Thursday, September 25, 2014
தமிழகத்தில்
எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது
என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நகரமாக மாறி
வருகிறது. கடந்த 9 மாதங்களில் மதுரையில் 64 கொலைகள் நடந்துள்ளன. பழிக்குப்
பழி, ஆதாயக் கொலை, அரசியல் கொலை என்று காவல் துறை காரணங்கள் பலவாகச்
சொன்னாலும் கொலை கொலைதானே?
மதுரை,
புதூர் தி.மு.க செயலாளர் வேலுவின் மகன் முத்துப்பாண்டி தி.மு.க.வின்
ஒன்றிய துணை அமைப்பாளர். இவர், கடந்த 18ஆம் தேதி மதுரை அரசு ஐ.டி.ஐ எதிரே
உள்ள சாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை
சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க. இளைஞர் அணியைச் சேர்ந்த முகேஷ் சர்மா,
ராஜ்குமார் உட்பட நான்கு பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
முகேஷ் சர்மா தி.மு.க. பிரமுகர் குருசாமியின் மருமகன். இது பழிக்குப் பழி
சம்பவம் என்று போலீஸ் தரப்பு கூற...
அதே நாளில், தல்லாகுளம் பகுதியில் கருப்பையா, ராம்கி, ரவிக்குமார் என்று மூன்று நபர்களை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டுச் சென்றது ஒரு டீம். ரத்த வெள்ளத்தில் கருப்பையாவின் உயிர் பிரிய, மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். ‘‘தி.மு.க தல்லாகுளம் பகுதி பொறுப்பாளர் கருணாநிதியின் கார் டிரைவரான கருப்பையா ரியல் எஸ்டேட் பிரச்னையின் தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நான்கு பேர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். விசாரணை நடக்கிறது’’ என்கிறார்கள் போலீஸார்.
இரவில் இந்தச் சம்பவங்கள் நடக்க, பகலில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு வீட்டுக்குள் மூவரைக் கொடூரமாகக் குத்தி, குதறிவிட்டுச் சென்றிருக்கிறது 10 பேர் கொண்ட கும்பல். 10க்கு 10 அளவு கொண்ட அந்த வீட்டில் உறுப்புகள் அனைத்தும் சிதறிக் கிடக்க, சுவரில் ரத்தம் படிந்து தரையும் ரத்தக்குளமாகக் காட்சியளிக்க பல்வேறு கொலைகளைப் பார்த்து பழகிப்போன காவல் துறையே கர்சீப் எடுத்து மூக்கை பொத்திக் கொண்டது.
இக்கொலைப்பற்றி ஜெய்ஹிந்த்புரம் போலீஸார், ‘‘குண்டுமலை இருளாயி மகன்களான கருப்பும், பாம்பு நாகராஜும் சகோதரர்கள். பாம்பு நாகராஜ், தி.மு.க பிரமுகர் அப்பளராஜாவின் கூட்டாளி. அப்பளராஜா மதுரையில் பிரபல ரவுடியாக இருந்து சென்னையில் செட்டில் ஆன டாக் ரவியின் கூட்டாளி. மதுரையில் டாக் ரவியிடன் கவாத்து திருப்பதியும், அப்பளராஜாவும் இணைந்து பல சம்பவங்கள் செய்தனர். டாக் ரவி சென்னை சென்றதும் மதுரையில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளுக்கு யார் கோலோச்சுவது என்று இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கவாத்தின் ஆளான சவுந்தரை பாம்பு நாகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து வெட்டினார்கள்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அப்பளராஜா வேறு ஒரு வழக்கில் கோர்ட்டில் சரண்டர் ஆகி மதுரை ஜெயிலில் இருக்கிறார். பாம்பு நாகராஜ் கோவைக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நடந்த அன்று காலையில் ஊருக்கு வந்த அவரைப் பழிவாங்க கவாத்து திருப்பதியின் தம்பி குண்டுமணி, ராஜா உள்பட 10 நபர்கள் இந்த மூன்று கொலைகளை செய்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின்போது டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் என்கிற நபரும் கொலை செய்யப்பட்டார். கொலையை நேரில் பார்த்த பாம்பு நாகராஜின் தாத்தாவை மட்டும் விட்டு வைத்து விட்டுச் சென்றது அந்தக் கும்பல்’’ என்றனர்.
இதேபோல், கற்பழிப்பு சம்பவங்கள் 23, கொள்ளை சம்பவங்கள் 81, பாலியல் துன்புறுத்தல்கள் 9, கூட்டு கொள்ளைகள் 4, சாதாரண க்ரைம் சம்பவங்கள் 32 என்று க்ரைம் பட்டியலை வாசிக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்!
கொலைப் பட்டியல்
2014ஆம்
ஆண்டு மதுரையில் புதுவருடம் பிறக்கும் பொழுதே கொலையுடன் பிறந்தது, சரியாக
ஹாப்பி நியூ இயர் சொல்லும் 12 மணியளவில் மதுரை புதூரில் செந்திலநாதன்
என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். காரணம் போதையில் தகராறு.
ஜனவரி 3: அன்று வில்லாபுரத்தில் தமிழரசன் என்பவர் கொலை. காரணம், கள்ளக்காதல்.
ஜனவரி 4: வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கண்ணன். இருவரும் இரட்டைக்கொலை செய்யப்பட்டனர். கோஷ்டி மோதலில் நடந்த பழி தீர்க்கும் சம்பவம்.
ஜனவரி 8: தல்லாக்குளத்தை சேர்ந்த அழகுபாண்டி என்பவர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டார்.
ஜனவரி 22: கரும்பாலை பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் காதல் பிரச்னையில் வெட்டிக்கொலை.
ஜனவரி 23: வில்லாபுரத்தில், வாழப்போன இடத்தில் அடிக்கடி தொல்லை தருகிறார் என்கிற காரணத்துக்காக அக்காவின் மாமியாரை கொலை செய்தார் ஒரு பெண். பிறகு, போலீஸில் சரணடைந்தார்.
ஜனவரி 30: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மேலூர் அரிட்ட பட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை அவரது மருமகள் தனது கள்ளக்காதலன் மூலம் அவரது தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
பிப்ரவரி 6: வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்வீட்ஸ் கடை ஓனரின் மகள், பட்டப் பகலில் வீட்டுக்குள் கொலைசெய்து கிடந்தார். மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு வந்த அவரது கணவருக்கு பெரும் அதிர்ச்சி. கொலை செய்தது என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 17: மேலூர் அண்ணா காலனியில் சைக்கிளில் தெரு வழியாக போனதால் நடந்த சண்டையில் வீரன் என்பவர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார்.
பிப்ரவரி 18: மதுரை கருடர் பாலம் அடியில் இளம் வயது ஆண் பிணம் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் தந்தனர். இறந்தவர் யார் என்ற விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 21: பெரியார் பேருந்து நிலையத்தில் பால்பாண்டி என்பவர் வெட்டிக்கொலை. இது மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழிக்குப் பழி வாங்க செய்த கொலை.
பிப்ரவரி 22: மதிச்சியம் வைகை ஆற்றுப் பகுதியில் காமராஜர் புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுவும்கூட பழிக்குப் பழி வாங்க நடந்த கொலையே!
மார்ச் 28: சிந்தாமணி தியேட்டர் பகுதி லட்சுமிபுரம் கோகுல்நகை அடகுக்கடை ஓனர் சின்னையா என்பவர் இரவு 7 மணிக்கு கொலை. கடை ஊழியர் முருகேசனின் நண்பர் கைது. இதே நாளில் பெத்தானிய புரத்தில் பாண்டீஸ்வரி என்பவர் அவரது வீட்டில் கொலை செய்து கிடந்தார்.
மார்ச் 30: சுப்ரமணியபுரத்தில் மாமியார் மூக்காயி என்பரை அவரது மருமகன் டேவிட் ஆனந்தகுமார் இரவில் கொலை செய்து போலீஸில் சரண்.
ஏப்ரல் 8: பழங்காநத்தம் பைகாரா பகுதியைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளியான கண்ணன் என்பவர் குடி போதையில் நடந்த தகராறில் மாலை நேரத்தில் கொலை செய்யபட்டார்.
ஏப்ரல் 10: அலங்காநல்லூரில் பரமசிவம் என்பவரை அவரது மனைவி பாப்பாத்தி தனது ஆண் நண்பரான கார்த்திக்ராஜா என்பவருடன் சேர்ந்து கொலை செய்தார். கள்ளக்காதல் விவகாரமாக இருக்கலாம் என்கிறது போலீஸ்.
ஏப்ரல் 12: தத்தனேரியில் குடிபோதையில் அம்மா பேச்சியம்மாளை அவரது மகனே கொலை செய்துவிட்டார். போதை தெளிந்ததும் காவல் நிலையத்தில் கதறி அழுதார்.
ஏப்ரல் 14: உசிலம்பட்டியில் உறவினர்களுக்குள் நடந்த ஈகோவால் கார்த்திக்ராஜா என்பவர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஏப்ரல் 15: அழகர் கோயிலுக்குள் உள்ள நடைபாதை பகுதியில் காலை 5 மணிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த் முத்துப்பாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஏப்ரல் 19: விராதனூர் பகுதியில் ஆயிரம் பிள்ளை என்கிற பெண் கொலை செய்து கிடந்தார். இதுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏப்ரல் 21: மேலூர் கொட்டக்குடி பகுதியில் வீரம்மாள் என்பவர் கழுத்து நெரித்துக் கொலை. காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை.
மே 2: மேலூர் பகுதியில் உள்ள கல்குவாரி கிணற்றில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரைக் கடத்திவந்து கொடூரமாகக் கொலை செய்து போட்டுவிட்டுச் சென்றனர். காரணம் தெரியவில்லை.
மே 13: மாடக்குளத்தில் குடியிருப்போர் நலசங்கத் தலைவர் ஆண்டியப்பன் என்பவர் முன்விரோத பகையில் கொலைசெய்யப்பட்டார். கொலையாளி கோர்ட்டில் சரண்.
மே 21: உசிலம்பட்டியில் அப்பா மாயாண்டியை மகன் பாண்டியராஜ் வெட்டி கொலை. காரணம், குடிபோதை தகராறு.
மே 27: கே.கே. நகரில் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து வந்திருந்த விக்னேஷ் என்பவருடன் திருமண சரக்கு பார்டியில் அவரது நண்பர்களுக்குள் வாக்குவாதம். பீர் பாட்டிலால் விக்னேஷ் தலையில் அடித்துக் கொலை.
மே 30: தல்லாகுளம் பகுதியில் நாகபாண்டி என்பவர் வெட்டிக் கொலை. இது பழிவாங்கும் கொலை சம்பவம்.
ஜூன் 1: திருமங்கலம் அ.தி.மு.க. நகரச்செயலாளர் விஜயன் என்பவரது உறவினர் செண்பக பாண்டியனை குடி போதையில் கொலை செய்தது ஒரு குரூப். இதுவும் முன்விரோத பகையில் நடந்த கொலை.
ஜூன் 2: குலமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வெட்டிக்கொலை. காரணம், கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜூன் 3: பேரையூர் பகுதியில் உள்ள சாப்டூர் பகுதியைச் சேர்ந்த துரைபாண்டியை அவரது மனைவியே விறகு கட்டையால் அடித்துக் கொலை. காரணம். செக்ஸ் தொல்லை தந்ததால் இப்படி செய்தேன் என்றாராம் அவரது மனைவி.
ஜூன் 8: மதுரை காய்கறி சந்தையில் கடை ஏலம் எடுப்பதில் நடந்த தகராறில் சரவணக்குமார் என்பவர் வெட்டிக்கொலை. இதே நாளில் புதூரை சேர்ந்த செல்வசந்திரன் என்பவர் கொலை செய்து கிடந்தார். காரணம், இன்னமும் கண்டுபிடிக்கபடவில்லை.
ஜூன் 10: நீண்ட நாட்கள் ஆகியும் எனது மனைவியை காணவில்லை என்று உமாராணி என்பவரின் கணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் எட்டு மாதத்துக்குமுன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட உமாராணியை, அழுகிய நிலையில் கண்டெடுத்தனர். உமாராணியை 50 ஆயிரம் பணத்துக்கு அவரது தோழியான பிரேமா தனது கள்ளக்காதலன் வேல்முருகன் மூலம் கொலை செய்தது தெரியவந்தது.
ஜூன் 14: ஜெய்ஹிந்த்புரத்தில் காதணி விழா நடத்திய கல்யாண மண்டபத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் பொழுது நடந்த தகராறில் ஷேக் இப்ராஹிம் என்பவர் சம்பவ இடத்திலே வெட்டிக்கொலை. இதே நாளில் கருப்பாயூரனி ரிங் ரோட்டில் இரவு கரிமேடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி செந்தில்குமார் கொலை செய்துகிடந்தார்.
ஜூன் 15: தந்தையர் தினமான இன்று உசிலம்பட்டியில் குடிபோதையில் தந்தை அழகர்சாமியை மகன் ராமர்பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்து, செய் நன்றி காட்டினார்.
ஜூன் 19: பேரையூர் அரசபட்டியில் இரவில் செல்வம் என்பவர் உறவினர் மூலம் கொலை செய்யப்பட்டார்.
ஜூன் 29: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூரில் ஹோட்டல் நடத்தி வந்த ஜான் சுதாகர், எட்வின் என்கிற இருவரும் தன்னிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளியான சிவன்காளையை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்றனர். காரணம் குடி போதையில் நடந்த வாய் தகராறு.
ஜூலை 2: கருப்பாயூரணி குன்னத்தூரை சேர்ந்த டிரைவர் முத்துராஜா. திடீரென ஒரு நாள்... அவரது வீட்டுக்குள் பரமசிவம் என்பவர் புகுந்து, முத்துராஜாவின் மனைவி, குழந்தைகள் என கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். முத்துராஜ் அதே இடத்தில் பிணமானார். கொலையாளி பரமசிவம் போலீஸில் “தனது மனைவியை அபகரித்துக் கொண்டதால் கொலைசெய்தேன்” என்று சொன்னார்.
ஜூலை 6: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி மாணவன் சேது சூர்யா. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் பட்டப்பகலில் கொலை செய்தது மாணவர் கோஷ்டி.
ஜூலை 9: சோழவந்தானில் சீனிவாசன் என்பவர் அவரது சகோதரனால் கொலை செய்யப்பட்டார்.
இதே நாளில், கூடல்நகர் எஸ்.வி.பி. நகரில் ஆண் சடலம் ஓன்று எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவர் விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஜூலை 12: ஜீவா நகரில் சொத்து தகராறில் தம்பி கணேசனை அண்ணன் பாலமுருகன் என்பவர் கொலை செய்தார்.
ஜூலை 13: அ.தி.மு.க பிரமுகர் ஜெயபாண்டி என்பவர் மதுரை கலெக்டர் அலுவலக சாலையில் வைத்து வெட்டி கொலை. இது, பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.
ஜூலை 16: கள்ளக்காதல் தகராறில் போஸ் என்பவரை சிவபாண்டி போதையில் கொலை செய்தார்.
ஆகஸ்ட் 5: உசிலம்பட்டி மாதரையில் கோழிக்கடை பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.
ஆகஸ்ட் 6: திருமங்கலத்தில் காதர் மொய்தீன் என்பவர் கொலை. போலீஸ் சொல்லும் காரணம், அவரது அண்ணன் பஷீர் என்பவர் தனது மைத்துனியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு சொல்லி கேட்காமல் போனதால் காதர் மொய்தீன் கொலை செய்யப்பட்டாராம்.
ஆகஸ்ட் 7: யாகப்பா நகரில் சிடி கடை நடத்தும் தகராறில் விஜயகுமார் கொலை. ஜெகதீசன் கோஷ்டியினர் செய்தனர் என்கிறது போலீஸ்.
ஆகஸ்ட் 8: மதுரை திருப்பாலை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் காலை நேரத்தில் வக்கீல் முத்துதுரையை மூன்று பேர் கொண்ட குழு அரிவாளால்வெட்டி கொத்து பரோட்டா போட்டுவிட்டு பறந்துவிட்டது. பழிக்கு பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ். அன்று இரவே அ.தி.மு.க பிரமுகர் கீழவளவு பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வெட்டி கொலை. வெட்டிய கும்பலில் ஒருவரான நிரஞ்சன் என்பவரது மணிக்கட்டில் தவறுதலாக வெட்டுக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அட்மிட் ஆகி இரண்டு நாளில் நிரஞ்சன் மரணம் அடைந்தார்
மதுரை,
புதூர் தி.மு.க செயலாளர் வேலுவின் மகன் முத்துப்பாண்டி தி.மு.க.வின்
ஒன்றிய துணை அமைப்பாளர். இவர், கடந்த 18ஆம் தேதி மதுரை அரசு ஐ.டி.ஐ எதிரே
உள்ள சாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை
சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க. இளைஞர் அணியைச் சேர்ந்த முகேஷ் சர்மா,
ராஜ்குமார் உட்பட நான்கு பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
முகேஷ் சர்மா தி.மு.க. பிரமுகர் குருசாமியின் மருமகன். இது பழிக்குப் பழி
சம்பவம் என்று போலீஸ் தரப்பு கூற...அதே நாளில், தல்லாகுளம் பகுதியில் கருப்பையா, ராம்கி, ரவிக்குமார் என்று மூன்று நபர்களை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டுச் சென்றது ஒரு டீம். ரத்த வெள்ளத்தில் கருப்பையாவின் உயிர் பிரிய, மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். ‘‘தி.மு.க தல்லாகுளம் பகுதி பொறுப்பாளர் கருணாநிதியின் கார் டிரைவரான கருப்பையா ரியல் எஸ்டேட் பிரச்னையின் தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நான்கு பேர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். விசாரணை நடக்கிறது’’ என்கிறார்கள் போலீஸார்.
இரவில் இந்தச் சம்பவங்கள் நடக்க, பகலில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு வீட்டுக்குள் மூவரைக் கொடூரமாகக் குத்தி, குதறிவிட்டுச் சென்றிருக்கிறது 10 பேர் கொண்ட கும்பல். 10க்கு 10 அளவு கொண்ட அந்த வீட்டில் உறுப்புகள் அனைத்தும் சிதறிக் கிடக்க, சுவரில் ரத்தம் படிந்து தரையும் ரத்தக்குளமாகக் காட்சியளிக்க பல்வேறு கொலைகளைப் பார்த்து பழகிப்போன காவல் துறையே கர்சீப் எடுத்து மூக்கை பொத்திக் கொண்டது.
இக்கொலைப்பற்றி ஜெய்ஹிந்த்புரம் போலீஸார், ‘‘குண்டுமலை இருளாயி மகன்களான கருப்பும், பாம்பு நாகராஜும் சகோதரர்கள். பாம்பு நாகராஜ், தி.மு.க பிரமுகர் அப்பளராஜாவின் கூட்டாளி. அப்பளராஜா மதுரையில் பிரபல ரவுடியாக இருந்து சென்னையில் செட்டில் ஆன டாக் ரவியின் கூட்டாளி. மதுரையில் டாக் ரவியிடன் கவாத்து திருப்பதியும், அப்பளராஜாவும் இணைந்து பல சம்பவங்கள் செய்தனர். டாக் ரவி சென்னை சென்றதும் மதுரையில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளுக்கு யார் கோலோச்சுவது என்று இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கவாத்தின் ஆளான சவுந்தரை பாம்பு நாகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து வெட்டினார்கள்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அப்பளராஜா வேறு ஒரு வழக்கில் கோர்ட்டில் சரண்டர் ஆகி மதுரை ஜெயிலில் இருக்கிறார். பாம்பு நாகராஜ் கோவைக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நடந்த அன்று காலையில் ஊருக்கு வந்த அவரைப் பழிவாங்க கவாத்து திருப்பதியின் தம்பி குண்டுமணி, ராஜா உள்பட 10 நபர்கள் இந்த மூன்று கொலைகளை செய்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின்போது டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் என்கிற நபரும் கொலை செய்யப்பட்டார். கொலையை நேரில் பார்த்த பாம்பு நாகராஜின் தாத்தாவை மட்டும் விட்டு வைத்து விட்டுச் சென்றது அந்தக் கும்பல்’’ என்றனர்.
இதேபோல், கற்பழிப்பு சம்பவங்கள் 23, கொள்ளை சம்பவங்கள் 81, பாலியல் துன்புறுத்தல்கள் 9, கூட்டு கொள்ளைகள் 4, சாதாரண க்ரைம் சம்பவங்கள் 32 என்று க்ரைம் பட்டியலை வாசிக்கிறார்கள் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்!
கொலைப் பட்டியல்
2014ஆம்
ஆண்டு மதுரையில் புதுவருடம் பிறக்கும் பொழுதே கொலையுடன் பிறந்தது, சரியாக
ஹாப்பி நியூ இயர் சொல்லும் 12 மணியளவில் மதுரை புதூரில் செந்திலநாதன்
என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். காரணம் போதையில் தகராறு.ஜனவரி 3: அன்று வில்லாபுரத்தில் தமிழரசன் என்பவர் கொலை. காரணம், கள்ளக்காதல்.
ஜனவரி 4: வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கண்ணன். இருவரும் இரட்டைக்கொலை செய்யப்பட்டனர். கோஷ்டி மோதலில் நடந்த பழி தீர்க்கும் சம்பவம்.
ஜனவரி 8: தல்லாக்குளத்தை சேர்ந்த அழகுபாண்டி என்பவர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டார்.
ஜனவரி 22: கரும்பாலை பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் காதல் பிரச்னையில் வெட்டிக்கொலை.
ஜனவரி 23: வில்லாபுரத்தில், வாழப்போன இடத்தில் அடிக்கடி தொல்லை தருகிறார் என்கிற காரணத்துக்காக அக்காவின் மாமியாரை கொலை செய்தார் ஒரு பெண். பிறகு, போலீஸில் சரணடைந்தார்.
ஜனவரி 30: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மேலூர் அரிட்ட பட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை அவரது மருமகள் தனது கள்ளக்காதலன் மூலம் அவரது தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
பிப்ரவரி 6: வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்வீட்ஸ் கடை ஓனரின் மகள், பட்டப் பகலில் வீட்டுக்குள் கொலைசெய்து கிடந்தார். மதிய உணவு இடைவேளையில் வீட்டுக்கு வந்த அவரது கணவருக்கு பெரும் அதிர்ச்சி. கொலை செய்தது என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 17: மேலூர் அண்ணா காலனியில் சைக்கிளில் தெரு வழியாக போனதால் நடந்த சண்டையில் வீரன் என்பவர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார்.
பிப்ரவரி 18: மதுரை கருடர் பாலம் அடியில் இளம் வயது ஆண் பிணம் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் தந்தனர். இறந்தவர் யார் என்ற விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
பிப்ரவரி 21: பெரியார் பேருந்து நிலையத்தில் பால்பாண்டி என்பவர் வெட்டிக்கொலை. இது மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழிக்குப் பழி வாங்க செய்த கொலை.
பிப்ரவரி 22: மதிச்சியம் வைகை ஆற்றுப் பகுதியில் காமராஜர் புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுவும்கூட பழிக்குப் பழி வாங்க நடந்த கொலையே!
மார்ச் 28: சிந்தாமணி தியேட்டர் பகுதி லட்சுமிபுரம் கோகுல்நகை அடகுக்கடை ஓனர் சின்னையா என்பவர் இரவு 7 மணிக்கு கொலை. கடை ஊழியர் முருகேசனின் நண்பர் கைது. இதே நாளில் பெத்தானிய புரத்தில் பாண்டீஸ்வரி என்பவர் அவரது வீட்டில் கொலை செய்து கிடந்தார்.
மார்ச் 30: சுப்ரமணியபுரத்தில் மாமியார் மூக்காயி என்பரை அவரது மருமகன் டேவிட் ஆனந்தகுமார் இரவில் கொலை செய்து போலீஸில் சரண்.
ஏப்ரல் 8: பழங்காநத்தம் பைகாரா பகுதியைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளியான கண்ணன் என்பவர் குடி போதையில் நடந்த தகராறில் மாலை நேரத்தில் கொலை செய்யபட்டார்.
ஏப்ரல் 10: அலங்காநல்லூரில் பரமசிவம் என்பவரை அவரது மனைவி பாப்பாத்தி தனது ஆண் நண்பரான கார்த்திக்ராஜா என்பவருடன் சேர்ந்து கொலை செய்தார். கள்ளக்காதல் விவகாரமாக இருக்கலாம் என்கிறது போலீஸ்.
ஏப்ரல் 12: தத்தனேரியில் குடிபோதையில் அம்மா பேச்சியம்மாளை அவரது மகனே கொலை செய்துவிட்டார். போதை தெளிந்ததும் காவல் நிலையத்தில் கதறி அழுதார்.
ஏப்ரல் 14: உசிலம்பட்டியில் உறவினர்களுக்குள் நடந்த ஈகோவால் கார்த்திக்ராஜா என்பவர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஏப்ரல் 15: அழகர் கோயிலுக்குள் உள்ள நடைபாதை பகுதியில் காலை 5 மணிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த் முத்துப்பாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஏப்ரல் 19: விராதனூர் பகுதியில் ஆயிரம் பிள்ளை என்கிற பெண் கொலை செய்து கிடந்தார். இதுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏப்ரல் 21: மேலூர் கொட்டக்குடி பகுதியில் வீரம்மாள் என்பவர் கழுத்து நெரித்துக் கொலை. காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை.
மே 2: மேலூர் பகுதியில் உள்ள கல்குவாரி கிணற்றில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரைக் கடத்திவந்து கொடூரமாகக் கொலை செய்து போட்டுவிட்டுச் சென்றனர். காரணம் தெரியவில்லை.
மே 13: மாடக்குளத்தில் குடியிருப்போர் நலசங்கத் தலைவர் ஆண்டியப்பன் என்பவர் முன்விரோத பகையில் கொலைசெய்யப்பட்டார். கொலையாளி கோர்ட்டில் சரண்.
மே 21: உசிலம்பட்டியில் அப்பா மாயாண்டியை மகன் பாண்டியராஜ் வெட்டி கொலை. காரணம், குடிபோதை தகராறு.
மே 27: கே.கே. நகரில் நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக சிவகங்கையில் இருந்து வந்திருந்த விக்னேஷ் என்பவருடன் திருமண சரக்கு பார்டியில் அவரது நண்பர்களுக்குள் வாக்குவாதம். பீர் பாட்டிலால் விக்னேஷ் தலையில் அடித்துக் கொலை.
மே 30: தல்லாகுளம் பகுதியில் நாகபாண்டி என்பவர் வெட்டிக் கொலை. இது பழிவாங்கும் கொலை சம்பவம்.
ஜூன் 1: திருமங்கலம் அ.தி.மு.க. நகரச்செயலாளர் விஜயன் என்பவரது உறவினர் செண்பக பாண்டியனை குடி போதையில் கொலை செய்தது ஒரு குரூப். இதுவும் முன்விரோத பகையில் நடந்த கொலை.
ஜூன் 2: குலமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வெட்டிக்கொலை. காரணம், கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜூன் 3: பேரையூர் பகுதியில் உள்ள சாப்டூர் பகுதியைச் சேர்ந்த துரைபாண்டியை அவரது மனைவியே விறகு கட்டையால் அடித்துக் கொலை. காரணம். செக்ஸ் தொல்லை தந்ததால் இப்படி செய்தேன் என்றாராம் அவரது மனைவி.
ஜூன் 8: மதுரை காய்கறி சந்தையில் கடை ஏலம் எடுப்பதில் நடந்த தகராறில் சரவணக்குமார் என்பவர் வெட்டிக்கொலை. இதே நாளில் புதூரை சேர்ந்த செல்வசந்திரன் என்பவர் கொலை செய்து கிடந்தார். காரணம், இன்னமும் கண்டுபிடிக்கபடவில்லை.
ஜூன் 10: நீண்ட நாட்கள் ஆகியும் எனது மனைவியை காணவில்லை என்று உமாராணி என்பவரின் கணவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததால் எட்டு மாதத்துக்குமுன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட உமாராணியை, அழுகிய நிலையில் கண்டெடுத்தனர். உமாராணியை 50 ஆயிரம் பணத்துக்கு அவரது தோழியான பிரேமா தனது கள்ளக்காதலன் வேல்முருகன் மூலம் கொலை செய்தது தெரியவந்தது.
ஜூன் 14: ஜெய்ஹிந்த்புரத்தில் காதணி விழா நடத்திய கல்யாண மண்டபத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் பொழுது நடந்த தகராறில் ஷேக் இப்ராஹிம் என்பவர் சம்பவ இடத்திலே வெட்டிக்கொலை. இதே நாளில் கருப்பாயூரனி ரிங் ரோட்டில் இரவு கரிமேடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி செந்தில்குமார் கொலை செய்துகிடந்தார்.
ஜூன் 15: தந்தையர் தினமான இன்று உசிலம்பட்டியில் குடிபோதையில் தந்தை அழகர்சாமியை மகன் ராமர்பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்து, செய் நன்றி காட்டினார்.
ஜூன் 19: பேரையூர் அரசபட்டியில் இரவில் செல்வம் என்பவர் உறவினர் மூலம் கொலை செய்யப்பட்டார்.
ஜூன் 29: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூரில் ஹோட்டல் நடத்தி வந்த ஜான் சுதாகர், எட்வின் என்கிற இருவரும் தன்னிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளியான சிவன்காளையை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்றனர். காரணம் குடி போதையில் நடந்த வாய் தகராறு.
ஜூலை 2: கருப்பாயூரணி குன்னத்தூரை சேர்ந்த டிரைவர் முத்துராஜா. திடீரென ஒரு நாள்... அவரது வீட்டுக்குள் பரமசிவம் என்பவர் புகுந்து, முத்துராஜாவின் மனைவி, குழந்தைகள் என கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். முத்துராஜ் அதே இடத்தில் பிணமானார். கொலையாளி பரமசிவம் போலீஸில் “தனது மனைவியை அபகரித்துக் கொண்டதால் கொலைசெய்தேன்” என்று சொன்னார்.
ஜூலை 6: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி மாணவன் சேது சூர்யா. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் பட்டப்பகலில் கொலை செய்தது மாணவர் கோஷ்டி.
ஜூலை 9: சோழவந்தானில் சீனிவாசன் என்பவர் அவரது சகோதரனால் கொலை செய்யப்பட்டார்.
இதே நாளில், கூடல்நகர் எஸ்.வி.பி. நகரில் ஆண் சடலம் ஓன்று எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவர் விவரம் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஜூலை 12: ஜீவா நகரில் சொத்து தகராறில் தம்பி கணேசனை அண்ணன் பாலமுருகன் என்பவர் கொலை செய்தார்.
ஜூலை 13: அ.தி.மு.க பிரமுகர் ஜெயபாண்டி என்பவர் மதுரை கலெக்டர் அலுவலக சாலையில் வைத்து வெட்டி கொலை. இது, பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.
ஜூலை 16: கள்ளக்காதல் தகராறில் போஸ் என்பவரை சிவபாண்டி போதையில் கொலை செய்தார்.
ஆகஸ்ட் 5: உசிலம்பட்டி மாதரையில் கோழிக்கடை பாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ்.
ஆகஸ்ட் 6: திருமங்கலத்தில் காதர் மொய்தீன் என்பவர் கொலை. போலீஸ் சொல்லும் காரணம், அவரது அண்ணன் பஷீர் என்பவர் தனது மைத்துனியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு சொல்லி கேட்காமல் போனதால் காதர் மொய்தீன் கொலை செய்யப்பட்டாராம்.
ஆகஸ்ட் 7: யாகப்பா நகரில் சிடி கடை நடத்தும் தகராறில் விஜயகுமார் கொலை. ஜெகதீசன் கோஷ்டியினர் செய்தனர் என்கிறது போலீஸ்.
ஆகஸ்ட் 8: மதுரை திருப்பாலை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் காலை நேரத்தில் வக்கீல் முத்துதுரையை மூன்று பேர் கொண்ட குழு அரிவாளால்வெட்டி கொத்து பரோட்டா போட்டுவிட்டு பறந்துவிட்டது. பழிக்கு பழி வாங்க நடந்த கொலை என்கிறது போலீஸ். அன்று இரவே அ.தி.மு.க பிரமுகர் கீழவளவு பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வெட்டி கொலை. வெட்டிய கும்பலில் ஒருவரான நிரஞ்சன் என்பவரது மணிக்கட்டில் தவறுதலாக வெட்டுக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அட்மிட் ஆகி இரண்டு நாளில் நிரஞ்சன் மரணம் அடைந்தார்

* மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதுதான்.
* செவ்வாய் கிரகத்தையும் தாண்டி விண்வெளியில் ஆய்வு செய்யும் தொழில்நுட்பத் திறமையை இந்தியா பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
* மங்கள்யான் விண்கலத்தின் மொத்த எடையே 15 கிலோதான். ஆனால் அதிநவீனமாக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
* மங்கள்யானில் மொத்தம் 5 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ஒரு கருவி மீத்தேன் இருக்கும் அளவை ஆராயும். 2–வது கருவி லைமன் ஆல்பா ஒளிமானி எனப்படும் போட்டோ மீட்டர் கருவியாகும். மேற்கண்ட இவை இரண்டும் செவ்வாய் கிரக காற்று மண்டல தகவல்களைத் தரும்.
* செவ்வாய் கிரகத்தின் மேற்புற படிமங்களை ஆய்வு செய்ய அதிநவீன கலர் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல சிறப்பு நிற கதிர்கள் பற்றி மற்றொரு கருவி ஆய்வு செய்யும். இவை தவிர செவ்வாய் புறக்காற்று மண்டலத்தை 5–வது கருவி ஆய்வு செய்யும்.
* செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக ஒரு ராக்கெட் தளம் அமைப்பதற்கான ஆய்வையும் மங்கள்யான் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். இதன் மூலம் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்தியாவால் விண்கலங்களை அனுப்ப முடியும்.
* மங்கள்யான் அனுப்பும் படங்களின் அடிப்படையில் விண்வெளி தொடர்பு முறைகளை விருத்தி செய்யவும் இந்திய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
* மங்கள்யான் இன்னும் 6 மாதங்களுக்கு செயல்படும் ஆற்றல் கொண்டது. இந்த 6 மாதங்களில் சுமார் 60 தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் விண்கலம் சுற்றி வரும்.
* மங்கள்யான் தனது 300 நாள் பயணத்தின்போது, வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஹெலன் புயலை மிகத் தெளிவாக படம் எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
* மங்கள்யான் தன் 4–வது சுற்றுப்பாதையை தொடங்கிய போது சிறிது எந்திரக் கோளாறு ஏற்பட்டது. சரியான நேரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்து விட்டதால் உடனடியாக அந்த எந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டது.
* மங்கள்யான் தன் பயணத்தின் 200–வது நாள் 42 கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தது. இது மொத்த பயண தூரத்தில் 60 சதவீதமாகும்.
* மங்கள்யானின் மொத்த பயண நாளான 325 நாட்களில் 4 தடவை பாதை மாற்றி விடப்பட்டது.
* செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் 3.2 நாட்களுக்கு ஒரு தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் சுற்றி வரும்.
* மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்று சேர மொத்தம் 250 கிலோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* செவ்வாய் கிரக ஆய்வில் மங்கள்யானின் பணி, அமெரிக்காவின் நாசா திட்டங்களையும் விட முதன்மையானதாக, வலுவுள்ளதாக, பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
* மங்கள்யான் அடுத்த 6 மாதங்களில் செயல்பட போவதை பெங்களூர் அருகே உள்ள பயலாலுவில் உள்ள இந்திய தொலைநிலை விண்வெளி கட்டுப்பாட்டு மையம் கண்காணிக்கும்.
* செவ்வாய் கிரகத்தையும் தாண்டி விண்வெளியில் ஆய்வு செய்யும் தொழில்நுட்பத் திறமையை இந்தியா பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
* மங்கள்யான் விண்கலத்தின் மொத்த எடையே 15 கிலோதான். ஆனால் அதிநவீனமாக அது தயாரிக்கப்பட்டுள்ளது.
* மங்கள்யானில் மொத்தம் 5 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ஒரு கருவி மீத்தேன் இருக்கும் அளவை ஆராயும். 2–வது கருவி லைமன் ஆல்பா ஒளிமானி எனப்படும் போட்டோ மீட்டர் கருவியாகும். மேற்கண்ட இவை இரண்டும் செவ்வாய் கிரக காற்று மண்டல தகவல்களைத் தரும்.
* செவ்வாய் கிரகத்தின் மேற்புற படிமங்களை ஆய்வு செய்ய அதிநவீன கலர் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல சிறப்பு நிற கதிர்கள் பற்றி மற்றொரு கருவி ஆய்வு செய்யும். இவை தவிர செவ்வாய் புறக்காற்று மண்டலத்தை 5–வது கருவி ஆய்வு செய்யும்.
* செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக ஒரு ராக்கெட் தளம் அமைப்பதற்கான ஆய்வையும் மங்கள்யான் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். இதன் மூலம் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்தியாவால் விண்கலங்களை அனுப்ப முடியும்.
* மங்கள்யான் அனுப்பும் படங்களின் அடிப்படையில் விண்வெளி தொடர்பு முறைகளை விருத்தி செய்யவும் இந்திய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
* மங்கள்யான் இன்னும் 6 மாதங்களுக்கு செயல்படும் ஆற்றல் கொண்டது. இந்த 6 மாதங்களில் சுமார் 60 தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் விண்கலம் சுற்றி வரும்.
* மங்கள்யான் தனது 300 நாள் பயணத்தின்போது, வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஹெலன் புயலை மிகத் தெளிவாக படம் எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
* மங்கள்யான் தன் 4–வது சுற்றுப்பாதையை தொடங்கிய போது சிறிது எந்திரக் கோளாறு ஏற்பட்டது. சரியான நேரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை கண்டுபிடித்து விட்டதால் உடனடியாக அந்த எந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டது.
* மங்கள்யான் தன் பயணத்தின் 200–வது நாள் 42 கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தது. இது மொத்த பயண தூரத்தில் 60 சதவீதமாகும்.
* மங்கள்யானின் மொத்த பயண நாளான 325 நாட்களில் 4 தடவை பாதை மாற்றி விடப்பட்டது.
* செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் 3.2 நாட்களுக்கு ஒரு தடவை செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் சுற்றி வரும்.
* மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்று சேர மொத்தம் 250 கிலோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* செவ்வாய் கிரக ஆய்வில் மங்கள்யானின் பணி, அமெரிக்காவின் நாசா திட்டங்களையும் விட முதன்மையானதாக, வலுவுள்ளதாக, பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
* மங்கள்யான் அடுத்த 6 மாதங்களில் செயல்பட போவதை பெங்களூர் அருகே உள்ள பயலாலுவில் உள்ள இந்திய தொலைநிலை விண்வெளி கட்டுப்பாட்டு மையம் கண்காணிக்கும்.
திருப்பூர்,செப்.25-
திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணிபட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 79 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள உற்பத்தி செய்யும் ரகங்களை கொமுதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக திகழும் காஞ்சிபுரம்,சேலம்,கோவை,ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்று திகழ்கின்றன.வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்புகளை கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து நிலையங்களிலும் கடந்த 15.09.2014 முதக்ல், அடுத்த ஆண்டு 31.01.2015 வரை 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. திருப்பூர் மாநகராட்சி அலுவலக வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் விற்பனை மற்றும் தங்க மழை பரிசு திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.மேலும் புதிய வரவான மகாராணிபட்டுச் சேலையை கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கூறியதாவது:-
தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமலகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு பருத்தி சேலைகளில் போர்வைகள்,படுக்கை விரிப்புகள்,தலையணை உறைகள, வேஷ்டி, லுங்கி,துண்டு ரகங்கள ஆடவர்கள அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டில் புது முயற்சியாக மகாராணி பட்டுச் சேலைகளை தீபாவளி பண்டிகை விற்பனைக்கு அறிமுகபடுத்தபத்டுள்ளது.200 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆட்சி செய்த சாத்தூர், புதுக்கோட்டை,சின்னமனூர்,தலைவன் கோட்டை, போன்ற ஜமீன்களின் அரண்மணைகளுக்கு கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பு குழுவினர் நேரில் சென்று மன்னர்களின் ராணிகள்,இளவரசிகள் அணிந்த சேலைகளை சேகரித்து அவற்றை போலவே அச்சு அசலாக வெண்பட்டில் சிறுமுகை, திருப்பூர் கணபதிபாளையம், கோயில் வழி ஆகிய நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கோ-ஆப்டெக்ஸ்மகாராணி பட்டுச் சேலைகள் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த சேலைகள் ரூ.7 ஆயிரம் முதல், ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்த சேலைகளுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
14ம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த அதியா துறையாரு மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ராணிகள் உடுத்திய சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் அவரது குடும்ப வாரிசுகளிடமிருந்து பிரத்தியகமாய் பெற்றுள்ளது.கடந்த ஆண்டு தீபாவளி 2013 ம் ஆண்டின் பொது கோவை மண்டலம் செய்த விற்பனை ரூ.1473.88 லட்சங்களாகும்.நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2014ம் ஆண்டிற்கு கோவை மண்டலத்திற்கு ரூ.2400.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2013 ஆண்டின் பொது கோ-ஆப்டெக்ஸ் திருப்பூர் குமரன் விற்பனை நிலையம் ரூ.49.71 லட்சம் விற்பனை செய்துள்ளது.நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2014 ஆண்டிற்கு ரூ.75.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கபத்டுள்ளது.மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் கடந்த ஆண்டு தீபாவளி 2013 ஆண்டின் போது 155.62 லட்சங்கள் ஆகும்.நடப்பு ஆண்டிற்கு திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.240.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அரசு பணியாளர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனக்களின் பணியாளர்களுக்கு கடன் வசதி அளிக்கப்படுகிறது.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கோரினார்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் எஸ்.எம்.ஏ.செய்யது முகமது,வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் து.சதாசிவம், தணிக்கை மேலாளர் கோ.ராஜேந்திரன், துணை மண்டல மேலாளர் பி.ரவி, ரக மேலாளர் கே.ரவி, மக்கள் தொடர்பு மேலாளர் ஆர்.நடராஜன், கோ-ஆப்டெக்ஸ் திருப்பூர் குமரன் விற்பனை நிலைய மேலாளர் எஸ்.ஏ.தனபாலன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்தது. நேற்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை அடைந்த மங்கள்யான் விண்கலம் புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது.
மங்கள்யான் விண்கலத்தில் உள்ள வண்ணப் புகைப்பட கேமரா எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளன என்று இஸ்ரோ தெரிவித்தது. தற்போது மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் இஸ்ரோவின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. 7300 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று இஸ்ரோ பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளதா? அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது? அங்கு மீத்தேன் வாயு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை இந்தியா அனுப்பிவைத்து உள்ளது. இதற்கு தேவையான கருவிகள் அதில் பொருத்தப்பட்டு உள்ளன. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி இதுபற்றிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வைக்கும். மேலும், படங்களையும் எடுத்து அனுப்பி வைக்கும். மங்கள்யானின் ஆயுள்காலம் 6 மாதங்கள் ஆகும். அதுவரை அது செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி தனது பணியை வெற்றிகரமாக மேற்கொள்ளும். மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் பெங்களூரை அடுத்து பைலாலு, அமெரிக்காவில் உள்ள கோல்டுஸ்டோன், ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட், ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா ஆகிய 4 இடங்களில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்கப்படும்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கோயில் நவராத்திரி கலைவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து,
வியாழக்கிழமை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வியாழன் (செப்.25) காலை மாணவி ராஜராஜேஸ்வரியின் பரதநாட்டியம், மகரஜோதி குழு இன்னிசை. மாலையில் பக்தி இன்னிசை, பரத நாட்டியம், என்.ரெங்கநாத சர்மாவின் கர்நாடக சங்கீதம், இரவு திரைப்பட நடிகை அம்மு ராமச்சந்திரனின் பரதநாட்டியம்.
வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரம். காலை வத்ஸலா, தரணி பாண்டியன் குழுவின் பக்தி இன்னிசைகள், மாலையில் பத்மினி முருகன் குழுவின் இன்னிசை, பி.முருகனின் வயலின், ஆர்.மகாலட்சுமியின் பரத நாட்டியம், சுரேஷ் சிவனின் தேவார இன்னிசை, இரவில் தாயே நீயே துணை எனும் தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, போடி குருசாமி குழு பக்தி மெல்லிசை.
சனிக்கிழமை அருள்மிகு அம்மன் சயனத் திருக்கோலம். காலை டாக்டர் பி.பாலசுப்பிரமணியன் ஆன்மிகச் சொற்பொழிவு, எம்.சோஷ்ட்னாலட்சுமி கர்நாடக சங்கீதம், குமரகுருபரனின் பக்தி மெல்லிசையும், மாலையில் பரத நாட்டியம், இரவு கே.கே.விக்னேஷின் கர்நாடக சங்கீதம், கடையநல்லூர் ஆர்.சிங்காரவேலுவின் பக்தி மெல்லிசை.
ஞாயிற்றுக்கிழமை முருகனுக்கு வேல் வழங்கும் திருக்கோலம். காலையில் பரத நாட்டியம், வை.சங்கரலிங்கத்தின் சொற்பொழிவு, நாத சங்கமம், மாலையில் பரதநாட்டியங்கள், இரவு நாகை முகுந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, மஹதியின் கர்நாடக சங்கீதம்.
திங்கள்கிழமை அருள்மிகு அம்மன் கோலாட்ட அலங்காரம். காலையில் பக்தி இன்னிசை, சண்முக திருக்குமரன் தலைமையில் அங்கையற்கண்ணி கருணை பொலிவது திருக்கரமே, திருவடியே எனும் தலைப்பில் ஆன்மிகச் சொல்லரங்கம், மாலையில் பரத நாட்டியங்கள், இரவு ஈஸ்வரி-ஈஸ்வரன் குழுவின் பக்தி மெல்லிசை.
செவ்வாய்க்கிழமை அம்மன் திருமணக் கோலம். காலையில் சென்னை ஷோபனா சுவாமிநாதனின் வீணை இன்னிசை, பரத நாட்டியங்கள், மாலையில் பக்தி இன்னிசை, கரூர் ம.சுகந்திபிரியாவின் மீனாட்சித் திருக்கல்யாண நாட்டிய நாடகம், மீனாட்சி ராமச்சந்திரனின் ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு துஷாரா ஸ்ரீனிவாசனின் பரத நாட்டியம்.
புதன்கிழமை (அக்.1) மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம். காலை விஜய்கணேஷின் புல்லாங்குழல் இன்னிசை, பரத நாட்டியம், மாலை இளம்பிறை மணிமாறனின் ஆன்மிகச் சொற்பொழிவு, கவிதா மகேந்திரனின் பக்திப் பாடல்கள், பரத நாட்டியம்.
வியாழன் (அக்.2) காலையில் பக்தி மெல்லிசை, பரத நாட்டியம், மாலை கர்நாடக சங்கீதம், பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் சேக்கிழார் தந்த செல்வம் எனும் பொருளிலான ஆன்மிகச் சொற்பொழிவு. இரவில் பேராசிரியர் ரா.மோகன் தலைமையில் 21-ஆம் நூற்றாண்டு ஆன்மிகத் திருக்கொடை உரையரங்கம், சீர்காழி ஜி.சிவசிதம்பரத்தின் இன்னிசை. வெள்ளிக்கிழமை (அக்.3) விஜயதசமி. மாலையில் 108 வீணை வழிபாடு.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் உத்தரவின்பேரில் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி கலை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வியாழன் (செப்.25) காலை மாணவி ராஜராஜேஸ்வரியின் பரதநாட்டியம், மகரஜோதி குழு இன்னிசை. மாலையில் பக்தி இன்னிசை, பரத நாட்டியம், என்.ரெங்கநாத சர்மாவின் கர்நாடக சங்கீதம், இரவு திரைப்பட நடிகை அம்மு ராமச்சந்திரனின் பரதநாட்டியம்.
வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரம். காலை வத்ஸலா, தரணி பாண்டியன் குழுவின் பக்தி இன்னிசைகள், மாலையில் பத்மினி முருகன் குழுவின் இன்னிசை, பி.முருகனின் வயலின், ஆர்.மகாலட்சுமியின் பரத நாட்டியம், சுரேஷ் சிவனின் தேவார இன்னிசை, இரவில் தாயே நீயே துணை எனும் தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, போடி குருசாமி குழு பக்தி மெல்லிசை.
சனிக்கிழமை அருள்மிகு அம்மன் சயனத் திருக்கோலம். காலை டாக்டர் பி.பாலசுப்பிரமணியன் ஆன்மிகச் சொற்பொழிவு, எம்.சோஷ்ட்னாலட்சுமி கர்நாடக சங்கீதம், குமரகுருபரனின் பக்தி மெல்லிசையும், மாலையில் பரத நாட்டியம், இரவு கே.கே.விக்னேஷின் கர்நாடக சங்கீதம், கடையநல்லூர் ஆர்.சிங்காரவேலுவின் பக்தி மெல்லிசை.
ஞாயிற்றுக்கிழமை முருகனுக்கு வேல் வழங்கும் திருக்கோலம். காலையில் பரத நாட்டியம், வை.சங்கரலிங்கத்தின் சொற்பொழிவு, நாத சங்கமம், மாலையில் பரதநாட்டியங்கள், இரவு நாகை முகுந்தனின் ஆன்மிகச் சொற்பொழிவு, மஹதியின் கர்நாடக சங்கீதம்.
திங்கள்கிழமை அருள்மிகு அம்மன் கோலாட்ட அலங்காரம். காலையில் பக்தி இன்னிசை, சண்முக திருக்குமரன் தலைமையில் அங்கையற்கண்ணி கருணை பொலிவது திருக்கரமே, திருவடியே எனும் தலைப்பில் ஆன்மிகச் சொல்லரங்கம், மாலையில் பரத நாட்டியங்கள், இரவு ஈஸ்வரி-ஈஸ்வரன் குழுவின் பக்தி மெல்லிசை.
செவ்வாய்க்கிழமை அம்மன் திருமணக் கோலம். காலையில் சென்னை ஷோபனா சுவாமிநாதனின் வீணை இன்னிசை, பரத நாட்டியங்கள், மாலையில் பக்தி இன்னிசை, கரூர் ம.சுகந்திபிரியாவின் மீனாட்சித் திருக்கல்யாண நாட்டிய நாடகம், மீனாட்சி ராமச்சந்திரனின் ஆன்மிகச் சொற்பொழிவு, இரவு துஷாரா ஸ்ரீனிவாசனின் பரத நாட்டியம்.
புதன்கிழமை (அக்.1) மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம். காலை விஜய்கணேஷின் புல்லாங்குழல் இன்னிசை, பரத நாட்டியம், மாலை இளம்பிறை மணிமாறனின் ஆன்மிகச் சொற்பொழிவு, கவிதா மகேந்திரனின் பக்திப் பாடல்கள், பரத நாட்டியம்.
வியாழன் (அக்.2) காலையில் பக்தி மெல்லிசை, பரத நாட்டியம், மாலை கர்நாடக சங்கீதம், பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் சேக்கிழார் தந்த செல்வம் எனும் பொருளிலான ஆன்மிகச் சொற்பொழிவு. இரவில் பேராசிரியர் ரா.மோகன் தலைமையில் 21-ஆம் நூற்றாண்டு ஆன்மிகத் திருக்கொடை உரையரங்கம், சீர்காழி ஜி.சிவசிதம்பரத்தின் இன்னிசை. வெள்ளிக்கிழமை (அக்.3) விஜயதசமி. மாலையில் 108 வீணை வழிபாடு.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் உத்தரவின்பேரில் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
மதுரை சின்னசொக்கிக்குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகமது. ரியல் எஸ்டேட்
அதிபரான இவர் கடந்த 2-ந் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச்செல்லப்பட்டு கொலை
செய்யப்பட்டார்.இது தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி(39) என்பவரை முதலில் கைது செய்தனர். இதையடுத்து, மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் (26) என்பவர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில், போலீசார் கொடைக்கானலுக்கு சென்று ஜமால்முகமது உடலை மீட்டனர். பின்பு இந்த கொலை வழக்கு தொடர்பாக பலரை தேடி வந்த நிலையில் விருதுநகர் கோர்ட்டில் முக்கிய குற்றவாளிகளான முகமது சித்திக் (35), மாரிமுத்து (27) ஆகியோர் சரண் அடைந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
“அலாவுதீன் டிரஸ்ட் என்ற அமைப்புக்குச் சொந்தமான 1 ஏக்கர் 64 சென்ட் நிலம் அரசரடி புதுஜெயில் ரோடு, முரட்டன்பத்திரி பகுதியில் உள்ளது. இந்த டிரஸ்டுக்கு தலைவராக ஜமால்முகமதுவும், 11 பேர் உறுப்பினராகவும் இருந்து வந்தனர். இந்த நிலத்தை விற்கும் உரிமைக்கான பவரை ஜமால்முகமதுவிற்கு டிரஸ்ட் உறுப்பினர்கள் வழங்கி இருந்தனர்.
அந்த நிலத்தில் கணேசன் என்பவரின் மாமனார் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து உழவடை செய்து வந்தார். அவரது இறப்பிற்கு பின்னர் கணேசன் நிலத்தை பராமரித்து வந்தார். எனவே அந்த நிலத்தில் தனக்கு பங்கு தருமாறு கணேசன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கணேசனுக்கு ஆதரவாக வக்கீல் ஒருவர் இந்த வழக்கை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் அரசரடி ஏ.ஏ.ரோட்டில் வசிக்கும் பழனிவேலுக்கு (முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமியின் சகலை) இந்த நிலம் தொடர்பாக தெரியவந்தது. எனவே அவர் நிலத்தை விற்கும் போது தங்களுக்கு தருமாறும், ஒரு சென்ட் ரூ.8 லட்சம் வரை தருவதாகவும் ஜமால்முகமதுவிடம் கூறினார். அதன்பின் முன் பணமாக ரூ.65 லட்சம் ஜமால்முகமதுவிற்கு வழங்கப்பட்டது. பணம் வழங்கி வெகு நாட்கள் ஆகியும், இடத்தை பத்திரம் போட்டுத் தராமல் ஜமால்முகமது தயங்கி வந்தார்.
இந்த நிலையில், உழவடை செய்து வரும் கணேசன், கூடல்புதூர் சித்திக் உள்ளிட்டோர் ஜமால்முகமதுவை கடத்தினார்கள்.
கடந்த 1-ந் தேதி அலாவுதீன் டிரஸ்டுக்கு சொந்தமான நிலத்தில், 5 சென்ட் நிலம் பழனிவேல் பெயருக்கும், 5 சென்ட் நிலம் பழனிவேல் மனைவி உமாராணி பெயருக்கும், 10 சென்ட் நிலம் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா பெயருக்கும் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலத்தில் மீதிப்பகுதி அனைத்துக்கும் கணேசன் பெயரில் பவர் வாங்கப்பட்டது.
இந்த பத்திரப் பதிவுக்காக சம்பவத்தன்று ஜமால்முகமதுவிற்கு ரூ.20 லட்சம் பணம் ரொக்கமாகவும், ரூ.10 லட்சம் காசோலையாகவும் கொடுக்கப்பட்டன. அதன்பிறகுதான் (செப். 2-ந் தேதி) ஜமால்முகமது கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் தெரியவந்த நிலையில், ஜக்கிய ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், “ஜமால்முகமது கொலை வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் அறக்கட்டளை சொத்துக்களை விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களையும், அந்த சொத்துக்களை வாங்கி லாபம் அடைந்தவர்களையும் இதுவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சி.பி.ஐ. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உரிய நீதி கிடைக்கும்” என்று கூறியிருந்தனர்.
இதுபற்றி தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, ஜமால்முகமதுவிடம் சொத்துக்களை வாங்கிய இந்திரா (திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகள்), பழனிவேல் (ஐ.பெரியசாமியின் சகலை), அவருடைய மனைவி உமாராணி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
கைதான 3 பேரும் மதுரை 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மாலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு திரிவேணி, அவர்கள் 3 பேரையும் வருகிற 7-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதன்படி, இந்திரா, உமாராணி ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், பழனிவேல் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்

குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. உதவி கமிஷனர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று மனு கொடுத்தனர்.
இந்நிலையில் புதூர் லூர்து பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் மாநகராட்சிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகிப்பதில்லை.
இதன் காரணமாக தாங்கள் மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் குடிநீர் பிரச்சினை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் குறைதீர் கூட்டத்துக்கு சென்ற அவர்கள் உதவி கமிஷனர் பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த னர். 50–க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் பள்ளிக்காவலர்கள், துப்புரவு பணியாளர்கள்
பணி நியமனங்கள் அனைத்தும் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகளின்
பரிந்துரைப்படி நடந்துள்ளதாகவும், எனவே, அந்த பணி நியமனங்களை ரத்து செய்து
விட்டு அதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும்,
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கணேசன் என்பவர், மதுரை
ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கர் நேரில் ஆஜரானார். அவரிடம், விசாரணை குறித்த பல்வேறு தகவல்களை நீதிபதி எஸ்.நாகமுத்து கேட்டார். அதற்கு சி.வி.சங்கர் பதில் அளித்தார்.
அதன் பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
“ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.வி.சங்கரின் விசாரணை அறிக்கை திருப்தியாக இல்லை. பரிந்துரை கடிதம் கொடுத்தவர்களிடம் அவர் விசாரணை நடத்தவில்லை. பணி நியமனத்துக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் பேசி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்தும் முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணை சம்பந்தமாக ஐகோர்ட்டு எழுப்பி உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தென்மண்டல சூப்பிரண்டு சேவியர் தனராஜ் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை 6 மாதத்துக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வானவர்களின் பட்டியலில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பெயர்களுக்கு நேர் எதிரே எந்த அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 2 பேரின் பெயருக்கு எதிரே ‘மெரிட்’ (தகுதி) என்றும், மற்ற 6 பேரின் பெயருக்கு எதிரே அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த 6 பேரின் பணி நியமனங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்த முறை நியமனங்கள் மேற்கொள்ளும் போது தகுதி அடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி, கூலித் தொழிலாளி. இவரது மகள் வீரலெட்சுமி (வயது19). வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் வேலை பார்த்து வருகிறார்.
பாலமேடு, கோனபட்டியை சேர்ந்த ரவி மகன் முரளி (வயது 20). இவர்கள் இருவரும் மேட்டுப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனபட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு தோழி அழைத்ததன்பேரில் வீரலட்சுமி சென்று இருந்தார். அங்கு இருந்த முரளி, தனியாக பேச வேண்டும் என்று கூறி வீரலட்சுமியை மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தென்னந்தோப்புக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக வீரலட்சுமியிடம் முரளி உறுதி அளித்துள்ளார். ஆனால் சில நாட்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள முரளி மறுத்துள்ளார்.
இதுகுறித்து சமயநல்லூர் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் கற்பழிப்பு வழக்கில் முரளியை கைது செய்து, கடந்த 6–ந் தேதி மதுரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் வீரலெட்சுமி 2 மாத கர்ப்பிணியானார். அதனால் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி, முரளிக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தனர். இந்த தகவலை சிறையில் இருக்கும் முரளியிடம் தெரிவித்து அவரிடமும் சம்மதம் பெற்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து முரளியை ஜாமீனில் எடுத்து வீரலட்சுமியுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு முரளியை ஜாமீனில் வெளியே எடுத்தனர். இதையொட்டி நேற்று மாலை அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு காத்திருந்த வீரலட்சுமி மற்றும் முரளியை காரில் அழைத்துக் கொண்டு சென்றனர். மிளகரனையில் உள்ள அய்யனார் கோவில் முன்பு 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


