Friday, September 19, 2014

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில் சிறு, நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா எம்.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு மூலமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கம் திருப்பூர் ஏஞ்சல் ஓட்டல் அரங்கில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தினால் அவற்றின் வருமானம் ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும், 11 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும் என தெரிய வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனங்களின் வருவாய், இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தாத நிறுவனங்களைக் காட்டிலும் 15 சதவீதம் அதிக முன்னேற்றம் கண்டுள்ளன. முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் ஏற்படும். சிறு, நடுத்தரத் தொழில்களும் தகவல் தொழில் நுட்பத்தை திறம்பட கையாள முடியும்.
சி.ஐ.ஐ. கடந்த 2013-ஆம் ஆண்டு 1,200 சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கருத்தரங்குகள் மூலமாக இந்தூர், ராஜ்கோட், நாக்பூர், புவனேஸ்வர், கவுஹாத்தி, கோட்டா, ஜாம்ஷெட்பூர், மதுரை மற்றும் விசாகப்பட்டினத்தில் தொடர்பு கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக தயாரிப்புத் திறன், போட்டியிடும் திறன், வர்த்தக வாய்ப்புகள், உலகளாவிய தொழில் வாய்ப்புகளில் திறன்பெற முடியும்.
சந்தை வாய்ப்பு பன்மடங்கு பெருகும், நேரம் மற்றும் திறன் ஆகியவற்றை மிச்சப்படுத்துவதுடன் தொழில் திறமையையும் வளர்க்க முடியும்
எனவே, தகவல் தொழில்நுட்ப உபயோகம் பற்றிய இக்கருத்தரங்கிற்கு பின்னலாடைத் தொழில் நிறுவனங்களின் தகுதியான மேலாளர்களை அனுப்பி வைக்குமாறு தொழில்துறையினரை கேட்டுக்கொள்கிறேன். முன்பதிவுக்கு 82200-32005 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரி மாரியம்மாள் வியாழக்கிழமை காலமானார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரியான மாரியம்மாள், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, பெரியார் நகரில் வசித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், வியாழக்கிழமை பிற்பகலில் இறந்தார். பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப்.19) மாரியம்மாள் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜின் மூத்த சகோதரியான மாரியம்மாள், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, பெரியார் நகரில் வசித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், வியாழக்கிழமை பிற்பகலில் இறந்தார். பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப்.19) மாரியம்மாள் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
உடுமலை அருகே அமராவதி நகரில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், புதன்கிழமை நள்ளிரவில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமராவதி நகர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமத்திற்குள் கடந்த சில நாள்களாக சிறுத்தை ஒன்று, இரவு நேரங்களில் நடமாடி வருவதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இந்த சிறுத்தை, இப்பகுதியிலுள்ள அமராவதி வனச்சரகர் மாரியப்பன் வீட்டில் இருந்த நாய், சைனிக் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டி ஆகியவற்றை கொன்று தின்றுள்ளது. இதனால் இப்பள்ளியில் தங்கி படித்துவரும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அமராவதி நகர் வனச்சரகத்திற்கு உள்பட்ட கல்லாபுரம், எலையமுத்தூர், செல்வபுரம், பூச்சிமேடு, கரட்டுப்பதி, மீன் பண்ணை, பெரும்பள்ளம், சாயப்பட்டறை உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட கிராம மக்களை உஷார் படுத்தும் நோக்கில் தண்டோரா போடப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், கடந்த 2 நாள்களாக அமராவதி நகரில் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
புதன்கிழமை இரவு அனைத்துத்துறையினர் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள ஆய்வாளர் மாளிகையில் நடைபெற்றது. இதன் பிறகு, நள்ளிரவு 2 மணி வரை அமராவதி வனச்சரகப் பகுதிகளுக்குள் மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று ரோந்துப் பணிகளை ஆய்வு செய்தார்.அப்போது, எங்கெங்கு கூண்டு வைக்கலாம் எனவும், சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமரா பொருத்தவும், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், உடுமலை கோட்டாட்சியர் நா.குணசேகரன், வட்டாட்சியர் எஸ்.சைபுதீன் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் 50- க்கு மேற்பட்டோர் ஆட்சியருடன் சென்றனர். இது குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதுமலை, சத்தியமங்கலம், வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள 5 கூண்டுகள் கொண்டு வரப்பட்டு, அமராவதி நகர் பகுதியில் வைக்கப்படும். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 கேமராக்கள் பொருத்தப்படும். ரோந்துப் பணிகளில் ஈடுபட மேலும் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை ஓரிரு நாள்களில் பிடிபடும் என நம்புகிறோம் என்றார்.
கள்ள ஓட்டு போடப்படுவதாக எழுந்தப் புகாரை அடுத்து மடத்துக்குளத்தில், அதிமுக, பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக, 18 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியில், 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதிமுக சார்பில் எஸ்.பழனிச்சாமி, பாஜக சார்பில் என்.முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அந்தந்த வாக்குச்சாவடி முன்பு இரு கட்சியினரும் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் கழுகரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக பாஜக நிர்வா
கிகள் புகார் கூறினர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாஜக
நிர்வாகிகளுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்குள்ளும் மோதல் ஏற்பட்டது.
இதில், பாஜகவைச் சேர்ந்த கழுகரை ஷாகுல்அமீது என்பவரது மகன் இம்ரான் (23) காயமடைந்தார்.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த கழுகரை திருமலைசாமி என்பவரது மகன் மனோஜ்குமார் (21), மனோகரன் என்பவரது மகன் பிரபாகர் (22) ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடுமலை டிஎஸ்பி பிச்சை தலைமையில் மடத்துக்குளம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதேபோல், உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு, பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென
அதிமுக, திமுக நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை யொட்டி பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் முதல் முறையாக சந்தித்த இடமான ரெயில் நிலையம் அருகில் உள்ள புஷ்பா தியேட்டர் அருகில் ரவுண்டாணாவில் அமைக்கபபட்டிடிருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன்,சமுக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி,உயர்க்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்,உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி,கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, கைத்தறி மற்றும் துணி நூல்ததுறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், செய்தித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுசுழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம்,பிற்படுத்தப்பட்டோ
நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாமன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி வேலுசாமி, சிணசாமி, சி.பி.வசந்தமணி, கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, சி.எஸ்.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன், ராஜ்குமார், அசோக்குமார்,அன்னபூரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Thursday, September 18, 2014
இந்தி திணிப்பு குறித்து தி.மு.க. இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாகவும், கனிமொழிக்காக தமிழ்மொழியை திரு.கருணாநிதி அடமானம் வைத்துள்ளார் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது அம்மொழி திணிக்கப்பட்டால், அதனை எதிர்த்து முறியடிக்க அ.இ.அ.தி.மு.க. உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானிய குழுவின் சுற்றறிக்கை தமிழகத்திற்கு அறவே பொருந்தாது என்றும் முதலமைச்சர் உறுதிப்பட கூறியுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க. சார்பில் திரு. டி.கே.எஸ். இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டி, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்- இந்தச் சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் கடந்த 16-ம் தேதி கிடைக்கப் பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சுற்றறிக்கையைப் படித்துப் பார்க்கும் போது, அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதியின் 30-வது கூட்டம் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி அன்றைய பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்றதும், அந்தக் கூட்ட நடவடிக்கை குறிப்பின்படி, பட்டப் படிப்பில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் ஒரு முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்பு பயில்வோருக்கு கட்டாயமாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று இருப்பது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்பதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை பல்கலைக்கழகங்களிடம் பல்கலைக்கழக மானியக் குழு கோரியுள்ளதும் தெரிய வருகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் அல்லது இந்தி படித்து பட்டம் பெறுகின்றனர் என்றும், இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களின் செயல்பாட்டிற்கு தேவையான மொழி பெயர்க்கும் திறன் அவர்களுக்கு ஏற்படாது என்றும் தெரிவித்து; குஜராத்தில் பயிலும் மாணவ, மாணவியர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டும் படிப்பதை பல்கலைக்கழக மானியக் குழு உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுரைகளின்படி, சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இந்தி மொழி திணிக்கும் முயற்சிக்கு அடிப்படைக் காரணம், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதி கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி எடுத்த முடிவுகள் தான் என்பது தெரிய வருகிறது. அப்போது மத்தியிலே ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த கூட்டணி அரசிலே அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இப்படிப்பட்ட ஒரு முடிவை முந்தைய மத்திய அரசு எடுத்த போது வாய் திறக்காத தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி, தற்போது திரு. டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அப்போது, “இந்தி மொழி” பற்றி கூறினால் “கனிமொழி” ஜாமீனில் வெளிவர முடியாது என்று பயந்து வாய்மூடி மவுனியாக இருந்தவர், இன்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருப்பது தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டைத் தான் எடுத்துக் காட்டுகிறது – இதிலிருந்து, கனிமொழிக்காக தமிழ் மொழியை திரு. கருணாநிதி அடமானம் வைத்தது அம்பலமாகி உள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில், இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
1963-ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தில், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்த வரையில், மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்பட்ட 1976-ம் ஆண்டைய, மத்திய அரசின் அலுவலகப் பயன்பாட்டுக்கான அலுவல் மொழிகள் விதிகளின்படி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் சண்டிகர், டாமன், டையூ, தாத்ரா மற்றும் நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் “மண்டலம் B” என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. “மண்டலம் B”-ன் கீழ் வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான மத்திய அரசின் தகவல் பரிமாற்றம் சாதாரணமாக இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டால் அத்துடன் இந்தி மொழி பெயர்ப்பும் அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் “மண்டலம் C” என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. “மண்டலம் C”-ன் கீழ் வரும் மாநிலங்களுடனான தகவல் பரிமாற்றம் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது – எனவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தச் சுற்றறிக்கை அறவே பொருந்தாது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தாம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்; ஆங்கிலத்துடன் இந்தியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்; சட்டம் மற்றும் வணிகவியல் பட்டப் படிப்புகளில் ஆங்கிலம் கற்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது போல், இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்பதோடு மட்டுமல்லாமல், சட்டத்திற்கும் புறம்பானது ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் பகுதியாகவும், ஆங்கிலம் இரண்டாம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும் தொடர்ந்து இருக்கும் என்பதையும்; கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி நடைபெற்ற கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதையும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார், பாரதீய ஜனதா வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிடுகிறார்கள்.
வெற்றிக்கனியை பறித்து விடவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர். தேர்தல் பிரசாரம் 15–ந் தேதி மாலையுடன் ஓய்ந்தது. அதன் பின்னர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்காக 100 வார்டுகளிலும் 1,226 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 236 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கும் முன்னரே அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆர்வமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க போலீசார் வாகனங்களில் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதேபோல் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு யூனியன் 12–வது வார்டுக்கும், சூலூர் யூனியனில் 7 மற்றும் 12–வது வார்டுக்கும், சூலூர், இருகூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கும், கோட்டூர் பேரூராட்சி 10–வது வார்டு, வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி 9–வது வார்டு, எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி 3–வது வார்டுக்கும் இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது. அங்கும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
ஊராட்சி அமைப்புகளில் பில்சின்னாம்பாளையம் 6–வது வார்டு, கோமங்கலம் 6–வது வார்டு, கரியாஞ்செட்டி பாளையம் 2–வதுவார்டு, சூலக்கல் 3–வது வார்டு, தேவனாம் பாளையம் 8–வது வார்டு, பெத்தநாயக்கனூர் 9–வது வார்டு, வடக்கலூர் 7–வது வார்டு, காளம் பாளையம் 3–வது வார்டு, பெத்தநாயக்கனூர் 7–வது வார்டுகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 22 பதவிகளுக்கு 72 பேர் களத்தில் உள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் 22 மற்றும் 45–வது வார்டுகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
அவினாசி யூனியன் 16–வது வார்டு, உடுமலை யூனியன் 6–வது வார்டு, பல்லடம் யூனியன் 10–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 8 பேரும் போட்டியிடுகிறார்கள்.
பல்லடம் நகராட்சி 6–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர், மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 8 பேரும், தளி பேரூராட்சி 5–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும் போட்டியிடுகிறார்கள்.3 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 14 பேரும், 9 பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 19 பேரும் களத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 14 காலியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 11 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள கூடலூர் யூனியன் 3–வது வார்டு கவுன்சிலர் பதவி, கீழ்குந்தா பேருராட்சி 1–வது வார்டு கவுன்சிலர் பதவி, 7–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும் இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.
அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது.
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் வெட்டு
சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 46). அ.தி.மு.க.பிரமுகரான இவர், கடந்த 5-ந் தேதி அன்று, சிந்தாதிரிப்பேட்டையில் அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயம் அடைந்த இவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். மோட்டார் சைக்கிளில் வந்து, கோபிநாத்தை வெட்டிய மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தட்டான்பழனி என்பவர், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி விட்டு, கோபிநாத்தை தீர்த்துக்கட்ட முயற்சித்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீஸ் தேடிய தட்டான் பழனி, பிள்ளையார் கணேசன் ஆகியோர் பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.
கூலிப்படையினர் கைது
தட்டான் பழனி ஏவி விட்ட கூலிப்படை ஆசாமிகள் தினேஷ் (வயது 23), கணேசன் (24) ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் தினேஷ் பயங்கர ரவுடி ஆவார். கூலிக்காக ஆள்கடத்தல், கை-காலை வெட்டுதல், தலையை வெட்டி கொலை செய்தல் போன்ற பயங்கர குற்றங்களில் ஈடுபடுபவர், என்று கூறப்படுகிறது.
கூலிக்காக கொலை செய்ய 3 பேர் இவரது பட்டியலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இதுபோல கூலிக்காக கொலை செய்யும் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஷிஎன்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரிவாள் வெட்டு
சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 46). அ.தி.மு.க.பிரமுகரான இவர், கடந்த 5-ந் தேதி அன்று, சிந்தாதிரிப்பேட்டையில் அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயம் அடைந்த இவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். மோட்டார் சைக்கிளில் வந்து, கோபிநாத்தை வெட்டிய மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தட்டான்பழனி என்பவர், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி விட்டு, கோபிநாத்தை தீர்த்துக்கட்ட முயற்சித்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீஸ் தேடிய தட்டான் பழனி, பிள்ளையார் கணேசன் ஆகியோர் பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.
கூலிப்படையினர் கைது
தட்டான் பழனி ஏவி விட்ட கூலிப்படை ஆசாமிகள் தினேஷ் (வயது 23), கணேசன் (24) ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் தினேஷ் பயங்கர ரவுடி ஆவார். கூலிக்காக ஆள்கடத்தல், கை-காலை வெட்டுதல், தலையை வெட்டி கொலை செய்தல் போன்ற பயங்கர குற்றங்களில் ஈடுபடுபவர், என்று கூறப்படுகிறது.
கூலிக்காக கொலை செய்ய 3 பேர் இவரது பட்டியலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இதுபோல கூலிக்காக கொலை செய்யும் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஷிஎன்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலந்தூர்,
சென்னை தரமணி பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் அழகு உத்தரவின் பேரில், தரமணி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், போலீஸ்காரர் ஷிபு, இளைஞர் காவல் படை காவலர் விஷ்ணு ஆகியோர் தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தது சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த அப்துல்அலீம் (வயது 39) என்பது தெரியவந்தது.
அவரது ஆட்டோவில் 2 அரிவாள் மற்றும் 3 கத்திகள் இருந்தன. இதுபற்றி அவரிடம் விசாரித்த போது ஆட்டோவில் தனது நண்பர்கள் உதவியுடன் ஒருவரை கொலை செய்ய வந்ததாக கூறினார். இதையடுத்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அப்துல்அலீமை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


