Saturday, December 27, 2014

திருமங்கலம் அருகே உள்ளது தொட்டியபட்டி கிராமம்.அங்கு சுமார் 300 ஆண்டு பழமையான பெருமாள்–பூதேவி– ஸ்ரீதேவி கோவில் உள்ளது. கோவில் முன்பு பள்ளிக்கூடம் இருந்து வந்தது. பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதும், அங்கு சாவடி கட்டப்பட்டது. சாவடி கட்டப்படும் போது வேப்பமரக்கன்று ஒன்று நடப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட வேப்பமரம் நன்றாக வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. அதில் கடந்த 15 நாட்களுக்கு மேல் பால் வடிய தொடங்கியது. அதைப்பார்த்த கிராம மக்கள் அதிசயமாக பார்த்தனர். தொடர்ந்து பால் நிற்காமல் வடிந்து கொண்டே உள்ளது. வடியும் பாலை சிலர் ருசித்து பார்த்தனர். கசப்பும், இனிப்பும் கலந்த நிலையில் இருந்துள்ளது.
உடனே கிராமமக்கள் மரத்திற்கு மஞ்சள் துணி சுற்றி பூ மற்றும் மஞ்சள் தடவி சூடம் ஏற்றி வழிபடத் தொடங்கி விட்டனர். மேலும் தொட்டிலும் கட்டி வேண்டுதல் வைத்து வணங்கி வருகின்றனர்.
இது குறித்து கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்னண் (வயது75). விவசாயி கூறியதாவது:–
மரம் வைத்து 20 வருடம் இருக்கும். கடந்த 15 நாட்களுக்கு மேல் மரத்தின் இரண்டு கொப்புகளுக்கு இடையே பால் போன்ற திரவம் தொடர்ந்து வடிந்து கொண்டுள்ளது. கிராமத்தில் வேப்ப மரங்கள் நிறைய உள்ளது. அதில் பெருமாள் கோவில் முன்பு உள்ள மரத்தில் மட்டும் பால் வடிகிறது. எங்களுக்கு அதிசயமாக உள்ளது. எனவே மரத்தை சுற்றிபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, திரிசூலம் வைத்து வணங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment