Sunday, December 23, 2018

On Sunday, December 23, 2018 by Tamilnewstv in ,    
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் திருச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
On Sunday, December 23, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசம்…

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் விவேக் அலாவத் தலைமையிலான  33 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  ஜெய் பாரத் எனும் ராட்சத பலூனில் பறந்து செல்லும் சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது.

ஆசியாவில் மிகப்பெரிய ராட்சத பலூனான 3 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி கொண்ட இந்த பலூனில் நாலு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் மீதமுள்ள ராணுவ வீரர்கள் தரைவழியாக வாகனத்தில் பின் தொடர்ந்து செல்கின்றன.  பின்னர் அங்கிருந்து சுழற்சி முறையில் 4 ராணுவ வீரர்கள் பலூனில் ஏறி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சாகச பயணம் கடந்த 6-ம்தேதி காஷ்மீர் தொடங்கியது. இந்தியா முழுவதும் 31 முக்கிய  நகரங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 29-ஆம் தேதிக்குள் செல்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் டெல்லி போபால் திருப்பதி சென்னை காஞ்சிபுரம், விழுப்பும், பெரம்பலூர் வழியாக திருச்சி வந்தடைந்தார்கள்.

இந்த சாகசப் பயணத்தில் ஒரு பகுதியாக மேற்படி ராணுவ வீரர்களின் ராட்சத பலூனில் தாழ்வாக வந்து செல்லும் நிகழ்ச்சி திருச்சி உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதற்காக விளையாட்டரங்கம் பாதுகாப்புடன் தயாராக இருந்தது இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

On Sunday, December 23, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில்
பித்தப்பை நோய்கள், குடல் இறக்கம்(ஹெர்னியா), அப்பெண்டிக்ஸ், குடல் அடைப்பு, குடல் கட்டிகள், சினைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், போன்ற நோய்களுக்கு
இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், பாத புண்கள், சர்க்கரை வியாதி, இரத்த குழாய் அடைப்பு, உமிழ்நீர் சுரப்பி கட்டிகள், இரைப்பை, குடல் கணையம், பித்தப்பை, அறுவை சிகிச்சைகள், மூலம் பவுத்திரம், தீக்காய சிகிச்சைகள், ரத்த நாள நோய்களுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.

இம்முகாமில் 200க்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் அறுவை சிகிச்சைக்காக 25 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன், உதயபாஸ்கர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்

Saturday, December 08, 2018

On Saturday, December 08, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை வரை தொழில் அலுவலர் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது

இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகள் இன்று திருச்சியை சேர்ந்த ஞானமணி என்பவரும் பொருளாளராக ராமச்சந்திரன் என்பவரும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தலைவர் பதவி வகித்துவரும் ராஜேந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செய்தியாளர்களிடம் முன்னாள் பொதுச் செயலாளர் முருகன் கூறும்பொழுது இன்றைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது எஸ் டி ஓ ராஜேந்திரன் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்




இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன 46 jto இடைநிலை பதவி உயர்வு அளித்த முதன்மை இயக்குனர் அவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் எங்கள் உடனே நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் 402 ஜே டி ஓ பதவிகள் நிரப்பப்பட வேண்டும் 19 ஆம் ஆண்டு முதுநிலை வரை தொழில் அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார்
பேட்டி .... முருகன் முன்னாள் பொதுச் செயலாளர்

Sunday, December 02, 2018

On Sunday, December 02, 2018 by Tamilnewstv   
திருச்சி  02.12.18

நேற்று இரவு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 1.35 மணிக்கு 150 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற ஸ்கூட் விமானம், விமான ஒடுதள பாதையில் சென்று கொண்டு இருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த 150 பயணிகள் உயிர் தப்பினர், அவர்களை திருச்சி தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் திருச்சியில் சமீபகாலமாக விமான கோளாறு, விமான விபத்து என அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
On Sunday, December 02, 2018 by Tamilnewstv   
திருச்சி :

*விமான நிலையத்தில் 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கம் பறிமுதல்*


மலேசியா, துபாயிலிருந்து இரவு வந்த விமானத்திலும், இன்று காலை  சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகரபட்டினம் சேர்ந்த அப்துல்காதர், மற்றுமொரு பயணி என 4 பேரிடமிருந்து 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை.

Saturday, December 01, 2018

On Saturday, December 01, 2018 by Tamilnewstv   
திருச்சி      01.12.18

மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்


தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி திருச்சி தில்லைநகர் 5 வது கிராஸில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில் தொடங்கியுள்ளது.

இன்று முதல் ஜனவரி 16 வரை நடக்கும் கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி தொடங்கிவைத்தார்.

இந்த விற்பனை கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 52 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 35 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டு சேலை, பட்டு வேஷ்டி, துண்டு, போர்வை விரிப்புகள் மற்றும் கால்மிதி போன்ற ஏராளமான கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

'இயந்திரங்களை பயன்படுத்தாமல், நெசவாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகள், சிறப்பு தள்ளுபடி விலையில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை தரத்தில், மற்ற இயந்திர தயாரிப்புகளை விட உயர்ந்தவை. மக்கள் இதுபோன்ற பொருட்களை வாங்கினால் தான், நெசவாளர்களின் வாழ்வு புத்துயிர் பெரும். அதற்கு இதுபோன்ற கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சிகள் உபயோகமாக இருக்கும்.' என்றார்

தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு .கு.இராசா மணி, கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள்  பங்கேற்றனர்.
On Saturday, December 01, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 1.12.18
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்
2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கு 47,208 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 19 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

முதற்கட்டமாக திருச்சியில் இன்று 2183 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பள்ளிக்கல்வித்துறையினர் அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி 406 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .இராசாமணி. தலைமையில்,  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

 விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் விழா பேருரையாற்றியதாவது

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த நல்ல பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். குழந்தைகள் கருவில் இருக்கும் காலம் முதல் பள்ளி படிப்பு, உயர்கல்வி, அரசு பணியில் சேரும் வரை அவர்களுக்காக சீரிய பல திட்டங்களை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள். கல்வித்துறைக்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு 27,500 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

கல்வித்துறையில் இந்திய திருநாடே வியக்கின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா காலணி, விலையில்லா மதியஉணவு, கலர் சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.

மாண்புமிகு அம்மாவின் அரசு அற்புதமான அரசு. எனவே மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும். வரலாற்று சாதனைகள் படைக்க வேண்டும். தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும். இந்த சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளியாகும். எனவே எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பள்ளிக்கு மேலும் கூடுதலாக முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூபாய் 47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருட்டினன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராமசாமி, அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு.வேலுச்சாமி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, November 26, 2018

On Monday, November 26, 2018 by Tamilnewstv in    
திருச்சி   25.11. 18

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி




திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கஜா புயலால்  பாதிப்படைந்த பகுதிகளுக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்ப பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 5வது முறையாக புயல் நிவாரண பொருட்கள் இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 150 காய்கறிகள் மூட்டை  அனுப்பப்பட்டன.அப்போது வெல்லமண்டி நடராஜன் கூறுகையில்,

நேற்று  2000 நபர்களுக்கு திருச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக பரிமாறப்பட்டது அதேபோன்று இன்று அமைச்சர் செங்கோட்டையன் துரைக்கண்ணு ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசிய பின்பு அவர்களின் முயற்சியில் திருச்சி மாவட்ட சார்பில் வெங்காயம் முட்டைகோஸ் பீட்ரூட் போன்ற காய்கறி மூட்டைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது மின்சாதன பாதிப்படைந்த பகுதிகளுக்கு மின்சாரம் தயாரிக்கும் பணியும் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று காலை காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நாளை காலை அரசு அலுவலர்களான BDO போன்றவர்களை அழைத்து நாளைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.