Saturday, December 27, 2014

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.
இந்த ஜல்லிக்கட்டு, தைப்பொங்கலின்போது நடைபெறும் என்பதால் இந்த ஆண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாலமேட்டில் இன்று அமைதி ஊர்வலம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. பாலமேடு கிராம மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி, கிராம மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் இணைந்து ஊர்வலத்தை நடத்தப்போவதாக தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஊர்வலத்திற்கு போலீசார் ‘திடீர்’ தடை விதித்தனர்.
இதனால் பாலமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காந்த சொரூபன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அலங்காநல்லூரிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 20.11.16 முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம .; டு . ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்து...
0 comments:
Post a Comment