Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியாரின் 136-வது பிறந்தநாளையொட்டி சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.-தி.மு.க.

தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவருடைய சிலைக்கு நேற்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. சார்பில் பன்னீர்செல்வம் எம்.பி., மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ஜி.வெங்கடாசலம், உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் சூடாமணி தலைமையில், மாநகர செயலாளர் கலையமுதன், மாநகர துணை செயலாளர்கள் குணசேகரன், முரளி முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கம்யூனிஸ்டு கட்சி- பா.ம.க.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் சேலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாநகர செயலாளர் ராஜேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ம.தி.மு.க. சார்பில் மாநகர பொறுப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில், லிவ்யசந்திரசேகர், தைரியசீலன்,மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பா.ம.க. சார்பில் மாநில துணைபொதுச்செயலாளர் அருள் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளர் ராசரத்தினம், மாநில துணை செயலாளர் சத்ரியசேகர், மாநகர் மாவட்ட தலைவர் அன்புகரசு, மாநில நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்ட தலைவர் பழனிபுள்ளையண்ணன் தலைமையில், மண்டலதலைவர் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் ஜவகர், சிவக்குமார் உள்பட திரளானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பல்வேறு அமைப்புகள்

பகுஜன்சமாஜ் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில், மாவட்ட பொதுசெயலாளர் காஜாமைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையிலும், எம்.ஜி.ஆர்.கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அம்பேத்கார் மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் தங்கம் அம்பேத்கார் மற்றும் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அகில உலக தர்மசாஸ்தா ஐயப்பா மிஷன் சார்பில். அதன் நிறுவனர் ராஜமங்கலம் மற்றும் சக்தி ஆகியோர் மாதுளம் பழங்களால் ஆன மாலையை பெரியார் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதுதவிர பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் திரளானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்சங்கம்

சேலம் தமிழ்சங்கத்தின் சார்பில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் மாணிக்கம், துணை தலைவர் ராஜ்மோகன், செயலாளர் குமரவேலு, துணை செயலாளர் சங்கரன் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
துபாய் நாட்டில் இறந்த கட்டுமானத் தொழிலாளியின் உடலை மீட்டுத் தரக்கோரி அவரது குடும்பத்தினர் சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கட்டுமானத் தொழிலாளி
சிவகங்கையை அடுத்த கீழப்பூங்குடி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மருதன் (வயது 28). இவரது மனைவி மேனகா(24). இவர்களது மகன் தஞ்சன் (3). இந்தநிலையில் மாரிமுத்து மருதன் கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு பணியில் நீடித்த அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் போனில் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11–ந்தேதி இரவு அவரது குடும்பத்தினருக்கு துபாயில் இருந்து ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், நான் மாரிமுத்து மருதனின் நண்பர் என்று கூறினார். அத்துடன் மாரிமுத்துமருதன் இறந்து விட்டதாகவும், 3 நாட்களில் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாரிமுத்துமருதனை போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது. ஆனாலும் அவர் பணியில் இருந்த நிறுவனத்தினை தொடர்பு கொண்டபோது, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல் இதுவரை ஊர் வந்து சேரவில்லை.
நடவடிக்கை தேவை
இதையடுத்து மாரிமுத்து மருதனின் தம்பி ஜெயக்குமார் என்பவர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராஜாராமனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. நான் கூலி வேலை பார்த்து பெற்றோரை காப்பாற்றி வருகிறேன். என் அண்ணனின் மனைவி, மகன் ஆகியோர் அவரது வருமானத்தை நம்பியே இருந்தனர். எங்களுக்காகவே என் அண்ணன் பணத்தை கடன் வாங்கிச் செலுத்திவிட்டு துபாய் நாட்டில் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்த எங்கள் குடும்பத்தினர் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளனர்.
அத்துடன் அவரது உடலை பார்க்க முடியவில்லையே என்று நாங்கள் அனைவரும் வேதனையில் தவித்து வருகிறோம். எனவே எனது சகோதரனின் உடலை மீட்டு இங்கு கொண்டு வருவதற்கு அரசுத்தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தஞ்சை அருகே நகர் ஊரமைப்புத்துறையில் முறையாக விண்ணப்பிக்காமலும், தொழில்நுட்ப அனுமதி பெறாமலும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பல முறை அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டும், கல்லூரி உரிமையாளர் முறையாக அனுமதி பெற விண்ணப்பம் அளிக்கவில்லை. இதையடுத்து தஞ்சை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் முரளி மற்றும் அதிகாரிகள் நேற்று முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த தனியார் கல்லூரியின் முதல்அறை, அலுவலக அறை ஆகியவற்றிற்கு நகர் ஊரமைப்பு சட்டம் 1971(பிரிவு 56 மற்றும் 57)–ன் கீழ் மூடி சீல் வைத்தனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தஞ்சையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

போக்குவரத்துப்பிரிவு போலீசார் சோதனை

பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்(ஏர்ஹாரன்) பொருத்தக்கூடாது என்று சட்டவிதி உள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படாமல் பெரும்பாலான பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான் தான் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குறுகலான சாலைகளிலும் தனியார் பஸ்கள் அதிக ஒலியை எழுப்பி கொண்டு செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையோரம் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் இருந்து பயத்தில் கீழே விழுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதனால் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பானை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சை நகர போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியிலும், தஞ்சை பழைய பஸ் நிலையம், தொம்மங்குடிசை ஆகிய பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வழிமறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மக்களை அச்சுறுத்தும் வகையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சட்டப்படி நடவடிக்கை

மேலும் இது போன்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என்று பஸ் டிரைவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது குறித்து போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் அந்த வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் கும்பகோணம் பாதுகாப்பு மையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகள்
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தாள் பிரகதீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலையும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் திருடப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையும், சிலைக்கடத்தல் மன்னன் கபூர் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது. அவை அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அங்குள்ள சிலைகளை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அந்நாட்டு பிரதமர் டோனிஅபோட், அந்த சிலைகளையும் தனி விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்திருந்தார். பின்னர் அந்த சிலைகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலைகள் மீட்பு
இந்நிலையில் அந்த சிலைகளை சென்னை கொண்டுவர தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி அந்த சிலைகள் கடந்த 11–ந்தேதி விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டது. பின்னர் அந்த சிலைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நேற்று அர்த்த நாரீஸ்வரர் சிலையை விருத்தாசலம் கோர்ட்டிலும், நடராஜர் சிலையை ஜெயங்கொண்டம் கோர்ட்டிலும் ஒப்படைத்தனர்.
பாதுகாப்பு மையத்தில் சேர்ப்பு
பின்னர் 2 சிலைகளும் கோர்ட்டு உத்தரவின்படி, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள உலோக திருமேனி சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு நேற்று இரவு சிலைகடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்நடராஜன் தலைமையில் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சிலைகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் மாரியப்பன் பெற்றுக்கொண்டார். உலோக திருமேனி சிலைகள் பாதுகாப்பு மையங்கள் தமிழ்நாட்டில் திருவாரூர் மற்றும் கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. ஜெயங்கொண்டம், விருத்தாசலம் அருகேயுள்ள பாதுகாப்பு மையமாக கும்பகோணம் உள்ளதால் இங்கு இச்சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
சின்னமனூர் அருகே கத்தியால் குத்தி கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய் துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தாவது:-

கூலித்தொழிலாளி

தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே உள்ள துரைச் சாமிபுரத்தை சேர்ந்த பெரிய சாமிதேவர் என்பவ ருடைய மகன் பாண்டியன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த காட்டு ராஜா என்பவருடைய மனைவி பாக்கியம் (45) என்ப வருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப் படுகிறது.

இந்த தொடர்பு குறித்து அறிந்ததும் பாக்கியத் தின் குடும்பத்திற்கு தெரியவந் துள்ளது. இதனால் பாக்கியத் தின் மகன் மணி, மகள் பிரேமா, மருமகன் விஜயன் (28) ஆகிய 3 பேரும் நேற்று காலை பாண்டியனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ள னர். 3 பேரும் சேர்ந்து பாண்டி யனை தாக்கியுள்ளனர்.

கத்தியால் குத்திக்கொலை

அப்போது விஜயன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பாண்டியனின் அடிவயிற்றில் குத்தினார். தொடர்ந்து 2 பேரும் சண்டை போட்டதால் பாண்டியனும், விஜயனும் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ள னர். இந்த நிலையில் பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த விஜயன் சின்ன மனூர் அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு உள் ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாண்டியனின் மகள் மலர் மணி (27) சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மணி, பிரேமா, விஜயன், பாக்கியம் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணி, பிரேமா, பாக்கி யம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப் பட்ட பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டது. இந்த சம்பவம் சின்ன மனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப் பாட்டை போக்கவும், எதிர் கால குடிநீர் தேவையை கருத் தில் கொண்டும் ரூ.68 கோடியே 83 லட்சம் மதிப்பில் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் தொடங்கி அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமி புரம், ஜெயமங்கலம் பகுதி களில் தாய் திட்டத்தின் கீழ் தார்ச்சாலைகள் அமைத் தல், குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச் சுவர் அமைத்தல், சிறு மின் விசை பம்பு அமைத் தல், தெருவிளக்குகள் அமைத் தல் போன்ற பணிகளும், பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புகள் கட்டும் பணி களும் நடந்து வருகின்றன.

இந்த வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.மீனாட்சி புரம் முதல் லட்சுமிபுரம் வரை ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். லட்சுமி புரத்தில் குடிநீர் கிணற்றுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு உள்ள தையும், குடியிருப்பு விரிவாக் கம் அடைந்துள்ள பகுதிகளில் புதிதாக தெரு விளக்குகள் அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட் டார்.

பின்னர் லட்சுமிபுரம், ஜெய மங்கலம் பகுதிகளில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட் டப்படும் வீடுகளை பார் வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தர விட் டார். அதனை தொடர்ந்து வைகை அணை பகுதியில் நடந்து வரும் தேனி அல்லி நகரம் நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணி களை கலெக்டர் கே.எஸ். பழனிசாமி பார்வையிட் டார்.

புதிய குடிநீர் திட்டம்

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார் பிலும் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி நகரின் குடிநீர் தேவைக்காக வைகை அணை யில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தேனி அல்லி நகரம் நகராட்சி யில் தற்போது சுமார் 95 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த புதிய குடிநீர் திட்ட மானது 2045-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டு, அதற்கேற்ப சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தண்ணீர் வழங்கும் வகையில் தொடங் கப்பட்டு உள்ளது. இதற்காக தேனி நகரில் 4 இடங்களில் மேல் நிலை நீர்த்தேக்க தொட் டிகள் அமைக்கப் படு கிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிந்து விடும்.

இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித் தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், ஊரக வளர்ச் சித்துறை செயற்பொறியாளர் சங்கரஜோதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணை யாளர் (பொறுப்பு) ராஜாராம், பெரியகுளம் வட் டார வளர்ச்சி அலுவலர்கள் நாகரத்தினம், ஜீவரத்தினம் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தேவாரம் அருகே நியூட் ரினோ ஆய்வு மையத்திற்கு சாலை அமைக்கும் பணியை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

நியூட்ரினோ ஆய்வு மையம்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான அம்பரப் பர் மலையில் சுமார் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நியூட் ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதில் முதல்கட்ட பணியாக ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள் ளது. சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க ராட்சத தண்ணீர் தொட்டி அமைத்துள் ளனர். போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தில் இருந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் அகலம் கொண்ட தார்சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக சுமார் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நியூட்ரினோ ஆய்வு கூடத்தில் இருந்து பொட்டிப்புரம் ஊராட்சி பகுதியான தே.புதுக் கோட்டை வரை தற்போது ரூ.6 கோடியே 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் போக்குவரத்திற்கு வசதி யாக பாலம் ஒன்று கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தில் இடையூறான மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

பொறியாளர் குழு ஆய்வு

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தை மும்பை ‘டாடாபண்ட மண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ தலைமை செயற்பொறியாளர் ரங்கன் தலைமையில் பொறி யாளர்கள் குழுவினர் மற்றும் அறிவியல் ஆய்வு மைய மாண வர்கள் ஆய்வு பணி மேற் கொண்டனர். சாலை அமைக்கும் பணியை போடி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பிர சன்னா தலைமையில் அதிகாரி கள் குழுவினர் பார்வை யிட்டனர்.

இதுகுறித்து நியூட்ரினோ ஆய்வுமைய விஞ்ஞானிகள் கூறுகையில், ‘கண்ணுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் வெளியாக கூடிய நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்ய அம்பரப்பர் மலையை சுமார் 2 கிலோமீட்டரில் குடைந்து இதற்குள் ஆய்வகம் அமைக்கப் பட உள்ளது. சக்தி வாய்ந்த சுமார் 50 டன்எடையுள்ள காந்தம் நிறுவப்பட உள்ளது. சாலை அமைக்கப்பட்ட பின்பு தான் பாறையை குடை வதற்கான எந்திரங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும். எனவே சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது’ என்றனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர், காசியானந்தம் (வயது 60). தொழில் அதிபர்.
இவர் கடந்த 12–ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவில் காசியானந்தம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்தனர். ஆனால் அங்கு நகை, பணம் இல்லை. பின்னர் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
நேற்று முன்தினம் காசியானந்தம் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், தட்டார்மடம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் பால் ஐசக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.