Thursday, April 02, 2020

On Thursday, April 02, 2020 by Tamilnewstv in    
*திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்*

கொரோனா உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகினறனர்.

 அதனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய்  நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் பணி இன்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.
 இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மரக்கடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இதை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு உணவுப் பொருட்களை பெற்று சென்றனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில். கரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக  திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 587 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையும், உணவுப்பொருட்களும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும். வெளியில் வரக்கூடாது.  அனைவரும் வெளியில் வரக் கூடாது என்பதற்காக தான் இந்த ஒரு மாதத்திற்கான உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும். கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து திருச்சி கடைவீதியில் உள்ள பெரிய கம்மாள தெரு மற்றும் சின்ன கம்மாள தெரு ஆகிய தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்டு பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது பொறுப்பாளர்கள் ஜவகர்,அன்பழகன்,சந்துகடைசந்துரூ,
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

Wednesday, April 01, 2020

On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி அமைச்சர் வளர்மதி இலவசமாக முகக் கவசம் வழங்கினார்

திருச்சி



கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வரும்  ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் உள்ள வார்டுகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வைரஸ் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ளும் வகையில் மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் இருந்து பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை கூறினார்.

இந்நிகழ்வின்போதுபகுதிச் செயலாளர் டைமன்செயலாளர் டைமண்ட் திருப்பதி  அமைச்சர் நேர்முக உதவியாளர் முருகன் அதிமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 01


திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு -1000 நபர்கள் கைது -
10இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும்
கடைகள் - மாநகர காவல்துறை ஆணையர்

இது குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில்

திருச்சி மாநகரத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சமூக விலகலை
கடைபிடிக்க வேண்டி மார்ச் 25-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளின்றி
வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு
கடந்த 24-ந்தேதி அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை வாகனங்கள் மற்றும்
தனியார் வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு
பொதுமக்களுக்கு திருச்சி மாநகரம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
மேலும், அரசின் உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில்
சுற்றித்திரிந்ததற்காக திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1000 நபர்கள் கைது
செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்968 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகர்
மாநகர ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,08,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி தேவையில்லாமல் வெளியே வருவதை
தவிர்க்கும்படியும், மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர
காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி
10இடங்களில்
(1.மதுரம் மைதானம், கீழப்புலிவார்டு ரோடு, 2. அண்ணா நகர் உழவர் சந்தை, தென்னூர், 3. அண்ணா
விளையாட்டரங்க முன்புறம், 4. கே.கே.நகர் உழவர் சந்தை, 5.மத்திய பேருந்து நிலையம், 6.எஸ்.ஐ.டி.
மைதானம், அரியமங்கலம், 7.பிஷப்ஹீபர் கல்லூரி மைதானம், புத்தூர், 8.சத்திரம் பேருந்து
நிலைய சுற்று வட்டாரப் பகுதி,
9.N.S.மேல்நிலைபள்ளி மற்றும் 10. ஸ்ரீரங்கம் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் சில்லறை விற்பனை சந்தைகள் செயல்பட்டு
வருகிறது. மேற்படி இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் திருச்சி காவேரி பாலத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் நாளை முதல்
(02.04.2020) இயங்காது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேற்கண்ட
இடங்களில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட் கடைகள் காலை 06.00 மணிமுதல் மதியம் 02.30
மணிவரை செயல்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறதுமேலும் ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தும் பொருட்டும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து,
தேவையற்ற பிற நடமாட்டங்களை குறைக்கும் வகையிலும் மாநகரில் வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று
வருகிறது.


On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 01

தமிழக அரசுஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில்
அளிக்கலாம் -  திருச்சி  மாநகராட்சி ஆணையர்

இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்

திருச்சி மாநகராட்சி ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வுச் சான்றிழ், வேறு இடங்களில் பணிபுரியவில்லை என்பதற்கான சான்று, மறு திருமணம் செய்யாததற்கான சான்று ஆகியவைகளை ஏப்ரல், மே மற்றும்  ஜீன் மாதங்களுக்குப் பதிலாக ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு நேரத்தில் அளிக்கலாம் என
அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.


On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
கரோனா நோய் தடுப்புக்கு அனைத்து வயதினரும் அச்சமின்றி கபசூர குடிநீரை பருகலாம் என்று திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
  •  இது குறித்து திருச்சி மாவட்ட சித்த அலுவலர்

 டாக்டர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவை தொற்று நோயான கரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. 



அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகளிலும் பல ஆண்டுகளாக நுரையீரல் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது புதிய மருந்து கிடையாது. இதை பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வருகிறோம். இது தடுப்பு மருந்தாகும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் கபசூர குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. 

( போலி மருத்துவர் அறிவுரை இப்படி அறிவுரைகளை பின்பற்றக் கூடாது)

மக்கள் அதை வாங்கி பருகி நோய் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெளியில் இந்த குடிநீர் பொடியை வாங்கும்போது அதில் நிறுவனப் பெயர், அனுமதி எண், மூலப்பொருள்கள் விபரம், விலை, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை பார்த்து வாங்க வேண்டும். இவை குறிப்பிடப்படவில்லை என்றால் அந்த மருந்துகளை வாங்க கூடாது என்றார்.
On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    

Contribution of Rs.25 lakhs to Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PMCARES) Fund


We the All India Nationalised Banks Officers’ Federation (AINBOF) is a registered Trade Union with a membership of more than one lakh and is meant exclusively for the officers working in the Nationalised Banks.
The COVID 19 Pandemic is threatering the entire world and has raised serious questions on the  medical infrastructure world over and our preparedness to tackle its severity.


Under your able leadership, India, as a nation has been able to keep the pandemic under control, unlike the countries more developed than overs.
Considering the plight of the millions of poor, on account of the Lockdown, a slew of measures have been announced under the Prime Ministers Garib Kalyan Yojana with the onus of implementaion on the part of the banking personnel.
We, the Bank Officers, consider ourselves as the financial army, which safeguards and protects the economic interests of the nation and its citizens akin to our armed forces guarding the borders. We believe that collective action is the the most effective way to mitigate any issue and we assure our support in the country’s fight against the pandemic.

At the same time, we place a request to you take care of the interests of the Banker community  also into consideration as they are the frontline people to deal with lakhs of citizens in the days to come.
We have suggested to Reserve Bank of India vide our letter dated 28.03.2020 on various measures to be implemented for improving the efficiency in delivering essential banking services and vide our letter dated 29.03.2020 suggested measures to be implemented for ensuring the safety of the Bank Employees and Officers.
Both the above  communications have been posted to your twitter account also.  We are hopeful that the expectations of the bankers will also be taken care of suitably while they are delivering the services to the masses at this critical juncture.
We also take this opportunity to extend a contribution of Rupees Twenty Five Lakhs towards the PMCARES Fund to provide relief to the affected people and alleviating the troubles of our fellow brethren,
Yours sincerely
       
SUNIL KUMAR G V MANIMARAN
PRESIDENT GENERAL SECRETARY 

Tuesday, March 31, 2020

On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 31


திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக
28நபர்கள் தனிபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில்
20நபர்களுக்கு சளி, இருமல், லேசான காய்ச்சல், இருந்ததால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் 28 நபர்கள் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.  இதில்
8நபர்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில்
5நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனையில்  கொரோனா வைரஸ் நோய் தாக்கம் இல்லை என வந்துள்ளது.     இன்று (31.03.2020)
20 நபர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில் 13 நபர்களுக்கு இரத்தம் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.  சிகிச்சைப் பெற்று வரும் நபர்கள் தற்போது நல்ல நிலையில்  உள்ளனர்.
சாலைகளில்  அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக  இருசக்கர வாகனங்களில் 1நபர்  மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
2நபர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நியாயவிலைக்கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும்  விடுதலின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி  நிவாரண உதவித்தொகை  மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படவுள்ளது. – மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்

 இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்
கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்தை தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதன் காரணமாக பொதுமக்கள் பாதிப்படையாமல்  இருப்பதன் பொருட்டு கொரோனா வைரஸ் நிவாரணம் 2020பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்க தமிழக முதலமைச்சர்  ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 23.03.2020அன்று நடைமுறையிலுள்ள 1224 நியாயவிலைக்கடைகளுக்கு உட்பட்ட  7,84,587 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் விடுதலின்றி பின்வரும் நடைமுறைகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 23.03.2020 அன்று நடைமுறையிலுள்ள 1224 நியாயவிலைக்கடைகளுக்கு உட்பட்ட  784587 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், (முகாமில் உள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும்) விடுதலின்றி பின்வரும் நடைமுறைகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை  மற்றும் அத்தியாவசியப்
பொருள்கள் 02.04.2020 (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும். அனைத்து நியாயவிலை கடை விற்பனையாளர்கள் மூலம் அவர்களது நியாய விலைக்கடைக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு வாரியாக 300குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்படும். ஒவ்வொரு நாளும், ஒரு மணி நேரத்திற்கு 13கார்டுகள் வீதம் ஒரு நாளைக்கு 100குடும்ப அட்டைதாரர்களுக்கு
ரூ.1000நிவாரண தொகையும், அவர்களுக்குரிய மேற்குறிப்பிட்ட அத்தியாவசிய பொருட்களையும், அந்தந்த நியாயவிலைக்கடைகளில் சமூக விலகலை (1மீட்டர் இடைவெளி விட்டு) கடைபிடித்து விநியோகம் செய்யப்படும். மேலும் மார்ச் 2020 மாதத்திற்கு பொருட்கள் வாங்காத நபர்கள் ஏப்ரல் 2020-ல் தனியே நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
இப்பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.  மேலும், மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை                    (0431 -2411474, 9445045618)  தொடர்பு கொண்டு புகார் அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்கள்.
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in    
Canara Bank Officers Association as a part of its social commitment to the society.


The social service wing CANPAL donated about 1500 face masks to the Police personnel of Tamilnadu, who are tirelessly protecting the citizens amid the Covid 19 outbreak.  The masks were handed over to IG of North Zone Shri NAGARAJAN IPS by Canara Bank Officers Association General Secretary Shri GV MANIMARAN.