Friday, October 31, 2014

On Friday, October 31, 2014 by farook press in ,    
107வது தேவர் ஜெயந்தி விழாவில் அவரது படத்திற்கு மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் மாலை அணிவித்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, வளர்மதி கரு.ராமச்சந்திரதேவர், பிரிண்ட் பீல்டு தம்பி, மூகாம்பிகை தங்கவேல்,அருணகிரி தேவர், டைகர் சிவா, குப்பாண்டிதேவர், மாணிக்கம்,தமயநாதன், தினேஷ், சண்முகம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Friday, October 31, 2014 by farook press in ,    
மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பசுமை வீடுகள் கட்ட பல்லடம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம், மூகாம்பிகைநகரில் பூமிபூஜை விழா நடந்தது.விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் படையப்பா மூர்த்தி தலைமை தாங்கினார்.விழாவில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தண்ணீர்பந்தல் ப.நடராஜ்,காரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஏ.நடராஜ்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எஸ்.எஸ்.மணியன், சொக்கப்பன், நெசவாளர் கூட்டுறவு வங்கி இயக்குநர், பல்லடம் வட்டார வளர்ச்சிஅலுவலர் மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
On Friday, October 31, 2014 by farook press in ,    
 துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பல்லடம் .எம்.எல்.,ஏ.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பள்ளி மாணவ-மாணவிகள் 368 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி,மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-
கல்வித்துறையை மேம்படுத்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக அரசு  திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக வேண்டும் என ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற  அரசு கல்விக்காக ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.1 முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும்; இடைநிற்றலை தடுக்க வேண்டும். என்ற அடிப்படையில் பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிதிவண்டி, மடிக்கணினி உள்பட 14 வகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 15486 பேருக்கு ரூ.4.92 கோடி மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 
மக்கள் முதல்வர் ஜெயலலிதா திட்டங்களால் தான் இன்றைக்கு கல்வியில் தமிழகம் 20-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திருப்பூர் மாவட்டம் 13-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திட்டங்களை  பெற்று தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் மாணவ, மாணவியர்கள் நன்றாக படிக்க வேண்டும். மடிக்கணினி மூலம் சர்வதேச அளவில் உங்கள் கல்வித்தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.உங்கள் பள்ளியின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வழிகாட்டுதல் படி கல்வித்துறை  அமைச்சரிடம் பேசி இங்கு 30 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 2 கழிப்பறைகள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசும்போது; மக்கள் முதல்வர் ஜெயலலிதாவழிகாட்டுதல்படி உலகத்தில் எந்த பணக்கார நாட்டிலும் இல்லாத திட்டம் மாணவர்களுக்கு சைக்கிள்,, மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. 10, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.500 ம், 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2000- என ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.5000 தமிழக அரசு டெபாசிட் செய்கிறது. உலகத்திலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு சிறப்பான திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி நீங்கள் ( மாணவர்கள்) முன்னேற வேண்டும் என பேசினார்..
திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசுகையில்;தமிழக அரசு பள்ளிக்குழந்தைகள் கல்வித்தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்விக்காக தமிழக அரசு மடிக்கணினி, சைக்கிள் உள்பட 14 வகை பொருட்களை விலையில்லாமல் வழங்குகிறது. இதை நன்கு பயன்படுத்தி மாணாக்கர்கள் முன்னேற வேண்டும் என்றார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் உங்கள் தாய் தந்தையால் கூட தர முடியாத திட்டங்கள் வழங்கப்படுகிறது.முந்தய காலத்தில் இது போன்ற திட்டங்கள்எதுவும் இல்லை. ஜெயலலிதா வழிகாட்டுதல்படி அவரது அரசே கல்விக்காக  வழங்குகிறது. இதை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களும்  நன்றாக படிக்க வேண்டும் ; ஜெயலலிதாவிற்கு என்றும் நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பிஷப் உபகரசாமி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில்ரூ.63.30 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 377 மாணவ, மாணவியர்களுக்கும், ரூ.16.30 லட்சம் மதிப்புள்ள மிதிவண்டிகள் 390 மாணவ, மாணவியர்களுக்கும்,, , ஜெயவாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.45 கோடி மதிப்பில் ஆயிரத்து 454 மாணவியர்களுக்கும், நஞ்சப்பா மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.66.15 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 394 மாணவர்களுக்கும் மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் அவினாசி கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். 
பல்லடம் எம்.எல்.ஏ ,பரமசிவம் அவினாசி எம்.எல்.ஏ.கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், அவினாசி ஒன்றிய குழுத்தலைவர் பத்ம நந்தினி ஜெகதீசன், பேரூராட்சி மன்றதலைவர் ஆர்.ஜெகதாம்பாள் ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார்.விழாவில் பல்லடம் நகராட்சி துணைத்தலைவர்  வைஸ் பழனிசாமி, மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன்,கிருத்திகா சோமசுந்தரம்,நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, வசந்தாமணி, பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, பிரியா சக்திவேல், அவினாசி ஒன்றிய செயலளார் மு.சுப்பிரமணியம், நகர செயலாளர் ராமசாமி, தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, தொழில் அதிபர் கிளாசிக் போலோ சிவராமன், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.மணி, கோகுல், சில்வர் வெங்கடாசலம், மாமன்ற உறுப்பினர்கள் வேலுசாமி, கண்ணப்பன்,செல்வம் லட்சுமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர் சாய்பாபா, இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


On Friday, October 31, 2014 by Unknown   
உடுமலை சட்டமன்றதொகுதி  குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா  சட்டபேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்  தலைமையில்  ,பொள்ளாச்சி     பாராளுமன்ற        உறுப்பினர் C.மகேந்திரன்  அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. தான் படித்த பெதப்பம்பட்டி பள்ளியில் வகுப்பு ஆசிரியர்களை கௌரவித்து C.மகேந்திரன் பொன்னாடை அணிவித்து அனைவரயும் நினைவு கூர்ந்தார் .பொள்ளாச்சி ஜெயராமன் மடிக்கணினி வழங்கி பேசுகையில் சிறந்த மாணவ மாணவிகளை உருவாக்கி IAS, IPS நிலைக்கு வரசெய்யுமாறு ஆசிரிய பெருமக்களை கேட்டுக்கொண்டார்.

On Friday, October 31, 2014 by Unknown in ,    
Displaying DSC_0749.JPG


                                                                 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 107 வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரைக்கு வருகை தந்த அகில இந்திய முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவரும் ,நடிகருமான் கருணாஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் .

எத்தனை ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழாவிற்கு வருகிறீர்கள் ? முக்குலத்தோர் புலிப்படையின் நோக்கம் என்ன ?

                     2014 ம் ஆண்டோடு தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழாவிற்கு வந்து கொண்டு இருக்கிறேன் .கல்வி வளர்ச்சி பெற்ற சமூகமாக முழுமையாக மாற்றுவதே முக்குலத்தோர் புலிப்படையின் நோக்கம்  ஆகும்

தேவர் ஜெயந்தி விழாவில் 144 தடை உத்தரவு பற்றி ?
                                    144 தடை உத்தரவு அதிகமாக பயன்படுத்திட கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது .ஆனால் ஒரு தேசிய தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரரின் விழாவில் 144 தடை உத்தரவு போடுவது என்பது நாட்டு பற்றிற்கு போடப்படுகிற முட்டுக்கட்டை ஆகும் .எதிர்கால சந்ததிகளின் சிந்தனையை மழுங்கடிக்கிற செயல் ஆகும்

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுகிற கோரிக்கை வலுத்து வருகிறதே ?

                             இது சம்பந்தமாக ஏற்கனவே 2004 ம் ஆண்டே சுப்ரமணிய சாமி மூலம் மத்திய மந்திரி ஜோஷி அவர்களிடம் வலியுறுத்தினோம் .ஆனால் அப்போது இருந்த மாநில அரசு முழுமையாக ஆதரவு அளிக்க வில்லை

107 வது தேவர் ஜெயந்தி விழாவில் முக்குலத்தோர் புலிப்படையின் சூளுரை ?

                   ஒரு பெருத்த சமுதாயம் .ஏற்கனவே 1995,2005 அரசாணையான கள்ளர் ,மறவர் ,அகமுடையார் சமுதாயத்தை தேவர் இனமாக அறிவிக்கும் அரசாணையை நடைமுறை படுத்த வேண்டும் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

தென் மாவட்டங்களில் பரவலாக நடைபெறும் கௌவரவ கொலைகள் பற்றி ?

                  என்றுமே மனித உயிர்கள்  கொல்லப்படுவதை ஊக்குவிக்க முடியாது .தேவர்  திருமகனார்  1957 ல் சொன்னது போல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின்  மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது என் இதயத்தை  பிளப்பதற்கு சமம் என்பதை நெஞ்சில் நிறுத்தி வாழ்பவர்களில் நானும் ஒருவன் .


பேட்டியின் போது முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் முத்துமணி ,மாணவர் அணி ஜெகன் ,மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்
On Friday, October 31, 2014 by Unknown in ,    
Displaying NEWS 2  SELLUR RAJU 2.JPG


                            மதுரை மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா மதுரையில்  நடைபெற்றது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் ராஜா முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டு வாரிய தொழிலாளர்கள் 1594 பேருக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கி பேசிய போது ,மதுரை மாவட்டத்தில் அமைப்புசாரா வாரிய உறுப்பினர்களாக 3 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதனை 5 லட்சமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. உழைப்பவரே உயர்ந்தவர் என்ற லட்சியத்தை கொண்டது அ.தி.மு.க. இயக்கம்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர் அம்மாவும் தொழிலாளர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பாவித்து பல்வேறு நலத்திட்டங்களை தந்துள்ளனர். தொழிலாளியின் வியர்வை காயும் முன், ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர் மக்களின் முதல்வர் அம்மா.தொழிலாளர்களின் குழந்தைகள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர் அம்மாவும் திட்டங்களை தந்திருக்கிறார்கள்.தொழிலாளர்கள் தங்குவதற்காக சென்னையில் ஜீவா இல்லம் அமைத்தவர் எம்.ஜி.ஆர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தந்தவர் அம்மா. அமைப்பு சாரா நல வாரியத்தில் கட்டிட தொழிலாளர்களையும் சேர்த்து சலுகைகள் வழங்கியவர் அம்மா. கருணை உள்ளம் கொண்ட அம்மா, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தொழிலாளிகளின் தலை எழுத்தையே மாற்றி காட்டினார்.தொழிலாளர் வர்க்கத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை, சலுகைளை வாரி வழங்கியவர் அம்மா. இதை தொழிலாளர்கள் ஒரு போதும் மறக்கக்கூடாது.தொழிலாளி இறந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சம் என்று இருந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தினார். அப்படிப்பட்ட மக்களின் முதல்வர் அம்மாவுக்கு தொழிலாளர்கள் அரணாக இருக்க வேண்டும்.சூழ்ச்சியாளர்களால் அம்மாவுக்கு சோதனை ஏற்பட்டபோது தமிழகமே கொதித்தெழுந்தது. அம்மா விடுதலை ஆக வேண்டும் என்று அவரவர் தெய்வங்களை வழிபாடு செய்தனர். மக்களின் பிரார்த்தனை பலித்தது. அதுபோல அவருக்கு எதிரான அநீதியை விரைவில் முறியடிப்பார். மீண்டும் தமிழகத்தின் நிரந்தர முதல்–அமைச்சராக வருவார். தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை அள்ளி தருவார்.என உரையாற்றினார் 

On Friday, October 31, 2014 by Unknown in ,    
Displaying NEWS 1.JPGமதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 23 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுனர் ரோசையா சான்றிதழ்களை வழங்கினார் .உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ,டாக்டர் ரெட்டி ,துணை வேந்தர் டாக்டர் .மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்
On Friday, October 31, 2014 by Unknown in ,    
Displaying NEWS 3-1.JPGDisplaying NEWS3-4.JPGDisplaying NEWS3-6.JPGநீண்ட நாட்களுக்கு பிறகு தொடர் மழை காரணமாக வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்.மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருவது வைகை அணையாகும். கடந்த 2 வருடங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணை வறண்டு காணப்பட்டது. குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டது. பெரியாறு அணையில் இருந்து ஓரளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குடிநீர் பிரச்சினை சமாளிக்க முடிந்தது.இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை முடிந்து தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கியது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.இதை தொடர்ந்து அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே வைகையாற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஏற்கனவே வைகை அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே பெய்யும் மழை நீரும் வைகையாற்றுக்குள் வருகிறது.இதனால் வைகையாற்றில் சுமார் 4 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதுரை நகர் பகுதியில் வைகையாற்றில் கரைபுரண்டு ஓடும் காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Thursday, October 30, 2014

On Thursday, October 30, 2014 by Unknown in ,    
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்'                                                                                                                                         கரூர் தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் சேகர் என்ற கரடிசேகர், 52. கடந்த, 2005ம் ஆண்டு ஜூன், 4ம் தேதி, வெள்ளியணை சின்னமநாய்க்கன்பட்டியில் சாராயம் விற்பனை செய்ததாக, வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்தாஸ், சேகரை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு, கரூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, இன்ஸ்பெக்டர் மோகன்தாஸுக்கு, சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாத மோகன்தாஸுக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி முகமது ஷியாவுதின் உத்தரவிட்டார். இதே போல், திண்டுக்கல் மாவட்டம், லட்சுமணப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 48, கார் டிரைவர். கடந்த, 2011ம் ஆண்டு ஃபிப்ரவரி, 17ம் தேதி, கரூர்- மதுரை சாலையில், அரவக்குறிச்சி அருகே, காரில் சென்ற போது, மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்தனர். விபத்து குறித்து அரவக்குறிச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த அனந்தபத்மநாபன், வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபனுக்கு, பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி முகமது ஷியாவுதின் உத்தரவிட்டார்.