Monday, August 17, 2015
சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் 800–க்கும்
மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம்
தொழிலாளர்கள் நேரடியாக வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தீபாவளி சீசன் முடிந்ததும் சில வாரங்களில் புது வருட பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி பணிகள் மிகவும் மந்தமாக உள்ளது. இதுகுறித்து சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:–
மார்ச் முதல் மே மாதம் வரை பட்டாசு ஆலைகளின் பிரதிநிதிகள், ஏஜெண்டுகள் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேம் போன்ற வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆர்டர்களை பெற்று பட்டாசு உற்பத்தி பணியினை தீவிரப்படுத்துவார்கள். இதன் உற்பத்தி ஜூலை மாதம் வரை நீடிக்கும்.
உற்பத்தி செய்த பட்டாசுகள் 70 சதவீதம் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படும். மற்ற 30 சதவீத பட்டாசுகள் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் உள்நாட்டில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். இதனால் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 400–க்கும் அதிகமான பட்டாசு கடைகள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திறந்து வைப்பார்கள்.
ஆனால் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வெளி மாநில வியாபாரிகள் வருகை தராததால் உள்ளூர் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். சென்ற தீபாவளி சீசனில் எதிர்பார்த்த வியாபாரம் இருந்ததால் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது. விலையும் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது ஏராளமான பட்டாசுகள் ஆலைகளிலும், பட்டாசுகள் இருப்பு அதிகம் வைத்துள்ளதால் விலை உயர்வுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. தள்ளுபடியும் அதிகமாகலாம். இருந்தாலும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment