
இங்கு விருதுபெற்றவர்களை வாழ்த்தும்போது, இந்த இயக்கத்துக்காக உழைத்தவர்கள் என்று மக்களுக்கு காட்டி, இன்னும் பலர் இதுபோல் உருவாகவேண்டும் என வழங்கப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இங்கு பேசும்போது, இந்த இயக்கத்தை வழிநடத்த எல்லோரும் தொடர்ந்து பாடுபடவேண்டும் என்றார்.
சமீபகாலமாக நம்முடைய கூட்டங்களில் நீண்டநேரம் பேசும் சூழ்நிலை எனக்கு இல்லை. அதற்கு உடல்நலம் இடம்தரவில்லை. ஆனாலும், உடல்நலத்துடன் போட்டிப்போட்டுக்கொண்டு முடிந்தவரை பேசி வருகிறேன். நாட்டு மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்படவேண்டுமென்று தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், நாம் உணர்ச்சி மூட்டியதால் மக்கள் எழுச்சிபெற்றார்களா? என்று பார்த்தால், அதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில், இந்த முப்பெரும் விழாவை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்றால், மனதிற்கு சங்கடமாக இருக்கிறது.
இளைஞர்கள் உழைக்கவேண்டும்
அரும்பாடுபட்டு பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றோர் உழைத்து உருக்குலைந்துபோன மக்களை காப்பாற்ற கூறியது எந்தளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது?. சமுதாயத்தில் மக்களை தட்டிஎழுப்ப நாம் உழைத்த உழைப்பும் பயன்பட்டதா? என்று எண்ணிப்பார்க்கும்போது, பெருமைக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. சாதியின் பெயரால் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்ற நிலையை உருவாக்க இந்த இயக்கம் பாடுபட்டு வருகிறது.
ஆனாலும், சாதிப்பேய் பிடித்து ஆட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தீண்டத்தகாதவர்கள் என்று இன்னும் கூறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எனவே, இன்னமும் நாங்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறோம். சமுதாயத்துக்காக எங்கள் உழைப்பு போதாது. எனவே, எங்கள் உழைப்பை தொடர்ந்து, இளைஞர்கள் உழைக்கவேண்டும். அப்போதுதான் இந்த நாடு வாழமுடியும்.
பணநாயகம்...
தி.மு.க. இங்கு முப்பெரும் விழா கொண்டாடிக்கொண்டிருக்கிற நேரத்தில், நீங்கள் எல்லோரும் சூளுரை ஒன்றை ஏற்கவேண்டும். தமிழர்களாக வாழ்வோம், தமிழ்மொழியை காப்போம் என்ற சூளுரையை ஏற்கவேண்டும்.
இந்த கழகத்தை நீங்கள் எல்லோரும் வெற்றிபெற செய்யவேண்டும். அப்படியென்றால், நான் இந்த இடத்தில் தேர்தலை குறிப்பிடவில்லை. தேர்தலில் எப்படியும் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது. ஜனநாயகம் தோற்று, பணநாயகம் வெல்லும் காலம் நிலவுகிறது. எனவே, ஜனநாயகத்தை காக்க, பணநாயகத்தை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும். அனைவரும் தமிழ்வளர்ப்போம் வாருங்கள்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன், ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, பூங்கோதை, முன்னாள் எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தி.மு.க. முப்பெரும் விழா
தந்தை பெரியாரின் பிறந்தநாள், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தி.மு.க.வின் பிறந்தநாள் என 3 விழாக்களையும் சேர்த்து, முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, மேல்நிலைப்பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சான்றிதழ், பணமுடிப்பு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
விருதுகள்
மேலும், பெங்களூரைச் சேர்ந்த வி.டி.சண்முகத்திற்கு பெரியார் விருதையும், முனவர் ஜானுக்கு அண்ணா விருதையும், புதுக்கோட்டை விஜயாவுக்கு பாவேந்தர் விருதையும், நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருதையும் அவர் வழங்கினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குண பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். விழாவில், விருது மற்றும் பரிசுகளை வழங்கி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
எல்லோரும் பாடுபடவேண்டும்
இங்கு விருதுபெற்றவர்களை வாழ்த்தும்போது, இந்த இயக்கத்துக்காக உழைத்தவர்கள் என்று மக்களுக்கு காட்டி, இன்னும் பலர் இதுபோல் உருவாகவேண்டும் என வழங்கப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இங்கு பேசும்போது, இந்த இயக்கத்தை வழிநடத்த எல்லோரும் தொடர்ந்து பாடுபடவேண்டும் என்றார்.
சமீபகாலமாக நம்முடைய கூட்டங்களில் நீண்டநேரம் பேசும் சூழ்நிலை எனக்கு இல்லை. அதற்கு உடல்நலம் இடம்தரவில்லை. ஆனாலும், உடல்நலத்துடன் போட்டிப்போட்டுக்கொண்டு முடிந்தவரை பேசி வருகிறேன். நாட்டு மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்படவேண்டுமென்று தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், நாம் உணர்ச்சி மூட்டியதால் மக்கள் எழுச்சிபெற்றார்களா? என்று பார்த்தால், அதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில், இந்த முப்பெரும் விழாவை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்றால், மனதிற்கு சங்கடமாக இருக்கிறது.
இளைஞர்கள் உழைக்கவேண்டும்
அரும்பாடுபட்டு பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றோர் உழைத்து உருக்குலைந்துபோன மக்களை காப்பாற்ற கூறியது எந்தளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது?. சமுதாயத்தில் மக்களை தட்டிஎழுப்ப நாம் உழைத்த உழைப்பும் பயன்பட்டதா? என்று எண்ணிப்பார்க்கும்போது, பெருமைக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. சாதியின் பெயரால் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்ற நிலையை உருவாக்க இந்த இயக்கம் பாடுபட்டு வருகிறது.
ஆனாலும், சாதிப்பேய் பிடித்து ஆட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தீண்டத்தகாதவர்கள் என்று இன்னும் கூறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எனவே, இன்னமும் நாங்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறோம். சமுதாயத்துக்காக எங்கள் உழைப்பு போதாது. எனவே, எங்கள் உழைப்பை தொடர்ந்து, இளைஞர்கள் உழைக்கவேண்டும். அப்போதுதான் இந்த நாடு வாழமுடியும்.
பணநாயகம்...
தி.மு.க. இங்கு முப்பெரும் விழா கொண்டாடிக்கொண்டிருக்கிற நேரத்தில், நீங்கள் எல்லோரும் சூளுரை ஒன்றை ஏற்கவேண்டும். தமிழர்களாக வாழ்வோம், தமிழ்மொழியை காப்போம் என்ற சூளுரையை ஏற்கவேண்டும்.
இந்த கழகத்தை நீங்கள் எல்லோரும் வெற்றிபெற செய்யவேண்டும். அப்படியென்றால், நான் இந்த இடத்தில் தேர்தலை குறிப்பிடவில்லை. தேர்தலில் எப்படியும் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது. ஜனநாயகம் தோற்று, பணநாயகம் வெல்லும் காலம் நிலவுகிறது. எனவே, ஜனநாயகத்தை காக்க, பணநாயகத்தை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும். அனைவரும் தமிழ்வளர்ப்போம் வாருங்கள்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன், ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, பூங்கோதை, முன்னாள் எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமான காற்று வீசியது.
இந்தநிலையில் நேற்று இரவு 9.10 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. புரசைவாக்கம், வேப்பேரி, வில்லிவாக்கம், பெரம்பூர், திருவான்மியூர், அடையார், மைலாப்பூர், தாம்பரம் உள்பட பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது.
மரக்கிளைகள் முறிந்தன
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றும் வீசத்தொடங்கியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. காஞ்சீபுரத்தில் நேற்று இரவு 7.40 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 2 மணிநேரத்துக்கு மேல் நீடித்தது. இதனால் நகரின் முக்கிய வீதியான மூங்கில் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் திருத்தணியில் உள்ள ம.பொ.சி. சாலை, காந்தி ரோடு, கந்தசாமி தெரு, கீழ் பஜார் தெரு உள்பட பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஆறுபோல் ஓடியது. பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.
பலத்த மழை
சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமான காற்று வீசியது.
இந்தநிலையில் நேற்று இரவு 9.10 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. புரசைவாக்கம், வேப்பேரி, வில்லிவாக்கம், பெரம்பூர், திருவான்மியூர், அடையார், மைலாப்பூர், தாம்பரம் உள்பட பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது.
மரக்கிளைகள் முறிந்தன
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றும் வீசத்தொடங்கியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. காஞ்சீபுரத்தில் நேற்று இரவு 7.40 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 2 மணிநேரத்துக்கு மேல் நீடித்தது. இதனால் நகரின் முக்கிய வீதியான மூங்கில் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் திருத்தணியில் உள்ள ம.பொ.சி. சாலை, காந்தி ரோடு, கந்தசாமி தெரு, கீழ் பஜார் தெரு உள்பட பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஆறுபோல் ஓடியது. பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
ஹஜ்பயண முதல் விமானம்
உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,015 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 226 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர்.
புனித ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரகீம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபூபக்கர் ஆகியோர் சால்வைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதில் தமிழக அரசு செயலாளர்கள் முகமது நஜிமுத்தீன், அருள்மொழி, காயிதே மில்லத் விழாக்குழுத்தலைவர் வீரை கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
7 விமானங்கள்
புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை விமானநிலையத்தில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
4-வது நுழைவு வாயில் ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலைய ஆணையகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனியாக கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சருக்கு நன்றி
புனித ஹஜ் பயணம் சிறப்பாக அமைய முதல்-அமைச்சர் சார்பில் வழியனுப்ப வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஹஜ் பயணிகளுக்காக முதல்-அமைச்சர் ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார். ஹஜ் பயணிகளின் பயணம் சிரமம் இன்றி இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவு வசதி
இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் கூறும்போது, ‘தமிழகத்தில் இஸ்லாமிய மக்கள் புனித ஹஜ் பயணத்திற்கு செல்ல தகுந்த உதவிகளை செய்து தந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய-மாநில அரசின் உதவியுடன் இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் முதல்முறையாக புனித ஹஜ் பயணிகள் மதினாவில் தங்கும் 8 நாட்கள் 3 வேளையும் உணவுகள் வழங்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் இந்த பணி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து செல்லும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும் உணவு வழங்கப்பட உள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
ஹஜ்பயண முதல் விமானம்
உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,015 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 226 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர்.
புனித ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரகீம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபூபக்கர் ஆகியோர் சால்வைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதில் தமிழக அரசு செயலாளர்கள் முகமது நஜிமுத்தீன், அருள்மொழி, காயிதே மில்லத் விழாக்குழுத்தலைவர் வீரை கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
7 விமானங்கள்
புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை விமானநிலையத்தில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
4-வது நுழைவு வாயில் ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலைய ஆணையகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனியாக கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சருக்கு நன்றி
புனித ஹஜ் பயணம் சிறப்பாக அமைய முதல்-அமைச்சர் சார்பில் வழியனுப்ப வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஹஜ் பயணிகளுக்காக முதல்-அமைச்சர் ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார். ஹஜ் பயணிகளின் பயணம் சிரமம் இன்றி இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவு வசதி
இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் கூறும்போது, ‘தமிழகத்தில் இஸ்லாமிய மக்கள் புனித ஹஜ் பயணத்திற்கு செல்ல தகுந்த உதவிகளை செய்து தந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய-மாநில அரசின் உதவியுடன் இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் முதல்முறையாக புனித ஹஜ் பயணிகள் மதினாவில் தங்கும் 8 நாட்கள் 3 வேளையும் உணவுகள் வழங்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் இந்த பணி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து செல்லும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும் உணவு வழங்கப்பட உள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தே.மு.தி.க.வின் 10-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுலைமான், ஒன்றிய செயலாளர்கள் கோலார்பட்டி பாலு, நித்தியானந்த சரவணன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கேப்டன் மன்ற செயலாளர் சையது காஜாசெரிப் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் கோல்டுகுமார், தே.மு.தி.க. நிர்வாகிகள் ஜெகன், கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.
இதில் மாவட்ட பொருளாளர் கோல்டுகுமார், தே.மு.தி.க. நிர்வாகிகள் ஜெகன், கிட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.
பொள்ளாச்சியில் நகை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25½ பவுன் நகை கள் மீட்கப்பட்டன.
வாகன சோதனை
பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி துணை சூப்பிரண்டு முத்து ராஜன் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக் டர் சோமசுந்தரம் தலைமை யில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீ சார் உடுமலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட் டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்கள். இதனால் சந்தே கமடைந்த போலீசார் 2 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார் கள்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் மதுரை ராமமூர்த்தி நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 29), ஜீவா நகரை சேர்ந்த மாயாண்டி (26) என்பதும் தெரியவந்தது. இதில் சக்திவேல் கடந்த பிப்ரவரி மாதம் வெங்கடேசாகாலனி வி.கே.வி. லே-அவுட்டில் ராமசாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை திருடுபோன வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரைக்குடி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் மளிகை கடைக்கு சென்ற ஸ்ரீதேவி என்ற பெண் ணிடம் மாயாண்டி 5 ½ பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், மாயாண்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் களி டம் இருந்து 25½ பவுன் நகை களை மீட்டனர். பின்னர் கைதான 2 பேரையும் போலீ சார் கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
வாகன சோதனை
பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி துணை சூப்பிரண்டு முத்து ராஜன் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக் டர் சோமசுந்தரம் தலைமை யில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீ சார் உடுமலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட் டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்கள். இதனால் சந்தே கமடைந்த போலீசார் 2 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார் கள்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் மதுரை ராமமூர்த்தி நகரை சேர்ந்த சக்திவேல் (வயது 29), ஜீவா நகரை சேர்ந்த மாயாண்டி (26) என்பதும் தெரியவந்தது. இதில் சக்திவேல் கடந்த பிப்ரவரி மாதம் வெங்கடேசாகாலனி வி.கே.வி. லே-அவுட்டில் ராமசாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை திருடுபோன வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரைக்குடி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் மளிகை கடைக்கு சென்ற ஸ்ரீதேவி என்ற பெண் ணிடம் மாயாண்டி 5 ½ பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேல், மாயாண்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் களி டம் இருந்து 25½ பவுன் நகை களை மீட்டனர். பின்னர் கைதான 2 பேரையும் போலீ சார் கோர்ட் டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி கட்சி முகவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
மின்னணு எந்திரங்கள்
கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் ஓட்டுப்போட உள்ளனர். மாநகராட்சி தேர்தலுக்காக மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.
மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,380 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.
சின்னங்கள் பொருத்தும்பணி
இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான கணேஷ் தலைமையில் 5 உதவி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
கோவை ராம்நகர் அரங்கநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அவற்றில் 16 வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் பொருத்தும் பணி நடைபெற்றது.
அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. முன்னதாக அனைத்து எந்திரங்களும் ஆணையாளர் கணேஷ் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன. அப்போது உதவி தேர்தல் அதிகாரி ரவி மற்றும் உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
‘சீல்’ வைக்கப்பட்டன
இதேபோல கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தி சீல் வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாளை (புதன்கிழமை) மாலை போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.
பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வழங்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றுடன் அனைவருக்கும் வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்பட்டு விட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்னணு எந்திரங்கள்
கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் ஓட்டுப்போட உள்ளனர். மாநகராட்சி தேர்தலுக்காக மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன.
மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,380 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.
சின்னங்கள் பொருத்தும்பணி
இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் நேற்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான கணேஷ் தலைமையில் 5 உதவி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
கோவை ராம்நகர் அரங்கநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அவற்றில் 16 வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் அந்தந்த கட்சி முகவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் பொருத்தும் பணி நடைபெற்றது.
அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. முன்னதாக அனைத்து எந்திரங்களும் ஆணையாளர் கணேஷ் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டன. அப்போது உதவி தேர்தல் அதிகாரி ரவி மற்றும் உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
‘சீல்’ வைக்கப்பட்டன
இதேபோல கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தி சீல் வைக்கப்பட்டு மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாளை (புதன்கிழமை) மாலை போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.
பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வழங்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றுடன் அனைவருக்கும் வாக்காளர் சீட்டு வினியோகிக்கப்பட்டு விட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.
தனியார் கல்லூரி
கோத்தகிரியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கட்டபெட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கல்லூரி முதல்வர் அடிக்கடி மாற்றப்படுவதால் நிர்வாகம் பாதிக்கப்படுவதாகவும், கல்வித்தரமும் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 11-ந் தேதி கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.
மீண்டும் போராட்டம்
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாததால் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி தாசில்தார் ராம்குமார், வருவாய் அதிகாரி கலைச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ராம்குமார் மாணவர்களிடம் உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் கல்லூரி
கோத்தகிரியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கட்டபெட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கல்லூரி முதல்வர் அடிக்கடி மாற்றப்படுவதால் நிர்வாகம் பாதிக்கப்படுவதாகவும், கல்வித்தரமும் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 11-ந் தேதி கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.
மீண்டும் போராட்டம்
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாததால் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோத்தகிரி தாசில்தார் ராம்குமார், வருவாய் அதிகாரி கலைச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பின்னர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் ராம்குமார் மாணவர்களிடம் உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள்,சிறுத்தை புலிகள் உட்பட பல விலங்குகள் உள்ளன.
இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை தாக்குவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இதை தடுக்க அந்த பகுதியில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் தோட்ட பகுதியில் அகழி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 22 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் சில யானைகள் தேயிலை தோட்ட பகுதிகளிலும், சில யானைகள் படச்சேரி பகுதிளிலும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 கும்கிகள் வரவழைப்பு
தகவல் அறிந்ததும் காட்டு யானைகளை கும்கி யானைகள் மூலம் விரட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் தேஜ்ஸ்வீ உத்தரவின் பேரில் முதுமலையில் இருந்து சங்கர்,வசீம் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் கும்கிகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணி நடந்தது.
இதை தொடர்ந்து தேயிலை தோட்டப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். இந்த பணியில் சேரம்பாடி ரேஞ்சர் கணேசன், பிதிர்காடு ரேஞ்சர் சோமசுந்தரம் மற்றும் வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள்,சிறுத்தை புலிகள் உட்பட பல விலங்குகள் உள்ளன.
இதில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை தாக்குவதுடன் தொழிலாளர்களையும் தாக்கி வருகின்றன. இதை தடுக்க அந்த பகுதியில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் தோட்ட பகுதியில் அகழி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 22 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் சில யானைகள் தேயிலை தோட்ட பகுதிகளிலும், சில யானைகள் படச்சேரி பகுதிளிலும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 கும்கிகள் வரவழைப்பு
தகவல் அறிந்ததும் காட்டு யானைகளை கும்கி யானைகள் மூலம் விரட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் தேஜ்ஸ்வீ உத்தரவின் பேரில் முதுமலையில் இருந்து சங்கர்,வசீம் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் கும்கிகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணி நடந்தது.
இதை தொடர்ந்து தேயிலை தோட்டப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். இந்த பணியில் சேரம்பாடி ரேஞ்சர் கணேசன், பிதிர்காடு ரேஞ்சர் சோமசுந்தரம் மற்றும் வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
திருப்பூர் வடக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா திருப்பூர் குமார்நகர் பகுதியில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் சுவரில் ஆபாசபட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட சுவரொட்டியை ஒட்டிய சண்முக சுந்தரம்(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...








