Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் அ.தி.மு.க.–தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் சின்னப்பன், அ.தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார், நகர்மன்ற தலைவர் கலாவதி ஞானசேகர், தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், வர்த்தக கழக தலைவர் ஞானசேகர் ஆகியோர் தலைமையில் திரண்டனர்.
அங்கு அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அவர்கள் தாராபுரத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மூடும்படி வலியுறுத்தினர். இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
அண்ணாசிலை அருகே தி.மு.க நகர அலுவலகம் உள்ளது. அங்கே சென்ற அ.தி.மு.க.வினர் அலு வலகத்தை மூடும் படி கூறினார்கள். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் தி.மு.க. அலுவலகம் முன் வைக்கப் பட்டிருந்த கருணாநிதி, மு.க.ஸ்டாலின் பிளக்ஸ் போர்டுகளுக்கு தீ வைத்தனர். கருணாநிதியின் உருவ பொம்மையையும் எரித்தனர்.
தாராபுரம் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சன் பாலுவுக்கு சொந்தமான பழைய வாகனங்கள் விற்பனை நிலையம் அருகே வந்த அ.தி.மு.க.வினர் கடையை உடனே மூடுமாறு கூறினார்கள்.
தகவல் அறிந்ததும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். கடையை மூடச்சொல்லி வற்புறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.–தி.முக.வினரிடையே மோதல் உருவானது. இந்த களேபரத்தில் அந்த கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் தீ வைக்கபட்டது. காரில் இருந்த கியாஸ் சிலிண்டர் திறந்து விடப்பட்டதால் தீ மளமளவென பரவியது. அப்போது தி.மு.க.வினர் சிலர் உயிர் தப்புவதற்காக கடைக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டு உயிர் பிழைத்தனர்.
காருக்கு தீவைக்கபட்ட தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வாகனத்தையும் அ.தி.மு.க.வினர் முன்னேறிச்செல்ல விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி.இளங்கோவன், இன்ஸ் பெக்டர்கள் சிவக்குமார், பொம்மு மற்றும் போலீசார் விரைந்து வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அதன் பின்னர் காரில் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகியின் மோட்டார் சைக்கிளுக்கு வைக்கப்பட்ட தீயையும் அணைக்கப்பட்டது. அ.தி.மு.க.–தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மோதலின் போது கடைக்குள் ஓடி பதுங்கிய சிலரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது.
பல்லடம் கல்லாம் பாளையத்தில் இன்று காலை பல்லடம் உழவர் பணி கூட்டுறவு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, சித்ராதேவி, நகர அவைத்தலைவர் தங்கவேல் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர்.
அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொடும் பாவியை எரித்தனர்.
அவினாசியிலும் அ.தி.மு.க.வினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். சேவூர் கைகாட்டி அருகே தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி தலைமையில் கருணாநிதியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
கருவலூரில் ஊராட்சி செயலாளர் காத்தவராயன் தலைமையில் சாலை மறியல் நடந்தது.
அம்மாபாளையத்தில் கருணாநிதி உருவபொம்மை எரிக்கப்பட்டது. அம்மா பாளையத்திலும், அவினாசி புதிய பஸ் நிலையம் அருகேயும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னையில் நேற்று 2–வது நாளாக அ.தி.மு.க.வினர் கொடும்பாவி எரிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 23 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 இடங்களில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. வேளச்சேரி, சூளைமேடு, திருநின்றவூர் ஆகிய இடங்களில் 3 பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. திருநின்றவூர், பழவந்தாங்கல், தாம்பரம், திரிசூலம், ஆவடி ஆகிய இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும் நடந்தன.
அ.தி.மு.க.வினரின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அடையாறு கிரீன்வேய்ஸ் ரோட்டிலும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த போராட்டங்களில் தமிழகம் முழுவதும் 35 வாகனங்கள் மட்டும் சேதம் அடைந்ததாகவும், ஆனால் 2001–ம் ஆண்டு, தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களில் 580 வாகனங்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன என்றும் போலீசார் நேற்று வெளியிட்ட தகவல் ஒன்றில் தெரிவித்தனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னையில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் நேற்று வழக்கம்போல இயங்கியது.
தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆங்காங்கே சாலை மறியல், கல்வீச்சு, ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தேறியது.
இதனையடுத்து வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ‘டாஸ்மாக்’ கடைகள் என எல்லா கடைகளும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏற்படாத வகையிலும், முக்கியமான பொது இடங்களிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தலைநகர் சென்னையில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகளும் திறக்கப்பட்டிருந்தன. எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாஸா உள்ளிட்ட சில வணிக வளாகங்களில் சில கடைகள் மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான சினிமா அரங்குகளில் போலீசார் பாதுகாப்புடன் காட்சிகள் இயக்கப்பட்டன.
சென்னை தியாகராயநகர், அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்ற கடைகளிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. முக்கியமான பொழுதுபோக்கு பூங்காக்கள், கோவில் கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நேற்று அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.அம்மா உணவகத்தில் கூட்டம்
நகரின் பெரும்பாலான இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் நேற்று ‘அம்மா உணவகங்களில்’ மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வழக்கமான நேரத்தினை காட்டிலும் அம்மா உணவங்களில் வேகமாகவே உணவு வகைகள் விற்றுத்தீர்ந்தன.
மேலும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லம் உள்பட பல இடங்களிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலுக்கு பிறகு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து அரசு பஸ்களும் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. காலை முதல் காத்துக்கிடந்த பயணிகள், பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியுடன் தங்கள் ஊர்களுக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

இதேபோல், சென்னை- பெங்களூருக்கு செல்லக்கூடிய தமிழக அரசு பஸ்கள் எந்த வித தடையும் இன்றி செல்ல தொடங்கின. அதே போல், கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. தனியார் ஆம்னி பஸ்கள் நேற்று பிற்பகலுக்கு பிறகு, பெங்களூருக்கு இயங்கத்தொடங்கியது.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெறவிருந்தது. இந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு மன்ற கூடத்தில் வைத்து மாமன்ற கூட்டம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


On Monday, September 29, 2014 by farook press in ,    
குஜராத் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ‘நவஜீவன் எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் 6–வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. என்ஜின் முன்பகுதியை பார்த்த பயணிகளும் ரெயில்வே ஊழியர்களும் அலறினர்.
காரணம், என்ஜின் முன்பகுதியில் மூதாட்டி ஒருவரின் உடல் சிக்கிக் கொண்டிருந்தது. உடனடியாக அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் மீஞ்சூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சாரதா (வயது 80) என்பவர் மீது ரெயில் மோதியதும், பலியான அவரது உடல் என்ஜினின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டதும், அந்த உடலுடனேயே அந்த ரெயில் சென்டிரல் ரெயில் நிலையம் வரை வந்ததும் தெரியவந்தது. விபத்து நடந்தது என்ஜின் டிரைவருக்கே தெரியாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
On Monday, September 29, 2014 by farook press in ,    
னியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் அந்த பெண்ணுக்கு 28 வயது. திருமணமாகி, ஆறே மாதத்தில் கணவரை பிரிந்தவள். விவாகரத்தாகி இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன.
‘விரைவாக அவளுக்கு மறுமணம் செய்துவைத்துவிடவேண்டும்’ என்று அவளுடைய பெற்றோர் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாலைந்து வரன்கள் அவளை வந்து பார்த்து, பேசி விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். 
அவர்கள் எல்லோருமே கேட்கும் ஒரே கேள்வி, ‘இவ்வளவு அழகாக இருக்கீங்க! தன்மையாக பேசுறீங்க! கை நிறைய சம்பாதிக்கிறீங்க! இவ்வளவு இருந்தும் ஆறு மாதத்திலே உங்க மணவாழ்க்கை முறிந்துவிட்டதே, அதற்கு என்ன காரணம்?’ என்று கேட்கிறார்கள்.
அதற்கான உண்மையான காரணத்தை அவள் தன்னை பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் சொல்கிறாள். ஆனால் ‘இதெல்லாம் ஒரு காரணமா? இதற்காகவா விவாகரத்து செய்திருப்பீர்கள். வேறு ஏதாவது பெரிய காரணம் இருக்கும்!’ என்று முணுமுணுத்தபடி மாப்பிள்ளை வீட்டார் விலகி சென்றுவிடுகிறார்கள்.
அவள் விவாகரத்து செய்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
அவளை பெண் பார்க்க சென்ற நாளிலே, மாப்பிள்ளை பையனின் அம்மாவுக்கு அவளை பிடிக்கவில்லை. அவள் அழகில் தூக்கலாக தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்பாள். மாமியாரோ நாணத்தோடு, வெட்கத்தோடு, தன் மகனின் பின்னால் தலைகுனிந்து நிற்கும் மருமகள் வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தவர்.
பெண் பார்த்த அன்றே, ‘உன்னை தூக்கி சாப்பிட்டுவிடுகிறவள் மாதிரி இருக்காளேடா..!’ என்று மகனின் மனதை அசைத்து பார்த்தார். அவனோ, ‘எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு! பேசி, நல்லபடியாக கல்யாணத்தை முடித்து வைத்துவிடுங்கள்’ என்று கறாராக சொல்லிவிட்டான். அதனால் வேறுவழியின்றி கல்யாண ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கின. அப்போது மணமகன், தன் வருங்கால மனைவியான அவளிடம், ‘என் அம்மா உன்னை கர்வம் பிடித்தவள் என்று சொல்கிறார். திருமணத்திற்கு பிறகு நீ என் அம்மாவிடம் கவனமாக இருந்துகொள்ளவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது. மூன்றாவது நாள், மணப்பெண் வீட்டில் பிரியாணி விருந்து வைத்திருக்கிறார்கள். அதை மாமியார் உள்பட அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்கள்.
மறுநாள், ‘உன் வீட்டில் போட்டது பிரியாணியா? அதை இப்ப நினைச்சாலே எனக்கு வாந்தி வருது! பிச்சைக்காரன்கூட அதை தின்னமாட்டான்’ என்று மாமியார் கூறியிருக்கிறார். இதுதான் மோதலின் தொடக்கம்.
அன்றிலிருந்து, மருமகளை மட்டம்தட்ட மாமியார் பிரியாணி மேட்டரை கையில் எடுக்க, மருமகள் பதிலுக்கு காரசாரமாக திட்ட நாளுக்கு நாள் பிரச்சினை வலுத்தது. மகன் அவ்வப்போது வேறுவழியில்லாமல் அம்மா பக்கம் சாய, அவள் கணவரையும் வார்த்தைகளில் வறுத்தெடுத்தாள்.
இப்படியே பிரச்சினை பெரிதானதால் அவள் கோபத்தில் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, ஒருசில மாதங்கள் தாய் வீட்டில் தங்கிவிட, ‘ஈகோ’ தலைதூக்கி இருவரும் மோதிக்கொண்டார்கள். முடிவில் ‘இனி சேர்ந்து வாழ முடியாது’ என்று விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

இந்த மாதிரியான ‘பிரியாணி மேட்டருக்கெல்லாம்’கூட விவாகரத்து நடக்குதுங்கிறதை உங்க காதிலேயும் போட்டுவைக்கிறோம் அவ்வளவுதானுங்க..!
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர்,செப்.29-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை  கர்நாடகா நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி அதனை கண்டித்து, ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை அருகில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான மேயர் சு.குணசேகரன் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு துரோகமான தீர்ப்பாகும்.காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடக அரசு மற்றும் கர்நாடக நீதிமன்றம் பழி வாங்கியுள்ளது.அவருக்கு வழங்கிய அபராத தொகை உலகில் எந்த வழக்கிற்கும் இதுவரை வழங்கப்படவில்லை.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி கூட அரசியல் பிழை செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கும் ஜெயலிதாவிற்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். ஜெயலலிதா எபோதும் சட்டத்தை மதிப்பவர்.எனவே, இந்த தீர்ப்பிற்கு பின்னால் தி.மு.க.,காங்கிரஸ், பி.ஜே.பி.,போன்ற கட்சிகளின் பழிவாங்கும் போக்காவே இந்த தீர்ப்பு உள்ளது. எத்தனை கட்சிகள் பழிவாங்க நினைத்தாலும் ஜெயலலிதாவை  யாராலும் அசைக்க முடியாது. சட்டப்படி ஜெயலலிதா வெளியே வருவார். தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி புரிவார்.
அதுவரை அறவழியில் அண்ணா தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் பேசினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட எம்..ஜி.ஆர்.மன்ற செயலாளர்  கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் எம்.சி.,தெற்கு தொகுதி செயலாளர்  தம்பி மனோகரன்,இணை செயலாளர் வசந்தாமணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம், பாசறை செயலாளர் சதீஷ், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம்,அட்லஸ் லோகநாதன், உஷா  ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, அய்யாசாமி, கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் வளர்மதி கருணாகரன், கோமதி சம்பத்,அன்னாபூரணி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித் ரத்தினம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சடையப்பன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம்,பூளுவபட்டி பாலு, பிரியாசக்திவேல், கலைமகள் கோபால்சாமி, சண்முகசுந்தரம், பேபி தர்மலிங்கம் ஆனந்தன் ஆகியோர்களும், கண்ணபிரான், ஏ.எஸ்.கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜசேகரன், பொன்னுசாமி, கண்ணபிரான், ராஜேந்திரன், சரவணன்,  ரவிகுமார்,சிவகுமார், முருகன், உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார், அசோக்குமார், லோகநாதன், யுவராஜ் சரவணன், நீதிராஜன், தேவராஜ், கேபிள் பாலு, பங்க்.என்.ரமேஷ், வளர்மதி கூட்டுறவு கரு.ராமச்சந்திரதேவர், பாஸ் என்கிற பாஸ்கரன், வே,சரவணன்,  ஆண்டவர் பழனிசாமி, அகமது பைசல்,ஜாகிர் அகமது, மகளிர் அணியினர் முன்னாள் கவுன்சிலர்கள் சு.கேசவன், தேவராஜ், ருக்குமணி, செல்வம் தங்கவேல், மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தரம்பாள்,சரஸ்வதி, முத்துலட்சுமி, மல்லிகா, மும்தாஜ், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், எம்.ஜி.குணசேகர் பரதிதிபிரியன், வேங்கை விஜயகுமார் உள்ளிட்டவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர். 
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூரை சேர்ந்தவன் 8 வயது சிறுவன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 3–ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அந்த சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த சிறுவனை தனது ஆட்டோவுக்கு அழைத்து சென்றார். அங்கு, அந்த சிறுவனை ஆட்டோவின் பின்புற இருக்கையில் உட்கார வைத்து, செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
அந்த வழியாக வந்தவர்கள், ஆட்டோ டிரைவரின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். உடனே அவர் ஆட்டோவை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அந்த சிறுவனின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த ஆட்டோ திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதை திண்டுக்கல் ராஜாக்காபட்டியை சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், ரவிசந்திரனின் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டோ நிறுத்தத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் ரவிசந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி ராமசந்திரன் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
காங்கயத்தில் நேற்று 2–வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டதாலும், பஸ்கள் இயக்கப்படாததாலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் காங்கயத்தில் அ.தி.மு.க.வினர் தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தியும் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து காங்கயத்தில் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்
நேற்று முன்தினம் இரவு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அனைவரும் வேலை முடிந்து அவரவர்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றனர். இந்நிலையில் நேற்று 2–வது நாளாக அ.தி.மு.க.வினர் கடைகளை அடைக்கச்சொல்லி கூறியதால், காங்கயத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் போலீசார் கடைகளை திறக்க சொல்லி கேட்டுக்கொண்டதால் காலை 10 மணிக்கு மேல் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டது. இதை அறிந்து சிலர் மீண்டும் கடைகளை அடைக்க சொல்லி கூறியதால் மாலை வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதேபோல பஸ்கள் காலை 11 மணிக்கு மேல் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. சிறிது நேரமே பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து சென்றன. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையமே வெறிச்சோடி கிடந்தது.
தொடர்ந்து 2 நாட்களாக பஸ்கள் இயக்கப்படாததாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.