Tuesday, September 20, 2016

On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in


திருச்சி 20.9.16                  சபரிநாதன் 9443086297
திருச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் ஒருங்கிணைந்து மனு
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்; செயலாளர் உதுமான் அலி கூறுகையில் திருச்சி மாநகராட்சிக்கு தென்னூர் பகுதியில் அமைந்துள்ள தென்னூர் ஹைரோடு பள்ளி வாசலுக்கு சொந்தமான மந்தை பகுதியில் வருடா வருடம் மதநல்லிக்கத்தின் அடிப்படையில் நான்கு நாட்கள் உக்கிரமாகாளியம்மன் திருவிழா நடத்திக்கொள்ள பள்ளிவாசல் அனுமதி அளித்து வருகிறது. அந்த நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்வில் எங்களுக்கோ எங்கள் பகுதி மக்களுக்கோ எவ்விதமான ஆட்சியேபனை கிடையாது. அப்படி  இருக்கையில் இன்று தனிப்பட்ட சிலர் அவர்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் அவர்களின் அரசியல் நகர்வுக்காகவும் திட்டமிட்டு இரு சமூகத்திற்கும் இடையே மதமோதலை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதற்காவே கடந்த எக்காலங்களிலும் நடைமுறை களில் இல்லாத ஒரு புதுவிதமான நிகழ்வை அந்த இடத்தில் நடத்த முயற்சிக்கின்றனர் அப்படி முயற்சிக்கும் நபர்கள் நடவடிக்கை எடுத்து போர்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை வழியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திக்க வந்தோம் ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் இல்லாததால் நாங்கள் அனைவரும் இங்கேயே நடவடிக்கை எடுக்கும் வரை தங்க உள்ளோம் என்று தெரிவி;த்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு தொளஹித்ஜமாதே பாபுலர் பிரண்ட் ஆப்இந்தியா sdbi போன்ற அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
பேட்டி மாவட்ட செயலாளர் உதுமான் அலி
On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in


திருச்சி 20.9.16
தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா விலங்கு நல வாரிய தூதுவராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் தனுசையும் எதிர்த்து சௌந்தர்யா உருவ படம் மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஹோட்டல் அருகே எரித்து போரட்டம் நடத்தினர்
தலைமை ஒருங்கிணைப்பாளர் ரஜேஸ்கூறுகையி;ல் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா விலங்கு நல வாரிய தூதுவராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் தனுசையும் எதிர்த்து சௌந்தர்யா உருவ படம் மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஹோட்டல் அருகே எரித்து போரட்டம் நடைபெற்று வருகிறது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய கொந்தலி;ப்பை ஏற்படுத்தியுள்ளது அதே நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முரட்டுகாளை திரைப்படத்தில் காளை அடக்குவது போல் நடித்துள்ளார் ஆதலால் மகள் சௌந்தர்யா விஷயத்தில் தலையிட்டு விலங்கு நல வாரியத்தின் விளம்பர தூதுவராகவும் உறுப்பினர் பதவியில் இருந்து அவரது மகள் சௌந்தர்யாவை விலக சொல்ல வேண்டும் என்பதை வழியுறுத்தி இந்த ஆர்பாட்டம் என தெரிவித்தார்

  பேட்டி ராஜேஸ்
On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in
திருச்சி 20.9.16       
சாதியக்கல்வி முறையின் நகல் எரிப்பு போரட்டம் மத்திய தபால் நிலையம் அருகே புரட்சிகர மாணவரணியினர் கைது
திருச்சி ஏழை ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த குழந்தைகளைச்சட்டப்பூர்வ கொத்தடிமையாக்கி முதலாளிகளுக்கு  சேவை செய்யவும் பார்ப்பன சாதியக்குலக்கல்வியை புகுத்த குழந்தைத்தொழிலாளர் சட்டத்தை நைச்சியமாக திருத்திள்ளது . இந்துமத புராண இதிகாச கட்டுக்கதைகளைகளுக்கு அறிவியியல் சாயம் பூசி பாடத்திட்டமாக மாற்றுவதுதமிழ் உள்ளிட்ட பல்தேசிய இன அடையாளங்களை அழிக்க சமஸ்கிருத வேத கலாச்சார திணிப்பை முன்மொழிகிறது புதிய கல்விக்கொள்கை கார்ப்பரேட் முதலாளிகளின் கனவையும் ஆர்எஸ்எஸ் பிஜேபி யின் இந்துராஷ்டர கனவையும் நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே இப்புதிய கல்விக்கொள்கை இதை எதிர்த்து நகல் எரிப்பு போரட்டம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெறுகிறது  என புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விக்கி தெரிவித்தார். பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றி சென்றனர்

பேட்டி விக்கி

Sunday, September 18, 2016

On Sunday, September 18, 2016 by Tamilnewstv in
திருச்சி 18.9.16               

திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் மேம்பால பணிகள் துவங்கும் முன்பே அணுகுசாலையை அமைத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடாமல் மக்களை கடும் அவதிக்குள்ளாக்கிவிட்டனர். தற்போது அணுகுசாலை பணிகள் முடிவடைந்த நிலையிலும் அதிகாரிகள் அலட்சியத்திலும் மெத்தனத்தாலும் அது மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.ஆதலால் பொதுமக்களை ஏளனமாக நினைக்கும் அதிகாரிகளை கண்டித்தும் உடனே மேம்பால அணுகுசாலையை திறக்க வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பு கோவிந்தராஜ் டெக்கான் நுகர்வோர் கழக தலைவர் பாரதராஜா ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் தலைவர் மோகன்ராம் திருவரங்க வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சிதம்பரம் கருப்பையா ரெங்கநாதன் வழக்கறிஞர் சாரங்கபாணி ஆம்ஆத்மி கட்சி தலைவர் கருப்பையா கொண்டையாம்பேட்டை விவசாயிகள் சங்கம் சார்பில் சின்னதுரை பாலமுருகன் விஸ்வலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்