Thursday, September 18, 2014
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
தரமான உணவு வழங்கக் கோரி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி விடுதி
பழனி-திண்டுக்கல் ரோட் டில் அமைந்துள்ள பழனி யாண்டவர் பாலிடெ க்னிக் கல்லூரி மாணவர்களில் 243 மாணவர்கள் கல்லூரி வளாகத் தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர் களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் அடிப் படை வசதிகள் செய்து தரப் பட்டுள்ளது.
ஆனால் இந்த வசதிகள் யாவையும் முழுமையாக தங்களால் பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது என விடுதி மாணவர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் விடுதி யில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை, குளியலறை உள்ளிட்டவைகள் சுகாதார மற்ற நிலையில் இருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக் கின்றனர்.
தரமற்ற உணவு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விடுதியில் வழங் கப்படும் உணவுகள் தரமற்ற தாக இருப்பதோடு உணவில் புழுக்களும் இருப்பதாக விடுதி மாணவர்கள் கல்லூரி அலு வலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் விடுதி மாண வர்கள் அனைவரும் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர்.
முதல்வர் சமரசம்
சம்பவம் குறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விடுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவு தர மற்றதாக உள்ளது. மேலும் விடுதி அறைகளில் வசிக்கும் மாணவர்கள் ஒவ் வொருவரிட மும் மின் கட்டணமாக ரூ. 124-ம், உணவு கட்டணமாக ரூ. 1,850-ம் வசூலிக்கின்றனர் ஆனால் அதற்கான ரசீது வழங்குவதில்லை, கடந்த சில நாட்களாக விடுதி அறையில் இருக்கும் மடிக்கணினிகள் திருடு போகும் சம்பவம் நடக் கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்துபேசிய கல்லூரி முதல்வர்கந்தசாமி மாணவர்களின் அனைத்து புகார்கள் குறித்த விசாரணை யை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். மேலும் அனைத்து பிரச்சினை களை யும் தீர்க்க உடனடி நட வடிக்கையும் எடுக்கப்படும் என்றார். இதையடுத்துபோ ராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் கலைந்து சென்றனர்.
கல்லூரி விடுதி
பழனி-திண்டுக்கல் ரோட் டில் அமைந்துள்ள பழனி யாண்டவர் பாலிடெ க்னிக் கல்லூரி மாணவர்களில் 243 மாணவர்கள் கல்லூரி வளாகத் தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர் களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் அடிப் படை வசதிகள் செய்து தரப் பட்டுள்ளது.
ஆனால் இந்த வசதிகள் யாவையும் முழுமையாக தங்களால் பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது என விடுதி மாணவர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் விடுதி யில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை, குளியலறை உள்ளிட்டவைகள் சுகாதார மற்ற நிலையில் இருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக் கின்றனர்.
தரமற்ற உணவு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விடுதியில் வழங் கப்படும் உணவுகள் தரமற்ற தாக இருப்பதோடு உணவில் புழுக்களும் இருப்பதாக விடுதி மாணவர்கள் கல்லூரி அலு வலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் விடுதி மாண வர்கள் அனைவரும் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர்.
முதல்வர் சமரசம்
சம்பவம் குறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விடுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவு தர மற்றதாக உள்ளது. மேலும் விடுதி அறைகளில் வசிக்கும் மாணவர்கள் ஒவ் வொருவரிட மும் மின் கட்டணமாக ரூ. 124-ம், உணவு கட்டணமாக ரூ. 1,850-ம் வசூலிக்கின்றனர் ஆனால் அதற்கான ரசீது வழங்குவதில்லை, கடந்த சில நாட்களாக விடுதி அறையில் இருக்கும் மடிக்கணினிகள் திருடு போகும் சம்பவம் நடக் கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்துபேசிய கல்லூரி முதல்வர்கந்தசாமி மாணவர்களின் அனைத்து புகார்கள் குறித்த விசாரணை யை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். மேலும் அனைத்து பிரச்சினை களை யும் தீர்க்க உடனடி நட வடிக்கையும் எடுக்கப்படும் என்றார். இதையடுத்துபோ ராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் கலைந்து சென்றனர்.
நிலக்கோட்டை,
மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை குறித்து கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வண்டியூர் அருகே உள்ள தீர்த்தக்காடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 23), வேலுபாண்டி (24), செல்லபாண்டி (23), மாந்தோப்பு விஜய் (23) ஆகிய 4 பேரும் சரண் அடைந்தனர். இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு நாகலட்சுமிதேவி உத்தரவிட்டார்.
திண்டுக்கல்,
உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற சம்பவம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடும் பஸ்சில் அறிமுகமாகி, கைவரிசை காட்டிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் அறிமுகம்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த கோம்பை அருகே உள்ள சின்னழகநாயக்கனூரை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 54). கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதற்காக, ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் தனது மகளுடன் அந்த ஆஸ்பத்திரிக்கு ராஜலட்சுமி சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சையை முடித்து விட்டு வேடசந்தூர் நோக்கி சென்ற ஒரு பஸ்சில் 2 பேரும் பயணம் செய்தனர்.
அப்போது அவர்களது இருக்கையின் பின்புறத்தில் உள்ள இருக்கையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அந்த நபர், ராஜலட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். ராஜலட்சுமியின் ஊர், முகவரி மற்றும் குடும்ப பின்னணி பற்றி கேட்டறிந்தார். தனது பெயர் மோகன் என்றும், தனது தந்தை ஒட்டன்சத்திரத்தில் போலீஸ்காரராக வேலை செய்வதாகவும் கூறி தன்னை அறிமுகப்படுத்தினார்.
முதியோர் உதவித்தொகை
தனக்கு தெரிந்த அதிகாரிகள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர் என்றும், அவர்கள் மூலம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாகவும் ராஜலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறினார். மேலும ராஜலட்சுமி கொடுத்த முகவரிப்படி அவரது வீட்டுக்கு அந்த நபர் சென்றார்.
மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு ராஜலட்சுமியை நேற்று வரச்சொன்னார்.
அதன்படி சின்னழகநாயக்கனூரில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு ராஜலட்சுமி பஸ்சில் வந்தார். ராஜலட்சுமியை எதிர்பார்த்து, திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அந்த நபர் காத்திருந்தார். ராஜலட்சுமி வந்தவுடன், அவரை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பஸ்சில் அவர் அழைத்து சென்றார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் ராஜலட்சுமியை அவர் உட்கார வைத்தார். பின்னர் ராஜலட்சுமியிடம் அந்த நபர், சங்கிலி மற்றும் கம்மல் அணிந்தபடி அதிகாரியை சந்தித்தால் வசதி படைத்தவர்கள் என்று கூறி உதவித்தொகை வழங்க மாட்டார் என்றும், கம்மல், சங்கிலி ஆகியவற்றை கழற்றும்படி சொன்னார்.
கம்மல், செல்போன் பறிப்பு
இதை உண்மையென நம்பிய ராஜலட்சுமியும் தான் அணிந்திருந்த சங்கிலி மற்றும் கம்மலை கழற்றினார். பின்னர் அவைகளை தான் வைத்திருந்த பணப்பையில் வைத்திருந்தார். அந்த பைக்குள் ஒரு செல்போன் மற்றும் ரூ.500 ஏற்கனவே இருந்தது. பணப்பையை தன்னிடம் தருமாறு அந்த வாலிபர் கேட்டார்.
அப்போது, தான் வைத்து கொள்வதாக ராஜலட்சுமி கூறினார். அதற்கு அந்த நபர், பையுடன் உள்ளே சென்றால் கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தியுள்ள கருவி மூலம் தங்க பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து, முதியோர் உதவித்தொகை தர மாட்டார்கள் என்று கூறி பணப்பையை வாங்கி கொண்டார்.
பின்னர் ராஜலட்சுமியை மரத்தடியில் உட்கார்ந்து இருக்குமாறு கூறி சென்ற அந்த நபர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பணப்பையுடன் அவர் மாயமாகி விட்டார். அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை ராஜலட்சுமி உணர்ந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராஜலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜலட்சுமி அணிந்திருந்த கம்மல் மட்டும் ½ பவுன் மதிப்புள்ள தங்க நகை என்றும், அந்த சங்கிலி ‘கவரிங்‘ என்றும் தெரியவந்தது.
இதற்கிடையே மூதாட்டியை ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலக்குண்டு அருகே ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அங்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேசன் கடையில் தகராறு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டியில் ரேசன் கடை உள்ளது, இந்த கடையில் 470 ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஊழியராக சுப்பிரமணியும், உதவியாளராக பட்சிராஜனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகலில் அந்த ஊரைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் ரேசன் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது சில பொருட்கள் இல்லை என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
சிறைபிடிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் ரேசன் கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணி, பட்சிராஜன் ஆகிய இரண்டு பேரையும் ரேசன் கடைக்குள் பூட்டி வைத்தனர். ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய் அலுவலர்கள் துரைப்பாண்டி, அபிராமி, கிராம நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விருவீடு போலீசார் ஆகியோர் தெப்பத்துப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் சுப்பிரமணி, பட்சிராஜன் இரண்டு பேரையும் வேறு ஊருக்கு இடம் மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் தெப்பத்துப்பட்டியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பான சூழ¢நிலை நிலவியது.
ரேசன் கடையில் தகராறு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டியில் ரேசன் கடை உள்ளது, இந்த கடையில் 470 ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஊழியராக சுப்பிரமணியும், உதவியாளராக பட்சிராஜனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகலில் அந்த ஊரைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் ரேசன் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது சில பொருட்கள் இல்லை என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
சிறைபிடிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் ரேசன் கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணி, பட்சிராஜன் ஆகிய இரண்டு பேரையும் ரேசன் கடைக்குள் பூட்டி வைத்தனர். ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய் அலுவலர்கள் துரைப்பாண்டி, அபிராமி, கிராம நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விருவீடு போலீசார் ஆகியோர் தெப்பத்துப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் சுப்பிரமணி, பட்சிராஜன் இரண்டு பேரையும் வேறு ஊருக்கு இடம் மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் தெப்பத்துப்பட்டியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பான சூழ¢நிலை நிலவியது.
வடமதுரை அருகே மூதாட்டியை கொலை செய்து பணம், நகையை மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டி கொலை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். (வயது 54). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எலிசபெத் ராணி (50). இவர் முள்ளிப்பாடியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு லியோ பிரான்சிஸ் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று எலிசபெத் ராணி வேலைக்கு சென்று விட்டார். மதியம் ஆரோக்கியதாஸ் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று இருந்தார். வீட்டில் ஆரோக்கியதாசின் தாயார் அந்தோணியம்மாள் (75) என்பவர் மட்டும் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் ஆரோக்கியதாசின் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு வீட்டில் இருந்த அந்தோணியம்மாளை அவர்கள் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நகை, பணம் கொள்ளை
பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சுமார் 6½ பவுன் தங்க நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றனர். பின்னர் வீடு திரும்பிய ஆரோக்கியதாஸ் வீட்டிற்குள் தாயார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவழகன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன், போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் ஆகியோர் விரைந்து வந்தனர்.
மோப்ப நாய் சோதனை
பின்னர் கைரேகை நிபுணர் வரவழைத்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மோப்ப நாய் லிண்டா வரவழைக்கப்பட்டு வீட்டில் உள்ள அறைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் செட்டியப்பட்டி பிரிவு வரை மோப்ப நாய் ஓடி நின்றது. ஆனால் யாரையும் மோப்ப நாய் கவ்வி பிடிக்கவில்லை.
அந்தோணியம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதர் அந்தோணியம்மாளிடம் பேசிக்கொண்டு இருந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர் கூறிய அடையாளத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டி கொலை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். (வயது 54). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எலிசபெத் ராணி (50). இவர் முள்ளிப்பாடியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு லியோ பிரான்சிஸ் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று எலிசபெத் ராணி வேலைக்கு சென்று விட்டார். மதியம் ஆரோக்கியதாஸ் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று இருந்தார். வீட்டில் ஆரோக்கியதாசின் தாயார் அந்தோணியம்மாள் (75) என்பவர் மட்டும் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் ஆரோக்கியதாசின் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு வீட்டில் இருந்த அந்தோணியம்மாளை அவர்கள் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நகை, பணம் கொள்ளை
பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சுமார் 6½ பவுன் தங்க நகைகளையும், ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றனர். பின்னர் வீடு திரும்பிய ஆரோக்கியதாஸ் வீட்டிற்குள் தாயார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அறிவழகன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன், போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் ஆகியோர் விரைந்து வந்தனர்.
மோப்ப நாய் சோதனை
பின்னர் கைரேகை நிபுணர் வரவழைத்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மோப்ப நாய் லிண்டா வரவழைக்கப்பட்டு வீட்டில் உள்ள அறைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் செட்டியப்பட்டி பிரிவு வரை மோப்ப நாய் ஓடி நின்றது. ஆனால் யாரையும் மோப்ப நாய் கவ்வி பிடிக்கவில்லை.
அந்தோணியம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதர் அந்தோணியம்மாளிடம் பேசிக்கொண்டு இருந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர் கூறிய அடையாளத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வத்தலக்குண்டுவில் ஆசைக்கு இணங்க மறுத்த கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கருத்து வேறுபாடு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் மாலதி. இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தினி என்ற மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர்.
மாலதி வத்தலக்குண்டுவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பாண்டியன் வீட்டுக்கு அருகே பண்ணைக்காட்டை சேர்ந்த மணிகண்டபிரபு (வயது 38) என்பவர் வாடகை வீட்டில் குடியிருக்க வந்தார். இவரும் திருமணம் ஆகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டபிரபு வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
மீண்டும் திருமணம்
இந்த நிலையில் மாலதி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியனிடம், மணிகண்டபிரபு கேட்டுக் கொண்டார். இதையொட்டி மணிகண்டபிரபுவுக்கும், மாலதிக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் இரண்டுபேரும் பாண்டியன் வீடு அருகிலேயே குடியிருந்து வந்தனர். தற்போது மாலதி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். மாலதி ஆன்மீகத்தில¢ அதிக ஈடுபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் இருந்து வந்தார்.
கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாலதியை ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டபிரபு வற்புறுத்தி உள்ளார். மாலதி கோவிலுக்கு விரதம் இருந்து வந்ததாலும், அருகில் 11 வயது மகள் நந்தினி தூங்கிக் கொண்டு இருந்ததாலும் அவர் கணவரின் அழைப்பை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டபிரபு வீட்டில் இருந்த போர்வையால் மாலதி முகத்தை மூடி மூச்சு த்திணற வைத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
நேற்று காலையில் பாண்டியன் தனது மகளை பார்ப்பதற்காக மாலதி வீட்டுக்கு சென்றார். ஆனால் அவரது வீடு பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டியன் பக்கத்து வீட்டுக் காரர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாலதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது மகள் நந்தினி அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
பரபரப்பு
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி, சப்-இன்ஸ¢பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சென்று மாலதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டபிரபுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கருத்து வேறுபாடு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் மாலதி. இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நந்தினி என்ற மகள் இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர்.
மாலதி வத்தலக்குண்டுவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பாண்டியன் வீட்டுக்கு அருகே பண்ணைக்காட்டை சேர்ந்த மணிகண்டபிரபு (வயது 38) என்பவர் வாடகை வீட்டில் குடியிருக்க வந்தார். இவரும் திருமணம் ஆகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டபிரபு வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
மீண்டும் திருமணம்
இந்த நிலையில் மாலதி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியனிடம், மணிகண்டபிரபு கேட்டுக் கொண்டார். இதையொட்டி மணிகண்டபிரபுவுக்கும், மாலதிக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்கள் இரண்டுபேரும் பாண்டியன் வீடு அருகிலேயே குடியிருந்து வந்தனர். தற்போது மாலதி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். மாலதி ஆன்மீகத்தில¢ அதிக ஈடுபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் கோவிலுக்கு செல்வதற்காக விரதம் இருந்து வந்தார்.
கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாலதியை ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டபிரபு வற்புறுத்தி உள்ளார். மாலதி கோவிலுக்கு விரதம் இருந்து வந்ததாலும், அருகில் 11 வயது மகள் நந்தினி தூங்கிக் கொண்டு இருந்ததாலும் அவர் கணவரின் அழைப்பை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டபிரபு வீட்டில் இருந்த போர்வையால் மாலதி முகத்தை மூடி மூச்சு த்திணற வைத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
நேற்று காலையில் பாண்டியன் தனது மகளை பார்ப்பதற்காக மாலதி வீட்டுக்கு சென்றார். ஆனால் அவரது வீடு பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டியன் பக்கத்து வீட்டுக் காரர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாலதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது மகள் நந்தினி அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
பரபரப்பு
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜி, சப்-இன்ஸ¢பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சென்று மாலதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டபிரபுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் 11–வது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததையடுத்து, அவருடைய 10 குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கிறார்கள். அவர்களை தாயில்லா குறை தெரியாமல் வளர்க்கப்போவதாக அவர்களுடைய தாத்தா கூறி உள்ளார்.
பிரசவத்தின்போது பெண் சாவு
திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியை சேர்ந்தவர் சுப்பன் (வயது 66). இவர், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 60). இவர்களுக்கு மணிகண்டன் (40) என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர்.
இதில் மணிகண்டனுக்கு சீலப்பாடியில் உள்ள உறவினர்கள் வழியில் சித்ரா (வயது 35) என்ற பெண்ணை கடந்த 1998–ம் ஆண்டு சுப்பன் திருமணம் செய்துவைத்தார். மணிகண்டனுக்கும், சித்ராவிற்கும் 10 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த நிலையில், 11–வது முறையாக கர்ப்பமான சித்ரா, பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது பரிதாபமாக இறந்தார்.
10 குழந்தைகளை பெற்றெடுத்த சித்ராவின் இறப்பு பற்றி அவருடைய மாமனார் சுப்பன் கூறியதாவது:–
10 குழந்தைகள்
மணிகண்டன், சித்ரா தம்பதிக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முத்தமிழ் முதல்வன் என்று பெயர் வைத்தோம். அவனுக்கு 15 வயது ஆகிறது. 10–ம் வகுப்பு அரசு தேர்வில் தோல்வியடைந்த அவன் மீண்டும் தேர்வு எழுத படித்துக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு அடுத்து மகாலட்சுமி (14) திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.
அதற்கு அடுத்ததாக பிறந்த சத்தியாலட்சுமி (13) 9–ம் வகுப்பும், யோகேஸ்வரி (12) 7–ம் வகுப்பும், யோகேஸ்வரன் (10) 5–ம் வகுப்பும், பிரபாகரன் (9) 4–ம் வகுப்பும், கொடியரசி (7) 2–ம் வகுப்பும், சீதா (4) தோட்டனூத்தில் உள்ள பால்வாடியிலும் படித்து வருகின்றனர். சீதாவிற்கு அடுத்ததாக குபேரன் (2), மாரீஸ்வரி (வயது 1) என 10 குழந்தைகள் உள்ளனர்.
குளிர்பானம்
இந்த நிலையில், சித்ரா 11–வது முறையாக கர்ப்பமானார். 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, திடீரென ஒரு நாள் சித்ராவிற்கு வயிற்று வலி வந்தது. கடையில் குளிர்பானம் வாங்கி கொடுங்கள் என்று கேட்டார். வாங்கி கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் வலி நின்று விட்டது என்றார். அதற்கு பின்பு 2 முறை வயிற்று வலி வந்து இருக்கிறது. அப்போதும் எனது மனைவி மூலம் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு சித்ரா சமாளித்து இருக்கிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்ட அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தோம். ஆஸ்பத்திரியில் அவருக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.
சித்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை 2 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டது. ஆனால் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்து கொள்ளாத காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது.
குழந்தைகள் தவிப்பு
அவரை இழந்து 10 குழந்தைகளும் தவிக்கிறார்கள்.
சித்ரா தனது குழந்தைகளை அளவு கடந்த பாசத்துடன் வளர்த்தார். அதைப்போலவே நானும் அவரது குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுகிறேன். விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. நான் அரசு வேலை பார்த்து ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இப்போது வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறேன். எனது மகன் கூலி வேலைதான் செய்து வருகிறார். அவர் சம்பாதித்து கொடுக்கும் பணத்தை கொண்டும், எனது வருமானத்தை வைத்தும் 10 குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திண்டுக்கல்லில் 11–வது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்ததையடுத்து, அவருடைய 10 குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கிறார்கள். அவர்களை தாயில்லா குறை தெரியாமல் வளர்க்கப்போவதாக அவர்களுடைய தாத்தா கூறி உள்ளார்.
பிரசவத்தின்போது பெண் சாவு
திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியை சேர்ந்தவர் சுப்பன் (வயது 66). இவர், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 60). இவர்களுக்கு மணிகண்டன் (40) என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர்.
இதில் மணிகண்டனுக்கு சீலப்பாடியில் உள்ள உறவினர்கள் வழியில் சித்ரா (வயது 35) என்ற பெண்ணை கடந்த 1998–ம் ஆண்டு சுப்பன் திருமணம் செய்துவைத்தார். மணிகண்டனுக்கும், சித்ராவிற்கும் 10 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த நிலையில், 11–வது முறையாக கர்ப்பமான சித்ரா, பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது பரிதாபமாக இறந்தார்.
10 குழந்தைகளை பெற்றெடுத்த சித்ராவின் இறப்பு பற்றி அவருடைய மாமனார் சுப்பன் கூறியதாவது:–
10 குழந்தைகள்
மணிகண்டன், சித்ரா தம்பதிக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முத்தமிழ் முதல்வன் என்று பெயர் வைத்தோம். அவனுக்கு 15 வயது ஆகிறது. 10–ம் வகுப்பு அரசு தேர்வில் தோல்வியடைந்த அவன் மீண்டும் தேர்வு எழுத படித்துக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு அடுத்து மகாலட்சுமி (14) திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.
அதற்கு அடுத்ததாக பிறந்த சத்தியாலட்சுமி (13) 9–ம் வகுப்பும், யோகேஸ்வரி (12) 7–ம் வகுப்பும், யோகேஸ்வரன் (10) 5–ம் வகுப்பும், பிரபாகரன் (9) 4–ம் வகுப்பும், கொடியரசி (7) 2–ம் வகுப்பும், சீதா (4) தோட்டனூத்தில் உள்ள பால்வாடியிலும் படித்து வருகின்றனர். சீதாவிற்கு அடுத்ததாக குபேரன் (2), மாரீஸ்வரி (வயது 1) என 10 குழந்தைகள் உள்ளனர்.
குளிர்பானம்
இந்த நிலையில், சித்ரா 11–வது முறையாக கர்ப்பமானார். 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, திடீரென ஒரு நாள் சித்ராவிற்கு வயிற்று வலி வந்தது. கடையில் குளிர்பானம் வாங்கி கொடுங்கள் என்று கேட்டார். வாங்கி கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் வலி நின்று விட்டது என்றார். அதற்கு பின்பு 2 முறை வயிற்று வலி வந்து இருக்கிறது. அப்போதும் எனது மனைவி மூலம் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு சித்ரா சமாளித்து இருக்கிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்ட அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தோம். ஆஸ்பத்திரியில் அவருக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.
சித்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை 2 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டது. ஆனால் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்து கொள்ளாத காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது.
குழந்தைகள் தவிப்பு
அவரை இழந்து 10 குழந்தைகளும் தவிக்கிறார்கள்.
சித்ரா தனது குழந்தைகளை அளவு கடந்த பாசத்துடன் வளர்த்தார். அதைப்போலவே நானும் அவரது குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுகிறேன். விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. நான் அரசு வேலை பார்த்து ஓய்வூதியம் பெற்று வருகிறேன். இப்போது வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறேன். எனது மகன் கூலி வேலைதான் செய்து வருகிறார். அவர் சம்பாதித்து கொடுக்கும் பணத்தை கொண்டும், எனது வருமானத்தை வைத்தும் 10 குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மாணவி கற்பழித்து கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை அடுத்த தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாட்டுக்காரன் என்கிற பூசாரி. இவரது மகன் மாதப்பன். விவசாயி. மாதப்பனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு செவ்வந்தி (வயது 15) என்ற மகள் இருந்தார். செவ்வந்தி பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை தினமும் கோவிந்தசாமி பள்ளிக்கு கூட்டி செல்வது வழக்கம். கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந் தேதி கோவிந்தசாமி விவசாய வேலைக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சித்ரா மாணவியை மாதப்பனுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போது மாதப்பன் தொட்லாம்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றிற்கு மாணவியை கடத்தி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை அதே கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.
விவசாயிக்கு ஆயுள் தண்டனை
அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாணவி உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாதப்பனை போலீசார் கைது வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி குற்றம்சாட்டப்பட்ட விவசாயி மாதப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை நிவாரண உதவியாக அந்த மாணவியின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மாணவி கற்பழித்து கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை அடுத்த தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாட்டுக்காரன் என்கிற பூசாரி. இவரது மகன் மாதப்பன். விவசாயி. மாதப்பனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு செவ்வந்தி (வயது 15) என்ற மகள் இருந்தார். செவ்வந்தி பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை தினமும் கோவிந்தசாமி பள்ளிக்கு கூட்டி செல்வது வழக்கம். கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந் தேதி கோவிந்தசாமி விவசாய வேலைக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சித்ரா மாணவியை மாதப்பனுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போது மாதப்பன் தொட்லாம்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றிற்கு மாணவியை கடத்தி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை அதே கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.
விவசாயிக்கு ஆயுள் தண்டனை
அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாணவி உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாதப்பனை போலீசார் கைது வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி குற்றம்சாட்டப்பட்ட விவசாயி மாதப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை நிவாரண உதவியாக அந்த மாணவியின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...








