Wednesday, May 06, 2020

On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி மதிமுக 27 ஆம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது

திருச்சியில் இன்று மதிமுகவின் 27 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியான கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மதிமுகவின் கொடிகள் உறையூர் மேட்டு தெரு குமரன் நகர் ஆகிய இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

 திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ராஜன் இலமுருகு மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் தலைமை வகித்தார். ஜெயசீலன் பகுதி கழக செயலாளர் வரவேற்புரையாற்றினார் சக்தி மகேந்திரன் மோகன் முரளி சுந்தர் ஜாஹிர் இஸ்மாயில் ஆனந்தன் எட்வர்டு தவமணி புண்ணியமூர்த்தி அசோக்குமார் ராமசுப்பு, மாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்ச்சியில் கொடியேற்றி அன்னதானம் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டிசோமு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ரொஹையா பெல் ராஜமாணிக்கம் துரையரசன் எல்லகுடி அன்புராஜ் அடைக்கலம் (தலைவரின் நேர்முக உதவியாளர்) ஜார்ஜ் ராஜா மலர் செழியன் விவேக் அன்பு சேகர் பாரதி அர்ஜுன் ரெங்கராஜ் நாகேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் உறையூர் பகுதி கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஸ்போர்ட் வரதன் 60 வது வட்ட கழக செயலாளர் நன்றி உரை ஆற்றினார்.

  பின்னர் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ரொஹையா கூறுகையில்



நாங்கள் 27 ஆண்டுகளாக டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தோம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் மதிமுக சார்பில் 3000 கிலோ மீட்டர் வரை நடந்து கிராமங்களுக்கு எல்லாம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். 

நாங்கள் வழக்கு தொடர்ந்ததால் அதன் விளைவுதான் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூடப்பட்டுள்ளது தற்போது சில நாட்களாக எல்லோரும் நன்றாக தான் இருந்தார்கள் நாளைக்கு டாஸ்மார்க் கடைகளை திறந்தால் பெரும் விளைவை சந்திக்க நேரிடும் ஊரடங்கு உத்தரவை மூடப்பட்ட மதுக் கடைகளை தொடர்ச்சியாக மூடி மதுவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய தலைவரின் குறிக்கோள்
மதுபான கடைகளை திறந்தால் கொரோனாதொற்று அதிகமாக பரவ கூடும் என்பதுதான் உண்மை மது அருந்துவதனால் அவர்களின் மது அருந்துபவர்களின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். எளிதாக கொரோனா தொற்று பரவ கூடும் இதனால் மருத்துவர்களுக்கு காவல்துறையினருக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்
இப்போது இருக்கும் வேலையை விட பத்து மடங்கு அதிகமாகும்
எங்கள் மதிமுகவின் சார்பாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்பது தாழ்மையான வேண்டுகோள்

தற்போது உள்ள மதுபானங்கள்  விரைவில் காலாவதி ஆகப்போகிறது அதனால்தான் டாஸ்மாக் கடைகளை திறக்கிறார்கள்,

இது பெரும் பிரச்சினையை தமிழகத்திற்கு ஏற்படுத்தும் சமூக பரவல்கள் அதிகமாக கூடும் என்று மருத்துவர் ரொஹையா தெரிவித்தார்.


பேட்டி.... மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ரொஹையா
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

மாவட்ட குற்றவியல் சங்கம் சார்பில் நலிந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து நீதிமன்றங்கள் மூடப்பட்ட தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் வழக்கறிஞர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் வகையில் திருச்சி மாவட்ட குற்றவியல் சங்கத்தின் சார்பில் இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் அரிசி, காய்கறி ஆகியவற்றை வழங்கினார். மேலும் கொரோனா தொந்த நோய் கட்டுப்படுத்தும் வகையில்  கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்  கிருபாகரன்மதுரம், மற்றும் வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், கிஷேர் குமார்,  கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர். 
சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு இன்று முதல் கட்டமாக 50 வழக்கறிஞர்களுக்கு  கொடுக்கப்பட்டது தொடர்ந்து 200 பக்கங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.

On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் 
மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மீதான தடை அரசின் மறு உத்தரவு 
வரும்வரை அமலில் இருக்கும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும்  2020-2021 ஆம் ஆண்டிற்கான 
சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும் கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு 
பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது. 

 *அரசாணை மீறி 
செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை* 

 கொரோனா  வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசால் 
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி 
நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பாடுகள் மீதான தடைகள் அரசின்
மறுஉத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதனைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்உள்ள அனைத்து வகைபள்ளிகளிலும்  2020-2021 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும்
கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக 
அறிவிக்கப்படுகிறது. 

 இவ்வானையினை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை 
மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை 
விடுத்துள்ளார்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்


நமது மாவட்டத்தினை சார்ந்த 51 நபர்கள் கொரோனா வைரஸ் நோய் 
பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 47 நபர்கள்
பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வருகை 
புரிந்த 28 நபர்கள் மற்றும் இதர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த 
667 நபர்களுக்கு இரத்த பரிசோதனை செய்ததில் ஏற்கனவே 4.5.2020 அன்று 4 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 
304 நபர்களுக்கு இன்று(5.5.2020) ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 303 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 நபருக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 9 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9
நபர்களும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 12 நபர்களுக்கும் புதுக்கோட்டை 
மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 31 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர். 
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி 
மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல்
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். 
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இருக்கஎன்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி 
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் 
அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சிராபபள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 

தடைசெய்யபபட்டு தனிமை படுத்தப்பட்ட பகுதிகளான துவரங்குறிச்சி தொட்டியம் அலகரை ஆகிய 
இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் இன்று  நேரில் 
சென்று பாவையிட்டு ஆய்வு செய்தார். 



 சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருசசிராப்பள்ளி மாவடடத்திற்கு வருகை 
புரிந்த 28 நபர்களையும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படடுள்ளது.
தனிமைப்படுத்தபபட்ட நபர்களின் வீடுகளில் சுகாதார துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ்
ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துவரங்குறிச்சி மற்றும் தொட்டியம் வட்டம் அலகரை 
ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு தனிமைப்படுத்தபபட்டவர்கள் 14 நாடகள் தனிமையில் 
இருக க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். 
இந்நிகழ்சசியில் முசிறி கோடடாட்சியர் (பொ)பழனிதேவிமருங்காபுரி வட்டாட்சியர் 
சாந்தி தொட்டியம் வட்டாட்சியர் மலர் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்
செந்தில்,ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி வலைவீசி முயல் பிடிக்க  முயற்சித்தவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் தலைமறைவு

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்  வனவா் சரவணன்   மற்றும் 

வனக்காப்பாளா் கருப்பையா, ஜான் ஜோசப் வனக்காவலா் சுகாஷினி ஆகியோர் திருச்சி வனச்சரகம், கண்ணனூா் பகுதி பகளவாடி காப்புகாட்டில்,  வேட்டையாடிய காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி 27/2020 மற்றும் 
சங்கா்(Driver-தலைமறைவு)25/2020 ஆகிய இருவர்  வலை வைத்து முயல் பிடித்த குற்றத்திற்காக  கைது செய்து  
வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 2(1), 2(16)(a)( b), 2(35), 2(37), 9, 39(1)(d), 50, 51(1)  & IPC 188, 269, 270, 271  
r/w 3 of Epidemic Act 1897 & 134, 135 TN Public Health Act 1939 r/w 51(d) Disaster Management Act 2002 படி
துறையூா் நீதிமன்ற நீதிபதி அவா்கள் உத்தரவுபடி 15 நாட்கள் சிறைகாவலில் அடைக்கப்பட்டனா். Hero Splendor இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

Monday, May 04, 2020

On Monday, May 04, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
அரசு பள்ளியில் பயில்வோரின் குடும்பத்தினருக்கு உதவிய ஆசியர்கள்.
அனைவரும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய ஆசிரியர்கள்.

கொரோனா அச்சத்தால் நாடே முடங்கிக் கிடக்க ஊரடங்கால் மக்களும் வீடுகளுக்குள் தான் கடந்த 40 நாட்களாக முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலை மே 17 ம் தேதி வரை நீடிக்கும் நிலையில் பள்ளி – கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள சமுத்திரம் உயர்நிலைப்பள்ளி என்பது மிகவும் பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ளது. அந்த பள்ளியில் சுமார் 244 மாணவ, மாணவிகள் படித்து வந்தாலும் கூட அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் தான். இந்நிலையில் கொரோனா முடக்கத்தால் நம் பள்ளி மாணவ, மாணவிகளின் குடும்பத்தின் நிலை என்ன ஆனதோ என்று ஏங்கிய அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் உதவிட முடிவு செய்தனர்.
அதன்படி மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 200 மாணவ, மாணவிகளின் குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தனர். அந்த டோக்கனில் எந்த நேரத்தில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற விபரம் அடங்கி இருந்தது. அதன்படி 1 முதல் 50 வரை என மொத்தம் 4 பிரிவுகளாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி பொருட்கள் வாங்க வந்த மாணவ, மாணவிகள் பெற்றோர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் வட்டமிடப்பட்டிருந்தது. அந்த வரிசையில் பெற்றோர் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். ஒரு குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி ஒரு பையிலும், மற்றொரு பையில் மளிகை பொருட்கள், காய்கனிகள், பிஸ்கட் உள்ளிட்டவை என மொத்தம் 2 பைகளின் பொருட்கள் தனித் தனியாக வழங்கப்பட்டது.
பள்ளியில் உள்ள 10 ஆசிரியர்கள் தலா 8 ஆயிரம் வீதம் 80 ஆயிரமும் சில நன்கொடையாளர்கள் மூலம் என மொத்தம் ஒரு லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.

Sunday, May 03, 2020

On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம்



இந்தியா முழுவதும் உள்ள MAHARATNA நிறுவனமான BHEL நிறுவனத்தில் சுமார் 38000 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். CORONA பெருந்தோற்று காலத்தை சாதகமாக பயன்படுத்தி மத்திய அரசும் BHEL நிறுவனமும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக சம்பள வெட்டு மற்றும் பஞ்சபடி உயர்வை இம்மாதம் முதல் 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்க ஆணை வெளியிட்டள்ளது.

இந்த ஆணையை திரும்பப்பெற வேண்டும் என்று BHEL CITU தொழிற்சங்கம் உரிமை மீட்பு போராட்டத்திற்கு அறைக்கூவல்  விடுத்தது. இதை தொடர்ந்து பெரும்பகுதி BHEL தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து  எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே 
வருவாய்துறையினர் மணல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த மக்கள் 
சப் கலெக்டர் நேரில் விசாரணை. 


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் பகுதியில் உள்ள ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மாலையும் மணல் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவரும், வருவாய் ஆய்வாளர் ஒருவரும் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு வாகனங்களையும் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வருவாய்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே இதுபோன்று மணல் கடத்திச் செல்லலாமா என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஶ்ரீரங்கம் சப் கலெக்டர் சிபி ஆதித்தயா செந்தில்குமார் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து வளநாடு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். 
மேலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் எதற்காக மணல் ஏற்றினார்கள்? எவ்வளவு மணல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சப் கலெக்டர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 
கொரோனா நேரத்தில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வரும் இந்த சூழலில் வருவாய்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.