Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by Unknown in ,    
Displaying 001.jpgதிருப்பூரில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 17 அமைச்சர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை யொட்டி பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் முதல் முறையாக சந்தித்த இடமான ரெயில் நிலையம் அருகில் உள்ள புஷ்பா தியேட்டர் அருகில் ரவுண்டாணாவில் அமைக்கபபட்டிடிருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன்,சமுக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி,உயர்க்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்,உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி,கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, கைத்தறி மற்றும் துணி நூல்ததுறை  அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், செய்தித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுசுழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரஹீம்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்,தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவர் தமிழ்மகன் உசேன்,தமிழ்நாடு கேபிள் டி.வி.நிறுவனத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, அவினாசி எம்.எல்.ஏ.கருப்பசாமி, உத்திரமேரூர் எம்.எல் ஏ.வாலஜாபாத் கணேசன், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் மலர் தூவி  அஞ்சலி செலுத்தினர். 
நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாமன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி வேலுசாமி,  சிணசாமி, சி.பி.வசந்தமணி, கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, சி.எஸ்.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன், ராஜ்குமார், அசோக்குமார்,அன்னபூரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by Unknown   





இந்தி திணிப்பு குறித்து தி.மு.க. இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாகவும், கனிமொழிக்காக தமிழ்மொழியை திரு.கருணாநிதி அடமானம் வைத்துள்ளார் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது அம்மொழி திணிக்கப்பட்டால், அதனை எதிர்த்து முறியடிக்க அ.இ.அ.தி.மு.க. உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானிய குழுவின் சுற்றறிக்கை தமிழகத்திற்கு அறவே பொருந்தாது என்றும் முதலமைச்சர் உறுதிப்பட கூறியுள்ளார். 

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க. சார்பில் திரு. டி.கே.எஸ். இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டி, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்- இந்தச் சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் கடந்த 16-ம் தேதி கிடைக்கப் பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சுற்றறிக்கையைப் படித்துப் பார்க்கும் போது, அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதியின் 30-வது கூட்டம் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி அன்றைய பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்றதும், அந்தக் கூட்ட நடவடிக்கை குறிப்பின்படி, பட்டப் படிப்பில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் ஒரு முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்பு பயில்வோருக்கு கட்டாயமாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இருப்பது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்பதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை பல்கலைக்கழகங்களிடம் பல்கலைக்கழக மானியக் குழு கோரியுள்ளதும் தெரிய வருகிறது. 

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் அல்லது இந்தி படித்து பட்டம் பெறுகின்றனர் என்றும், இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களின் செயல்பாட்டிற்கு தேவையான மொழி பெயர்க்கும் திறன் அவர்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்து; குஜராத்தில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் படிப்பதை பல்கலைக்கழக மானியக் குழு உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரைகளின்படி, சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. 

இதிலிருந்து, இந்தி மொழி திணிக்கும் முயற்சிக்கு அடிப்படைக் காரணம், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதி கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி எடுத்த முடிவுகள் தான் என்பது தெரிய வருகிறது. அப்போது மத்தியிலே ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த கூட்டணி அரசிலே அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இப்படிப்பட்ட ஒரு முடிவை முந்தைய மத்திய அரசு எடுத்த போது வாய் திறக்காத தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி, தற்போது திரு. டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அப்போது, “இந்தி மொழி” பற்றி கூறினால் “கனிமொழி” ஜாமீனில் வெளிவர முடியாது என்று பயந்து வாய்மூடி மவுனியாக இருந்தவர், இன்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருப்பது தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டைத் தான் எடுத்துக் காட்டுகிறது – இதிலிருந்து, கனிமொழிக்காக தமிழ் மொழியை திரு. கருணாநிதி அடமானம் வைத்தது அம்பலமாகி உள்ளது. 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

1963-ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தில், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்த வரையில், மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்பட்ட 1976-ம் ஆண்டைய, மத்திய அரசின் அலுவலகப் பயன்பாட்டுக்கான அலுவல் மொழிகள் விதிகளின்படி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் சண்டிகர், டாமன், டையூ, தாத்ரா மற்றும் நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் “மண்டலம் B” என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. “மண்டலம் B”-ன் கீழ் வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான மத்திய அரசின் தகவல் பரிமாற்றம் சாதாரணமாக இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டால் அத்துடன் இந்தி மொழி பெயர்ப்பும் அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் “மண்டலம் C” என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. “மண்டலம் C”-ன் கீழ் வரும் மாநிலங்களுடனான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது – எனவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தச் சுற்றறிக்கை அறவே பொருந்தாது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தாம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்; ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கற்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்பதோடு மட்டுமல்லாமல், சட்டத்திற்கும் புறம்பானது ஆகும். 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் பகுதியாகவும், ஆங்கிலம் இரண்டாம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும் தொடர்ந்து இருக்கும் என்பதையும்; கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதையும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார், பாரதீய ஜனதா வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிடுகிறார்கள்.
வெற்றிக்கனியை பறித்து விடவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர். தேர்தல் பிரசாரம் 15–ந் தேதி மாலையுடன் ஓய்ந்தது. அதன் பின்னர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்காக 100 வார்டுகளிலும் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 236 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆர்வமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் வாகனங்களில் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதேபோல் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு யூனியன் 12–வது வார்டுக்கும், சூலூர் யூனியனில் 7 மற்றும் 12–வது வார்டுக்கும், சூலூர், இருகூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கும், கோட்டூர் பேரூராட்சி 10–வது வார்டு, வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி 9–வது வார்டு, எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி 3–வது வார்டுக்கும் இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது. அங்கும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
ஊராட்சி அமைப்புகளில் பில்சின்னாம்பாளையம் 6–வது வார்டு, கோமங்கலம் 6–வது வார்டு, கரியாஞ்செட்டி பாளையம் 2–வதுவார்டு, சூலக்கல் 3–வது வார்டு, தேவனாம் பாளையம் 8–வது வார்டு, பெத்தநாயக்கனூர் 9–வது வார்டு, வடக்கலூர் 7–வது வார்டு, காளம் பாளையம் 3–வது வார்டு, பெத்தநாயக்கனூர் 7–வது வார்டுகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 22 பதவிகளுக்கு 72 பேர் களத்தில் உள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் 22 மற்றும் 45–வது வார்டுகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
அவினாசி யூனியன் 16–வது வார்டு, உடுமலை யூனியன் 6–வது வார்டு, பல்லடம் யூனியன் 10–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 8 பேரும் போட்டியிடுகிறார்கள்.
பல்லடம் நகராட்சி 6–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர், மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 8 பேரும், தளி பேரூராட்சி 5–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும் போட்டியிடுகிறார்கள்.3 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 14 பேரும், 9 பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 19 பேரும் களத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 14 காலியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 11 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள கூடலூர் யூனியன் 3–வது வார்டு கவுன்சிலர் பதவி, கீழ்குந்தா பேருராட்சி 1–வது வார்டு கவுன்சிலர் பதவி, 7–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும் இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரிவாள் வெட்டு

சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 46). அ.தி.மு.க.பிரமுகரான இவர், கடந்த 5-ந் தேதி அன்று, சிந்தாதிரிப்பேட்டையில் அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயம் அடைந்த இவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். மோட்டார் சைக்கிளில் வந்து, கோபிநாத்தை வெட்டிய மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தட்டான்பழனி என்பவர், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி விட்டு, கோபிநாத்தை தீர்த்துக்கட்ட முயற்சித்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீஸ் தேடிய தட்டான் பழனி, பிள்ளையார் கணேசன் ஆகியோர் பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.

கூலிப்படையினர் கைது

தட்டான் பழனி ஏவி விட்ட கூலிப்படை ஆசாமிகள் தினேஷ் (வயது 23), கணேசன் (24) ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் தினேஷ் பயங்கர ரவுடி ஆவார். கூலிக்காக ஆள்கடத்தல், கை-காலை வெட்டுதல், தலையை வெட்டி கொலை செய்தல் போன்ற பயங்கர குற்றங்களில் ஈடுபடுபவர், என்று கூறப்படுகிறது.

கூலிக்காக கொலை செய்ய 3 பேர் இவரது பட்டியலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

இதுபோல கூலிக்காக கொலை செய்யும் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஷிஎன்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஆலந்தூர்,
சென்னை தரமணி பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் அழகு உத்தரவின் பேரில், தரமணி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், போலீஸ்காரர் ஷிபு, இளைஞர் காவல் படை காவலர் விஷ்ணு ஆகியோர் தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தது சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த அப்துல்அலீம் (வயது 39) என்பது தெரியவந்தது.
அவரது ஆட்டோவில் 2 அரிவாள் மற்றும் 3 கத்திகள் இருந்தன. இதுபற்றி அவரிடம் விசாரித்த போது ஆட்டோவில் தனது நண்பர்கள் உதவியுடன் ஒருவரை கொலை செய்ய வந்ததாக கூறினார். இதையடுத்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அப்துல்அலீமை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையத்திற்கு கத்தாரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 30) என்பவர் வந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, கடந்த 2 ஆண்டுகளாக சதி திட்டம், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற வழக்குகளில் சி.பி.ஐ. போலீசார் அவரை தேடி வருவதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ரஞ்சித்குமாரை பிடித்து தனி அறையில் அடைத்தனர். இதுபற்றி சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து பிடிபட்ட ரஞ்சித்குமாரை கைது செய்து தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி அருண்செல்வராசனை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்தது.

பாகிஸ்தான் உளவாளி

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண்செல்வராசனை கடந்த 10-ந் தேதி தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அருண்செல்வராசனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு கடந்த 12-ந்தேதி பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு போலீசார் மனு செய்து இருந்தனர்.

நேற்று முன்தினம் மனுவை விசாரித்த நீதிபதி மோனி, அருண்செல்வராசனை எத்தனை நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிப்பது என்பது குறித்து புதன்கிழமை(நேற்று) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

6 நாள் காவல்

அதன்படி நேற்று இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நடந்தது. அப்போது பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராசனை 18-ந்தேதி(இன்று) மதியம் 12 மணி முதல் 23-ந்தேதி மாலை 4 மணி வரை மொத்தம் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், அப்போது அருண்செல்வராசன் சட்ட உதவிகள் குறித்து கேட்டால் தேசிய புலனாய்வு போலீசார் செய்து தர வேண்டும் என்றும் நீதிபதி மோனி உத்தரவிட்டார்.

மேலும் அருண்செல்வராசனுக்கு ராஜீவ்காந்தி கொலையாளிகளுடன் தொடர்பு உள்ளதா? என்று விசாரிக்க வேண்டும் என்பதால் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. அதிகாரிகள் அளித்த மனுவை நீதிபதி மோனி திருப்பி அனுப்பினார்.

சி.பி.ஐ. பதில் மனு

“ராஜீவ்காந்தி கொலையாளிகள் சம்பந்தப்பட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகையில், இங்கு ஏன் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்ய வேண்டும்? அதற்கான பதில் மனுவை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த விசாரணையின் போது அருண்செல்வராசன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படவில்லை. தேசிய புலனாய்வு போலீசார் இன்று(வியாழக்கிழமை) புழல் சிறையில் இருந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வார்கள்.

விசாரணையின் போது அருண்செல்வராசனை போல் வேறு யாராவது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் தமிழகத்தில் பதுங்கி உள்ளார்களா? தமிழகத்தில் எந்தப்பகுதிகளை தாக்க சதி திட்டம் தீட்டப்பட்டது. இவனுக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
நீலாங்கரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

டிரைவர்

சென்னையை அடுத்த நீலாங்கரை செங்கேணியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் முதல் தளத்தில் வாடகைக்கு வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருடைய மனைவி மலர் (32). இவர்களது மகள்கள் ஹரிணி (7), பரணி (3). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஹரிணி 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

வெங்கடேசன், சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

உடல் கருகி கிடந்தனர்

நேற்று அதிகாலை வெங்கடேசன் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்ததும் வீட்டின் உரிமையாளர் வனராஜா மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து கதவை தட்டினார்கள். ஆனால் யாரும் கதவை திறக்காததால் கடப்பாரையால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

வீட்டிற்குள் தீ எரிந்து கொண்டு இருந்தது. வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்ததால் உள்ளே சென்றவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பார்த்தனர்.

அப்போது படுக்கை அறையில் வெங்கடேசன், மலர், ஹரிணி ஆகியோர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். சிறுமி பரணி மட்டும் இடுப்பு மற்றும் கால்கள் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதுபற்றி தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய சிறுமி பரணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரணியும் பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதையடுத்து தீயில் கருகிய வெங்கடேசன், மலர், ஹரிணி, பரணி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி நீலாங்கரை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

காதல் திருமணம்

வெங்கடேசனின் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் இடையார்கிராமம் ஆகும். மலர், கோவையைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நீலாங்கரைக்கு வந்து வாடகை வீட்டில் குடியேறினர். பாலவாக்கம் தனியார் நிறுவனத்தில் வெங்கடேசன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு வெங்கடேசனை வேலையில் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அவர், பல இடங்களில் வேலை தேடினார். ஆனால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

மேலும் மகளின் பள்ளி கட்டணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. ஒரு வாரமாக வீட்டில் சமையல் செய்யாமல் ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

வறுமை, கடன்தொல்லை

அவர்கள் பிணமாக கிடந்த அறையில் ஒரு பெட்ரோல் கேனும் கிடந்தது. வேலை இல்லாததாலும், வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாகவும் வெங்கடேசன் தனது குடும்பத்துடன் தீக்குளித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் பெட்ரோல் ஊற்றி அவர்கள் தீ வைத்துக்கொண்டபோது அலறல் சத்தம் கேட்கவில்லை. எனவே வெங்கடேசன், முதலில் மனைவி, மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு அவர்கள் மயங்கி கிடந்த போது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தானும் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

காரணம் என்ன?

மலரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தினரிடம் இருந்து வெங்கடேசன் பிரிந்து தனியாக வசித்து வந்தார். வேலைக்கு செல்லாததால் கடன் தொல்லை அதிகமாகி அதில் மனமுடைந்து அவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சென்னை ஆயிரம் விளக்கு வாலஸ்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 26). இவர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் வந்தார். அவரது உடல் முழுக்க மண்எண்ணெய் வாசனை வீசியது. தனது கணவர், மண்எண்ணெய் ஊற்றி, தன்னை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்றதாகவும், அவரிடம் இருந்து தப்பித்து வந்துள்ளதாகவும், கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

புஷ்பா மேலும், அதிகாரிகளிடம் கூறியதாவது:-

எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது, குழந்தை இல்லை. எனது கணவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். தற்போது அவர் ஆந்திர பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். என்னை தினமும் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். ஏற்கனவே என்னை 2 முறை கொல்ல முயற்சித்துள்ளார். தற்போது 3-வது முறையாக என்னை தீர்த்துக்கட்ட முயன்றார். நல்லவேளையாக நான் தப்பித்துவிட்டேன். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் கமிஷனர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தார். அவரது மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது