Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:–
வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கையும், அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசு – தனியார் சொத்துக்கள் பெர்ருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பூந்தமல்லியிலிருந்து வந்த அரசுப் பேரூந்தை காஞ்சிபுரத்தில் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க.வினர் அப்பேரூந்தை தீயிட்டு எரித்தனர். இதே நிகழ்வில் ஒரு பேரூந்தும், சில இரு சக்கர ஊர்திகளும் எரிக்கப்பட்டன. விளாத்திக்குளத்தில் மற்றொரு பேரூந்து தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறையில் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நேற்று இன்னொரு பேரூந்து தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர 50க்கும் மேற்பட்ட அரசு பேரூந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடைகள் மீது அ.தி.மு.க.வினர் கல்வீசித் தாக்கியதில் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க.வின் காட்டு மிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களும், அலுவலகங்களும் தப்பவில்லை. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் வன்முறை தொடர்கிறது. அ.தி. மு.க.வினரின் வன்முறையை காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆளுனரும், மத்திய அரசும் தலையிட்டு தமிழகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
பொதுச் சொத்துக்களுக்கு அரசியல் கட்சிகள் சேதம் ஏற்படுத்தினால் அதை எவ்வாறு வசூலிப்பது என்பதற்கான வழிகாட்டுதல்கள் 1992ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தில் தெளிவாக உள்ளன. இதற்காக கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான அமைப்பும் இப்போது செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இழப்பீட்டை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் தொடங்க வேண்டும்.
அ.தி.மு.க.வினரால் எரிக்கப்பட்ட எரிக்கப்பட்ட பேரூந்துகள், சேதப்படுத்தப்பட்ட பேரூந்துகள் ஆகியவற்றுக்கான இழப்பீடு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது. வன்முறையால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மதுக்கடைகள், திரையரங்குகள் ஆகியவை செயல்படவில்லை. தனியார் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஒரு நாளில் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தவிர, தனியார் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் அ.தி. மு.க.வினரின் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இன்று புதிதாக பதவியேற்கவிருக்கும் அரசுக்கு தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும்.
1) அ.தி.மு.க.வினரின் வன்முறையால் அரசு மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டிருப்பதால் குறைந்தது ரூ.210 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டையும் துல்லியமாக கணக்கிட்டு அ.தி.மு.க. தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளையும், வணிகம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டையும் கணக்கிட்டு, அதற்குக் காரணமான அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் மீது வழக்குத் தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.
3) பேரூந்து எரிப்பு, உடைப்பு, கடைகள் சூறை உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
4) கடந்த ஆண்டில் ஜெயலலிதாவே கூறியவாறு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்ட அ.தி.மு.க.வை தடை செய்யவும் அரசு தயங்கக்கூடாது.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பது அ.தி.மு. க.வினரை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் இன்று கருப்பு சட்டை அணிந்தனர். 

நேற்று ஏராளமான பெண்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இன்று தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., ஆயிரம்விளக்கு தொகுதி செயலாளர் டி.சிவராஜ், பகுதி செயலாளர்கள் ஏ.இ.வெங்கடேசன், பாபு, ஏழுமலை, மாவட்ட இளைஞ ரணி துணை தலைவர் என்.தயாளன், கவுன்சிலர்கள் நுங்கை மாறன், சின்னையன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். அதன்மூலம் மறுதீர்ப்பு பெற வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த தீர்ப்பு குறித்து புதிய கருத்து கூற விரும்பவில்லை. இந்த தண்டனை மூலம் அவர் அரசியலில் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தண்டனை மூலம் கர்நாடகா, தமிழக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு போட்டது கர்நாடக அரசோ, கர்நாடக மக்களோ அல்ல. சுப்பிரமணியசாமி.
தீர்ப்பு கூறியதுதான் கர்நாடக நீதிபதி. அ.தி.மு.க.வினர் தலைமை மீது கொண்ட ஈடுபாட்டால் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். ஆனால் நீதிபதி தீர்ப்பை விமர்சிக்க கூடாது. புதியதாக பொறுப்பு ஏற்கும் முதல்–அமைச்சர் தமிழகத்தில் உள்ள வறட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் மார்ச் மாதம் 25 முதல் 29–ந்தேதி வரை நடக்கிறது.
வருகிற 6–ந்தேதி விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற இருந்த மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 16–ந்தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தூத்துக்குடியில் தீயனைப்பு நிலையம் அருகில் உள்ள காமராஜரின் மார்பளவு சிலையை நேற்று இரவு வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி காமராஜருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனை எங்களது பெருந்தலைவர் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
காவல் துறையினர் இந்த கும்பலை உடனடியாக கண்டு பிடித்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்டுள்ள காமராஜரின் சிலையை அகற்றி விட்டு அதே இடத்தில் முழு அளவு வெண்கல சிலையை அரசு வைத்து தர வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் படி தலா 4 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டு, நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாலும், இப்படி தண்டனை பெற்றதால் அவர்கள் வகிக்கும் பதவிகள் உடனடியாக இழப்புக்கு உள்ளாகும். இது தண்டனைக் காலத்திற்கு பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று உச்சநீதிமன்றம் 2013ல் வழங்கிய தீர்ப்பின் காரணமாக ஏற்பட்ட சட்டப்படியான விளைவு ஆகும்.
இதற்கு முன் நாடாளு மன்றத்தில் பதவிகளில் இருந்த நான்கு பேர்கள் லாலுபிரசாத் உட்பட இத்தீர்ப்பின் அடிப்படையில் பதவி இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு முன்பு 2013க்கு முன்பு இருந்த நிலை வேறு. முதல் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி தண்டனை பெற்று உடனடி பதவி இழப்புக்கு ஆளாவது இதுவே இச்சட்டத்தின் கீழ் முதல் நிகழ்வு இந்திய அரசியலில்.
அ.தி.மு.க. போதிய பெரும்பான்மையும், கட்டுக் கோப்புடனும் உள்ள ஆளுங்கட்சியாக இருக்கிற காரணத்தாலும் அ.தி.மு.க.வின் ஆற்றல், அதிகாரம் மிக்க தலைவராக பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் ஜெயலலிதா இருக்கின்ற காரணத்தாலும் அவரது ஆணைப்படி நேற்று அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை சட்டமன்ற கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளனர். அவர் தலைமையில் புதிய அமைச்சரவை செயல்படும் என்பதற்கு தமிழக ஆளூநர் ரோசய்யாவை சந்தித்து, அவரும் சட்டப்படி அழைப்பு விடுத்து, இன்று அமைச்சர்கள் பதவியேற்று, அரசியல் சட்டப்படி கடமையாற்ற விருக்கின்றனர்.
அமைதியும், அடக்கமும் நிறைந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அவர் ஏற்கனவே ஒரு முறை இப்பதவியில் அமர்ந்தப்பட்டும் உள்ளார். அவரது தொடர் விசுவாசத்திற்கு அத்தலைமை தந்த அங்கீகாரப் பரிசு இது. ஜனநாயகத்தில் ஏதுவும் நிரந்தரமோ, மாறாததோ அல்ல.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீண்டும் இரண்டாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வர் ஆவது சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பெரிதும் வரவேற்கத்தக்கது. அவரது தலைமையில் அமைந்து புதிய அரசு அனைத்து மக்கள் நலத்திலும் அக்கறை காட்டி, எதிர்க்கட்சிகளையும் மதித்து தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி, நீதியான ஆட்சி என்ற பெயரை எடுத்து வரலாறு படைக்க வாழ்த்துகிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன. 
புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன. வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர் முகாம்களில் இருக்கும் கட்சிகள் கை கோர்க்கலாம். புது கட்சிகளும் தலை தூக்கலாம் என்கின்றனர். அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்பதிலும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் அரசியலில் ஈடுபட இது தகுந்த நேரம் என்றும் எனவே கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் ஆந்திர பத்திரிகைகளும் இணைய தளங்களும் செய்திகள் வெயிட்ட வண்ணம் உள்ளன. 
ரஜினிக்கு ஏற்கனவே அரசியல் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது. 1996–ல் திமு.க. தமிழ் மாநில கூட்டணியை உருவாக்கினார். அந்த அணி சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. 1998 தேர்தலிலும் அதே கூட்டணியை ஆதரித்தார். 
2004 பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க. வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது தனிக்கட்சி துவங்கி அரசியலில் குதிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இறங்கவில்லை. மாறாக பாரதீய ஜனதாவை ஆதரித்து ஓட்டு கேட்டார். அதன் பிறகு எல்லா தேர்தல்களிலும் நடுநிலை வகித்தார். எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வில்லை. 
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து பாரதீய ஜனதாவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் ரஜினி அமைதியாக இருந்து விட்டார். 

தற்போது அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்க்க மீண்டும் முயற்சிகள் டெல்லி தலைவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை பாரதீய ஜனதாவில் சேர்த்தால் தமிழகத்தில் கட்சியை வலுவாக்கிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். ரஜினி ஏற்பாரா என்பது உறுதியாக தெரிய வில்லை.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னை, செப். 29– 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல்–அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார். 
இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது. புதிய முதல்–அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவசரக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. 
இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசைய்யாவை சந்தித்தார். 
அப்போது தன்னை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தற்கான தீர்மானத்தையும், புதிய அமைச்சரவை பட்டியலையும், ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தார்.
இன்று மதியம் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல் – அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டார். 
அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

1. நத்தம் விசுவநாதன் 2. வைத்திலிங்கம் 3. எடப்பாடி பழனிச்சாமி 4. பி.மோகன் 5. பா.வளர்மதி 6. பி.பழனியப்பன் 7.செல்லூர் கே.ராஜு 8. ஆர்.காமராஜ் 9. பி.தங்கமணி 10. வி.செந்தில்பாலாஜி 15. கோகுலஇந்திரா 16. சுந்தர்ராஜ் 17. செந்தூர்பாண்டியன் 19. என்.சுப்பிரமணியன் 20.ஜெயபால் 21. முக்கூர் என்.சுப்பிரமணியன் 22. ஆர்.பி.உதயகுமார் 23. கே.டி.ராஜேந்திர பாலாஜி 24. பி.வி.ரமணா 25. கே.சி.வீரமணி 26. ஆனந்தன் 27. தோப்பு வெங்கடாசலம் 28. பூனாட்சி 29. அப்துல்ரகீம் 30. விஜயபாஸ்கர். 
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் தலைமை செயலாளர் மோகன்வர்கீஸ், சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, கொறடா மனோகரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    

முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்றக் கட்சி தலைவாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. 
பதவியேற்றதும் நேராக தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இன்று மாலை பெங்களூர் செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை  கர்நாடகா நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி அதனை கண்டித்து, ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை அருகில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான மேயர் சு.குணசேகரன் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு துரோகமான தீர்ப்பாகும்.காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடக அரசு மற்றும் கர்நாடக நீதிமன்றம் பழி வாங்கியுள்ளது.அவருக்கு வழங்கிய அபராத தொகை உலகில் எந்த வழக்கிற்கும் இதுவரை வழங்கப்படவில்லை.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி கூட அரசியல் பிழை செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கும் ஜெயலிதாவிற்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். ஜெயலலிதா எபோதும் சட்டத்தை மதிப்பவர்.எனவே, இந்த தீர்ப்பிற்கு பின்னால் தி.மு.க.,காங்கிரஸ், பி.ஜே.பி.,போன்ற கட்சிகளின் பழிவாங்கும் போக்காவே இந்த தீர்ப்பு உள்ளது. எத்தனை கட்சிகள் பழிவாங்க நினைத்தாலும் ஜெயலலிதாவை  யாராலும் அசைக்க முடியாது. சட்டப்படி ஜெயலலிதா வெளியே வருவார். தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி புரிவார்.
அதுவரை அறவழியில் அண்ணா தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்..ஜி.ஆர்.மன்ற செயலாளர்  கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் எம்.சி.,தெற்கு தொகுதி செயலாளர்  தம்பி மனோகரன்,இணை செயலாளர் வசந்தாமணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம், பாசறை செயலாளர் சதீஷ், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம்,அட்லஸ் லோகநாதன், உஷா  ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, அய்யாசாமி, கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் வளர்மதி கருணாகரன், கோமதி சம்பத்,அன்னாபூரணி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித் ரத்தினம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சடையப்பன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம்,பூளுவபட்டி பாலு, பிரியாசக்திவேல், கலைமகள் கோபால்சாமி, சண்முகசுந்தரம், பேபி தர்மலிங்கம் ஆனந்தன் ஆகியோர்களும், கண்ணபிரான், ஏ.எஸ்.கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உடுமலை கிருஷ்ணன், ராஜசேகரன், பொன்னுசாமி, கண்ணபிரான், ராஜேந்திரன், சரவணன்,  ரவிகுமார்,சிவகுமார், கணேஷ், முருகன், முன்னாள் செயலாளர் பழனிசாமி, உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார், அசோக்குமார், லோகநாதன், யுவராஜ் சரவணன், நீதிராஜன், தேவராஜ், கேபிள் பாலு, பங்க்.என்.ரமேஷ், வளர்மதி கூட்டுறவு கரு.ராமச்சந்திரதேவர், பாஸ் என்கிற பாஸ்கரன், வே,சரவணன்,  ஆண்டவர் பழனிசாமி, அகமது பைசல்,ஜாகிர் அகமது, மகளிர் அணியினர் முன்னாள் கவுன்சிலர்கள் சு.கேசவன், தேவராஜ், ருக்குமணி, செல்வம் தங்கவேல், மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தரம்பாள்,சரஸ்வதி, முத்துலட்சுமி, மல்லிகா, மும்தாஜ், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், எம்.ஜி.குணசேகர் தீக்கனல் விஜயகுமார், பரதிதிபிரியன், பலகுரல் வெள்ளியங்கிரி, வேங்கை விஜயகுமார் உள்ளிட்டவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களும், தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.