Saturday, December 27, 2014

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.
இந்த ஜல்லிக்கட்டு, தைப்பொங்கலின்போது நடைபெறும் என்பதால் இந்த ஆண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாலமேட்டில் இன்று அமைதி ஊர்வலம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. பாலமேடு கிராம மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி, கிராம மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் இணைந்து ஊர்வலத்தை நடத்தப்போவதாக தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஊர்வலத்திற்கு போலீசார் ‘திடீர்’ தடை விதித்தனர்.
இதனால் பாலமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காந்த சொரூபன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அலங்காநல்லூரிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
0 comments:
Post a Comment