Monday, August 25, 2014
நயன்தாரா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவிடம் தன் வாழ்க்கையையே பறிகொடுத்தது, தற்போது ஆர்யாவுடன் காதல் கிசுகிசு என சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நயன்தாரா. இவ்வளுவு சர்ச்சைகள் பின் தொடர்ந்தும் கூட, நயன்தாராவிற்கு மார்க்கெட் உயர்ந்துகொண்டே தான் செல்கின்றது.
ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் நயன்தாரா. பெரிய ஹீரோக்களுடன் மட்டும் நடிக்காமல் ‘அனாமிகா’ போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிகின்றார். இதற்கு காரணம் பாலிவுட் நடிகை வித்யா பாலனை முந்த வேண்டும் என்பதே. இதற்காக சிறிய ஹீரோக்களுடன் நடித்தாலும் பரவாயில்லை, என ஒப்புக்கொள்கின்றார். அப்படி ஒப்புக்கொண்ட படம் தான், அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படம். இப்படம் திகில் நிறைந்த பேய் படமாம். இதில் முழுக்க முழுக்க நயன்தாராவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரமாம். இந்த படத்தில் ஒரு கைக்குழந்தைக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
தற்பொழுது நயன்தாரா இந்த படத்தில் கர்பிணிப்பெண்ணாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் இளம் இயக்குனர் அஷ்வின் சரவணன் தானாம். கர்ப்பிணி பெண்ணாக நடிப்பதன் மூலம், ரசிகர்களின் அனுதாபம் அதிகமாக கிடைக்கும் என கூறி நயன்தாராவை கர்ப்பமாக்க முடிவு செய்துள்ளார். ஒரு புதிய இயக்குனர் படத்தில், நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும், கர்ப்பிணி பெண்ணாகவும் நடிக்க சம்மதித்துள்ளது திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment