Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
DYFI சார்பில் அரசாணை51ஐரத்துசெய்ய வயிற்றில் ஈரத் துணிகட்டி போராட்டம்
திருச்சி மாநகரில் (DYFI)  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 58லிருந்து 59 ஆக உயர்த்தியதை திரும்ப பெற கோரியும்

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற அதிமுக நிர்வாகிகள் மீது கடுமையான தண்டனை வழங்கிட கோரியும் மாநிலம் முழுவதும் வயிற்றில் ஈர துணி கட்டி முழக்கமிடும் போராட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக திருவெறும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பா.லெனின் DYFl மாநகர் மாவட்ட செயலாளர் தலைமையிலும்
பாலக்கரை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் S.சுரேஷ் மாநகர் மாவட்ட தலைவர் தலைமையிலும் கீழ்புதூரில் நடைபெற்ற போராட்டத்தில் பகுதி செயலாளர் இரட்டமலை தலைமையிலும் நடைபெற்றது.

Tuesday, May 12, 2020

On Tuesday, May 12, 2020 by Tamilnewstv in    
சமயபுரத்தில் அதிமுக சார்பாக 500 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது..!

கொரோனாவின் நோய் தொற்று பரவல் காரணமாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது, 


 
இதனால் மக்களுக்கு அன்றாட பொருட்களை பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நிவாரணங்களை வழங்கி வருகின்றன, தமிழகத்தில் அதிமுக சார்பாக பல்வேறு இடங்களில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது தற்பொழுது சமயபுரம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் சார்பாக சமயபுரம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, 


 வார்டு வாரியாக சுமார் 500 பேருக்கு இன்று வழங்கப்பட்டது, இதில் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கு முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் கொடுக்கப்பட்டது ,மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

 இந்நிகழ்வில் சமயபுரம் பேரூராட்சி  தலைவர் சின்னையன், நகர செயலாளர் சம்பத்குமார், நகரத் துணைச் செயலாளர் மனோகரன், ராஜேந்திரன், மணிகண்டன், மணிராஜ், குப்புசாமி, கண்ணன், வேல்முருகன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி

  கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகளாவிய பூட்டுதல் காரணமாக மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்டனர்.

 கொரோனா பாதிப்பினால் உலகளவில் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைத்துவிதமான விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

 அதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த பலர் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதனால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்ப கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.இந்த வகையில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த சுமார் 400 பயணிகள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

 இந்நிலையில் மலேசியாவில் தவித்துவந்த 177 தமிழர்களை மீட்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அவர்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, 177 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நேற்று (மே 9) இரவு 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. 

  திருச்சி வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இந்தப் பரிசோதனை பணியை நேரில் பார்வையிட்டார்.

 தவித்த 177 தமிழர்கள் திருச்சி வந்தடைந்தனர்அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே நகரத்திற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பயணிகளில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. 

 எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 40 நாள்களுக்கு மேலாக மலேசியாவில் தவித்துவந்த இவர்கள் தமிழ்நாடு திரும்பியிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

  மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 
962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்பு 30 பேருந்துகளில் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்

 நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில்
  

 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில்  வாழும் புலம் பெயர்ந்த தமிழ் நாட்டு தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர்.
  
  ஊரடங்கு உத்தரவால் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டதால் வெளிமாநில தொழிலாளர்களைப் அந்தந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ரயில் நிலை ஏற்பட்டு செய்திருந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த 962 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர் அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் மூலம் சோதனை செய்த பின்பே வெளியே செல்ல அனுமதித்தனர். காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

  ரயில் நிலையத்தின் வெளியே 30அரசு பேருந்துகள் அந்தந்த மாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் மூலம் ஒரு பேருந்திற்கு 25 முதல் 30நபர் வரை  என  அழைத்துச்சென்றனர் அதேபோல பேருந்தில் செல்பவர்களுக்கு குடிநீர் உணவு வைக்கப்பட்டுள்ளன இந்த பேருந்துகள் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி. நாகை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களுக்கு அழைத்த செல்லப் பட்டனர்.

 ரயில் நிலையத்தின் வெளியே போக்குவரத்து ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாக ஊழியர்கள் என பலரும் ரயிலில் இருந்து வரும் பயணிகளை கூட்டிச் செல்வதற்காகவும் அவர்களுக்குத் தேவையான முக கவசம், சானி டைசரை கொடுத்தனர். மேலும் ரயிலிலிருந்து  அனைவரும் சென்ற பின்பு ரயில் நிலையத்தில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
  
  திருச்சியை சேர்ந்த 29 பேர் நபர்கள் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைபடுத்திய பின்னர்  தங்களது வீடுகளுக்கு அனுப்பட உள்ளனர்.

 மேலும் மற்ற மாவட்டங்களினும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தி அசத்தும்  ஊராட்சி நடுநிலை பள்ளி.

ஆச்சரியத்துடன் பார்க்கும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள்.

              திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்டிராய்டு செல்போன் மூலமாக  ஆன் லைன் வகுப்புகளை பள்ளித் தலைமையாசிரியர் நடத்தி வருகிறார்.

     எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகள் முழுவதும் தொடர் விடுமுறையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இப் பள்ளியில் கல்வி பயிலும் 6  வகுப்பில் 9 மாணவி, 7 மாணவர்களும்,  7 ம் வகுப்பில் 2 மாணவர்களும், 6  மாணவிகளும் என 22 மாணவ மாணவிகளுக்கு   பொது ஆங்கிலம், பொது கணிதம் ஆகிய பாடங்களை சென்னையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மீட் என்ற ஆப் மூலமாக மாணவ மாணவிகளின் அன்ராய்டு செல்போன் மூலமாக  இனையதளம் வழியாக ஆன் லைன் வகுப்புகளை கடந்த ஏப்ரல் 27 ம் தேதி முதல் தினசரி காலை  10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்று வருகிறது.

         இந்த பாடங்களை பள்ளி ஆசிரியை ஒருவர் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஆசிரியர்கள் இருவர் நடத்துகின்றனர். இந்த ஆசிரிய ஆசிரியைகள் நடத்தும் பாடங்களை பள்ளித் தலைமையாசிரியர்  திருமாவளவன் தனது செல்போன் மூலமாக கண்காணித்து வருகிறார்.

      இது குறித்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் திருமாவளவன் செய்தியாளரிடம் கூறியதாவது ..

                          இந்த வகுப்புகளை  மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதனை  அவரது பெற்றோர்கள், கிராம மக்கள்  ஆச்சரியப்படும் வகையில் இவ் வகுப்புகள் அமைந்துள்ளதெனவும்,  விடுமுறை காலங்களில் செல்போன்களில் எந்நேரமும் விளையாடு பொழுதைக் கழித்த குழந்தைகள் ஆக்கப்பூர்வமாக கல்வி கற்றலுக்காக  பயன்படுத்துவதால் பெற்றோர்கள் மட்டுமல்லாது மாணவ மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தார்
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்..

    திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் ஜி. கே தொழிற்பூங்கா வின் ஒரு பகுதியில் எவர்செண்டாய் கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் இரும்பு தூண் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 1000 த்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
  

 கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. இதனால் கம்பெனியிலேயே தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவை அரசு சற்று தளர்த்தியுள்ளதால், கம்பெனி மீண்டும் செயல்பட துவங்கியது.        
   

 ஆனால் பீகார், உத்திரபிரதேசம் , ஒரிசா,மகராஸ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத்தினைச் சேர்ந்த 122 பேருக்கு தற்போது போதிய உணவு வழங்க வில்லையெனவும், வேலை பார்த்ததற்கு உரிய  சம்பளம் தரவில்லை எனவும், தற்போது தங்குவதற்கும் இடம் தர கம்பெனி நிர்வாகம் மறுத்து வருவதாக புகார் கூறினார்.
    

   இது தொடர்பாக கம்பெனி நிர்வாகம் மீது பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்கள் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின. போரில் கம்பெனி அலுவர்களுடன் போலீஸார் பேசியதில் விரைவில் சம்பளம் வழங்குவதாகவும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி் வருவதாகவும் , வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதால் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்ததால் வட மாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் கம்பெனி வளாகத்திற்கு திரும்பிச் சென்றனர்.
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200


 மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் ஒருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள விற்பனை மேலாளரை தேடி வருகின்றனர்.


  முசிறி அருகே அமைந்துள்ள 
கோதூர்பட்டியில் கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது இன்று 144 தடை உத்தரவு பின்னர் திறக்கப்பட்ட டாஸ்மார்க் கடையில் வியாபாரம் களைகட்டியிருந்தது 

 இந்நிலையில் நீதிமன்றம் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனால் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய கோதூர் பட்டி டாஸ்மார்க் கடை விற்பனை மேலாளர் பாண்டியன்  அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு 1200 குவாட்டர் மதுபாட்டில்கள்  அடங்கிய 25அட்டை பெட்டிகளை ஆம்னி வேனில் ஏற்றி விற்பனை  செய்வதற்கு அனுப்பி வைத்துள்ளார். 

  அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் 1200 மது பாட்டில்களையும், ஆம்னி வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.    

 மேலும் ஜெகநாதன் என்பவரை   போலீசார் கைது  செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு  1 லட்சத்து 80  ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கோதுர்பட்டி டாஸ்மார்க் கடையின் விற்பனை மேலாளர் பாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி பிச்சாண்டவர் கோவில் பகுதியில் இன்று நடந்தது. 


இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலை, முன்னாள் மேயர் சுஜாதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பூரண மதுவிலக்கு என்பது உலக அளவில் தோல்வியடைந்த விஷயமாகும். 



  அமெரிக்காவிலும் இது தோல்வியை சந்தித்துள்ளது. ஈரானிலும் பூரண மதுவிலக்கு சாத்தியப்படவில்லை. குஜராத்திலும் ஏட்டளவில் தான் பூரண மதுவிலக்கு இருக்கிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மாபியாக்கள் தலை தூக்கி விடுவார்கள். கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கும்.


  டாஸ்மாக் மதுபானக்கடைகளை கடந்த 45 நாட்களாக பூட்டி இருக்கவே கூடாது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் அதாவது 11 மணி முதல் 1 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்த்திருக்கலாம். அதேபோல் ஆரம்பத்திலிருந்தே ஆன்லைன் மூலமும் மது விற்பனை செய்திருக்க வேண்டும். 


 அதனால் எதிர்வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் மது விற்பனையை தொடர வேண்டும். அதேபோல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பணமில்லா பரிவர்த்தனை திட்டத்தின் மூலம் மது விற்பனை செய்யவேண்டும்.  கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்காலத்தில் ஆன்லைனில் மது வாங்கும் முறையை கற்றுக் கொள்வார்கள். 

   அது மிகவும் எளிது. தற்போது ரயிலுக்கு கூட அனைவரும் ஆன்லைன் மூலமே டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். தற்போது சமூக இடைவெளியை பின்பற்ற வில்லை, நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்ற புகார்களின் அடிப்படையில் தான் நீதிமன்றம் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. 

  கொரோனா பிரச்சனை காரணமாக எந்த தேர்தலும் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை. தற்போது செய்வது போல் சமூக இடைவெளியுடன் தள்ளி தள்ளி நின்று ஓட்டு போட்டு இந்த அரசை வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார்.
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சியில்  அமைச்சர் தொடர் நிவாரணம் ...!


 கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. 


 இதையடுத்து தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். 


 இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக  நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இந்த வகையில் இன்று திருச்சி மாநகராட்சி  மக்களுக்கு
25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.