Saturday, December 27, 2014

திருமங்கலம் அருகே உள்ளது தொட்டியபட்டி கிராமம்.அங்கு சுமார் 300 ஆண்டு பழமையான பெருமாள்–பூதேவி– ஸ்ரீதேவி கோவில் உள்ளது. கோவில் முன்பு பள்ளிக்கூடம் இருந்து வந்தது. பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதும், அங்கு சாவடி கட்டப்பட்டது. சாவடி கட்டப்படும் போது வேப்பமரக்கன்று ஒன்று நடப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட வேப்பமரம் நன்றாக வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. அதில் கடந்த 15 நாட்களுக்கு மேல் பால் வடிய தொடங்கியது. அதைப்பார்த்த கிராம மக்கள் அதிசயமாக பார்த்தனர். தொடர்ந்து பால் நிற்காமல் வடிந்து கொண்டே உள்ளது. வடியும் பாலை சிலர் ருசித்து பார்த்தனர். கசப்பும், இனிப்பும் கலந்த நிலையில் இருந்துள்ளது.
உடனே கிராமமக்கள் மரத்திற்கு மஞ்சள் துணி சுற்றி பூ மற்றும் மஞ்சள் தடவி சூடம் ஏற்றி வழிபடத் தொடங்கி விட்டனர். மேலும் தொட்டிலும் கட்டி வேண்டுதல் வைத்து வணங்கி வருகின்றனர்.
இது குறித்து கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்னண் (வயது75). விவசாயி கூறியதாவது:–
மரம் வைத்து 20 வருடம் இருக்கும். கடந்த 15 நாட்களுக்கு மேல் மரத்தின் இரண்டு கொப்புகளுக்கு இடையே பால் போன்ற திரவம் தொடர்ந்து வடிந்து கொண்டுள்ளது. கிராமத்தில் வேப்ப மரங்கள் நிறைய உள்ளது. அதில் பெருமாள் கோவில் முன்பு உள்ள மரத்தில் மட்டும் பால் வடிகிறது. எங்களுக்கு அதிசயமாக உள்ளது. எனவே மரத்தை சுற்றிபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, திரிசூலம் வைத்து வணங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment