Saturday, February 29, 2020
On Saturday, February 29, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி பிப் 28
திருச்சியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வந்த
10அடிநீள முதலை பிடிபட்டது
திருச்சி உய்யகொண்டான் திருமலை
கல்லாங்காடு
குழுமாயி அம்மன் கோவில் அருகே
முதலை ஒன்று கோயிலுக்கு செல்லும் பக்தர்களை அச்சுறுத்தி வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர்
மற்றும் காவல்துறையினர் பத்தடிநீள முதலையை நீண்ட போராட்டத்திற்கு பிடித்து பாதுகாப்புடன் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் பாதுகாப்புடன் விட்டனர்.
நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில் குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும்
பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பிடிபட்ட இந்த முதலை நன்னீர் வகையைச் சேர்ந்த முதலை என வனத்துறையினர் கூறினர்.
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - லோக் தந்திரிக் ஜனதா தளம் தலைவர் ராஜகோபால்.
மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில்
அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் ராஜகோபால். மாநில பொதுச்செயலாளர்கள் ராஜசேகரன், ஹேமநாதன், வையாபுரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் ராஜகோபால் தமிழக அரசு NPR, NRC எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மேலும் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று தார்மீக முறையில் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
திருச்சி
திருச்சியில்
அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள்
சட்டவிரோதமாக இயங்கும் குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குடிநீர் எடுக்க அரசு அனுமதியளிக்கக் கோரி, குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இன் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழகத்தில் இயங்கிவரும் அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் தொடர்பான வழக்கில்
உரிமம் பெறாத
132ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூட ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் இல்லை என்றால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து இன்று காலை திருச்சி மாவட்டத்தில்
அனுமதி பெறாமல் இயங்கிய 23 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருச்சி பொதுப்பணித்துறை நிலத்தடி நீர் பிரிவு
அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
நான்கு குழுக்களாகப் பிரிந்து திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும்
23குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர்.
திருச்சி வயலூர் சாலையில் செயல்பட்டு வரும் பெஸ்ட் ஆக்குவா நாளைக்கு நிலத்தடி நீர் பிரிவு துணை இயக்குனர் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பேட்டி: ஹேமநாதன்
செயலாளர்
அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் நலச் சங்கம்.
Friday, February 28, 2020
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசிபி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழாவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஆலோசகர் மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் இச்சங்கம் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திரங்களுக்கு வாடகை குறைவாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சங்க உறுப்பினர்கள், காண்ட்ராக்டர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு உரிமையாளர்கள் எந்திரங்களுகாண கடன் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த குறையை தீர்க்கும் வகையில் இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் மூலம் உறுப்பினர்கள் இனி குறைந்த வாடகைக்கு ஜேசிபி எந்திரங்களை பயன்படுத்த கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு 2,500 ரூபாய் வசூலிக்க வேண்டும் என சங்கத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா 900 ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திர தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை காப்பாற்றுவதற்காகவும், உரிமையாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு தான் இந்த வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஒப்பந்ததாரர்கள், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
பேட்டி: மனோகரன். திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர் சங்க ஆலோசகர்.
திருச்சி தினமலர் பங்குதாரர் மறைந்த ராகவன் அவர்களின் மனைவி சுப்புலெட்சுமி உடல் நல குறைவால் காலமானார்.அவரது உடலுக்கு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ்நாட்டில் முக்கால்வாசி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தே.மு.தி.க விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்ந்து கேட்டு வருகிறோம்.எல்லா கட்சிகளிலும் மூத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அ.தி.மு.க தலைமை கழகம் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தே.மு.தி.க விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என கூட்டணி அமைக்கும் போதே பேசியுள்ளோம்.
சி.ஏ.ஏ,என்.ஆர்.சி யால் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக தான் இத்தகைய சட்டங்கள் என்பதனைவரும் உணர வேண்டும்.இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பு என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க இருக்கும்
தி.மு.க,அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் கடன் சுமையை மாறி மாறி ஏற்றுவதை நிறுத்தி விட்டு வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்
திருச்சி மாவட்டம், காஜாமலையில்
ஓம் ஹரிஸ் மருத்துவமனையை
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,
சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு.வெல்லமண்டி நடராஜன்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
திருமதி.வளர்மதி
மாவட்ட கழக செயலாளர்கள்,
திரு.பா.குமார் Ex.MP, திரு.ரெத்தினவேல் Ex.MP
ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.
ஓம் ஹரிஸ் மருத்துவமனையை
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,
சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு.வெல்லமண்டி நடராஜன்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
திருமதி.வளர்மதி
மாவட்ட கழக செயலாளர்கள்,
திரு.பா.குமார் Ex.MP, திரு.ரெத்தினவேல் Ex.MP
ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள்.
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வங்கி அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அரசு அளிக்கும் ஊதிய உயர்வுக்கு எங்களுக்கு சம்மதம் இல்லை. அதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக மார்ச் மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஏ' கிரேடு அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் வங்கி அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக நாளை ஐபிஏ சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடத்தும் ஐபிஏ.க்கு பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஐபிஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பேச்சுவார்த்தை எவ்வாறு முடிகிறது என்பதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
முன்னதாக அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வங்கி அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அரசு அளிக்கும் ஊதிய உயர்வுக்கு எங்களுக்கு சம்மதம் இல்லை. அதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக மார்ச் மாதத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஏ' கிரேடு அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் வங்கி அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக நாளை ஐபிஏ சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடத்தும் ஐபிஏ.க்கு பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஐபிஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பேச்சுவார்த்தை எவ்வாறு முடிகிறது என்பதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாமல் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
தமிழகத்தில் கொள்ளையடித்த பணத்தை துபாய் மற்றும் பல நாடுகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்ய நூதன திட்டம் மத்திய புலனாய்வு நடவடிக்கை எடுக்குமா
தமிழகத்தில் இருந்து 450 எல்பின் குடும்பத்தினர் துபாய் பயணம் அப்படி பயணம் செய்ய IATA முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )
திருச்சி மன்னார்புரதில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் எல்பின் நிதி நிறுவனம். இந்நிறுவனத்தின் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் எல்பின் குடும்பத்தினர் 450 பேர் வரும் 3 ,4 , 5, தேதிகளில் துபாயில் உள்ள உலகிலேயே உயரமான கட்டிடத்தில் கூட்டம் நடத்த உள்ளோம் எனக்கூறி என்பின் உரிமையாளர் அழகர்சாமி (எ) ராஜா அனைவரையும் வருமாறு அழைத்துள்ளார்.
இங்கு மாபெரும் மாற்றம் நமக்கு நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார். இந்த 450 பேர் இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் தனியாரால் நடத்தப்படும் நிறுவனத்தின் கூட்டத்தில் பங்குபெற முறையான அனுமதி வாங்கி உள்ளனரா ? அல்லது இதற்கு அனுமதி எதுவும் தேவையில்லையா.? தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த தடைவிதித்து இருந்தும் தஞ்சையில் கைது நடவடிக்கை எடுத்தும் மேலும் தஞ்சையில் ஒருவர் தேடப்பட்டு வரும் நிலையில்
காவல்துறை முறையாக நடவடிக்கை எடுத்து வரும் போதே திருச்சியில் நேற்று காலை மன்னார் புரத்தில் ஓர் புதிய ஹோட்டலில் கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக காவல்துறை அனுமதி பெற்றதா இப்படி கூட்டம் நடத்தி வரும் பொழுது திருச்சியில் எல்பின் நிறுவனத்தால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டால் யாரை குற்றம் கூறுவார்கள் திருச்சி காவல் துறையால் முறையாக அனுமதி வழங்கப்பட்டதா ? இன்று காலை முதல் திருச்சி சங்கம் ஹோட்டலில் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் ELFIN நிதி நிறுவனம் மக்கள் கூட்டம் நடத்த காவல்துறை டிஜிபி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் கண்டொன்மெண்ட் காவல்துறை இன்ஸ்பெக்டரிடம் ஸ்பெஷல் அனுமதி வாங்கி விட்டதாக எல்பின் சகோதரர்கள் கூறி வருவதாக தகவல்.
பின்குறிப்பு :-
*ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின் நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர் மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
*தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
தமிழகத்தில் இருந்து 450 எல்பின் குடும்பத்தினர் துபாய் பயணம் அப்படி பயணம் செய்ய IATA முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி இதற்குரிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது )
திருச்சி மன்னார்புரதில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் எல்பின் நிதி நிறுவனம். இந்நிறுவனத்தின் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் எல்பின் குடும்பத்தினர் 450 பேர் வரும் 3 ,4 , 5, தேதிகளில் துபாயில் உள்ள உலகிலேயே உயரமான கட்டிடத்தில் கூட்டம் நடத்த உள்ளோம் எனக்கூறி என்பின் உரிமையாளர் அழகர்சாமி (எ) ராஜா அனைவரையும் வருமாறு அழைத்துள்ளார்.
இங்கு மாபெரும் மாற்றம் நமக்கு நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார். இந்த 450 பேர் இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் தனியாரால் நடத்தப்படும் நிறுவனத்தின் கூட்டத்தில் பங்குபெற முறையான அனுமதி வாங்கி உள்ளனரா ? அல்லது இதற்கு அனுமதி எதுவும் தேவையில்லையா.? தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த தடைவிதித்து இருந்தும் தஞ்சையில் கைது நடவடிக்கை எடுத்தும் மேலும் தஞ்சையில் ஒருவர் தேடப்பட்டு வரும் நிலையில்
காவல்துறை முறையாக நடவடிக்கை எடுத்து வரும் போதே திருச்சியில் நேற்று காலை மன்னார் புரத்தில் ஓர் புதிய ஹோட்டலில் கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக காவல்துறை அனுமதி பெற்றதா இப்படி கூட்டம் நடத்தி வரும் பொழுது திருச்சியில் எல்பின் நிறுவனத்தால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டால் யாரை குற்றம் கூறுவார்கள் திருச்சி காவல் துறையால் முறையாக அனுமதி வழங்கப்பட்டதா ? இன்று காலை முதல் திருச்சி சங்கம் ஹோட்டலில் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் ELFIN நிதி நிறுவனம் மக்கள் கூட்டம் நடத்த காவல்துறை டிஜிபி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் கண்டொன்மெண்ட் காவல்துறை இன்ஸ்பெக்டரிடம் ஸ்பெஷல் அனுமதி வாங்கி விட்டதாக எல்பின் சகோதரர்கள் கூறி வருவதாக தகவல்.
பின்குறிப்பு :-
*ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின் நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர் மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*
*தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*
திருச்சி 27.02.2020
அமைதியாக போராட்டம் நடத்திய இஸ்லாமியா்களுக்கு எதிராக வன்முறை நடைபெற்றதை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியுாிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து இஸ்லாமியா்கள் போராட்டம் நடத்தி வந்தனா். அப்போது குடியுாிமை சட்டத்திற்கு ஆதரவு தொிவித்து மறுபுறம் போராட்டம் நடைபெற்றது. இது வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 21 போ் உயிாிழந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட மக்கள் அதிகாரத்தினா், வன்முறை சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினா். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் மீது திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டு உள்ளது என்று அவா்கள் குற்றம் சாட்டினா். மக்கள் அதிகாரத்தினா் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது..
அமைதியாக போராட்டம் நடத்திய இஸ்லாமியா்களுக்கு எதிராக வன்முறை நடைபெற்றதை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியுாிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து இஸ்லாமியா்கள் போராட்டம் நடத்தி வந்தனா். அப்போது குடியுாிமை சட்டத்திற்கு ஆதரவு தொிவித்து மறுபுறம் போராட்டம் நடைபெற்றது. இது வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 21 போ் உயிாிழந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட மக்கள் அதிகாரத்தினா், வன்முறை சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினா். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் மீது திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டு உள்ளது என்று அவா்கள் குற்றம் சாட்டினா். மக்கள் அதிகாரத்தினா் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது..
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...












