Thursday, September 18, 2014
On Thursday, September 18, 2014 by farook press in kanniyakumari
திருவட்டார் அருகே மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
தெருவிளக்கு எரியவில்லை
திருவட்டாரை அடுத்துள்ள வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18-வது வார்டுகளில் கல்லறவிளை, செக்காளவிளை, கொட்டாரவிளை, கொச்சன்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சுமார் 3 மாதங்களாக எரியவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளை உடனே சரிசெய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகம், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
நூதன போராட்டம்
இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு தெருவில் திரண்ட அந்த பகுதி மக்கள் அங்குள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைத்தனர். மேலும், தங்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி கோரிக்கையை வற்புறுத்தி கோஷம் எழுப்பினர்.
இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறும்போது,“ தெரு விளக்குகள் எரியாததால் இரவில் பெண்கள் நடமாட அஞ்சும் நிலை உள்ளது. மேலும், நகை பறிப்பு உள்பட குற்றச்செயல்களும் நடைபெறுவதால் உடனடியாக தெருவிளக்குகளை எரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்“ என்று தெரிவித்தனர்.
தெருவிளக்கு எரியவில்லை
திருவட்டாரை அடுத்துள்ள வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18-வது வார்டுகளில் கல்லறவிளை, செக்காளவிளை, கொட்டாரவிளை, கொச்சன்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சுமார் 3 மாதங்களாக எரியவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளை உடனே சரிசெய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகம், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
நூதன போராட்டம்
இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு தெருவில் திரண்ட அந்த பகுதி மக்கள் அங்குள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைத்தனர். மேலும், தங்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி கோரிக்கையை வற்புறுத்தி கோஷம் எழுப்பினர்.
இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறும்போது,“ தெரு விளக்குகள் எரியாததால் இரவில் பெண்கள் நடமாட அஞ்சும் நிலை உள்ளது. மேலும், நகை பறிப்பு உள்பட குற்றச்செயல்களும் நடைபெறுவதால் உடனடியாக தெருவிளக்குகளை எரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்“ என்று தெரிவித்தனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. குமரி மாவட்டத்தில் ஓட்டு போட வேண்டிய வாக்காளர்கள் எந்த எந்த இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் 33 உள்ளாட்சி பதவிகளுக்கு 107 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் மற்றும் ஓட்டு போடவேண்டிய இடங்கள் வருமாறு:–
நகரசபை
நாகர்கோவில் நகரசபை 37–வது வார்டு–பறக்கை ரோடு சந்திப்பில் உள்ள அரசு தொடக்கப்பளி, பத்மநாபபுரம் 11–வது வார்டு–தக்கலை அரசுமேல்நிலைப்பள்ளி, குழித்துறை 10–வது வார்டு–விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, 20–வது வார்டு–மார்த்தாண்டம் மாதவவிலாசம் நடுநிலைப்பள்ளி.
பேரூராட்சி
திற்பரப்பு 4–வது வார்டு–சேக்கல் புனித பீட்டர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, ஏழுதேசம் 11–வது வார்டு–ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்றூர் 1–வது வார்டு–தோட்டவாரம் அரசு நடுநிலைப்பள்ளி, கொட்டாரம் 4–வது வார்டு–பெருமாள்புரம் யூனியன் அலுவலகம், கணபதிபுரம் 1–வது வார்டு–சூரப்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி, கொல்லங்கோடு 8–வது வார்டு–கொல்லங்கோடு ஸ்ரீதேவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாகோடு 12–வது வார்டு–பேரை அரசு நடுநிலைப்பள்ளி, திங்கள்நகர் 11–வது வார்டு–மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, பளுகல் 5–வது வார்டு–பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி, இரணியல் 13–வது வார்டு–இரணியல் அரசு நடுநிலைப்பள்ளி, ரீத்தாபுரம் 2–வது வார்டு–சரல்விளை அரசு நடுநிலைப்பள்ளி.
ஊராட்சி ஒன்றியம்–மாவட்ட பஞ்சாயத்து
மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 5–வது வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து 1–வது வார்டு (மேல்புறம்) வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய இடங்கள்:
மஞ்சாலுமூடு ஊராட்சிக்கு உட்பட்ட முக்கூட்டுக்கல் திருக்குடும்ப தொடக்கப்பள்ளி, மஞ்சாலுமூடு அரசு தொடக்கப்பள்ளி, முழுக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பந்தல்விளை காமராஜர் நினைவு உயர்நிலைப்பள்ளி.
ஊராட்சி வார்டுகள்
தேரேகால்புதூர் 9–வது வார்டு–கோதைகிராமம் அரசு தொடக்கப்பள்ளி, தோவாளை 4–வது வார்டு–தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மபுரம் 6–வது வார்டு–காற்றாடித்தட்டு அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளிச்சந்தை 4–வது வார்டு–சரல் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, 10–வது வார்டு–வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளி, குருந்தன்கோடு 4–வது வார்டு–கொடுப்பைக்குழி அரசு தொடக்கப்பள்ளி, ஆத்திவிளை 4–வது வார்டு–ஆலங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, பேச்சிப்பாறை 2–வது வார்டு–குற்றியார் அரசு ரப்பர்கழக நடுநிலைப்பள்ளி, செறுகோல் 3–வது வார்டு–செறுகோல் அரசு தொடக்கப்பள்ளி, மத்திக்கோடு 10–வது வார்டு–மாத்திரவிளை புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி.
மிடாலம் 5–வது வார்டு–உதயமார்த்தாண்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, நட்டாலம் 6–வது வார்டு–வாழைத்தோட்டம் அரசு தொடக்கப்பள்ளி, விளாத்துறை 15–வது வார்டு–தும்பாலி தூய இருதய அன்னை தொடக்கப்பள்ளி, குளப்புறம் 1–வது வார்டு–பிராகோடு கிறிஸ்து அரசர் உயர்நிலைப்பள்ளி, மெதுகும்மல் 9–வது வார்டு–வாறுதட்டு எம்.எம்.கே.எம்.உயர்நிலைப்பள்ளி, மலையடி 7–வது வார்டு–மேல்பாலை அரசு தொடக்கப்பள்ளி.
காலை 7 மணிமுதல்...
மேற்கண்ட வாக்குச்சாவடிகளில் நகரசபை மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பிற வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுச்சீட்டுகளும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது.
இதை முன்னிட்டு அந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணியில் மொத்தம் 700 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
உள்ளாட்சி இடைத்தேர்தல்
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள பதவிகளுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு உள்பட மொத்தம் 35 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
7 உள்ளாட்சி பதவிகள்
பின்னர் கடந்த 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலின்படி ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு, பவானி நகராட்சி 7-வது வார்டு, சத்தியமங்கலம் ஒன்றியம் 15-வது வார்டு மற்றும் கோபி ஒன்றியம் 8-வது வார்டு ஆகிய 6 வார்டு கவுன்சிலர் பதவி மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜன் நகர் ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. பிற பதவிகளுக்கும் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
24 பேர் போட்டி
ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 8 பேர் போட்டியில் உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1.டி.பாலசுப்பிரமணியம் (அ.தி.மு.க.)
2.பி.பிரபு (காங்கிரஸ்)
3.கே.மணி (பா.ஜனதா),
4.பி.ராஜா (மா.கம்யூனிஸ்டு)
5.கே.சுரேஷ் (சுயே.)
6.செந்தில்குமார் (சுயே.)
7.மெய்வேல்(சுயே.)
8.மோகனசுந்தரம் (சுயே.)
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 24 பேர் போட்டியிடுகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்குகிறது
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கை விரலில் வைக்கப்படும் மை மற்றும் தேர்தலுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு அந்தந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
உள்ளாட்சி இடைத்தேர்தல்
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள பதவிகளுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு உள்பட மொத்தம் 35 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் போட்டியிடுபவர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
7 உள்ளாட்சி பதவிகள்
பின்னர் கடந்த 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலின்படி ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு, மாவட்ட ஊராட்சிக்குழு 3-வது வார்டு, பவானி நகராட்சி 7-வது வார்டு, சத்தியமங்கலம் ஒன்றியம் 15-வது வார்டு மற்றும் கோபி ஒன்றியம் 8-வது வார்டு ஆகிய 6 வார்டு கவுன்சிலர் பதவி மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராஜன் நகர் ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. பிற பதவிகளுக்கும் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
24 பேர் போட்டி
ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 8 பேர் போட்டியில் உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1.டி.பாலசுப்பிரமணியம் (அ.தி.மு.க.)
2.பி.பிரபு (காங்கிரஸ்)
3.கே.மணி (பா.ஜனதா),
4.பி.ராஜா (மா.கம்யூனிஸ்டு)
5.கே.சுரேஷ் (சுயே.)
6.செந்தில்குமார் (சுயே.)
7.மெய்வேல்(சுயே.)
8.மோகனசுந்தரம் (சுயே.)
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 7 உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 24 பேர் போட்டியிடுகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்குகிறது
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கை விரலில் வைக்கப்படும் மை மற்றும் தேர்தலுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு அந்தந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
கதிரம்பட்டி மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அடிப்படை வசதிகள்
கதிரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வடிகால் வசதி, மின்சார வசதி, ரோடு வசதி உள்பட பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.
இங்குள்ளவர்கள் வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி ஆகியவையும் அரசுக்கு செலுத்தி வருகின்றனர். மேலும் அரசின் சார்பில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவையும் இங்குள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
எம்.எல்.ஏ. தலைமையில் மனு
இதேப்பகுதியில் மின்வாரியத்தின் துணை மின்நிலையமும், மின்வாரிய குடியிருப்புகளும் உள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த கிராமம் என்ற ஜனாதிபதி விருதையும் இந்த கிராமம் பெற்று உள்ளது. எனவே இங்குள்ளவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுத்து உள்ளனர்.
இந்தநிலையில் வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
வீடுகளை அகற்ற...
கதிரம்பட்டி ஊராட்சியில் மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு வேறு வீடுகள் எதுவும் இல்லை.
இந்தநிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் வீடுகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே இங்குள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதில், மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஈரோடு ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மாள் முத்துசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அடிப்படை வசதிகள்
கதிரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் வடிகால் வசதி, மின்சார வசதி, ரோடு வசதி உள்பட பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.
இங்குள்ளவர்கள் வீட்டு வரி, நில வரி, தண்ணீர் வரி ஆகியவையும் அரசுக்கு செலுத்தி வருகின்றனர். மேலும் அரசின் சார்பில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை ஆகியவையும் இங்குள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
எம்.எல்.ஏ. தலைமையில் மனு
இதேப்பகுதியில் மின்வாரியத்தின் துணை மின்நிலையமும், மின்வாரிய குடியிருப்புகளும் உள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த கிராமம் என்ற ஜனாதிபதி விருதையும் இந்த கிராமம் பெற்று உள்ளது. எனவே இங்குள்ளவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுத்து உள்ளனர்.
இந்தநிலையில் வெள்ளப்பாறை, மணல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
வீடுகளை அகற்ற...
கதிரம்பட்டி ஊராட்சியில் மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு வேறு வீடுகள் எதுவும் இல்லை.
இந்தநிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் வீடுகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மணல்மேடு மற்றும் வெள்ளப்பாறை பகுதியில் உள்ள வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே இங்குள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதில், மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஈரோடு ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மாள் முத்துசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
தரமான உணவு வழங்கக் கோரி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி விடுதி
பழனி-திண்டுக்கல் ரோட் டில் அமைந்துள்ள பழனி யாண்டவர் பாலிடெ க்னிக் கல்லூரி மாணவர்களில் 243 மாணவர்கள் கல்லூரி வளாகத் தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர் களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் அடிப் படை வசதிகள் செய்து தரப் பட்டுள்ளது.
ஆனால் இந்த வசதிகள் யாவையும் முழுமையாக தங்களால் பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது என விடுதி மாணவர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் விடுதி யில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை, குளியலறை உள்ளிட்டவைகள் சுகாதார மற்ற நிலையில் இருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக் கின்றனர்.
தரமற்ற உணவு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விடுதியில் வழங் கப்படும் உணவுகள் தரமற்ற தாக இருப்பதோடு உணவில் புழுக்களும் இருப்பதாக விடுதி மாணவர்கள் கல்லூரி அலு வலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் விடுதி மாண வர்கள் அனைவரும் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர்.
முதல்வர் சமரசம்
சம்பவம் குறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விடுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவு தர மற்றதாக உள்ளது. மேலும் விடுதி அறைகளில் வசிக்கும் மாணவர்கள் ஒவ் வொருவரிட மும் மின் கட்டணமாக ரூ. 124-ம், உணவு கட்டணமாக ரூ. 1,850-ம் வசூலிக்கின்றனர் ஆனால் அதற்கான ரசீது வழங்குவதில்லை, கடந்த சில நாட்களாக விடுதி அறையில் இருக்கும் மடிக்கணினிகள் திருடு போகும் சம்பவம் நடக் கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்துபேசிய கல்லூரி முதல்வர்கந்தசாமி மாணவர்களின் அனைத்து புகார்கள் குறித்த விசாரணை யை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். மேலும் அனைத்து பிரச்சினை களை யும் தீர்க்க உடனடி நட வடிக்கையும் எடுக்கப்படும் என்றார். இதையடுத்துபோ ராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் கலைந்து சென்றனர்.
கல்லூரி விடுதி
பழனி-திண்டுக்கல் ரோட் டில் அமைந்துள்ள பழனி யாண்டவர் பாலிடெ க்னிக் கல்லூரி மாணவர்களில் 243 மாணவர்கள் கல்லூரி வளாகத் தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர் களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் அடிப் படை வசதிகள் செய்து தரப் பட்டுள்ளது.
ஆனால் இந்த வசதிகள் யாவையும் முழுமையாக தங்களால் பயன்படுத்த முடி யாத நிலை உள்ளது என விடுதி மாணவர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் விடுதி யில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை, குளியலறை உள்ளிட்டவைகள் சுகாதார மற்ற நிலையில் இருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக் கின்றனர்.
தரமற்ற உணவு
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விடுதியில் வழங் கப்படும் உணவுகள் தரமற்ற தாக இருப்பதோடு உணவில் புழுக்களும் இருப்பதாக விடுதி மாணவர்கள் கல்லூரி அலு வலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் விடுதி மாண வர்கள் அனைவரும் கல்லூரி முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர்.
முதல்வர் சமரசம்
சம்பவம் குறித்து தகவலறிந்த கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கந்தசாமி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத் தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விடுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவு தர மற்றதாக உள்ளது. மேலும் விடுதி அறைகளில் வசிக்கும் மாணவர்கள் ஒவ் வொருவரிட மும் மின் கட்டணமாக ரூ. 124-ம், உணவு கட்டணமாக ரூ. 1,850-ம் வசூலிக்கின்றனர் ஆனால் அதற்கான ரசீது வழங்குவதில்லை, கடந்த சில நாட்களாக விடுதி அறையில் இருக்கும் மடிக்கணினிகள் திருடு போகும் சம்பவம் நடக் கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்துபேசிய கல்லூரி முதல்வர்கந்தசாமி மாணவர்களின் அனைத்து புகார்கள் குறித்த விசாரணை யை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். மேலும் அனைத்து பிரச்சினை களை யும் தீர்க்க உடனடி நட வடிக்கையும் எடுக்கப்படும் என்றார். இதையடுத்துபோ ராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்கள் கலைந்து சென்றனர்.
நிலக்கோட்டை,
மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை குறித்து கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வண்டியூர் அருகே உள்ள தீர்த்தக்காடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 23), வேலுபாண்டி (24), செல்லபாண்டி (23), மாந்தோப்பு விஜய் (23) ஆகிய 4 பேரும் சரண் அடைந்தனர். இவர்களை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு நாகலட்சுமிதேவி உத்தரவிட்டார்.
திண்டுக்கல்,
உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற சம்பவம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடும் பஸ்சில் அறிமுகமாகி, கைவரிசை காட்டிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் அறிமுகம்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த கோம்பை அருகே உள்ள சின்னழகநாயக்கனூரை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 54). கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதற்காக, ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் தனது மகளுடன் அந்த ஆஸ்பத்திரிக்கு ராஜலட்சுமி சென்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சையை முடித்து விட்டு வேடசந்தூர் நோக்கி சென்ற ஒரு பஸ்சில் 2 பேரும் பயணம் செய்தனர்.
அப்போது அவர்களது இருக்கையின் பின்புறத்தில் உள்ள இருக்கையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அந்த நபர், ராஜலட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். ராஜலட்சுமியின் ஊர், முகவரி மற்றும் குடும்ப பின்னணி பற்றி கேட்டறிந்தார். தனது பெயர் மோகன் என்றும், தனது தந்தை ஒட்டன்சத்திரத்தில் போலீஸ்காரராக வேலை செய்வதாகவும் கூறி தன்னை அறிமுகப்படுத்தினார்.
முதியோர் உதவித்தொகை
தனக்கு தெரிந்த அதிகாரிகள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர் என்றும், அவர்கள் மூலம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாகவும் ராஜலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறினார். மேலும ராஜலட்சுமி கொடுத்த முகவரிப்படி அவரது வீட்டுக்கு அந்த நபர் சென்றார்.
மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு ராஜலட்சுமியை நேற்று வரச்சொன்னார்.
அதன்படி சின்னழகநாயக்கனூரில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு ராஜலட்சுமி பஸ்சில் வந்தார். ராஜலட்சுமியை எதிர்பார்த்து, திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அந்த நபர் காத்திருந்தார். ராஜலட்சுமி வந்தவுடன், அவரை கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பஸ்சில் அவர் அழைத்து சென்றார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் ராஜலட்சுமியை அவர் உட்கார வைத்தார். பின்னர் ராஜலட்சுமியிடம் அந்த நபர், சங்கிலி மற்றும் கம்மல் அணிந்தபடி அதிகாரியை சந்தித்தால் வசதி படைத்தவர்கள் என்று கூறி உதவித்தொகை வழங்க மாட்டார் என்றும், கம்மல், சங்கிலி ஆகியவற்றை கழற்றும்படி சொன்னார்.
கம்மல், செல்போன் பறிப்பு
இதை உண்மையென நம்பிய ராஜலட்சுமியும் தான் அணிந்திருந்த சங்கிலி மற்றும் கம்மலை கழற்றினார். பின்னர் அவைகளை தான் வைத்திருந்த பணப்பையில் வைத்திருந்தார். அந்த பைக்குள் ஒரு செல்போன் மற்றும் ரூ.500 ஏற்கனவே இருந்தது. பணப்பையை தன்னிடம் தருமாறு அந்த வாலிபர் கேட்டார்.
அப்போது, தான் வைத்து கொள்வதாக ராஜலட்சுமி கூறினார். அதற்கு அந்த நபர், பையுடன் உள்ளே சென்றால் கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தியுள்ள கருவி மூலம் தங்க பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து, முதியோர் உதவித்தொகை தர மாட்டார்கள் என்று கூறி பணப்பையை வாங்கி கொண்டார்.
பின்னர் ராஜலட்சுமியை மரத்தடியில் உட்கார்ந்து இருக்குமாறு கூறி சென்ற அந்த நபர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பணப்பையுடன் அவர் மாயமாகி விட்டார். அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை ராஜலட்சுமி உணர்ந்தார்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராஜலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜலட்சுமி அணிந்திருந்த கம்மல் மட்டும் ½ பவுன் மதிப்புள்ள தங்க நகை என்றும், அந்த சங்கிலி ‘கவரிங்‘ என்றும் தெரியவந்தது.
இதற்கிடையே மூதாட்டியை ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலக்குண்டு அருகே ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அங்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேசன் கடையில் தகராறு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டியில் ரேசன் கடை உள்ளது, இந்த கடையில் 470 ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஊழியராக சுப்பிரமணியும், உதவியாளராக பட்சிராஜனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகலில் அந்த ஊரைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் ரேசன் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது சில பொருட்கள் இல்லை என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
சிறைபிடிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் ரேசன் கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணி, பட்சிராஜன் ஆகிய இரண்டு பேரையும் ரேசன் கடைக்குள் பூட்டி வைத்தனர். ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய் அலுவலர்கள் துரைப்பாண்டி, அபிராமி, கிராம நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விருவீடு போலீசார் ஆகியோர் தெப்பத்துப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் சுப்பிரமணி, பட்சிராஜன் இரண்டு பேரையும் வேறு ஊருக்கு இடம் மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் தெப்பத்துப்பட்டியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பான சூழ¢நிலை நிலவியது.
ரேசன் கடையில் தகராறு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் ரெங்கப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெப்பத்துப்பட்டியில் ரேசன் கடை உள்ளது, இந்த கடையில் 470 ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஊழியராக சுப்பிரமணியும், உதவியாளராக பட்சிராஜனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகலில் அந்த ஊரைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் ரேசன் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது சில பொருட்கள் இல்லை என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
சிறைபிடிப்பு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் ரேசன் கடைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுப்பிரமணி, பட்சிராஜன் ஆகிய இரண்டு பேரையும் ரேசன் கடைக்குள் பூட்டி வைத்தனர். ரேசன் கடை ஊழியர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய் அலுவலர்கள் துரைப்பாண்டி, அபிராமி, கிராம நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் விருவீடு போலீசார் ஆகியோர் தெப்பத்துப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் சுப்பிரமணி, பட்சிராஜன் இரண்டு பேரையும் வேறு ஊருக்கு இடம் மாற்றம் செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினார்கள். இதைத்தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் தெப்பத்துப்பட்டியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பான சூழ¢நிலை நிலவியது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...







