Wednesday, March 04, 2015

On Wednesday, March 04, 2015 by Tamilnewstv in    
         திருச்சி எஸ் ஆர்  எம் யூ திருச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகே ஆர்பாட்டம் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது  

On Wednesday, March 04, 2015 by Unknown in ,    
உசிலம்பட்டி அருகே ஆலய ஆக்கிரமிப்பை அகற்ற தடை: 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
உசிலம்பட்டி அருகே கணவாய் பகுதியில் வனத்துறை இடத்தில் உள்ள தேவாலயத்தை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து கிறிஸ்தவர்கள்
செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி - தேனி சாலையில் கணவாய் பகுதியில் வனத்துறை இடத்தில் சிறிய மாதா சிலை வைக்கப்பட்டு, பின்னர், சிறிய ஆலயமாக கட்டி வழிபட்டு
வந்தனர். மேலும், தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி வந்தனர். மலைப்பகுதியில் சிலுவைகளையும் நட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
அருகிலுள்ள கிராம பொதுமக்கள் வழக்குத் தொடர்ந்தனர். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தை அகற்றுமாறு
நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருப்பதால், அதற்கான உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறு அதிகாரிகளை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் 15 நாள்களுக்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உசிலம்பட்டி  வட்டாட்சியருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
விவரம் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கலைந்து சென்றனர்.
உத்தமபாளையம்: இந்நிலையில், தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி ஆர்.சி. சபையைச் சேர்ந்தவர்கள் 
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஏடி.எஸ்.பி. உமா, டி.எஸ்.பி. கண்ணன்,
கோட்டாட்சியர் பார்த்திபன், வட்டாட்சியர் சேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
வழக்குப்பதிவு: இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி தேசிய நெடுஞ்சாலையில்  மறியலில் ஈடுபட்டதாக உத்தமபாளையம் ஆர்.சி தேவாலய போதகர் பால்ராஜ்,
கம்பத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம், சற்குணம், இன்பராஜ் உள்பட 140 பேர் மீது உத்தமபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போடி: இதேபோல், போடி அருகே டி.சிந்தலைச்சேரியிலும் அங்குள்ள தேவாலயத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   
  இதனால் போடி-சின்னமனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தேவாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்
பொறுப்பு வகிக்கும் டவுன் இன்ஸ்பெக்டர் பாலகுரு, அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயராணி மற்றும் போலீஸார் சாலை மறியலில்
ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்
On Wednesday, March 04, 2015 by Unknown in ,    
நித்தியானந்தாவின் ஒழுக்கமற்ற நடவடிக்கையால் மடத்தில் இருந்து வெளியேற்றினேன்: கோர்ட்டில் மதுரை ஆதீனம் விளக்கம்
நித்தியானந்தாவின் ஒழுக்கமற்ற நடவடிக்கை களால் மடத்தில் இருந்து வெளியேற்றினேன் என்று மதுரை ஆதீனம் கோர்ட்டில் பரபரப்பு விளக்கம் கொடுத்துள் ளார்.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக கடந்த 2012–ம் ஆண்டு நித்தியானந்தா நியமிக்கப் பட்டார். இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த மணிவாசகம், கும்பகோணம் தியாகராஜன் ஆகியோர் மதுரை 1வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை ஆதீனம் (அருணகிரிநாதர்), நித்தியானந்தா ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நிலுவை யில் இருந்தபோது மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்தியானந்தாவை நீக்கி விட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். மேலும் இது தொடர்பான வழக்கை தொடர தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் கோர்ட்டில் தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது நித்தியானந்தா தன்னை மதுரை ஆதீனமடத்தின் 293–வது மடாதிபதியாக குறிப்பிட்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “எனக்கும், அருணகிரி நாதருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் தனித்தனியாக வழக்கை சந்தித்து வரு கிறோம். வழக்கில் நான் பாதிக்கப்பட்டவன்.
எனவே வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பு கிறேன். எனவே இந்த வழக் கில் அருணகிரிநாதரை 3–வது எதிர்மனுதாரராக சேர்த்து, வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்“ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசா ரணை நீதிபதி இளவழகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில் கூறி யிருப்பதாவது:–
இந்த வழக்கின் மனு தாரர்களால் மதுரை ஆதீனத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யமுடியாது. பாரம்பரியமிக்க மடத்தின் ஆதீனமாக இருப்பதால் சமயத்தை பரப்பவும், பூஜைகள் செய்யவும், மடத்தின் பிரதிநிதிகள், அடுத்த மடாதிபதி ஆகியோரை நியமனம் செய்யவும் ஆதீனத்திற்கு முழு அதிகாரம் உண்டு. மடத்தில் தங்கி பூஜைகள் செய்யும் தம்பிரான் இளைய ஆதீனமாக உயர்த்தப்பட தகுதியானவர். வெளி நபர் மற்றும் சைவ சமயத்தை சாராதவர்கள் தம்பிரானாக இருக்கத் தகுதியற்றவர்கள்.
ஆனால், நித்யானந்தா தம்பிரான் அல்ல. அவர் மதுரை ஆதீனத்தின் பக்தர் அல்ல. அவர், நித்யானந்தா தீயான பீடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
நித்யானந்தா என்னிடம் ஆசி பெறவும், திருஞான சம்பந்தர் பற்றி தெரிந்து கொள்ளவும் தான் மடத்துக்கு வந்தார்.
ஆதீன மடத்தின் தத்துவம், கொள்கையை அவரால் ஏற்க முடியவில்லை. இங்கு தங்கியிருந்த சில நாட்களில் பாரம்பரியமான மதுரை ஆதீனத்தின் பெயரை கெடுக்க முயன்றார். ஆதீன தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டார். இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மடத்தில் தங்காதது, ஆதீனத்தின் அனுமதியின்றி வெளியே சென்றது, தலையை மொட்டையடிக்காதது போன்ற காரியங்களை உற்று கவனித்து வந்தேன். அவரது நடவடிக்கைகள் ஆதீனத்திற்கு இணையாக வும், அதைவிட மேலானதாக வும் இருந்தன.
ஆதீனத்திற்கு இணையாக உட்கார்ந்தார். அவர் தன்னை கடவுளாக கூறிக்கொண்டு மடத்தில் பூஜைகள் நடை பெறுவதை வெறுத்தார். தன்னைத்தானே 293வது ஆதீனமாக அறிவிக்கத் தொடங்கினார். இந்த சூழலில் நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. நித்யானந்தாவின் ஒழுக்க மற்ற, சட்ட விரோத காரியங் களை பார்த்த பின்னர் கண்காணிப்பிலிருந்து என்னை விலக்கிக் கொண் டேன். பின்னர் கடந்த 19.10.2012 அன்று அவரை மடத்திலிருந்து வெளியேற்றி னேன்.
அவர் மடத்தில் தங்கி இருந்த குறைவான நாட் களிலேயே ஆதீனத்தின் பெயரை பயன்படுத்தி பல குற்றச் செயல்களில் ஈடுபட்டார், ஆதீனத்தின் கையெழுத்தை போலியாக போட்டார்.
ஆவணங்களில் திருட்டுத் தனமாகவும், சட்ட விரோதமாகவும் மோசடி செய்து நித்யானந்தா என்னிடம் கையெழுத்து வாங்கினார். அந்த ஆவணங் கள் ஆதீனத்தை கட்டுப் படுத்தாது.
தன்னை மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக அவர் அறி வித்தது செல்லாது. அவர் பலனடையும் விதத்தில் கோர்ட்டு உத்தரவிடக் கூடாது. அறக்கட்டளை ஒப்பந்தத்தில் நித்யானந்தா வின் ஆட்கள் மிரட்டி கையெழுத்து பெற்றனர். எனவே நித்யானந்தாவை கோர்ட்டு தண்டிக்க வேண்டும்.
எனது உயிருக்கு நித்யானந்தாவால் ஆபத்து உள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். அந்த விசாரணை நிலுவையில் உள்ளது. நித்யானந்தாவும் இளைய ஆதீனமாக இல்லை என அவரது இணைய தளத்தில் தெரிவித்துள் ளார். எனவே, இந்த வழக்கை விசாரிக்கத் தேவை யில்லை. தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1–ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
On Wednesday, March 04, 2015 by Tamilnewstv   

On Wednesday, March 04, 2015 by Tamilnewstv