Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமைதியான முறையில் அறவழியிலும், அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி எம்.பாலு தலைமையில் 
உண்ணாவிரதம் இருந்தனர், இந்த நிகழ்ச்சிகளில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    


திருப்பூர்,அக்.4-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு.குணசேகரன் தலைமையிலும்,,வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி எம்.பாலு தலைமையிலும், தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு அருகில் 4வது மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமையிலும், திருப்பூர் மாநகராட்சி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் கடை  அடைப்பு நடத்தி காமராஜ் ரோட்டில் சங்கத்தலைவர் தலைமையிலும் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமைதியான முறையில் அறவழியிலும், கோவில், மசூதி, சர்ச் ஆகிய வழிப்பட்டு தலங்களில் பிராத்தனை செய்தும் 45 பேர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும் அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்ட திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது நீதிக்கும், தர்மத்திற்கும் வழங்கப்பட்ட தண்டனையாகும்.நீதிபதி என்பவர் சுய விருப்பு, வெறுப்பு இல்லாமல் தீர்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் இந்த தீர்ப்பை பொருத்தவரையில் தனிப்பட்ட முறையில் வேண்டும் என்றே ஜெயலலிதாவை பழிவாங்க வேண்டும் என்று மனித செயலற்ற வெறித்தனமான தீர்ப்பு ஆகும். இது வரை நடந்த வழக்குகளில் எந்த நீதிபதியும் இது போன்ற அநீதியான நீதியை கொடுத்தது இல்லை.இந்த செயலை அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி கூறினார்.
 துணை மேயர் சு.குணசேகரன் பேசும்போது, மக்களால் நான், மக்களுக்காக நான் என வாழ்ந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஒரு துறவியைபோல் வாழ்ந்து வந்தார்.அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது என்பது பெரும் பாக்கியமாக கொள்ள வேண்டும். இன்று அவரை கர்னாடகா கோர்ட் தவறான தீர்ப்பினை வழங்கியுள்ளது.அவர்களை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டர்கள்.அவர் வெளியே வரும்போது எதிர் கட்சியினருக்கு தக்க பாடம் புகட்டுவார்.என அவர் பேசினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம்,ஸ்டீபன்ராஜ், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிகுமார், எஸ்பி.என்.பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, கலைமகள் கோபால்சாமி எம்.சி., டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சி.எஸ்.கண்ணபிரான், அ.கண்ணப்பன், வடக்கு ஒன்றிய செயலளார் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், வி.பட்டுலிங்கம் .ரஞ்சித்ரத்தினம், அசோக்குமார், ராஜ்குமார்,  ரத்தினகுமார், ஈஸ்வரமூர்த்தி,காலனி செல்வராஜ், பாசறை ஏ.எம்.சதீஷ், யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், அன்பரசன்,ஆகியோர்களும் 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி, திருப்பூர் கிளை நிர்வாகிகள் ராஜேந்திரன்,சரவணன், ரவிகுமார்,முருகன், குணசேகரன், கணேஷ், சிவகுமார், சி.டி.சி.பழனிசாமி ஆகியோர்களும் 
அஹமது பைசல்,சாகுல்அமீது, தாமோதரன், காதர்பேட்டை ஜின்னாபாய்,அப்பாஸ், ராபிதீன், கே.எம்.பி.சாகுல்ஹமீது, ஷேக்தாவூத், முஹமதுயூனுஸ்,இஸ்மாயில், கவுன்சிலர்கள்  முருகசாமி, செல்வம், பாலசுப்பிரமணியன், கணேஷ்,பாலன், கனகராஜ், விஜயகுமார், சபரீஷ்வரன், சின்னசாமி, ஈஸ்வரன், ஆகியோர்களும், நல்லூர் லோகநாதன், சுரேந்தர், மணிகண்டன்,நீதிராஜன், மகளிர் அணியை சேர்ந்த கோமதி, அன்னபூரணி, சுந்தரம்பாள், இந்திராணி, மும்தாஜ், பேபி பழனிசாமி, சம்சாத், ரிஸ்வானா,ரஹ்மத்நிசா, கதிஜாபானு, சாராபானு மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொங்கு ராஜாமணி, ராஜசேகர், அஜீம்பாஷா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். 
மேலும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் அனுப்பியுள்ள செய்தியில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் தொழில் மேம்பாடு, தொழிலாளர்கள் நலன் இவற்றுடன் திருப்பூர் நகர வளர்ச்சியிலும் தனி கவனம் செலுத்தி வரும் அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக ஆதரவு செரிவித்து இன்று அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் அதன் தொடர்புடைய சங்கங்கள் சார்பாக ஒருநாள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி, திருப்பூரில், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 1-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.இதை தொடர்ந்து இன்று அனைத்து பின்னலாடை தொழில் துறை சங்கங்கள் இணைந்து முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பின்னலாடை துறையினர் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்கர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்கர் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
நீலகிரி மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்து கூடலூரில் ஆலோசனை நடத்தினேன். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்து உள்ளோம்.
சிறுபான்மையினத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு கட்டாய திருமண சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டந்தோறும் இஸ்லாமிய பள்ளி வாசல்களில் உள்ள காஜிகளுக்கு திருமண பதிவுக்கான அதிகாரம் அளிக்க வேண்டும். அப்போது தான் இஸ்லாமியர் கலாசாரத்தை பாதுகாக்க முடியும்நாடு முழுவதும் பலகோடி ரூபாய் மதிப்பு உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த சொத்துக்களை மீட்க கடந்த 2013–ம் ஆண்டு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சீர் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டம் நிறைவேறியதால் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, சென்னை என்ற 5 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, வக்புவாரிய சொத்துக்களை விரைவாக மீட்கப்பட உள்ளன. தமிழகத்தில் ஊட்டியில் தான் வக்பு வாரிய சொத்துக்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதை மீட்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



On Saturday, October 04, 2014 by farook press in ,    
காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக நீலகிரி மாவட்டத்தில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத் தில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் சங்கர் உத்தர விட்டு இருந்தார்.
இதன்படி மதுக்கடைகள் மற்றும் பார் கள் மூடப்பட்டு இருந்தன. இருப்பினும் ஊட்டி, குன் னூர், கோத்தகிரி, குந்தா, கூட லூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று காந்தி ஜெயந்தி தினத் தன்று விற்பனை செய்ததாக 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் கூறியதாவது:- நீலகிரி மாவட் டத்தில் காந்தி ஜெயந்தி தினத் தன்று மது விற்றதாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடலூரில் முஸ்தபா என்பவரிடம் இருந்து 33 மது பாட்டில்கள் உள்பட மொத் தம் 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் கடையடைப்பு போராட் டமும்,கூடலூரில் கூட்டு பிரார்த்தனையும் நடை பெற்றது
அ.தி.மு.க. பொதுச்செயலா ளர் ஜெயலலிதாவை விடு தலை செய்யக்கோரி பந்தலூர், உப்பட்டியில் நேற்று கடைய டைப்பு போராட்டம் நடை பெற்றது. இதனால் அனைத்து கடைகளும் காலை முதல் மாலை வரை அடைக்கப்பட் டன. ஆனால் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பந்தலூர் வியா பாரிகள் சங்கம் சார்பில் உண் ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இதில் வியாபாரிகள் முன் னேற்ற நல சங்க தலைவர்அசரப் தலைமை தாங்கினார். செய லாளர் ராமானுஜம், பொருளா ளர் கிருஷ்ணகுமார், உப்பட்டி வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்புசாமி, வக் கீல் ஜெயசீலன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்
நெலாக்கோட்டையில் அ. தி.மு.க. சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற் றது.போராட்டத்திற்கு பந்தலூர் ஒன்றிய செயலாளர் அபு தலைமை தாங்கி னார். இதில், ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திராணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பவுலோஸ்குட்டி, வக்கீல்கள் பொன் ஜெயசீலன், பேபி, உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார் கள்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதாவை விடுதலை செய்யக் கோரி அ.தி. மு.க. தொண்டர் கள் சிலர் மொட்டை யடித்துக் கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவு பெற்றது.
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கூடலூரி¢ல் அனைத்து மத பிரதிநிதிகளின் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், நெலாக் கோட்டை மசூதி இமாம் உஸ் மான் தாரினி, முத்து மாரியம் மன் கோவில் அர்ச்சகர் கதிரே சன், கிறிஸ்தவ ஆலய போதகர் ஜெயராஜ் ஆகியோர் பிரார்த் தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. மாவட்ட செயலாளரும், தாட்கோ தலைவருமான கலைச்செல்வன், ஆவின் வாரிய இணைய தலைவர் அ.மில்லர், அவை தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் ஆவின் வாரிய இணைய தலைவர் மில்லர் தலைமையில் நடை பெற்றது.

இதில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அனூப், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் ராணி, நகர செயலாளர் ராஜா தங்கவேல், ஒன்றிய செயலாளர் பத்ம நாபன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
அந்தியூர் பஸ்நிலையத்திற்கு தினமும் 500–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் அந்தியூர் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் தங்களது தேவைகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லுதல் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கும் வெளியூர் கல்லூரிகளுக்கு அந்தியூர் பஸ்நிலையத்தில் இருந்து செல்கின்றனர் கர்நாடக மாநிலத்திற்கு அந் தியூரில் இருந்து மைசூர் பகுதிக்கு எளிதாக செல்ல பர்கூர் மலைப்பாதையை பயன் படுத்திவருகின்றனர் அதனால் அந்தியூர் பஸ்நிலை அனைத்து கிராமக்களும் கூடுவதால் எப்போதும் பரபரப்பாவே காணப்ப டும் இங்கு உள்ள பஸ்நிலையத்தில் நடைபாதை மிகவும் பழுது அடைந்து விட்டது அதனால் முதியவர்கள் கம்பு ஊன்றி கூட செல்லமுடியாத நிலையில் உள்ளது சிறுவர்கள் பஸ்வந்தவுடன் ஓடி பஸ்ஏறும் ஆர்வத்திலும் இருக்கையை பிடிக்கவேண்டும் என்ற வேகத்லும் செல்லும் பொழுது பல சமையங்களில் அந்த ஆப்த்தான பள்ளதில் கால் இடரி விழுந்து விடுகின் றனர் இரவு நேரத்தில் மின்சப்பாளை நிறுத்தம் என்றால் முதியவர் முதல் பெரியவர்கள் சிறியவர்களின் நிலையும் தட்டுதடுமாரி சென்று பஸ்ஏற வேண்டிய நிலையுள்ளது வாரத்திற்கு 2 பேராவது கிழேவிழுந்து கயாம் ஏற்படுத்திகொள்கின்றனர் சில சமயங்கிளல் பஸ்சில் இருந்து இறங்கும்பொழுது விழுந்து கால்முறிவுகளும் ஏற்பட்டுவருகின்றன மேலும் அதன் கீழ் சார்கடைநீர் செல்வதால் எப்போழுதும் துர்நாற்றம் வீசிகொண்டே இருக்கும்
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஈரோடு நகரம் ஜவுளி மற்றும் மஞ்சளுக்கு பெயர் பெற்ற நகரம் ஆகும். மேலும் ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பள்ளிக்கூடங்கள் என பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே ஈரோட்டுக்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மஞ்சள் மற்றும் ஜவுளி வியாபாரிகள், மாணவ–மாணவிகள் வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஈரோடு ரெயில் நிலையம் வந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இந்த ரெயில் நிலையம் கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் தென்னக மாவட்டங்களின் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. எனவே ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 120–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஈரோடு வழியாக பயணிக்கிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் மொத்தம் 4 நடைமேடைகள் உள்ளன. இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த ரெயில் நிலையத்தில் 15–க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சுற்றி வருகிறார்கள். இவர்கள் அந்தந்த நடைமேடைகளில் நின்று கொண்டு ரெயில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளிடம் பிச்சை எடுக்கிறார்கள்.
சில மனநோயாளிகள் குறிப்பாக பெண்களிடம் திடீரென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு ஓவென்று சிரித்துவிட்டு அங்கிருந்து ஓடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை பெண்கள் தங்களுடைய குடும்பத்தினரிடமோ மற்ற சக பயணிகளிடமோ சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள். சிலர் ரெயில் தண்டவாளத்தின் நடுவில் நின்று கொண்டு ரெயில் வரும்போது அதனுடன் மல்லு கட்டுவதுபோல் போஸ் கொடுக்கிறார்கள். அப்போது அவர்களின் உயிர்களை காப்பாற்ற சில பயணிகள் சத்தம் போட்டு அவர்களை விரட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து ரெயில் நிலைய நடைமேடையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் கூறியதாவது:–
மனநோயாளிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. இது எங்களுக்கும் தெரியும். ஆனால் சில நேரங்களில் மன நோயாளிகள் ரெயில் ஏற வரும் பெண் பயணிகளை இடிப்பது போன்று வருவது, நெஞ்சு பகுதியில் கை வைப்பது போன்ற அருவருக்கத்தக்க, கூசத்தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அப்போது பெண் பயணிகளோ அல்லது உறவினர்களோ இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் எங்களிடம் கூறுகிறார்கள். உடனே நாங்கள் நடைமேடைகளில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கும் மனநோயாளிகளை சத்தம் போட்டால் மற்ற பயணிகள் அவர்கள் மீது அனுதாபப்படுகிறார்கள். எங்கள் (போலீஸ்) மீது கோபப்படுகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் பயணிக்கு குறிப்பிட்ட மனநோயாளியை நாங்கள் ஏன் திட்டுகிறோம் என்பது தெரியும். ஆனால் மற்ற பயணிகளுக்கு இது புரிய வாய்ப்பில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் 3–வது நடைமேடையில் ஒரு குடும்பத்தினர் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் வந்திருந்தனர். அப்போது அந்த குழந்தை அங்கு உட்கார்ந்து இருந்த மனநோயாளியிடம் சென்று விட்டது. என்ன காரணத்தினாலோ அவர் அந்த குழந்தையை திடீரென்று தனது காலால் ஓங்கி உதைத்து தள்ளிவிட்டு எதுவும் நடக்காது போல் உட்கார்ந்திருந்தார்.
ஓங்கி உதைத்ததில் அந்த குழந்தை நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழப்போனது.
இதனை கவனித்த அந்த குழந்தையின் தந்தை கீழே விழாமல் தடுத்து குழந்தையை பிடித்து விட்டார். உடனே அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு வந்து எங்களிடம் கூறினார்.
நாங்கள் அந்த மனநோயாளி இருந்த இடத்தை நோக்கி சென்றோம். ஆனால் எங்களை கண்டதும் நாங்கள் சத்தம் போட்டு திட்டுவதற்கு முன்பே அந்த மனநோயாளி ஓவென்று அழுது கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார். இதுபோன்ற நடவடிக்கைகளால் மனநோயாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதா? அல்லது ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதா? என்பதில் எங்களுக்கு சில சமயங்களில் சிரமம் ஏற்படுகிறது.
இவ்வாறு அந்த போலீஸ் கூறினார்.
எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மனநோயாளிகளை மீட்டு காப்பகத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
அறச்சலூர் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
அறச்சலூர் நடுவீதியை சேர்ந்தவர் அன்புராஜ். அவருடைய மகன் அருண்குமார் (வயது 17). அறச்சலூரில் உள்ள ஒரு இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் சரஸ்வதிபூஜை என்பதால், கடையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது கடையில் உள்ள தள்ளுவண்டியை கழுவுவதற்காக அருண்குமார் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார்.
வாய்காலுக்கு சென்றவர் மாலை வரை கடைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் ஊழியர்களுடன் வாய்க்காலுக்கு சென்று பார்த்தார்.
வாய்க்கால் கரையில் தள்ளுவண்டி நின்றது. அருண்குமாரின் உடைகள் கிடந்தன. அருண்குமாரை காணவில்லை. இதனால் அவர் வாய்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் அருண்குமாரின் பெற்றோருக்கும், அறச்சலூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்து, அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருண்குமாரை தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அறச்சலூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊத்தங்காடு என்ற இடத்தில் வாய்க்கால் தண்ணீரில் அருண்குமார் பிணமாக மிதந்தார். இதுபற்றி அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டார்கள். அருண்குமார் வாய்க்காலில் இறங்கியபோது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனின் உடலை பார்த்து அருண்குமாரின் பெற்றோர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஈரோட்டில் கட்டிடத்துக்குள் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதி அக்ரகாரம் வீதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் விரிவாக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் கட்டிட பணியாளர்கள் வேலைக்காக வந்தனர். அப்போது கட்டிடத்தின் உள்ளே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பகுதியில் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு அழகிய பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரின்றி கிடந்தது.
அந்த குழந்தை ஆதரவின்றி கதறி அழுது கொண்டிருந்தது. அதைப்பார்த்த அவர்கள் ஓடிச்சென்றனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடினார்கள். குழந்தை அழுது அழுது முகம் சிவந்து கிடந்தது. அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகி இருந்தது. தொப்புள்கொடி ஈரம் கூட காயாமல் இருந்தது.
வெறும் தரையில் கை-கால்களை அடித்துக்கொண்டு அந்த குழந்தை அழுதது பரிதாபமாக இருந்தது. இரக்க மனது கொண்ட சில பெண்கள் குழந்தையை கையோடு எடுத்து அணைத்துக்கொண்டனர். அதன் பிறகே குழந்தை அழுகையை நிறுத்தியது. யாராவது அக்கம்பக்கத்தில் நிற்கிறார்களா? என்று பொதுமக்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் யாரையும் காணவில்லை. அதைத்தொடர்ந்து சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு மூலம் குழந்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவ அதிகாரிகள் குழந்தையை பெற்றுக்கொண்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். குழந்தைக்கு உடை அணிவித்து நன்றாக கவனித்து வருகிறார்கள
இதற்கிடையே தகவல் அறிந்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும், குழந்தையை வீசிச்சென்றவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? வெளியூரில் இருந்து வந்து குழந்தையை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு சென்று விட்டார்களா? குழந்தை தவறான நடத்தை மூலம் பெறப்பட்டதா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீதியில் வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை.குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.