Saturday, December 20, 2014

கவுரவ கொலை புகாரில் இறந்த பெண்ணின் தந்தை உள்பட 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
கவுர கொலை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, புலிப்பட்டியை சேர்ந்தவர் வீரணன். இவரது மகள் விமலாதேவி. வீரனிடம் டிரைவராக வேலை பார்த்து வந்த திலீப்குமாரும், விமலா தேவியும் காதலித்தனர். வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தனது மகளை கடத்திச் சென்றதாக திலீப்குமார் மீது உசிலம்பட்டி போலீசில் வீரன் புகார் செய்தார்.
போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
அப்போது, விமலாதேவி தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து அவரை பெற்றோருடன் செல்ல கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் 2.10.2014 அன்று விமலாதேவி இறந்தார். அவர், தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விமலாதேவி கவுரவ கொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் திலீப்குமார், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
உத்தரவு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விமலாதேவி கவுரவ கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விமலாதேவியின் தந்தை வீரணன், தாயார் தேனம்மாள், உறவினர் வத்தலக்குண்டு முருகன், தங்கபாண்டியம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் செங்குட்டரசன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். முதல் 15 நாட்களுக்கு சென்னையில் உள்ள சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், அதன்பின்பு கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை மதுரையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment