Monday, August 17, 2015

On Monday, August 17, 2015 by Unknown in ,    
சிவகாசியில் வெளி மாநில ஆர்டர் குறைந்ததால் பட்டாசு விற்பனை மந்தம்: வியாபாரிகள் கவலைசிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் 800–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தீபாவளி சீசன் முடிந்ததும் சில வாரங்களில் புது வருட பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி பணிகள் மிகவும் மந்தமாக உள்ளது. இதுகுறித்து சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:–
மார்ச் முதல் மே மாதம் வரை பட்டாசு ஆலைகளின் பிரதிநிதிகள், ஏஜெண்டுகள் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேம் போன்ற வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆர்டர்களை பெற்று பட்டாசு உற்பத்தி பணியினை தீவிரப்படுத்துவார்கள். இதன் உற்பத்தி ஜூலை மாதம் வரை நீடிக்கும்.
உற்பத்தி செய்த பட்டாசுகள் 70 சதவீதம் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படும். மற்ற 30 சதவீத பட்டாசுகள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் உள்நாட்டில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். இதனால் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 400–க்கும் அதிகமான பட்டாசு கடைகள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திறந்து வைப்பார்கள்.
ஆனால் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வெளி மாநில வியாபாரிகள் வருகை தராததால் உள்ளூர் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். சென்ற தீபாவளி சீசனில் எதிர்பார்த்த வியாபாரம் இருந்ததால் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது. விலையும் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது ஏராளமான பட்டாசுகள் ஆலைகளிலும், பட்டாசுகள் இருப்பு அதிகம் வைத்துள்ளதால் விலை உயர்வுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. தள்ளுபடியும் அதிகமாகலாம். இருந்தாலும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: