Wednesday, January 28, 2015
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 13–ந்தேதி நடைபெற உள்ளது.
இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில்
சுப்பிரமணியன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இவருக்கு திருச்சி மாவட்டத்தில் 3 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளது. இங்கு
படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு நவீன
கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க சென்னை பிரிசிஷன் இன்போடெக் பிரைவேட் லிமிடெட்
என்ற நிறுவனத்துடன் இக்கல்லூரி
ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதன்படி மேற்கண்ட நிறுவனம் மாணவ–மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி
அளித்தது. பயிற்சி முடித்தபின் ஒப்பந்தத்தின்படி சுப்பிரமணியன்
அந்நிறுவனத்துக்கு பயிற்சி கட்டணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக
கூறப்படுகிறது.
இது குறித்து அந்த நிறுவனம் பா.ஜ.க. வேட்பாளர் சுப்பிரமணியம், கல்லூரி முதல்வர்கள் கண்ணன், சீத்தாராமன், கிறிஸ்துராஜ் ஆகியோர் மீது திருச்சி மாநகர் குற்றப்பிரிவில் புகார் செய்தது. போலீசார் இவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு சுப்பிரமணியம் மற்றும் கல்லூரி முதல்வர்கள் 3 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் முன் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவித்து பிரிசிஷன் கம்ப்யூட்டர் நிறுவன பொதுமேலாளர் பாஸ்கர் என்பவரும் மனு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
நாங்கள் சுப்பிரமணியத்துக்கு சொந்தமான 3 கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி கொடுத்தோம். அதன்படி எங்களுக்கு கொடுக்க வேண்டிய 1 கோடியே 13 லட்சத்தை தராமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று மாலை 4 மணிக்கு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. அதன்பிறகே பா.ஜ.க. வேட்பாளருக்கு முன் ஜாமீன் கிடைக்குமா என்பது தெரிய வரும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சுப்பிரமணியன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில் இந்த வழக்கு இவருக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என கருதப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment