Sunday, February 02, 2020
திருச்சி நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் ELFIN திட்டத்தால் போக்குவரத்து பாதிப்பா
திருச்சி பிரீஸ் ஹோட்டலில் நடக்கும் தனியார் நிறுவனம் எல்பின் நிகழ்ச்சிக்கு திருச்சி கலையரங்க வளாகத்தில் பார்க்கிங் அனுமதி அளித்தது யார்....
முன்னாள் எஸ்பி கலியமூர்த்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்றது
அதற்கு வாகன நிறுத்த இடம் இல்லை அதனால் வாகனங்கள் சாலையில் நிறுத்தி உள்ளார்கள்.
எல்பின் கவர்ச்சி திட்டங்கள்
*ELFIN E COM PRIVATE LIMITED*
*HIGHWAY ECM*
Rs84,000
(PV 7)
✓10000 Members only Eligible•••
✓1000 Members only mega price •••
✓First price
100 Members 600 sqrFit home(House)•••
✓Second price
10 Members car•••
✓Third price 100 Members Plot•••
✓Fourth price 100 Members 5 பவுன் GoldChain•••
✓Fifth price 100 members Royal Enfield•••
✓Sixth price 100 members 3 பவுன் gold Chain•••
✓Seventh price 490 members 65 inches LED TV , DVD Player, Home theater•••
•••Balance 9000 Members-ku
LED TV....FREE••••
*****************************
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.மாவட்ட நலப்பணி நிதி குழு கையூட்டு பெறப்பட்டதா மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
திருச்சி பிரீஸ் ஹோட்டலில் நடக்கும் தனியார் நிறுவனம் எல்பின் நிகழ்ச்சிக்கு திருச்சி கலையரங்க வளாகத்தில் பார்க்கிங் அனுமதி அளித்தது யார்....
அதற்கு வாகன நிறுத்த இடம் இல்லை அதனால் வாகனங்கள் சாலையில் நிறுத்தி உள்ளார்கள்.
எல்பின் கவர்ச்சி திட்டங்கள்
*ELFIN E COM PRIVATE LIMITED*
*HIGHWAY ECM*
Rs84,000
(PV 7)
✓10000 Members only Eligible•••
✓1000 Members only mega price •••
✓First price
100 Members 600 sqrFit home(House)•••
✓Second price
10 Members car•••
✓Third price 100 Members Plot•••
✓Fourth price 100 Members 5 பவுன் GoldChain•••
✓Fifth price 100 members Royal Enfield•••
✓Sixth price 100 members 3 பவுன் gold Chain•••
✓Seventh price 490 members 65 inches LED TV , DVD Player, Home theater•••
•••Balance 9000 Members-ku
LED TV....FREE••••
*****************************
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.மாவட்ட நலப்பணி நிதி குழு கையூட்டு பெறப்பட்டதா மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
On Sunday, February 02, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி எல்பின் நிறுவனம் மீது பொதுமக்கள் நலன் கருதி புகார் அளித்த நபருக்கு எதிராகபாலியல் புகார்.

சத்தியமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சேர்ந்தவர் இவர் சில நாட்களுக்கு முன்பு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் திருச்சி கல்லுக்குழி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எல்லோரும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை கூறி ஒரு நபர் இந்த கம்பெனியில் இணைவதற்கு 12 ஆயிரம் பணத்தை வாங்கி அதற்கு மதிப்புள்ள பொருட்களை தருகிறோம் என்றும் உங்களுக்கு கீழ் நான்கு நபர்களை சேர்த்தால் இந்த நான்கு நபர்களும் ஒரு நபர் வீதம் 5000 கமிஷனாக வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள் மேலும் எங்கள் கம்பெனி ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதங்களில் 9 லட்சம் தருவோம் என்று கூறுகிறார்கள் மக்களை திசைதிருப்பி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்ய வைத்துள்ளார்கள் தற்போது
புதுக்கோட்டை ஆலங்குடி எங்கும் கூட்டங்கள் நடக்காத படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த நபர்கள் திருச்சியிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி மக்களிடம் பணம் பறிக்கின்றனர் இப்படி ஆசை வார்த்தைகள் காட்டி பணம் கொள்ளையடித்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி கூறியுள்ள இதனை எதிர்கொள்ள முடியாத எல்பின் நிறுவனம் சத்தியமூர்த்திக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை கொடுத்து வழக்கை வாபஸ் பெறக்கோரி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

சத்தியமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சேர்ந்தவர் இவர் சில நாட்களுக்கு முன்பு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் திருச்சி கல்லுக்குழி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எல்லோரும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை கூறி ஒரு நபர் இந்த கம்பெனியில் இணைவதற்கு 12 ஆயிரம் பணத்தை வாங்கி அதற்கு மதிப்புள்ள பொருட்களை தருகிறோம் என்றும் உங்களுக்கு கீழ் நான்கு நபர்களை சேர்த்தால் இந்த நான்கு நபர்களும் ஒரு நபர் வீதம் 5000 கமிஷனாக வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள் மேலும் எங்கள் கம்பெனி ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதங்களில் 9 லட்சம் தருவோம் என்று கூறுகிறார்கள் மக்களை திசைதிருப்பி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்ய வைத்துள்ளார்கள் தற்போது
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள் மோசடி காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் காவல்துறை அறிவிப்பு*
திருச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமங்கலத்தில் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் பாதுஷா சாகுல் ஹமீது என்கிற அழகர்சாமி பஷீர் ஆகியோர் ELFIN என்ற நிறுவனம் துவக்கினர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பரிசுப்பொருட்கள் முதலீடு தொகை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர் குறிப்பாக பத்தாயிரம் ரூபாய் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் காலிமனை கிடைக்கும் என்றும் வருடத்திற்கு பிறகு 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறி பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது
கடந்த சில ஆண்டுகளில் என்ற நிறுவனம் மதுரை திண்டுக்கல் திருவண்ணாமலை திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக செய்ததாக புகார் எழுந்துள்ளது பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர் ஆனால் திருச்சியில் இன்றுவரை தொடர்ந்து எல்பின் நிறுவனம் தனது கூட்டம் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்திவருகிறது
இந்நிலையில் தன்னிடம் பணம் வசூல் செய்த ELFIN நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக திருவாரூரைச் சேர்ந்த குமார் என்பவர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார் அந்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி மன்னார்புரம் பல்துறை கட்சி அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது காவல்துறை
0431-2422220 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமங்கலத்தில் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் பாதுஷா சாகுல் ஹமீது என்கிற அழகர்சாமி பஷீர் ஆகியோர் ELFIN என்ற நிறுவனம் துவக்கினர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பரிசுப்பொருட்கள் முதலீடு தொகை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர் குறிப்பாக பத்தாயிரம் ரூபாய் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் காலிமனை கிடைக்கும் என்றும் வருடத்திற்கு பிறகு 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறி பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது
கடந்த சில ஆண்டுகளில் என்ற நிறுவனம் மதுரை திண்டுக்கல் திருவண்ணாமலை திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக செய்ததாக புகார் எழுந்துள்ளது பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர் ஆனால் திருச்சியில் இன்றுவரை தொடர்ந்து எல்பின் நிறுவனம் தனது கூட்டம் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்திவருகிறது
0431-2422220 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tuesday, January 28, 2020
திருச்சி: திருச்சியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
ஈரநிலம் அமைப்பின் சார்பில் ஓவியர் தமிழரசனின் அன்னை பூமி என்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி முதல் கடலூர் வரையிலான இந்த ஓவியக் கண்காட்சி திட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக இன்று திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சகாயராஜ் தலைமை வகித்தார்.
ஓவிய கண்காட்சியை மத்திய சுங்க துறை இணை ஆணையர் வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார். பள்ளியின் முதல்வர் சின்னப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட ஓவியப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் பண்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.
பேட்டி:
ஓவியர் தமிழரசன்
ஈரநிலம் அமைப்பின் சார்பில் ஓவியர் தமிழரசனின் அன்னை பூமி என்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது.
ஓவிய கண்காட்சியை மத்திய சுங்க துறை இணை ஆணையர் வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார். பள்ளியின் முதல்வர் சின்னப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட ஓவியப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் பண்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.
பேட்டி:
ஓவியர் தமிழரசன்
Sunday, January 19, 2020
On Sunday, January 19, 2020 by Tamilnewstv in 9443086297
திருச்சி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்
திருச்சிராப்பள்ளி உலக சுகாதார நிறுவனம் மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது கடந்த பதிமூன்று 1 2011 முதல் இன்று வரை இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லை இதைத் தொடர்ந்து நிலையான நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் போலியோ நோயை அறவே ஒழிப்பதற்கு இந்த முறையை மிகவும் சிரத்தையோடு பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது
திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1279 மையங்களிலும் திருச்சி மாநகராட்சியில் 244 மையங்களிலும் துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும் மணப்பாறை நகராட்சி 23 மையங்களிலும் மொத்தம் ஆயிரத்து 563 மையங்களில் சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார மையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகரங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது ஸ்ரீரங்கம் குணசீலம் சமயபுரம் வயலூர் ஆகிய கோயில்கள் மசூதிகள் ஆலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் விமான நிலையம் முக்கொம்பு போன்ற சுற்றுலாத் தலங்க ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்ய உள்ளது செய்துள்ளது ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியில் இன்று செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணம் செய்யும் ஐந்து வயதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கிராமப்புறங்களில் 16 74 69 குழந்தைகளுக்கும் நகர்புறங்களில் 97 47 4 குழந்தைகளுக்கும் இடம்பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 527 பெயர்களுக்கும் ஆக மொத்தம் 265470 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட திட்டமிட்டுள்ளது இம்முகாமில் 6650 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்
Tuesday, January 07, 2020
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் கைது செய்யப்பட வேண்டும்
திருச்சி நெல்லை முபாரக் பேட்டி (மாநிலத் தலைவர் எஸ்டிபிஐ கட்சி)
திருச்சி வன்முறையை தூண்ட கூடியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் அவரை ஏன் கைது செய்யவில்லை குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த அதுதான் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி
திருச்சியில் இன்று (ஜன.07) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டிபி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், துணைத் தலைவர் அம்ஜத் பாஷா,பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயலாளர்கள் அகமது நவவி, அபுபக்கர் சித்திக், வழ.சஃபியா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், ஏ.கே.கரீம், சபியுல்லா, ஷஃபிக் அகமது மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி:
அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான, ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை, பிற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் பரவலான போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதுதொடர்பாக நாடு முழுவதும் சுமார் 5000 நிகழ்ச்சிகளை நடத்தி, குடியுரிமை சட்டத்திருத்தம் என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி. சம்மந்தமான பா.ஜ.க. மற்றும் சங்பரிவார்களின் பொய் மற்றும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை முறியடித்து, அதன் மத அடிப்படையிலான மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை தகர்க்கவும், நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக எதிர்வரும் ஜனவரி 18 அன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மிகப்பெரும் பேரணி நடத்தவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம். மத்திய அரசு இச்சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மக்கள் விரோத சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:
அரசியலமைப்பின் உன்னத கொள்கைகளை, கட்டளைகளை அப்பட்டமாக மீறும் பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். அதனை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. வழக்கத்திற்கு மாறாக, மக்கள் தொகை கணெக்கெடுப்பின் போது இதுவரை கேட்கப்படாத பெற்றோரின் பிறப்பு, அவர்கள் பிறந்த இடம் உள்ளிட்ட கூடுதலான கேள்விகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ஏற்கனவே, நாடு முழுவதும் என்.பி.ஆர் தரவுகளின் அடிப்படையில் என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என்று நாடாளுமன்றத்திலும், பல்வேறு இடங்களிலும் மோடி அரசு கூறியுள்ளது.
அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி. கணக்கெடுப்பானது நாடு முழுவதும் நடைபெறும் என்று உள்துறை அமித் ஷா கூறியுள்ளார். அவ்வாறு என்.ஆர்.சி. நடைபெற்றால் ஆவணங்களை திரட்ட முடியாத கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை ரத்தாகும் போது, முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களை தவிர மற்ற அனைவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மீண்டும் தங்களது குடியுரிமையை பெறுவார்கள் என்பதிலிருந்தே மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. எத்தகைய அபாயகரமானது என்பது விளங்கும். இந்த மூன்று சட்ட நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
ஆகவே, தமிழக அரசு சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது எனவும், இச்சட்டங்களுக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே, அதிமுக துணையுடன் தான் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதிமுகவின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு ஆதரவான நிலைபாட்டை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கான எதிர்வினையை மக்கள் காட்டத் தொடங்கியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணித்ததன் காரணமாக, அதிமுகவிற்குள்ளே உட்கட்சி பூசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் விரோத மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக தொடருமானால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பினை அது சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து, சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.
போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்:
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், ஜமாத்தினர், மாணவர்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்து வருகின்றது. இதுவரை தமிழகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் விரோத சட்டங்களை இயற்றியுள்ள மத்திய அரசை விமர்சித்து பேசுபவர்கள் மீது பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவர்கள் சிறைகளில் அடைப்பக்கப்பட்டுள்ளனர். தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் அநீதியான முறையில் கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் அரசியல் சாசனத்தையும், பன்முகத்தன்மைமையும் பாதுகாப்பதற்காக குடிமக்கள் நடத்தும் போராட்டங்களை வழக்குகள், கைது நடவடிக்கைகள் மூலம் தடைபோட முயலும் அதிமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போராடுபவர்களையெல்லாம் சிறையில் அடைக்க தீர்மானித்தால் நாட்டின் சிறைச் சாலைகள் போதாது. போராட்டங்களை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு உந்துசக்தியாக மாறும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, பொதுமக்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிகையில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக்குள் வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் கொண்டுவரப்படவில்லை. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என நாங்கள் குற்றஞ்சாட்டுகின்றோம். தேர்தல் ஆணையம் அதன் பொறுப்பை தட்டிக்கழித்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சேவையை அங்கீகரித்த மக்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி நிச்சயம் நிறைவேற்றும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜனவரி 08 நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு:
மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ரயில்வே, வங்கி, பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும், ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நாளை (ஜனவரி 08) நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவிக்கின்றது. தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஜே.என்.யு. மாணவர்கள் மீதான ஏபிவிபி குண்டர்களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது:
முகமூடி அணிந்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் பெரும்திரளான குண்டர்கள், ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நுழைந்து, மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அய்ஷே கோஷ் மற்றும் மாணவ-மாணவிகள் மீது இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மாணவர் விடுதிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வன்முறை தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜே.என்.யு. மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலில் சம்மந்தப்பட்ட ஏபிவிபி சமூகவிரோதிகளை காலம்தாழ்த்தாமல் கைது செய்வதோடு, கடுமையான சட்டப்பிரிவுகளைக் கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்
பேட்டி .....
நெல்லை முபாரக்
திருச்சி நெல்லை முபாரக் பேட்டி (மாநிலத் தலைவர் எஸ்டிபிஐ கட்சி)
திருச்சி வன்முறையை தூண்ட கூடியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்
பாஜகவை சேர்ந்த எச் ராஜா எஸ் வி சேகர் அவரை ஏன் கைது செய்யவில்லை குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்த அதுதான் அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி
அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி:
அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான, ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டங்களை, பிற அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, நாடு முழுவதும் பரவலான போராட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதுதொடர்பாக நாடு முழுவதும் சுமார் 5000 நிகழ்ச்சிகளை நடத்தி, குடியுரிமை சட்டத்திருத்தம் என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி. சம்மந்தமான பா.ஜ.க. மற்றும் சங்பரிவார்களின் பொய் மற்றும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை முறியடித்து, அதன் மத அடிப்படையிலான மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை தகர்க்கவும், நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக எதிர்வரும் ஜனவரி 18 அன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி மிகப்பெரும் பேரணி நடத்தவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் இந்த பேரணியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம். மத்திய அரசு இச்சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மக்கள் விரோத சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:
அரசியலமைப்பின் உன்னத கொள்கைகளை, கட்டளைகளை அப்பட்டமாக மீறும் பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். அதனை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. வழக்கத்திற்கு மாறாக, மக்கள் தொகை கணெக்கெடுப்பின் போது இதுவரை கேட்கப்படாத பெற்றோரின் பிறப்பு, அவர்கள் பிறந்த இடம் உள்ளிட்ட கூடுதலான கேள்விகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு சம்பந்தமில்லாத அதிகப்படியான தகவல்கள் கேட்பது என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) என்ற கொடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ஏற்கனவே, நாடு முழுவதும் என்.பி.ஆர் தரவுகளின் அடிப்படையில் என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என்று நாடாளுமன்றத்திலும், பல்வேறு இடங்களிலும் மோடி அரசு கூறியுள்ளது.
அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி. கணக்கெடுப்பானது நாடு முழுவதும் நடைபெறும் என்று உள்துறை அமித் ஷா கூறியுள்ளார். அவ்வாறு என்.ஆர்.சி. நடைபெற்றால் ஆவணங்களை திரட்ட முடியாத கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை ரத்தாகும் போது, முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களை தவிர மற்ற அனைவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மீண்டும் தங்களது குடியுரிமையை பெறுவார்கள் என்பதிலிருந்தே மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. எத்தகைய அபாயகரமானது என்பது விளங்கும். இந்த மூன்று சட்ட நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
ஆகவே, தமிழக அரசு சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது எனவும், இச்சட்டங்களுக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்கனவே, அதிமுக துணையுடன் தான் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதிமுகவின் இந்த மக்கள் விரோத போக்கிற்கு ஆதரவான நிலைபாட்டை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கான எதிர்வினையை மக்கள் காட்டத் தொடங்கியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணித்ததன் காரணமாக, அதிமுகவிற்குள்ளே உட்கட்சி பூசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் விரோத மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக தொடருமானால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பினை அது சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து, சிஏஏ, என்.ஆர்.சி., மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.
போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்:
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், ஜமாத்தினர், மாணவர்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்து வருகின்றது. இதுவரை தமிழகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் விரோத சட்டங்களை இயற்றியுள்ள மத்திய அரசை விமர்சித்து பேசுபவர்கள் மீது பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவர்கள் சிறைகளில் அடைப்பக்கப்பட்டுள்ளனர். தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் அநீதியான முறையில் கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் அரசியல் சாசனத்தையும், பன்முகத்தன்மைமையும் பாதுகாப்பதற்காக குடிமக்கள் நடத்தும் போராட்டங்களை வழக்குகள், கைது நடவடிக்கைகள் மூலம் தடைபோட முயலும் அதிமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போராடுபவர்களையெல்லாம் சிறையில் அடைக்க தீர்மானித்தால் நாட்டின் சிறைச் சாலைகள் போதாது. போராட்டங்களை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு உந்துசக்தியாக மாறும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, பொதுமக்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிகையில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை:
தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக்குள் வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் கொண்டுவரப்படவில்லை. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என நாங்கள் குற்றஞ்சாட்டுகின்றோம். தேர்தல் ஆணையம் அதன் பொறுப்பை தட்டிக்கழித்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சேவையை அங்கீகரித்த மக்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர். எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி நிச்சயம் நிறைவேற்றும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஜனவரி 08 நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு:
மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ரயில்வே, வங்கி, பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும், ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நாளை (ஜனவரி 08) நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவிக்கின்றது. தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஜே.என்.யு. மாணவர்கள் மீதான ஏபிவிபி குண்டர்களின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது:
முகமூடி அணிந்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் பெரும்திரளான குண்டர்கள், ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நுழைந்து, மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அய்ஷே கோஷ் மற்றும் மாணவ-மாணவிகள் மீது இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மாணவர் விடுதிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த வன்முறை தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜே.என்.யு. மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலில் சம்மந்தப்பட்ட ஏபிவிபி சமூகவிரோதிகளை காலம்தாழ்த்தாமல் கைது செய்வதோடு, கடுமையான சட்டப்பிரிவுகளைக் கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்
பேட்டி .....
நெல்லை முபாரக்
*திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையிலான தொடர் உண்ணாவிரதம் போராட்டம் - 6வது நாளாக மனித மண்டைஓடு, எலும்புகளுடன், விவசாயிகளெல்லாம் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பதை உணர்த்த விவசாயி-யை பிணமாக்கி ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம்*
140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது, 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை
செய்துகொண்ட விவசாயிகளுக்கு
இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும், தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும், காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும், இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும், ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும், தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட கோரியும், 10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது இலாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் போராட்டம் திருச்சி ஜங்சன் ( விவசாயிகள் உடையில் (காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை) 07.01.2020 செவ்வாய்கிழமை இன்று 6வது நாளாக மனித மண்டைஓடு, எலும்புகளுடன், விவசாயி-யை பிணமாக்கி ஒப்பாரி வைக்க்கும் நூதன போராட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் நடைபெறும்,
திருச்சி மாநகர மாவட்ட தலைவர் மேகராஜன், மாநில செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார், மாநில பிரச்சாரகுழு உறுப்பினர் செல்லப்பெருமாள் (பிணவேடம் அணிந்தவர்), லால்குடி ஒன்றிய தலைவர் மண்டையோடு ராஜேந்திரன்(பிணவேடம் அணிந்தவர்), மாவட்ட. நிர்வாகி சேதுரப்பட்டி கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் பரமசிவம், வாழையூர் பொன்னுசாமி, உறையூர் பிரகாஷ், சிறுபத்துர் பெரியசாமி, ராஜகோபால் மற்றும் சங்க விவசாயிகள் கலந்துகொண்டனர்.
140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது, 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தற்கொலை
செய்துகொண்ட விவசாயிகளுக்கு
இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க கோரியும், உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும், தள்ளுபடி செய்ய மறுக்க கூடாது என்று கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும், நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட கோரியும், வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க கோரியும், காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பு திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற கோரியும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த கோரியும், இடுக்கி மாவட்டத்தை கேரளாவில் இருந்து எடுத்து தமிழகத்துடன் இணைத்து முல்லைபெரியார் பிரச்சனை, 58ம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோரியும், ஆலடியாறு டேமில் துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, தேனி, பெரியகுளம், மஞ்சள் ஆற்றை தாண்டி தேவன்கோட்டை வெள்ளோடு, திண்டுக்கல் எரியோடு கடவூர் வழியாக திருச்சி வையம்பட்டி பொன்னனையாறு டேமில் இணைக்க கோரியும், தமிழக எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை வீணாக அரபிக்கடலில் கலக்காமல் தடுப்பதும், ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் பவானி டேம்-க்கு திருப்பி விட கோரியும், 10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது இலாபகரமான விலையை விவசாயிகளுக்கு கொடுக்காமல், விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்கு பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்கு கொடுத்து ஆண்மை இழக்கவும், பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதை தடுக்க கோரியும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் போராட்டம் திருச்சி ஜங்சன் ( விவசாயிகள் உடையில் (காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை) 07.01.2020 செவ்வாய்கிழமை இன்று 6வது நாளாக மனித மண்டைஓடு, எலும்புகளுடன், விவசாயி-யை பிணமாக்கி ஒப்பாரி வைக்க்கும் நூதன போராட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் நடைபெறும்,
திருச்சி மாநகர மாவட்ட தலைவர் மேகராஜன், மாநில செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார், மாநில பிரச்சாரகுழு உறுப்பினர் செல்லப்பெருமாள் (பிணவேடம் அணிந்தவர்), லால்குடி ஒன்றிய தலைவர் மண்டையோடு ராஜேந்திரன்(பிணவேடம் அணிந்தவர்), மாவட்ட. நிர்வாகி சேதுரப்பட்டி கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் பரமசிவம், வாழையூர் பொன்னுசாமி, உறையூர் பிரகாஷ், சிறுபத்துர் பெரியசாமி, ராஜகோபால் மற்றும் சங்க விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Monday, January 06, 2020
On Monday, January 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்னும் சிறப்புக்குரிய இக்கோயிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்
வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் பகல் பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதியும், பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான ஜனவரி 5ஆம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதனைக் கடந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என்று கோஷமிட்டு ரங்கநாதரை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
சொர்க்கவாசல் நிகழ்ச்சியின் முதல்நாளான இன்று சொர்க்கவாசல் இரவு 10 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். நாளை முதல் 8 நாள்களுக்கு மதியம் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்னும் சிறப்புக்குரிய இக்கோயிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்
வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் பகல் பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதியும், பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான ஜனவரி 5ஆம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதனைக் கடந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என்று கோஷமிட்டு ரங்கநாதரை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
சொர்க்கவாசல் நிகழ்ச்சியின் முதல்நாளான இன்று சொர்க்கவாசல் இரவு 10 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். நாளை முதல் 8 நாள்களுக்கு மதியம் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Sunday, January 05, 2020
On Sunday, January 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொருட்காட்சியை திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "பாஜக ஆளும் மாநிலங்களுக்குகூட மத்திய அரசு முதலிட விருது வழங்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு இத்தகைய விருது கிடைத்திருப்பது தமிழ்நாடு மக்களுக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை மேற்கொள்கிறது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகளை வரும் பிப்ரவரி மாதத்தில் பூர்த்தி செய்கிறது.
இந்த ஆட்சி நான்கு நாள்கள் தாங்குமா, 40 நாள்கள் தாங்குமா, நான்கு மாதம் தாங்குமா? என்று கூறியவர்கள் மத்தியில் இந்த ஆட்சியை நான்கு ஆண்டுகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்திக் காட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாறுபட்ட முடிவை அளித்தார்கள்.
ஆனால் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் ஒன்பது தொகுதிகளில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். திருச்சியில் இந்தப் பொருட்காட்சி 45 நாள்கள் வரை நடைபெறுகிறது. இது முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகும்" என்றார்.
இந்த விழாவிற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பொருட்காட்சியில் சுற்றுலாத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வனத் துறை, அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொருட்காட்சியை திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "பாஜக ஆளும் மாநிலங்களுக்குகூட மத்திய அரசு முதலிட விருது வழங்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு இத்தகைய விருது கிடைத்திருப்பது தமிழ்நாடு மக்களுக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை மேற்கொள்கிறது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகளை வரும் பிப்ரவரி மாதத்தில் பூர்த்தி செய்கிறது.
இந்த ஆட்சி நான்கு நாள்கள் தாங்குமா, 40 நாள்கள் தாங்குமா, நான்கு மாதம் தாங்குமா? என்று கூறியவர்கள் மத்தியில் இந்த ஆட்சியை நான்கு ஆண்டுகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்திக் காட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாறுபட்ட முடிவை அளித்தார்கள்.
ஆனால் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் ஒன்பது தொகுதிகளில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். திருச்சியில் இந்தப் பொருட்காட்சி 45 நாள்கள் வரை நடைபெறுகிறது. இது முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகும்" என்றார்.
இந்த விழாவிற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பொருட்காட்சியில் சுற்றுலாத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வனத் துறை, அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
TRIVANDRUM ACTIVITIES CBOA Trivandrum Region today donated 40 bottles of sanitizers and 1500 masks to Trivandrum District City ...
-
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, பாரதிநகர், ராஜீவ்நகர், பொன்னான்டி நகர் உள்ளிட்ட 22 இடங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ச...
-
ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றி வரும் பிரிண்டிங் ஆலைகளை மூட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வல...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து தமிழகத்த...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 ...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் ம...










