Wednesday, June 10, 2020

On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 10

28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு 
ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது - அமைச்சர், மருத்துவமனை டீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

திருச்சி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படும் வகையில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கின்றனர். 


இதன் ஒரு பகுதியாக இன்று காலை 
2அல்ட்ரா சவுண்ட்,  கலர்டாப்ளர் மற்றும் ஏழு டிஜிட்டல் வரைபட கருவி உட்பட சுமார் 
28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி, தொட்டியம், ஓமந்தூர் , தொட்டியம் துவரங்குறிச்சி  மண்ணச்சநல்லூர் மணப்பாறை தாலுக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு டைமன்சிட்டி ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம்,  சோழா  ரோட்டரி சங்கம் மற்றும் இலங்கை யாழ்பானம் ரோட்டரி சங்கத்தினர்   இணைந்து தமிழக சுற்றுலா துறை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,  திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வனிதா ,  திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் லட்சுமி  ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஜமீர்பாஷா, விஸ்வநாத், கோவிந்தராஜ், 
அமலச்சந்திரன் மற்றும் இலங்கை யாழ்பாணம் ரோட்டரி சங்க நிர்வாகி
ஜெயக்குமாரன்
அருமைநாகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,  தமிழக அரசு பல்வேறு வழிகளில்  சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கையாண்டு வருகிறது. 

ஜூன் 8ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் தமிழக அரசு கொரோனா வை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே கோவில்கள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தும் என தெரியவருகிறது. 


 சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வந்தவண்ணமே இருக்கின்றனர் , மக்கள் கூட்டம் கூடுவதை அரசு தவிர்க்க வலியுறுத்தி வருகின்ற து, சமயபுரம் தேர் நிற்கும் இடத்தை சுற்றி தரை கடை அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர், தரை கடை வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் சமூக இடைவெளி இல்லாமல் நெரிசலாக கடைகள் அமைத்து உள்ளனர்.  

 கட்டனமில்ல காலனி பாதுகாப்பு அறைக்கு செல்ல இயலாதவாறு சிறுது இடம் கூட இல்லாமல்  முழுவதும் கடைகள் அடைத்துள்ளதாக பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.  

 அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது, இதனால் கொரோனோ தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கோவில் திறப்பதற்கு முன்பே இப்படி இருக்கும் வேளையில் கோவில் திறந்தாள் பாதிப்பு  அதிகமாகும் அச்சம் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது,  


  பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகமும் பக்தர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றி பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
*E.E.குமரேசன் மீது லஞ்ச ஒழிப்பு* **விசாரணைக்கு* *உத்தரவு* *


திருச்சி மாநகராட்சி,  அரியமங்கலம் கோட்டம்,  அரியமங்கலம் பொறியியல் பிரிவில் டீசல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக லோக் தந்த்ரிக் ஜனதா தளம் சார்பில் கடித எண். *LJD / TN /* *117 / 2020, நாள் :* *16.03.2020* தேதியிட்ட கடிதத்தின் மூலம் அனைத்து அலுவலர்களுக்கும் புகார் மனு அனுப்பியதோடு, சட்டசபை முன்பு சங்கு ஊதி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தோம். 
 அதனையொட்டி  திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் 14.03.2020 அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில்  சுமூக முடிவு எதுவும் எட்டப்படாததால் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் முன்பு 16.03.2020 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் கலந்து கொண்ட உதவி ஆணையர் அவர்கள் *டீசல்* *கொள்முதலில் 58,662 ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பீடு* ஏற்படுத்தியாக தெரிவித்துள்ளார்.  இதனடிப்படையில் *லஞ்சம்ஊழல்* *தடுப்புமற்றும்* *கண்காணிப்புத்துறையின்* *இயக்குநர்* அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.  புகாரின் அடிப்படையில்  *petn* . *No.3272/* *2020 / LB / TR,* *Dated: 23.05.2020* கடிதத்தின் மூலம் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு  உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்சம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குனர் அவர்கள் பரிந்துரைத்துள்ளது. 

இந்த பரிந்துரையின் மூலம் திருச்சி **மாநகராட்சியின்நிர்வாக* *பொறியாளர்* *குமரேசன்* அரியமங்கலம் கோட்டத்தின் உதவி செயற்பொறியாளராக இருந்த போது நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான *விசாரணை* *வளையத்திற்குள்* *சிக்குவார்* அதன் மூலம் டீசல் கொள்முதலில் நடைபெற்றுள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

*ஆ.வையாபுரி,*
*மாநில பொதுச்செயலாளர்,*
**லோக்தந்திரிக்* *ஜனதாதளம்* . * எனத் தெரிவித்துள்ளார்
*Cell :95002 - 99882.*

Tuesday, June 09, 2020

On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

மத்திய அரசு ரூ. 7500ம், மாநில அரசு ரூ. 5000ம் கரோனா நிவாரண நிதியாக
அனைவருக்கும் வழங்கவேண்டும்,
விவசாயத்தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.


விவசாயிகள்,நெசவாளர்களுக்கான 
இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது,
தொழிற்சங்க உரிமைகளை பறிக்ககூடாது,
பொதுத்துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது.
ரேஷன் கடைகளில் அனைவருக்கும்
முறைகேடு இல்லாமல் பொருட்கள் வழங்கவேண்டும்.
காவிரி ஆனணயத்தை ஜல்சக்தி அமைப்போடு இனணக்கக்கூடாது.
அனைவருக்கும் இலவசமாக கரோனா
பரிசோதனை நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in    
திருச்சி நாடாளுமன்றத்  உறுப்பினர் திரு நாவுக்கரசர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் செலவில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார். 

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வழங்கினார். அதன் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கொரோனா வைரஸ் உண்மையாக பாதித்தவர்களுக்கு இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை. 

 உண்மையாக பாதித்தவர்களுக்கு எல்லாம் பரிசோதனை செய்து இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடம் இருந்திருக்காது. அதனால் தான் தற்போது தனியார் மருத்துவமனைகள் வசமுள்ள 25 சதவீத படுக்கைகளை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. 

 ஆனால் இது போதுமானது கிடையாது. 50 சதவீத படுக்களை கையகப்படுத்த வேண்டும். அதேபோல் அனைவரிடமும் தமிழக முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் தனியார் மருத்துவமனைகளில் 15 நாட்கள் வரை ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவாகும். இதனால் கொரோனா மேலும் தீவிரமடையும். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகையால் கரோனா சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். மக்களுக்கு உடனடியாக ரொக்கம் தேவைப்படுகிறது. அதனால் மாநில அரசு 7,500 ரூபாய், மத்திய அரசு 5,000 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும். வீட்டு இணைப்புக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதாக இல்லை. 

 அரசு உத்தரவை மக்கள் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் மூன்று மாதமாக மூடிக் கிடப்பதால் அவர்களால் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்குறைப்பு செய்கிறார்கள். ஆகையால் நலிந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும். சலுகைகளை அறிவிக்க வேண்டும். கடன் கொடுக்க வேண்டும். கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.  கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி இல்லை. குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும். அரசின் உத்தரவை தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்றார்.

Monday, June 08, 2020

On Monday, June 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜீன் 08

மருத்துவக் கல்வியில் ஓபிசி மாணவர் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

 எழுச்சி தமிழர் திருமாவளவன் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம்   முழுவதும்  கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக திருச்சி
மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள் 
தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட பொருளாளர் சந்தனமொழி,  செய்தி தொடர்பாளர் சிவதண்டபாணி, .அன்பரசு, காந்தி ஆகியோர்
முன்னிலையிலும்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள்   சுஜாஅருள்,  அரசு,ஆகியோர்
கண்டன உரை  ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்வியில்  ஓபிசி மாணவர்களுக்கு   இட ஒதுக்கீடும், தனியார் துறையில் சிறப்பு கல்வி நிறுவனங்களில் இட
ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில்  நிர்வாகிகள் வழக்கறிஞர் திவாகரன், ஆல்பர்ட்ராஜ், சிறுத்தை சதீஷ், தில்லை குணா,  
தில்லை முரசு, கலியமூர்த்தி, துரை வளவன் பெரியசாமி, முருகேசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, June 08, 2020 by Tamilnewstv in    

திருச்சி வியாபாரம் தொடங்க அனுமதி கோரி திருச்சி காந்தி மார்க்கெட் நிலையான கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


                     


திருச்சி காந்தி மார்க்கெட் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிலையான கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளில் வெல்லம், பானை, கூடை, மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 


                    


 இதனால் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகளுக்கு மாற்றாக வெவ்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிலையான கடைகளுக்கு எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் நிலையான கடை வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமையில் சங்கத்தினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திருச்சி ஆட்சியர் சிவராசுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

பேட்டி; பாலகிருஷ்ண
On Monday, June 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி முத்தம்மாள். இவர்களின் மகன் மணி. மருமகள் சுமதி ராணி உள்ளிட்ட குடும்பத்தினர் ஏலச்சீட்டு மற்றும் பிடி சீட்டு, குலுக்கல் சீட்டு ஆகியவற்றை நடத்தி வந்துள்ளனர். 

இவர்களிடம் திருச்சி கருவாட்டு பேட்டை, ஜான் தோப்பு, நாயுடு மஹால், கமலா நேரு நகர், என்எஸ்பி ரோடு, சத்யமூர்த்தி நகர், வடக்கு தாராநல்லூர், சின்ன செட்டி தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் சீட்டு சேர்ந்துள்ளனர்.

 மேலும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இந்த வகையில் 34 பேரிடம் தலா ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்றுள்ளனர். அதேபோல் ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கும் பணம் கொடுக்காமலும், வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுத்தவர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுக்காமல் பழனிச்சாமி குடும்பத்தினர் மோசடி செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


 இந்த வகையில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டால் தரக்குறைவாக பேசுவதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இந்து மகா சபா மாநில துணைத் தலைவர் பரமானந்தன் தலைமையில் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆணையர் வரதராஜுவை  சந்தித்து மனு கொடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உத்தரவாதம் அளித்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

 பேட்டி: இந்து மகா சபா மாநிலத் துணைத் தலைவர் பரமானந்தன்.

Saturday, June 06, 2020

On Saturday, June 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் எலி மருந்து சாப்பிட்டு 2018-ல் 138 பேரும், 2019-ல் 165 பேரும், 2020 மே மாதம் வரை 63 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

எனவே, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுக்கும் வகையில் திருச்சி சரகத்தில் சட்ட விரோதமாக எலி மருந்து விற்பனை செய்யும் 228 கடைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் 160 கடைகளும், புதுக்கோட்டையில் 68 கடைகளும் அடங்கும்.

இதற்கிடையே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காவலர் நல ஆய்வாளர்கள், தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எலி மருந்து விற்பனை செய்யும் கடைக்காரர்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளனர். 

திருச்சிக்கு அஜீம் -94981 10803, புதுக்கோட்டைக்கு லட்சுமி - 94981 06582, கரூர் கார்த்திகா - 94981 61860, பெரம்பலூர் கார்த்திகாயினி - 94875 56866, அரியலூர் சுமதி - 94981 10774 ஆகியோர் இந்த சிறப்புப் பிரிவின் ஆய்வாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்

கடைகளில் யாரேனும் எலி மருந்து வாங்கினால், கடைக்காரர்கள் உடனடியாக தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு ஆய்வாளர்களுக்கோ அல்லது அவரால் நடத்தப்படும் குழு வுக்கோ தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்க முடியாதபட்சத்தில் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகங்களை திருச்சிக்கு 0431-2333629, புதுக்கோட்டைக்கு 04322-255299, பெரம்பலூருக்கு 04328-224962, அரியலூருக்கு 04329-222106 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

அதைத் தொடர்ந்து தற்கொலை தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார், எலி மருந்து வாங்கிச் சென்றவர்களைத் தொடர்புகொண்டு, காரணத்தை அறிந்து, யாருக்கேனும் தற்கொலை எண்ணம் இருந்தால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதிலிருந்து விடுபட உதவி செய்வர்"

என  தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட மனித நேய செயலில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி