Saturday, February 22, 2020

On Saturday, February 22, 2020 by Tamilnewstv in ,    
சென்னையில் மாபெரும் கூட்டம் ?
               

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நமக்கு வந்த தகவலின்படி மதுரையில் ஒரு மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதாக  என்பின் நிறுவனத்தினர் கூறி இருந்தனர், இது விழிப்புணர்வு கூட்டம் அல்ல பிசினஸ் கூட்டம்தான் நாம் கூறியிருந்தோம். 


                       
மதுரையில் போலீசாரையும் ரவுடிகளையும் சரி செய்து விட்டோம் ஏன் ஜம்பம் செய்து வந்தார்கள். ஆனால் மதுரை காவல்துறையினர் கைது நடவடிக்கையில் தீவிரமாக இருந்ததை தொடர்ந்து இந்தக் கூட்டத்தை வரும் 23ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் நடத்த உள்ளனர்.

                    
 எல்பின் அடையாள அட்டை உள்ள அனைத்து உறுப்பினர்களும் சுமார் பத்தாயிரம் பேர் இங்கு திரண்டு நாம் ஆட்சிக்கு சவாலாக உள்ளோம் என்பதை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல். வரும் மார்ச் மாதம் முதல் நாம் புதிய கட்டத்திற்கு செல்ல இருக்கிறோம் அதை நிரூபிக்கும் வண்ணம் இந்த கூட்டம் இருக்க வேண்டும் என கூறி உள்ளனர். இங்கு எங்கும் கூட்டம் நடத்த அனுமதி இல்லை இதைத்தொடர்ந்து ஐடி கார்டு உள்ள அனைவரும் வரவேண்டும் என்பதால் இதுவும் ஒரு பிஸ்னஸ் கூட்டம்தான் எனத் தெரிகிறது. 2012 தமிழகம் முதல் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது அதனை அனைத்தையும் நிவர்த்தி செய்துவிட்டு இவர்கள் தொழில் செய்தால் பரவாயில்லை 

                
ஆனால் தற்போது தங்களிடம் உள்ள  பொருளாதாரத்தால் முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்து ( முன்னாள் அரசு பணியில் உயர் பதவியில் இருந்தவர்கள் ) தமிழக அதிகாரத்தை கையில் எடுக்க  வேண்டும். நம் மீது புகார் அளிப்பவர்கள், அதனை செய்தியாக பரப்புபவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பதற்காக மக்களை ஏமாற்றுவது எப்படி என்று ஒரு டீம் ரெடி செய்ய போவதாக தகவல். காவல்துறை டிஜிபி அவர்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். நாளை பொதுமக்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அது காவல்துறைக்கு தான் பொதுமக்களுக்கு பதில் சொல்ல நேரிடும். எனவே காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக இக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது நன்றி ஜெய் ஹிந்த்.



💥 *Important Meeting* 💥

*Dear Leader's*

*அனைவருக்கும் ஒரு முக்கிய  அழகர்சாமி என்கிற ராஜா ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அறிவிப்பு.*


தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் சிறப்பு கூட்டம்  வெற்றி நிச்சயம்


*வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (23-02-20) அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 5 மணிவரை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள CONFLUENCE 7 STAR HOTEL, Mahabalipuram Resort & Convention center (ECR - OMR JUNCTION, ECR, POONJERI, MAHABALIPURAM, Chennai-603104) ல் நமது நிறுவனத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி பற்றியும் நமது நிறுவனத்தின் தூண்களாக விளங்கும் Leader's களுக்கு மிக மிக முக்கியமான Special Meeting ம் நடைபெற உள்ளது.*

*எனவே நமது நிறுவனத்தில் ID போட்டுள்ள அனைவரும் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.*

*இந்த Meeting ற்க்கு வருகின்ற அனைவரும் கண்டிப்பாக White Shirt, ஷூ அணிந்து வரவேண்டும்.*

*முக்கியமான Leader's அனைவரும் கோட் ஷூட் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.*


பின் குறிப்பு :-
திருச்சியில் தீபாவளி சில நாட்களுக்கு முன்பு தனியார் ஓட்டலில் நிருபர்கள் சிலர் சேர்ந்து ஒரு பத்திரிக்கையாளர் சங்கத்தை தொடங்கினார். அதற்கு எல்பின் வேண்டாத ஒருவரை செயலாளராக நியமித்தனர். இதை அறிந்த ரமேஷ் குமார் அந்த நபருடன் பழக்கம் வைத்தவர்கள் எங்கள் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என மிரட்டி உள்ளார். இதனைத்தொடர்ந்து ரமேஷ் குமார் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ( விளம்பரத்திற்காக) அனைத்து நிருபர்களும் அந்த நபரிடம் இருந்து விலகினார்கள். ஆனால் தற்போது ரமேஷ் குமார் அந்த நபரின் காலடியில் இருந்துகொண்டு மற்ற நிருபர்களை தவிர்த்து விட்டாராம்.  அந்த நபரிடம் இதை  கேட்ட நிருபர்களிடம் அந்த நபர் நீங்கள் விளம்பரத்திற்காக என்னை விட்டு விலகி விட்டீர்கள். நான் எனது பணத்திற்காக (வருமானம் ) அவருடன் சேர்ந்து விட்டேன் என நக்கலாக கூறி வருகிறாராம்.




....................................................................................

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ( சபரிநாதன்) ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

Friday, February 21, 2020

On Friday, February 21, 2020 by Tamilnewstv in ,    
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இதில் கலந்து கொண்டார்.

                  

 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வீரமணி செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.
அவர் கூறுகையில், மணியம்மையார் நூற்றாண்டு விழாவை மார்ச் 10ஆம் தேதி சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதை வரவேற்கிறோம். இந்த நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க அழுத்தம் கொடுக்கப்படும். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை  மீறி போராட்டம் நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். உயர் ஜாதியினரின் பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டம் மோசடி திட்டமாகும். அதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை நாங்கள் வரவேற்றோம். அதேசமயம் இந்த முயற்சியை வரவேற்றாலும், அது முழு முயற்சியாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக இல்லாமல், ஆழமாக இதை செய்து முடிக்க வேண்டும். ஐந்து மாவட்டங்களில் மட்டும் இந்த சட்டத்தை அமல்படுத்தி விட்டு விட்டால், இதர மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதனால் முழுமையாக சட்டத்தை கொண்டு வரவேண்டும். தற்போது மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையாக செயல்படுத்தியும் ஒப்புதல் பெறவேண்டும். ஒரு துறையில் நிபுணரை தேர்வு செய்வதில் தவறில்லை. அவர் எந்த ஜாதியாக இருந்தாலும் அவரை நியமித்துக் கொள்ளலாம். நாங்கள் தனிப்பட்ட பிராமணருக்கு எதிரானவர்கள் கிடையாது. பிராமணியத்தை தான் எதிர்க்கிறோம். அதனால் பிரசாந்த் கிஷோர் நியமனத்தில் தவறில்லை என்றார்.
On Friday, February 21, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட பெரம்பலூர் மாவட்டம் 103 வயது முதிர்ந்த ஆண் திரு. துரைசாமிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன்னர் இடுப்பு மூட்டு முறிவிற்கு நாட்டு வைத்தியம் செய்து அது பயனற்ற நிலையில் திருச்சிஅப்போலோ சிறப்பு மருத்துவமனையை நாடினார்.


அவருடைய நடக்க இயலாமை மற்றும் வலி அவரையும் அவரைச்சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மிகுந்த கவலை மற்றும் வேதனை அளித்ததுஇதற்கு முன்னர் மருத்துவசிகிச்சை பெறாததற்கு வயது முதிர்ச்சியே காரணம் காட்டப்பட்டதுஅவரது இடுப்பு முறிவினால் நீண்ட நாள்படுத்த படுக்கையில் இருந்ததால் அவரதுகால் நரம்புகளில் இரத்தக்கட்டு(Deepveinthrombosis) மற்றும் படுக்கைப்புண்கள் ஏற்பட்டு மிகவும் அவதிக்கு உள்ளாகியிருந்தார். இவருக்கு இருதய சிகிச்சை நிபுணர்,பொதுமருத்துவர் மற்றும் மயக்க மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவினரால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அவருக்குஎலும்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்கீதாயன் தலைமையில் வெற்றிகரமாக அரை இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்இது அவரை விரைவாக நடக்கவைக்க அவசியமானதாக இருந்தது.அறுவை சிகிச்சைக்குப்பின் இவர் உதவியுடன் நடக்கவும் வலியின்றி உட்காரமுடிந்தது.  இவை இரண்டும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் சந்தோசம் மற்றும் பேராறுதலாக இருந்ததோடுஅவரை கவனிக்கவும் எளிதாக இருந்தது.
முதியோருக்கு ஏற்படும் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வயது ஒரு தடையாக இருக்கிறதா? நிச்சயமாக இல்லை ஏனெனில் இடுப்பு எலும்பு முறிவுகள் மற்றும் பிறபலவீனமான எலும்பு முறிவுகள் (ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக) வயதானவர்களுக்கு பொதுவாக ஏற்படுகின்றன. இந்த வயதில் நீடித்தபடுக்கை ஓய்வு, நுரையீரல் நோய்த்தொற்று, சிறுநீர்தொற்று, கால் நரம்புகளில் இரத்த உறைவு மற்றும் படுக்கை புண்கள் போன்ற வற்றிற்கு வழிவகுக்கிறது. இவைகள் இறுதியில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
இந்த எலும்பு முறிவிற்கு நாட்டு வைத்தியம் உதவுமா? ஒவ்வொரு வரும் தங்கள் வாழ்க்கையின் அணைத்து அம்சங்களிலும் சமீபத்திய தொழில்நுட்பத்தை அனுபவிக்கவிரும்பும் பொழுது அவர்கள் நோய்வாய்ப்பட்டு உடலுக்கு சிகிச்சையளிக்க எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத ஒரு சிகிச்சையை ஏன் தேர்வு செய்ய வேண்டும். திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இவரைப் போன்ற வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தொழில் நுட்பவசதிகளை கொண்டு மருத்துவக்குழுவினர்களால் மேற்கத்திய நாடுகளுக்கு இணையான மருத்துவ சிகிச்சை வழங்குகிறோம்.
குறிப்பு: நாட்டு வைத்தியத்தில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக எலும்பு முறிவிற்கு பிறகு விரைவில் முறையான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டால், வயது முதிந்தோர்களுக்கு விரைவில் குணமடைய வாய்ப்பாக அமைகிறது.
இது போன்ற வயதான நோயாளிகளுக்கு இடுப்பு பகுதிக்கு கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது அந்த பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தி அறுவைசிகிச்சை செய்வதே பாதுகாப்பான முறையாகும்.
இந்த பத்திரிக்கை சந்திப்பில் அப்போலோ மருத்துவமனைமதுரை மண்டல தலைமை மருத்துவர் ரோகினிஸ்ரீதர், எலும்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர் அருண்கீதாயன் மற்றும் பாலசுப்ரமணியன் மயக்கவியல் நிபுணர் கார்த்திக், அழகப்பன் மற்றும் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவ நிர்வாகி மருத்துவர் சிவம் இருந்தனர்

Thursday, February 20, 2020

On Thursday, February 20, 2020 by Tamilnewstv in ,    
அரசு செய்ய வேண்டியதை நாங்கள் செய்கிறோம் என பந்தா காட்டும் எல்பின் நிறுவனம்.
                 

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி அடுத்ததாக நமக்கு அனுப்பியிருக்கும் பதிவில் கூறியிருப்பது:-
சமீபத்தில் திருச்சியில் நடு இரவு நான்கு மணிக்கு திருட்டுத்தனமாக கூட்டம் நடத்தினார்கள். காவல்துறைக்கு தகவல் அளித்தும் அவர்களால் தடுக்க முடியவில்லை ?. கூட்டத்தில் அவர்கள் வரும் 23ம் தேதி மதுரையில் தங்களது எல்பின் நிறுவன லீடர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மதுரை செல்லம்மாள் மருத்துவமனை அருகில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் காவல்துறையிடம் அனுமதி வாங்கி விட்டார்களா என தெரியவில்லை அரசு செய்ய வேண்டிய கொரோனா  வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அரசு பொது மக்களுக்கு செய்ய வேண்டியதை நாம் செய்யப்போகிறோம் என தங்களுக்குள் பந்தா பேசி வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல காரியம் தான் ஆனால் எல்பின் நிறுவனத்தினர் செய்வது பொது மக்களுக்காக அல்ல தங்கள் நிறுவனத்தின் சார்பில் கூட்டம் நடத்த காவல்துறை தடை விதித்து விட்டது. இதை மீறி மக்களிடம் தங்கள் நிறுவனத்தை எடுத்துச் செல்வதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளை பயன்படுத்த உள்ளனர். மதுரை காவல்துறை அதிகாரிகள் இதனை தீவிர விசாரித்து அனுமதி வழங்கி பொது மக்களை மயக்கும் இவரது செயலை தடுத்து நிறுத்த வேண்டுகிறேன். நன்றி ஜெய் ஹிந்த்.

மேலும் சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது:-

சமீபத்தில் எஸ். ஆர். கே. ரமேஷ் என்னும் ரமேஷ் குமாரை 4. 63 கோடி ரூபாய்க்கு வெடி வாங்கி ஏமாற்றியதாக தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மதுரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்தனர். மதுரை கமிஷனரிடம் ரமேஷ் குமார் அவர்களை அடிக்காமல் விசாரியுங்கள் என திருச்சியிலிருந்து ஒரு விஐபி போன் செய்து கூறினாராம் அவருக்கு 10 லட்சம் கொடுக்கப்பட்டதாக தகவல்  அழைத்துச் சென்ற காவல் துறையினருக்கு 17 லட்ச ரூபாயும் கொடுத்தார்களாம் ரமேஷ் குமார் இடம் சில பத்திரிக்கையாளர் கேட்டதற்கு எங்களிடம் பணம் உள்ளது கொடுக்கிறோம் அதை யார் கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என கூறியுள்ளார். தற்போது மதுரை செல்வதற்கு முன்பு தங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவரிடமும் மதுரை போலீஸ் கமிஷனரை மற்றும் காவல்துறையினர் அனைவரையும் பேசி சரி செய்தாகிவிட்டது. அதேபோல் நகைக்கடை போல் தோற்றமளிக்கும் மதுரை பிரபல ரவுடியையும்   மிரட்டி ஒதுக்கி விட்டோம். இனி மதுரையில் நாம்தான் என எல்பின் உரிமையாளர்கள் அழகர்சாமி ( எ ) ராஜா மற்றும் ரமேஷ் என்கிற ரமேஷ் குமார் கெத்தாக பேசி வருவதாக தகவல். காவல்துறையினர் நன்றாக விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்பது எனது வேண்டுகோள், நன்றி.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


******************************************

 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரி நாதன் என்னும் நான் ) தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*

 *தற்போதைய நிலை வரை ராமஜெயம் கொலை வழக்கில் ஆவணங்கள்  தடயங்கள் ஏதும் காவல்துறையால் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது*
On Thursday, February 20, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 20-02-2020

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். 
                  

அப்போது அவர் பேசுகையில்,
வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை

                  

 முதலமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் நடைமுறையிலுள்ள, செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது. இந்த தேதிக்கு முன்பாக செயல்பாட்டில் உள்ள திட்ட அளவில் ஏற்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்கள் நிறுத்தப்படாது.

 இனிமேல் வரக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தான் அனுமதி மறுப்பு என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியை ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணி தொடங்கப்பட்டுள்ளது. 

 இப்பொழுது செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். 
ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்காக பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும் என்பதற்காக போராடினார்களோ அந்த குழாய்கள் எடுக்கப்படாது. இப்போதுள்ள சட்டப்படி செயலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக உள்ள இவைகளுக்கு தடை கிடையாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

 எனவே இதில் பல குழப்பங்கள் இருக்கிறது. குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி,  புள்ளம்பாடி இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை. கரூர் மாவட்டம் குளித்தலை சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் வேளாண்மை நிறைந்த பகுதிகள் ஆகும். இதுகுறித்து குறைகளை களைய முதலமைச்சர் தலைமையில் துணை முதலமைச்சர் உள்பட 24 பேர் கொண்ட குழு பரிசீலித்து அதன் முடிவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதனால் குறைபாடுகளுடன் தற்போது அவசரமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை  நிறைவேற்றாமல் அடுத்து ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்து வேறு சட்டமன்ற கூட்டத்தில் இதை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்காக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் குறித்த எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.  என்றார்.
On Thursday, February 20, 2020 by Tamilnewstv in ,    
டெண்டர் பிரச்சனையால் கதறும் வியாபாரிகள் வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளபோது இடத்தை கைப்பற்ற முயற்சியா

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம் உள்ளது ஆம்னி பேருந்து நிலையம் 
           

இந்திய ரயில்வேயில்
காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் பெருக்க ரயில்வே வாரியம் 5 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்து இதனடிப்படையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் ரயில் நிலையம் இடையே உள்ள ரயில்வேக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை திருச்சி கோட்ட ரயில்வே தேவகுமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு குத்தகைக்கு விட்டது அப்போது தேவகுமார் தரப்பு ஆம்னி பஸ் நிலையத்தில் புதிதாக வணிக நிறுவனங்கள் அமைக்க விளம்பரம் செய்தது பயணிகள் வரத்து அதிகம் இருந்ததால் வருவாய் கிடைக்கும் என நம்பி 60க்கும் மேற்பட்டோர் கடை திறக்க முன்வந்தனர் இவர்களிடம் இருந்து முன்வைப்புத் தொகையை தேவகுமார் தரப்பு பெற்றுக்கொண்டு கடை நடத்த அனுமதித்தது


இந்நிலையில் ஒப்பந்தம் முடிந்தது ரயில்வே நிர்வாகம் 2 மாதங்களுக்கு முன்பு பெற்ற டெண்டரில் ஆம்னி பஸ் நிலையத்தை விஷ்ணு என்பவர் எடுத்தார் இதைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தகாரர் தற்போது ஆம்னி பஸ் நிலையத்தில் ஏற்கனவே பணம் கொடுத்து கடை நடத்தி வந்தவர்களிடம் முன்வைப்பு தொகை வேண்டும் என கேட்டுள்ளார் ஏற்கனவே கொடுத்த முன்வைப்பு தொகை என்ன ஆனது என கேட்டு வியாபாரிகள் பணம் தர ஒத்துக் கொள்ளவில்லை இது தொடர்பாக புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபரும் வியாபாரிகளும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர் இதனால் விவகாரத்தில் ரயில்வே அதிகாரி தலையை பியித்து கொண்டுள்ளனர் 

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ஒரு ஒப்பந்தம் விடப்பட்டு அதே இடம் வேறு ஒருவர்க்கு டெண்டர் முறையில் விடும்போது ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர்கள் ரயில்வேக்கு தர வேண்டிய தொகை அந்த இடத்தில் வேறு வில்லங்க நடவடிக்கைகள் இல்லை என உறுதி செய்து  டாக்குமெண்ட் உரிமை பத்திரத்துடன் ஒப்படைக்க வேண்டும் ஆனால் ஆம்னி பஸ் நிலைய விவகாரத்தில் வில்லங்க நடவடிக்கை இல்லை என டாக்குமெண்ட் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்பதுதான் இதில் உள்ள சிக்கலாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார் 

இதனால் ஒரு கடைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை முன்வைப்பு தொகை கொடுத்தவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் இதற்கு முக்கிய காரணம் ரயில்வேயில் நிலவும் ஊழல் தண்டர் மூலம் ஒருவருக்கு ஒப்பந்த விட்டாலும் சம்பந்தப்பட்ட இடத்தில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றால் உரிய அதிகாரிகளை கவனிக்க வேண்டும் இப்படி வாங்கி பழக்கப் பட்டவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர் என்றனர் ரயில்வே நிர்வாகத்திடம் ஏமாற்று வேலைகள் இருக்காது என நம்பி ஒப்பந்ததாரரிடம் பணம் கொடுத்து கடை தொடங்கியவர்கள் பாதிக்கப்படாத வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள்

Wednesday, February 19, 2020

On Wednesday, February 19, 2020 by Tamilnewstv in ,    
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒர் சட்டமா ? பொதுமக்கள் குழப்பம்.

தொடர்ந்து எல்பின் நிறுவனம் பற்றி செய்தி வெளியிட்டு வரும் சத்தியமூர்த்தி அனுப்பிய வீடியோவில்


நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரிஸ் ரெசிடென்சி ஹோட்டலில் எல்பின் நிறுவனத்தினர்  அதிகாலை 4 மணிக்கு தமிழகத்திலுள்ள டாப் மோஸ்ட் லீடர்கள் 200 பேரை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தி உள்ளனர். இந்த தகவல் அறிந்து நான் முதல் நாள் இரவே எஸ்பி ,கமிஷனர் இருவரையும் தொடர்பு கொண்டேன்

ஆனால் அவர்களது தொலைபேசி எண் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அவசர போலீஸ் 100 எண்ணில் தொடர்பு கொண்டேன் அவர்கள் முலம்  கன்டோன்மென்ட் காவல் நிலைய அதிகாரி தொடர்பு கொண்டார். இந்த நிறுவனம் பற்றி புகார் அளித்து உள்ளீர்கள் என என்னிடம் கேட்டார் நான் கமிஷனர் மற்றும் எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளேன் எனக் கூறினேன் சரி சென்று பார்க்கிறேன் என கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டேன் அவர் நான் சென்று பார்த்து விட்டேன்  இன்டோர் மீட்டிங் நடத்த பர்மிஷன் தேவையில்லை. வெளியில் மேடை அமைப்பு அவர்கள் கூட்டம் நடத்தவில்லை. அரங்கத்துக்குள் கூட்டம் நடத்த யாரிடமும் அனுமதி வாங்க அவசியமில்லை எனக் கூறினார். நான் தஞ்சையில் புகார் அளித்ததன் பேரில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அவர்கள் முறைகேடாக கூட்டம் நடத்துவதால் எங்கும் அனுமதி இல்லை என கூறினேன். மீண்டும் அவர் ஒரே பதிலை கூறினார் அவர் பேசிய ஆடியோ இதில் பதிவிட்டுள்ளேன்.


ஒரே மாநிலத்தில் ஒரே டிஜிபி உள்ள காவல் துறைக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு சட்டமா ? தஞ்சைக்கு ஒரு சட்டம், திருச்சிக்கு ஒரு சட்டம், புதுகைக்கு ஒரு சட்டமா? இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எல் பின் நிறுவனம் ஓர் ஏமாற்று நிறுவனம். பொதுநலன் கருதி நான் இவர்கள் மீது புகார் அளித்து வருகின்றேன். எல்பின்  நிறுவனம் மூடிய பின்பு காவல்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்தார் எந்த ஆதாரமும் இல்லாத நிறுவனத்தில் எப்படி பணம் போட்டீர்கள் என காவல்துறையினர் கேட்பார்கள் அதற்கு வழிவிடாமல் முன்பே காவல்துறை தடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். பாவம் பொதுமக்கள் தங்களது கஷ்டத்தில் ஒன்றுக்கு மூன்றாக கிடைக்கிறது என்று நம்பி பணம் போடுகிறார்கள். பணம் படைத்தவர்கள் எதிர்த்து பொது நல வழக்கு தொடர்ந்து அவர்கள் பலர் காணாமல் போனது எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் டிஜிபி அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் . ஜெய்ஹிந்த்.


பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


( தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது)


On Wednesday, February 19, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 19.02.2020

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து  காங்கிரஸ் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலை  தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சமையல் கியாஸ் சிலிண்டருடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் லால்குடி வட்ட தலைவர் சுகுமார், புள்ளம்பாடி வட்ட தலைவர் அர்ஜுனன், நகரத் தலைவர்கள் செல்வகுமார், அய்யாவூ, INTCU மாவட்ட தலைவர் துரைராஜ், மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி காங்கிரஸார் என 100-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்..

பேட்டி:  கலை(வடக்கு மாவட்ட தலைவர்)
On Wednesday, February 19, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 19-02-2020

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் ஆட்சியர் அலுவலகம்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் திருச்சியிலும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், முழக்கப் போராட்டம், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

 இந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி ஜமாத்துல் உலமா அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி ஜமாத்துல் உலமா தலைவர் ரூஹில் ஹக் தலைமை வகித்தார். இதில் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தக் கருப்புச் சட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அதற்கான பலனை அதிமுக அனுபவிக்க நேரிடும் என்று போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.