Tuesday, March 24, 2020

On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 24

திருச்சி மத்திய சிறையிலிருந்து விசாரணை கைதிகள் இன்று முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவில் கொரனவை  கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் சிறைச்சாலை உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணை கைதிகளை விடுவிப்பதற்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விசாரணை கைதிகள் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த
சுமார் 800 விசாரணைக் கைதிகளும், 600 தண்டனை கைதிகளும், 200 குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விசாரணைக் கைதியாக உள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 125 நபர்கள் இன்று  முதல் கட்டமாக
திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.  இதேபோல பெண்கள் சிறைச்சாலையிலிருந்தும் பெண் விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் விசாரணை கைதிகள் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் விடுவிக்கப்பட உள்ளனர்.
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
நிலவிவரும் கொரானா தொற்று காரணமாக  மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் செயலில் வர உள்ள நிலையில் கை சுத்திகரிப்பான் தேவை அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 100 மிலி கை சுத்திகரிப்பான் சராசரியாக 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாமானியர்கள் வாங்கி பயன் பெற முடியாத நிலையில் உள்ளனர். பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் துறையின் தொழில் முனையமான  ஹீபர் ஹைஜீன் என்டர்பிரைசஸ் (HHy) இன்று கல்லூரியின் 14 தத்து கிராமங்களில் ஒன்றான மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள குமாரவயலூரில் மக்களுக்கு இலவசமாக கை சுத்திகரிப்பான் விநியோகித்து. வேதியல் துறைத் தலைவர்  முனைவர். பிரின்சி மெர்லின் அவர்கள் கை சுத்திகரிப்பான்பயன்படுத்தும் முறையை செய்து காட்டினார். தொடர்ந்து விழிப்புணர்வு பிரதிகள் வழங்கப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைப்படி தயாரிக்கப்பட்ட இந்த தயாரிப்பு 2 வகைகளில் உருவாக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது.  எத்தில் ஆல்கஹால் அடிப்படை கொண்ட வகை ஒன்று, மற்றொன்று ஐசோ ப்ரோப்பைல் ஆல்கஹால் கொண்டது. இரண்டு தயாரிப்புகளிலும் கைகளை பாதுகாக்கவும், ஈரப்பதம் கைகளிலிருந்து குறையாமல் வைக்கவும் கிளிசரின் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பானாக ஹைட்ரஜன் பெராக்ஸைடும் சேர்க்கப்பட்டுள்ளளது. எந்தவித தேவையற்ற மணம் மற்றும் நிறக்கூட்டுவான் கலப்படமில்லாமல் WHO வின் பரிந்துரைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சுத்திகரிப்பான் குறிப்பாக குமாரவயலூர் இல் வசிக்கும் சுமார் 120 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் பால் தயாபரன் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 24


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் கரொனா பாதிப்பு

 ஏற்பட்டுள்ளது. பிரதமரும், முதல்வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் கடந்த மூன்று நாட்களாக 75 வயதாகும் என்னை திருச்சி கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். இதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் தான் பொறுப்பு. புனித ஜோசப் கல்லூரி நிலப் பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் சார்பில் சென்ற என்னை இவ்வாறு அலைக்கிறார்கள். அந்த இடத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளது. அதை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர் புகார் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து என் மீது வழக்குப் பதிவு செய்ய அழுத்தம் வருவதாக பொய் செய்திகளை பரப்புகின்றனர். காவல்துறை அதிகாரிகளின் கடந்த பத்து நாட்கள் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டும். யாரிடமிருந்து அழுத்தம் வருகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், டிஜிபி, உள்துறை செயலாளர்  ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையின் போது என்னை மூன்று நாட்கள் காவல்நிலையத்தில் காக்க வைத்துள்ளனர். இதனால் எனக்கு கரொனா தாக்கி இருக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 24
              

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இரு மெயின்  வாசல்கள் மூடப்பட்டு நோயாளிகள்,
நோயாளியின் உதவியாளர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் அனுமதி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி புத்தூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இதில்  160க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
நாள்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
 1200 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் தற்போது 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்
பொது இடத்தில் அதிக அளவில் மக்கள் கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்திய நிலையிலும்  அதனை பொருட்படுத்தாது மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளனர்.
அதேபோல நோயாளிகள் அதிக அளவில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.
பார்வையாளர்கள் பெரும்பாலும் முக கவசம் அணியாமலேயே மருத்துவமனை உள்ளே சென்று வருகின்றனர்.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது மருத்துவமனையில் முகக் கவசங்கள் போதிய அளவில் ஸ்டாக் இல்லை என நிர்வாகத் தரப்பு கூறுவதாக
பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதி இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.


On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 23

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை,
மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை,
ஹெச்.ஏ.பி.பி, தொழிற்சாலைகள்
 கொரனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்களுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
                    

ஆங்கிலேயர் காலத்தில்
கடந்த 1926 ம் துவக்கப்பட்டு நூற்றாண்டு காண உள்ள   பொன்மலை  ரயில்வே பணிமனையில், ரயில் இஞ்ஜின் பழுதுநீக்குதல், ரயில் பெட்டி தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
இதில் சுமார் 4ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

                  

தற்போது கொரனாவைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
 இன்று முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக  பொன்மலை ரயில்வே பணிமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் நுழைவாயில் மூடப்பட்டு பணிமனை வெறிசோடி  காணப்படுகிறது.
விடுமுறை குறித்த தகவல் தெரியாத சில பணியாளர்கள் பணிமனைக்கு வந்து திரும்பி சென்றனர்.

அசாதாரண சூழல் காரணமாக
தொடர்ந்து 3 நாட்கள் பணிமனைக்கு விடுமுறை விடப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

இதே போல்
திருவெறும்பூர் அருகே சுமார் 900க்கு மேற்பட்டோர் பணி புரியும் மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை, மற்றும் 2000க்கு மேற்பட்டோர் பணிபுரியும் ஹெச்.ஏ.பி.பி தொழிற்சாலைகள் கொரொனோ வைரஸ் பீதி காரணமாக இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பணிகளை வீட்டிலிருந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட பணிகளை பார்க்கும் தொழிலாளர்கள் மட்டுமே வந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.


On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 23
                          
   
திருச்சி அரசு மருத்துவமனையில்
கொரோனா அறிகுறியுடன்
குழந்தை உட்பட 2 பேர் அனுமதி. - டீன் வனிதா தகவல்.
                 

திருச்சியில் இதுவரை  கொரோனா வைரஸ்  அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 7பேர் சிகிச்சை பெற்று  கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.


              

இந்நிலையில் தற்போது
சளி, இருமல், காய்ச்சல் (கொரோனா) அறிகுறியுடன் திருச்சி பகுதியை சேர்ந்த
3வயது குழந்தை உட்பட  2பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   மொத்தம் 9பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது  ரத்த மாதிரி சோதனையில்
4பேருக்கு ெ காரனா அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது என
டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 23

வெளிநாட்டில் இருந்து வந்த சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்.

                      
                   

துபாய், சார்ஜா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த வெளிநாட்டினர்

                   


12பெண்கள்  உட்பட
22பேர் திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில்  சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு  தொடர் சிகிச்சை  வந்த நிலையில், அனைவருக்கும் கொரோனா பாதிப்பு  இல்லை என உறுதியானதையடுத்து  தற்போது அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்கள். தற்போது இயங்கி வரும் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்கள் யாரும் இல்லை.

Sunday, March 22, 2020

On Sunday, March 22, 2020 by Tamilnewstv in    
பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் படி இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்று வருகிறது.


கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

 இந்த வகையில்  திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும்  வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றி வரும் விமானம் வந்து செல்கிறது.
 இந்த வகையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து 163 பயணிகளும், சார்ஜாவில் இருந்து 136 பயணிகளும், துபாயில் இருந்து 86 பயணிகளும் திருச்சி வந்தனர். இதில் மொத்தம் 385 பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உட்பட22 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது.


 இதையடுத்து அவர்கள் திருச்சி கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது. அதில் அவர்கள் யாருக்கும் அத்தகைய வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகவில்லை. எனினும் அதில்  மலேசியாவிலிருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
On Sunday, March 22, 2020 by Tamilnewstv in    
திருச்சி: கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக இன்று 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

மத்திய அரசும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதை தொடர்ந்து மாநில அரசு சுய ஊரடங்கு கான ஏற்பாடுகளை செய்தது. இன்றைய தினம் அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டது.

அதேபோல் ரயில்வே நிர்வாகமும் அனைத்து ரயில் இயக்கத்தையும் நிறுத்தியது.  அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம், திருச்சி சர்வதேச விமான நிலையம் ஆகியவை பயணிகள் யாரும் வராததால் முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது. காந்தி மார்க்கெட், வணிக வளாகங்கள் திரையரங்கங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. சிறிய கடைகள் முதல் பெரிய அளவிலான கடைகள் வரை இன்று அடைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 96 திருமண மண்டபங்களில் இன்று பல்வேறு விசேஷங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விசேஷங்களும் ஆட்சியரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த விசேஷங்களுக்கும் குறைந்த அளவிலான விருந்தினர்கள் மட்டுமே வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இது தவிர திருச்சி மாநகரில் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் புத்தூர் நால்ரோடு, தலைமை தபால் நிலைய சந்திப்பு, ஒத்தக்கடை சிக்னல், கண்டோன்மென்ட், என் எஸ் பி ரோடு, தில்லைநகர்,


சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது. லாரி, வேன், கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் இன்று ஓட வில்லை. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன மக்கள் அதிக அளவில் கூடாத வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.