Friday, October 05, 2018

On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி-05.10.18


மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

அதில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ம.ம.க சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக,காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட விரோத போக்கிற்கு எதிராக இந்த மாநாடு நடைபெறுகிறது.பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வேலையை செய்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. என்றார் தொடர்ந்து பேசிய அவர் இந்த மாநாடு மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெட் அலர்ட் எனக் குறிப்பிட்டார்

அதிமுகவில் நிலவும் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் சீரிய தலைமை இல்லாமல் அக்கட்சி ஒரு கலவையாக இருக்கிறது,அதனால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.வரும் தேர்தலில் அதிமுக இருக்குமா என்பது சந்தேகமே,

திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்
On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி

திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தில் உழைக்கும் பெண்கள் முன்னேற்ற நலச்சங்கம் இணைப்பு விழா நடைபெற்றது

திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தில் உழைக்கும் பெண்கள் முன்னேற்ற நலச்சங்கம் இணைந்தது. இதில் மாநில, மாவட்ட ஓன்றிய, கிராம நிர்வாகிகள் மற்றும்

விவசாயிகள், உழைக்கும் முன்னேற்ற நலச்சங்கங்கள் கலந்து கொண்டனர், இதில் விவசாயிகளின் விடிவெள்ளி பி.கே.தெய்வசிகாமணி கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதில் உழைக்கும் பெண்கள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட தலைவர் வனஜா முருகன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். இதில் ஜெயசுதா, சங்கீதா, ராணி, கோதை நாயகி, வலிவலம் சேரன், ராமக்கவுண்டர், தேவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த இணைப்பில் தெய்வசிகாமணி பேட்டியளித்தார். அப்பொழுது கூறுகையில் இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் எங்கள் இயக்கத்தில் வந்து சேர்ந்தது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.


இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு துன்பங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை டெல்டா பகுதியில் கொண்டுவருவதை கடுமையாக கண்டிக்கிக்கிறோம். இந்த திட்டத்தை டெல்டாபகுதிகளில் கொண்டுவருதை விவசாய சங்கங்கள்  கண்டிப்பாக ஏற்காது.

ஹைட்ரோ கார்பன் திட்டமானது டெல்டாபகுதிகளை முழுமையாக பாலைவனமாக்கும் என்பதால் இதை மத்திய மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஆசியாவிலேயே மிகபெரிய பாசனபகுதியான காவேரியை கார்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் இந்த நடவடிக்கையை மத்திய மாநில அரசு கைவிடவேண்டும் மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் பி.ஜே.பி.யை அடியோடு தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

மதுரை உச்சநீதிமன்றம் ஓரு தீர்ப்பை வழங்கியுள்ளது. 1000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலங்கள் நல்ல நிலையில் உள்ளது. 5 வருடங்களுக்கு முன்பு கட்டிய பாலம் பழுதடைந்துள்ளது. எனவே வருங்களாளங்களில் நல்லமுறையில் பாலங்கள் கட்டபட வேண்டும். பாலங்களால் விவசாயிகளுக்கு நன்மையே. பாலங்களை மத்திய மாநில அரசு யார் கட்டினாலும் உருதியான முறையில் கட்டவேண்டும்.

டெல்லியில் பி.ஜே.பி. விவசாயிகளுக்கு தொடர்ந்து விரோதபோக்கை கடைபிடித்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலை மாநில அரசு நிறுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளது. இதை மாநில அரசு ஏற்றுக்கொண்டு இந்த தேதிக்குள் நேரடி கொள்முதலை நிறுத்தி கொள்வோம் என்று கூறியுள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும் வகையில் மாநில அரசு செயல்பட வேண்டும். நேரடி கொள்முதலை எப்பொழுதும் மாநில அரசு கைவிடகூடாது என்றார். மாதம்முழுவதும் தொடர்ந்து கொள்முதல் நிலையங்களை திறந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது இதில் பொது விநியோகத்திற்கும், வனிகர்களுக்கு 24மணி நேரம் மின்சாரம் வழங்கப்படு வருகிறது. எனவே விவசாய்களுக்கு 12 மணி நேர மின்சாரம் வழங்கப்படவேண்டும். அதுவும் பகலில் வழங்கப்பட வேண்டும். இதில் மும்முனை இணைப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பேட்டி: பி.கே.தெய்வசிகாமணி.

farmers script
On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி :
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி  பேட்டி :


அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பருகியது

கடந்த காலம் எங்கே எல்லாம் மழை சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் கணக்கெடுத்து தற்போது சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும் என்றும், காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தபடுகிறது. வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, அதேபோல பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை போன்ற துறையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளில் மழைக்காலங்களில் தடையின்றி செல்வதற்கு சிறிய, பெரிய பாலங்கள் ரோடுகள் எந்தவிதத் தடையுமின்றி செல்ல உறுதி செய்துப்படுகிறது.
ஏற்கனவே அதிகமாக மழை பெய்து பாதிக்ககூடிய154 இடங்கள் கண்டறிய பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் அரசு தயார் நிலையில் உள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு பகுதிக்கு 10 பேர் விதம் 1,440 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் பயிற்சி எடுத்து வருகின்றனர் கால்நடைகள் பாதுகாப்பு தேவைப்படுகிறது கால்நடை பராமரிப்பு துறை இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு வேண்டுகோள் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது குழந்தைகள், பெரியவர்கள் தண்ணீர் அருகில் செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் ஏரிகள் குளங்கள் தண்ணீர் இருப்பதால் அதில் ஆபத்தை உணராமல் உள்ளே சென்று குளிக்க வேண்டும் அவற்றை தவிர்க்க வேண்டும்.

12 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

38 இடங்களில் அதிகபடியான மழை பாதிப்பு இருக்கும்.
41 இடங்களில் மிதமான பாதிப்பு இருக்கும்.
72 இடங்கள் பாதுகாப்பான இருக்கும்.

பள்ளி செல்ல கூடிய குழந்தைகள் பாதுகாப்பாக அனுப்புவதற்கு பெற்றோர்களை கேட்டு கொள்ள படுகிறது. பள்ளி நிர்வாகமும் பள்ளி குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும்.

அவசர உதவிக்கு 1077 என்ற என்னும், 0431 - 2418995 என்னையும் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி - 05



பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம்



திருச்சி பாமக சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது மேலும் கூறுகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதிக்காத வகையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் உமாநாத் மாவட்ட தலைவர் வினோத் மாவட்ட செயலாளர் திலீப் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேட்டி: ஸ்ரீதர் மாநில துணை பொதுச்செயலாளர் பாமக
On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி_05.10.18


மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்திருப்பது மூலம் மக்களுக்கு மிகப்பெரிய சுமை நீங்கியது-மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி






திருச்சியில் தனியார் கல்லூரி மற்றும் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.
அதேபோல பா.ஜ.க ஆளும் 13 மாநில அரசுகள் பெட்ரோல் விலையை ஏற்கனவே ரூ.2.50பைசா குறைத்துள்ளது. எனவே அந்த மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்திருப்பது மூலம் மக்களுக்கு மிகப்பெரிய சுமை நீங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், எரிவாயு, கழிவறை ஆகிய அடிப்படை வசதிகள் இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது.  இது ஆளும் பா.ஜ.க அரசின் மிகப்பெரிய சாதனை என்றார்.
On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி-05.10.18


தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது-துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் பேட்டி


தேனியிலிருந்து சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

தங்க தமிழ் செல்வன் அளித்த பேட்டியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை,அதை பார்த்த பின்பு விரிவான பதிலை அளிக்கிறேன்.

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு *அது கடந்த காலம்* என பதில் அளித்தார்.

Wednesday, October 03, 2018

On Wednesday, October 03, 2018 by Tamilnewstv   





திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா அரியூர்


அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் மகோத்ஸவம் எட்டாம் ஆண்டு இன்று நடை பெற்றது






நிகழ்ச்சி வருடா வருடம் ஸ்ரீ விளம்பி வருடம் புரட்டாதி மாதம் பதினேழாம் நாள் கிருஷ்ண பட்ச தசமி திதி புனர்பூச நட்சத்திரம் சித்தி யோகம் கூடிய தினத்தில் ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு விருச்சக லக்னத்தில் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும்
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் ஊர் பொதுமக்கள் சார்பில் கிராம பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் பாக்கியம் பெறுவார்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் இதுபோன்ற மங்கலமான நிகழ்ச்சி இந்த ஆண்டும் சிறப்பாக ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது

Tuesday, October 02, 2018

On Tuesday, October 02, 2018 by Tamilnewstv   

திருசசி   02.10.18

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து தேர்தல்களிலும் இஸ்லாமியர்களுக்கு தனித் தொகுதி வேண்டும் தலித் மக்களுக்கு இருப்பது போன்று இஸ்லாமிய மக்களுக்கு ரிசர்வ் தொகுதி வேண்டும் ஸ்டெர்லைட் ஆலை நியூட்ரினோ மீத்தேன் திட்டங்கள் எட்டு வழி சாலை போன்ற திட்டங்கள் மக்களால் எதிர்க்கும் திட்டங்களாகும் அதை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் சாதிக் பாஷா அப்பாவா பாபா

தன்மான கலாச்சாரத்தை பாதுகாத்து வந்த நம் இந்திய திருநாட்டில் தற்சமயம் அதை சீர்குலைக்கும் விதமாக கள்ளத்தொடர்புகள் குற்றமில்லை ஓரினச்சேர்க்கை தவறில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
இந்திய கலாச்சாரத்தை காக்கும் வகையில் அகில இந்திய முஸ்லிம் லீக் உலகில் போராட்டத்தை நடத்தும்
பாபர் மசூதி தீர்ப்பு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது சர்ச்சைக்குரிய இடம் எனக் கூறப்படும் இடத்தில் மசூதி ராமர் கோயிலும் கட்டி இந்திய தேசம் ஒற்றுமைக்கு  இலக்கணம் என்பதை ஏற்படுத்த வேண்டும் என்றார், மேலும் உயர் நீதிமன்றத்தையும்,
உச்சநீதிமன்றத்தை மயிர் ஆவது என்று கூறிய ராஜாவை இதுவரை கைது செய்யப்படவில்லை, அவர் சொல்லிய கருத்து சரி என்றால் அவர் இந்திய தேசத்தின் பாதுகாவலன் தான் என்றார்.

Sunday, September 30, 2018

On Sunday, September 30, 2018 by Tamilnewstv in , ,    



திருச்சி_30.09.18

ஜனவரி ஒன்று முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா பேட்டி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திருச்சி புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்,  அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்,  திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா உள்ளிட்ட 100 க்கும்  மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்...

ஜனவரி ஒன்று முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை,  வியாபாரிகள் ஏற்றுக்கொள்ள தயார்.
பிளாஸ்டிக்கை பயன்படுத்தும்  பன்னாட்டு நிறுவனங்களை  அனுமதிக்கும் அரசு,  நம் நாட்டில் உள்ள 11 லட்சம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை புதைக்க முயற்சிப்பது  கண்டனத்திற்குறியது.

வரும் 23 ஆம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.
என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி