Saturday, December 27, 2014

திருமங்கலம் அருகே உள்ளது தொட்டியபட்டி கிராமம்.அங்கு சுமார் 300 ஆண்டு பழமையான பெருமாள்–பூதேவி– ஸ்ரீதேவி கோவில் உள்ளது. கோவில் முன்பு பள்ளிக்கூடம் இருந்து வந்தது. பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதும், அங்கு சாவடி கட்டப்பட்டது. சாவடி கட்டப்படும் போது வேப்பமரக்கன்று ஒன்று நடப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட வேப்பமரம் நன்றாக வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. அதில் கடந்த 15 நாட்களுக்கு மேல் பால் வடிய தொடங்கியது. அதைப்பார்த்த கிராம மக்கள் அதிசயமாக பார்த்தனர். தொடர்ந்து பால் நிற்காமல் வடிந்து கொண்டே உள்ளது. வடியும் பாலை சிலர் ருசித்து பார்த்தனர். கசப்பும், இனிப்பும் கலந்த நிலையில் இருந்துள்ளது.
உடனே கிராமமக்கள் மரத்திற்கு மஞ்சள் துணி சுற்றி பூ மற்றும் மஞ்சள் தடவி சூடம் ஏற்றி வழிபடத் தொடங்கி விட்டனர். மேலும் தொட்டிலும் கட்டி வேண்டுதல் வைத்து வணங்கி வருகின்றனர்.
இது குறித்து கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்னண் (வயது75). விவசாயி கூறியதாவது:–
மரம் வைத்து 20 வருடம் இருக்கும். கடந்த 15 நாட்களுக்கு மேல் மரத்தின் இரண்டு கொப்புகளுக்கு இடையே பால் போன்ற திரவம் தொடர்ந்து வடிந்து கொண்டுள்ளது. கிராமத்தில் வேப்ப மரங்கள் நிறைய உள்ளது. அதில் பெருமாள் கோவில் முன்பு உள்ள மரத்தில் மட்டும் பால் வடிகிறது. எங்களுக்கு அதிசயமாக உள்ளது. எனவே மரத்தை சுற்றிபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, திரிசூலம் வைத்து வணங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
0 comments:
Post a Comment