Monday, August 17, 2015
தமிழ் சினிமா உலகில் நாட்டுப்புற பாடல்களுக்கு என்று தனித்த ஒரு பாதையை தொடங்கி வைத்தவர் பரவை முனியம்மா "மதுரை வீரன் தானே " என்ற பாடல் பட்டி தொட்டிகள் எல்லாம் பட்டையை கிளப்பியதுஅத்தகைய குரலுக்கு சொந்தக்காரர் தற்போது மதுரை காளவாசல் தனியார் மருத்துவமனையில் மூச்சு திணறலு க்காக சிகிச்சை பெற்றார் தமிழ் நியூஸ் டிவி பிரத்யேக பேட்டிக்காக அவரை சந்தித்தோம்தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார்காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரிலும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன தற்போது 76 வயதாகும் இவரால் முன்னைப் போல பாடுவதற்கு உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றும் ஆனால் தொடர்ந்து நடிப்பேன் என்றார்
கடந்த 30 வருடங்களாக நாட்டுப்புற பாடல்களில் கோலோச்சிய இவர் திரை உலகிலும் முத்திரை பதித்தார் தற்போதோ உடல் நிலை சரியில்லாததால் பாட முடியாத சூழலிலும் பல்வேறு நினைவுகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்
எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களை தாம் பாடி உள்ளதாகவும் தற்போது பல புதிய பாடகர்கள் திரையில் நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தி வருவதாகவும் அவர்களை தாம் வாழ்த்தி வரவேற்பதாகவும் கூறினார்
1988 -90 களில் பாட வந்த தம்மால் 76 படங்களுக்கு மேல் நடித்து இருப்பதகவும் தம்முடைய ஆசான் பெருமாள் கோனாரின் உதவியால் நாட்டுப்புற பாடல்களை கற்று தேர்ந்ததாகவும் குறிப்பிட்டார்
கணவர் வெள்ளைச்சாமி மறைந்ததற்கு பிறகு மதுரையிலே இருப்பதால் மாரி படத்திற்கு வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை இருந்ததாக குறிப்பிட்டார் 1 மணி நேரம் கூட இடைவெளி விடாமல் பாட முடிந்த தம்மால் தற்போது மருத்துவரின் ஆலோசனைப் படி பப்ட முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டார்
நடிகர்கள் விஷால் ,சிவகர்த்திகேயன் ,தனுஷ் ஆகியோர் தமக்கு உதவிகள் செய்து வருவதாக குறிப்பிட்டார்
விரைவில் அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என நமது விருப்பத்தை தெரிவித்து நெகிழ்ச்சியோடு அவரிடம் இருந்து விடை பெற்றோம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment