Showing posts with label கர்நாடகா. Show all posts
Showing posts with label கர்நாடகா. Show all posts

Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    

       தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கன்னட திரையுலகினர் நேற்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய ரசிகரை நடிகர் சிவராஜ்குமார் வன்மையாக கண்டித்தார்.

பெங்களூருவில் உள்ள சிவானந்தா சதுக்கத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், உபேந்திரா, ஜக்கேஷ், தேவராஜ், நடிகைகள் பாரதி விஷ்ணுவர்தன், மாளவிகா, சஞ்சனா, ராகினி திவேதி, சுருதி உட்பட பலர் பங்கேற்றனர்

                                                           கர்நாடக.   முதல்வர் சித்தராமை யாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய நடிகர், நடிகைகள், கர்நாடகாவுக்குச் சொந்த மான காவிரியை அபகரிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா முயல்வதாக ஆவேசக் குரல் எழுப்பினர்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளி யான ‘நிமிர்ந்து நில்' தமிழ் திரைப் படத்தில் நடித்த நடிகை ராகினி திவேதி, ‘‘தமிழகத்துக்கு ஒரு போதும் காவிரி நீர் தர முடியாது’’ என கூறினார்.

பின்னர் பேசிய நடிகர் சிவராஜ் குமார், ‘‘கர்நாடகா வாழ் தமிழர்கள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும். இங்கு நடிகர்கள் சுதீப் வரவில்லை, அம்பரீஷ் வரவில்லை என்கிறார்கள். கன்னட திரையு லகைச் சேர்ந்த ஒருவர் வந்தாலே, மற்றவர்கள் வந்ததற்கு சமம் தான். எனவே திரையுலகினரைக் குறை சொல்லாமல், ஆள் பவர்களைத் தட்டிக்கேளுங்கள். பங்காரப்பா முதல்வராக இருந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல் கர்நாடகாவின் நன்மைக்காக முடிவெடுத்தார்’’ என பேசினார்.

அப்போது ரசிகர் ஒருவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவராஜ்குமார், ‘‘எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு பெண் என்பவர் எப்போதும் பெண்தான். எனவே எந்தப் பெண்ணையும் தரக்குறைவாக பேசக்கூடாது. தமிழகம் நமது அண்டை மாநிலம் தான். அண்டை நாடு கிடையாது. இந்தியர்கள் என்ற மனப்பான்மை அனைவருக்கும் வேண்டும். கர்நாடகாவைப் போன்றே தமிழகத்திலும் விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர்.

ஒரு விவசாயியின் வலியை மற்றொரு விவசாயால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். எனவே தற்போது உள்ள நீரை பகிர்ந்து கொள்வது குறித்து இரு மாநில விவசாயிகளும் இணைந்து பேசி தீர்வு காண வேண்டும். இதில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது’’ என்றார்

Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    


பெங்களூரு: கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்திற்கு, அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல கன்னட அமைப்புகள் பேரணி, மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு என பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கன்னட ஜக்குருதி வேதிக என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் 200க்கும் தமிழக முதல்வர் ஜெ., போஸ்டருடன் வந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எந்த வாகனத்தையும் அவர்கள் விடவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து கர்நாடகா செல்ல வேண்டிய வாகனங்கள், தமிழக எல்லைலேயே போலீசார் நிறுத்தி வருகின்றனர். எந்த வாகனத்தையும் அதற்கு மேல் அனுமதிக்கவில்லை. கர்நாடகாவிலிருந்து எந்த வாகனமும் தமிழகத்திற்குள் வரவில்லை. தமிழகத்திற்குள் வர வேண்டிய ஒரு சில லாரிகள் மாற்றுப்பாதையில் வருகின்றன. கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தமிழக சேனல்கள் ஒளிபரப்பை கேபிள் டிவி சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

காவிரி நீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும். இல்லையென்றால், 1991ல் நடந்த கலவரம் மீண்டும் நடக்கும். தமிழர்களின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் புகுந்து தாக்குதல் நடத்த வேண்டும் என கர்நாடகா ரக்ஷன வேதிகா அமைப்பு டிவி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கோயம்பேட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பஸ்களும் கிருஷ்ணகிரி வரை தான் செல்வதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநில அரசிற்கு சொந்தமான பஸ்கள் கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து வர வேண்டிய காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

On Friday, September 09, 2016 by Unknown in    

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப் பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படுகிறது. இதில் பாஜக, மஜத உட்பட ஆயிரத்துக்கும் மேற் பட்ட கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற் கின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீரும் செவ்வாய் நள்ளிரவு காவிரியில் திறந்துவிடப்பட்டது. தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து 4-வது நாளாக நேற்றும் மண்டியா, மைசூரு ஆகிய‌ மாவட்டங்களில் கன்னட அமைப்பினரும் விவசாய அமைப்பினரும் போராட்ட‌த்தில் ஈடுபட்டனர். பெங்களூரு- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்த போராட்டக்காரர்கள் சாலையிலே சமைத்து உண்ணும் போராட்டத்தை நடத்தினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    

கர்நாடகாவில் நாளை பந்த் !

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படுவதைக் கண்டித்து கர்நாடக மாநிலத்தில் நாளை முழு அடைப்பு. கர்நாடக விவசாயிகளும் கன்னட அமைப்பினரும் இதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டம். தமிழ் டிவி சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

           உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க தமிழகத்துக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 10,000 கன அடி தண்ணீர், கபினி அணையில் இருந்து 5000 கன அடி தண்ணீர் என மொத்தம் 15,000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.      தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

மைசூர், மாண்டியா பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரங்களில் பந்தலிட்டு சமைத்து சாலையில் அமர்ந்து சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கே.ஆர்.எஸ். அணைப் பகுதியில் பிரம்மாண்ட பேரணிக்கு கன்னட ரக்‌ஷன வேதிக, ஜெய் கர்நாடகா சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

        பேருந்துகள் நிறுத்தம்:

ஒசூரில் தமிழக - கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள் எல்லையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல் கர்நாடகாவிலிருந்தும் தமிழகத்துக்குள் பேருந்துகள், வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்

    தமிழகத்திலிருந்து வந்த பேருந்துகளை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி எதிர்ப்பு வாசகங்களை பதிவு செய்யும் கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் | படம்: கே.முரளிகுமார்.

மாநில அரசுக்கு கண்டனம்..

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு மாநில அரசே காரணம் எனக் கூறி பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் சித்தராமைய்யா உருவ பொம்மையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக பாஜக பிரமுகரும் மேலவை எதிர்க்கட்சித் தலைவருமான ஈஸ்வரப்பா கூறும்போது, "கர்நாடக அரசு காவிரி விவகாரத்தை திறமையாக கையாளவில்லை. இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி எஸ் நாரிமனும் சிறப்பாக செயல்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் யாருடைய ஒப்புதலைப் பெற்று அவர் 10,000 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்துவிடுவதாக ஒப்புதல் அளித்தார் என்பது தெரியவில்லை. காவிரி வழக்கில் கர்நாடகா சார்பில் இனியும் நாரிமன் வாதிட அனுமதிக்கக் கூடாது" என்றார்.

தமிழர்கள் பகுதியில் பாதுகாப்பு:

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சிவாஜி நகர், விவேக் நகர், அல்சூர், கிழக்கு பெங்களூரூ முழுவதும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாண்டியா, மைசூரு திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடல் நிறுத்தப்பட்டன. பெங்களூரு நகருக்குள் மட்டும் ஓரிரண்டு அரங்குகளில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அதுவும் இன்றைக்கு நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.

முதல்வர், உள்துறை அமைச்சர் வேண்டுகோள்:

மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், காவிரி விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது, மக்கள் வன்முறையை விடுத்து அமைதி காக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்

Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்த்துள்ளன.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி மண்டியா, மைசூரு, சாமராஜ்பேட்டை, உப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டோர் செய்யப்பட்டனர். மண்டியா, மைசூரு, சாமராஜ்பேட் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மண்டியாவில் இன்று முழு அடைப்பு: இதனிடையே, மண்டியாவில் காவிரி நலன் பாதுகாப்புக்குழு கூட்டம் முன்னாள் எம்பி ஜி.மாதேகெளடா தலைமையில் நடந்தது. இதில், செவ்வாய்க்கிழமை மண்டியா மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
9-இல் கர்நாடக முழு அடைப்பு: பெங்களூரில் திங்கள்கிழமை கன்னட சலுவளி கட்சித்தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடிய கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர், செப்.9-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
மேலும், பெங்களூரில் உள்ள ரிச்மண்ட் சாலையில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். டவுன்ஹாலில் கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் அதன் தலைவர் டி.ஏ.நாராயணகெளடா தலைமையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தி, உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினர்.
தீர்ப்பு குறித்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியது: தீர்ப்பு நகல் செவ்வாய்க்கிழமை காலைக்குள் கிடைத்துவிடும். காலை 10 மணிக்கு சட்டவல்லுநர்களின் ஆலோசனை பெறப்படும். பின்னர், விதானசெளதாவில் மாலை 3 மணிக்கு அனைத்துக்கட்சிக்கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்

Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    



உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம், ஜெயலலிதா வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த 3-ம் தேதி பரிந்துரை செய்த‌து. அவர் தவிர‌, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டிருந்த‌து.
மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தலைமையிலான சட்ட அமைச்சகம் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. நீதிபதிகளாக பரிந்துரை செய்யப் பட்டுள்ள 4 பேரின் ஆவணங்களும் கோப்புகளும் சரி பார்க்கும் பணிகள் நேற்றுமுன்தினம் வரை நடைபெற்றது. இதையடுத்து நால்வரின் பெயர்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட அமைச்சகத்தின் பரிந் துரையை ஏற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், அசோக் பூஷண் மற்றும் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நிய மிக்க நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் நால் வரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கின்றனர்.
உயர்நீதிமன்றங்களில் நூற்றுக் கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த மூத்த நீதிபதிகளே பெரும்பாலும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக் கும் கொலிஜியம் அமைப்பின் உறுப் பினர்களின் அழுத்தமான பரிந் துரையில் மூத்த வழக்கறிஞர்கள் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கப்படுவார்கள்.
இந்திய சட்ட மற்றும் நீதித்துறை வரலாற்றில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக‌ உச்ச நீதிமன்ற நீதிபதியாக இதுவரை 6 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7-வது நபராக எல்.நாகேஸ்வர ராவ் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு ஜெயலலிதாவின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஃபாலி எஸ். நரிமனின் மகன் ரோஹின்டன் நரிமன் வழக்கறிஞ ராக இருந்து நேரடியாக உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலிஜியம் முறைப்படி அமித்வா ராய் (ஜெயலலிதா வழக்கு நீதிபதி) உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 15 மாதங் களுக்கு பிறகு தற்போது உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருப்பதால் நீதிபதி களின் எண்ணிக்கை 25ல் இருந்து 29-ஆக உயர்ந்துள்ளது.

Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by Unknown in ,    



ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அறிவுறுத்தலின் பேரில் ஜெயலலிதா சிறப்பு மனுவை இன்றைக்கே விசாரிக்கக் கோரிய அவசர மனுவை அதிமுக வழக்கறிஞர்கள் திரும்பப் பெற்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரும் வழக்கில் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கும் என நீதிபதி ரத்னகலா தெரிவித்தார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணையை சிறப்பு அமர்வில் இருந்து வழக்கமான அமர்வுக்கு மாற்றுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
ஆனால், ஜாமீன் கோரும் ஜெயலலிதாவின் சிறப்பு மனுவை இன்று மாலைக்குள் விசாரிக்கக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் அறிவுறுத்தலின் பேரில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவை திரும்பப் பெற்றனர்.
நீதித் துறையிடம் அணுகும்போது நிதானப் போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் ராம் ஜெத்மலானி அறிவுறுத்தியதாக தெரிகிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
On Wednesday, October 01, 2014 by Unknown in ,    



சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் ஜாமீன் மீதான விசாரணையை வழக்கமாக மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி விடுமுறை கால நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டுள்ளார்.


 
இதனால், இந்த வழக்கு, அக்டோபர் 7 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.
 
அரசுத் தரப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்கிறீர்களா என நீதிபதி கேட்டதும், தான் தயாராக இருப்பதாக பவானி சிங் தெரிவித்தார். ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
 
உடனடியாக நீதிபதி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால், இதனை விடுமுறைக் கால நீதிபதியான, தான் விசாரிக்க முடியாது என்றும் வழக்கமாக மேல் முறையீடுகளை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டார்.
 
கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருப்பதால், விடுமுறை முடிந்து அக்டோபர் 7ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், "கர்நாடக உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே, வழக்கை கேட்காமலேயே ஒத்திவைத்தது இதுதான் முதல் முறை. தலைமை நீதிபதி தலையிட்டு, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறினார்.

Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by Unknown in ,    


roja

ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் வகையில் ‘ஜாத்திரை திருவிழா’ ஆண்டு தோறும் நடப்பது உண்டு. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழாவில் நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, ஓடு குண்டலம்மா வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
 
அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் 2 அம்மனையும் அலங்கரித்து வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விடிய விடிய இந்த வீதி உலா நடைபெறும்.
 
விழாவில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா கலந்து கொண்டார். இதற்காக அவர் 500 பெண்களுடன் சீர்வரிசை தட்டு ஏந்தி கோவிலுக்கு சென்றார். 2 அம்மனுக்கு அணிவிக்க விலை உயர்ந்த பட்டுப்புடவையை நடிகை ரோஜா சீர் தட்டில் எடுத்துச் சென்றார்.
 
இதில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகராட்சி தலைவர் சாந்தி, அவரது கணவர் குமார் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு ரவிக்கை துணியுடன் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் மற்றும் மஞ்சள் கயிறு ஆகியவைகளை ரோஜா வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வும் தேர்தலில் நடிகை ரோஜாவை எதிர்த்து போட்டியிட்டவருமான முத்துகிருஷ்ண நாயுடுவும், வியாபாரிகள் சங்கம் சார்பிலும் தனித்தனியாக அம்மனுக்கு புடவை கொண்டு வந்தனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
 
அம்மன் அலங்காரம் முடிந்து ஊர்வலம் செல்ல பூஜை நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ. என்கிற முறையில் முதல் ஆரத்திக்காக ரோஜா பூஜை தட்டை வழங்கினார்.
 
அப்போது கிராம தலைவர் குமரேசன் முதலியார் எங்களுக்கு தான் முதல் ஆரத்தி வழங்க வேண்டும் என்று தகராறு செய்தார். இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. ரோஜா நீட்டிய பூஜை தட்டை எதிர் தரப்பினர் தள்ளி விட்டனர்.
 
அப்போது யாரோ நடிகை ரோஜா கையில் கத்தியால் வெட்டினார். இதில் அவரது வலது கையில் 3 செ.மீ. நீளத்துக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரோஜாவை வெட்டியது யார் என்று தெரியவில்லை.
 
இதனால் ரோஜா ஆவேசம் அடைந்தார். தெலுங்கு தேசம் கட்சியினர் திட்டமிட்டு இந்த தகராறில் ஈடுபட்டு உள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
விழாவுக்கு சரியான பாதுகாபபு வழங்கவில்லை என்று போலீசை கண்டித்து ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பெண்களுடன் ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கையில் ரத்தம் சொட்டும் நிலையில் ரோஜா மறியலில் ஈடுபட்டார்.
 
சம்பிராதயபடி எங்களுக்கு தான் முதல் ஆரத்தி கொடுக்க வேண்டும் என்று ரோஜா வற்புறுத்தினார். ஆளுங் கட்சியினருக்கு சாதகமாக டி.எஸ்.பி. கிருஷ்ணகிஷோர் ரெட்டி நடப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய அம்மன் ஊர்வலம் தாமதமானது.
 
மறியல் நடத்தியவர்களை அப்புறப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் பெண்கள் சிதறி ஓடினார்கள். ஆனால் ரோஜாவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளும் கலைந்து செல்லவில்லை. அப்போது மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் போராட்டத்தை கைவிடாமல் ரோட்டில் அமர்ந்திருந்தார்.
 
நீண்ட நேர போராட்டத்துக்கு பின் முதல் ஆரத்தி எடுக்க ரோஜா அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 12.30 மணி அளவில் அம்மன் ஊர்வலம் புறப்பட்டது.
 
இதுபற்றி நடிகை ரோஜா கூறியதாவது:–
 
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விழாவில் பட்டாசுகளை பயன்படுத்தி உள்ளனர். எனது அருகிலேயே பட்டாசு வெடித்தனர். அதன் தீப்பொறிபட்டால் எனக்கு பெரிய காயம் ஏற்பட்டு இருக்கும். இதனை காவல்துறையினர் கண்டு கொள்ளவே இல்லை.
 
எம்.எல்.ஏ.வான எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு கிடைக்கும்.
 
தெலுங்கு தேசம் கட்சியினர். திட்டமிட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளனர். நான் முதல் மரியாதை எதிர்பார்த்து வரவில்லை. சம்பிராதயப்படி தான் நடந்து கொண்டேன். ஆனால் எதிர் தரப்பினருக்கு அது பிடிக்கவில்லை என்று ரோஜா கூறினார்.

Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றை சுமார் 120 நிமிடங்கள் நீந்தி கடந்த ஏழை பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தன்னுடைய கணவரின் விருப் பத்தை நிறைவேற்றுவதற்காக உயிரை பணயம் வைத்து ஆற்றில் குதித்தேன் என நீச்சல் தெரியாத அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் சுராப்பூர் அருகே நீலகண்ட நாராயணகட்டி என்ற கிராமம் உள்ளது. மாராத்தி மொழி பேசுவோர் வாழும் இக்கிராமத்தை சேர்ந்தவர் கட்டி பாலப்பா (36). இவரின் இரண்டாவது மனைவி எல்லவ்வா (22).
மிகவும் பின் தங்கிய பகுதியான நீலகண்ட நாராயணகட்டியில் மருத்துவ வசதியோ, போக்கு வரத்து வசதியோ கிடையாது. அவ சர மருத்துவ தேவைக்கு அருகி லுள்ள கெக்க கேரா-விற்கு செல்ல வேண்டும்.இந்த இரு கிராமங் களுக்கும் இடையில் கிருஷ்ணா ஆறு ஓடுவதால் மழைக் காலத்தில் ஆற்றை கடக்க முடியாது.
எல்லவ்வாவின் துணிச்சல்
கடந்த ஜூலை மாதம் பெய்த கன‌மழையின் காரணமாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடியது. இதனால் நீலகண்ட நாராயணகட்டி கிராமத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்து வசதிகள் முற்றிலும் முடங்கி கிராம மக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். நாளுக்கு நாள் வெள்ளம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இதனால் 9 மாத‌ கர்ப்பிணியாக இருந்த எல்லவ்வா-விற்கு அச்சம் தொற்றிக் கொண்டது. மருத்துவ மனைக்கு போகாமல் இங்கேயே இருந்தால் குழந்தையை உயி ருடன் பெற்றெடுக்க முடியாது. எனவே அவர் ஆற்றை கடக்க முடிவு செய்தார். இதனை குடும்பத்தாரும் கிராமத்தாரும் எதிர்த்தனர்.
ஆற்றில் அளவுக்கு அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய தால் படகு ஓட்டுநர்கள் ஆற்றில் இறங்க மறுத்தனர். எனவே கடந்த ஜூலை 31-ம் தேதி எல்லவ்வா தனது தம்பி லட்சுமண், தந்தை ஹனு மப்பா, உறவினர்கள் சிலரின் உதவியுடன் ஆற்றில் இறங்கினார்.
கயிறு மற்றும் சுரைக்குடு வையை கட்டிக்கொட்டு சுமார் 16 அடி ஆழமுள்ள கிருஷ்ணா ஆற்றில் துணிச்சலுடன் குதித்தார். 700 மீட்டர் நீளமுள்ள ஆற்றை சுமார் 120 நிமிடங்கள் மூச்சிறைக்க‌ நீந்தி கடந்துள்ளார். குளிரிலும்,உடல் வலியிலும் துடித்த அவரைக் கண்டு மறுகரையில் நின்றவர்கள் அதிர்ந்து போயினர்.
ஆண் குழந்தை பிறந்தது
அவ‌ருக்கு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மிகவும் மெலிந்திருந்த அவருடைய உடலில் போதிய ரத்தம் இல்லாததால் மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எல்லவ்வாவை அவரது குடும்பத்தினர் ரெய்ச்சூர் மாவட்டம் லிங்கசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு கடந்த ஞாயிற் றுக்கிழமை இரவு 9.20 மணியளவில் அறுவை சிகிச்சையின் மூலம் 4 கிலோ எடையுள்ள ஆண்குழந்தை பிறந்தது.
தனது சாகச முயற்சி குறித்து எல்லாவ்வா கூறியாதாவது: ''என்னோட கணவர் பாலப்பாவுக்கு நான் இரண்டாவது மனைவி. முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் என்னை திருமணம் செய்தார். எனக்கு திருமணாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை. நான் கர்ப்பமானதும் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க நினைத்தேன்.
எனக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது. துணி துவைக்க மட்டுமே ஆற்றுக்கு போய் இருக்கி றேன். ஆனால் ஆற்றைக் கடந்து ஆஸ்பத்திரிக்கு போகணும்னு முடிவு பண்ணினேன். அதனால என் உயிரை பற்றி கவலைப்படா மல் இடுப்பில் சுரைக்குடுவைக் கட்டிக்கொண்டு குதிச்சேன். குதிக் கிறதுக்கு முன்னாடி கடவுளையும் என் வீட்டுக்காரரையும் மனசுக் குள்ள நெனச்சிக்கிடேன்.
ரொம்ப குளிராகவும் பயமாக வும் இருந்தது. என் தம்பியும், அப்பா வும் எப்படி நீச்சல் அடிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதே மாதிரி நீந்தி வந்தேன். அப்பப்போ என்னை அவங்க பிடிச்சிக்கிட் டாங்க. என் மனசுல குழந்தையை நல்லபடியே பெத்து எடுக்கனும். அது மட்டும்தான் இருந்துச்சி'' என்றார்.
எல்லாவ்வாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஹெஸ்ரூரிடம் 'தி இந்து'விடம் கூறியபோது,''பிரசவத்தின் போது எல்லவ்வா மிகவும் சோர்வடைந்து இருந்தார்.அறுவை சிகிச்சையின் மூலமாகவே குழந்தையையும் தாயையும் உயிரோடு காப்பாற்ற‌ முடியும் என்ற நிலையில் இருந்தார். அதனால் தான் அறுவை சிகிச்சை செய்தோம்.தற்போது தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள்.
அந்த பெண்ணின் துணிச்சலை கேள்விப்பட்டு பிரமித்து போனேன்.அவரது குடும்ப சூழ்நிலையையும்பொருளாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு அவரிடம் மருத்துவ கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறோம்'' என்றார்.