Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர்  சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து  குவிப்பு வழக்கில் கோர்ட்டு 4 வருட ஜெயில் தண்டனை விதித்தது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போராட்டங்களும், ஆர்ப் பாட்டங்களும் நடந்து வரு கின்றன.
தமிழ்  திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்   வகையில் இன்று ஒரு நாள் மவுன உண்ணாவிரத போராட்டம் நடத்த்போவதாக அறிவித்தனர்.அதன் படி இன்று  சென்னை சேப்பாக்கம்  விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரதம் தொடங்கியது.
அங்கு திரையுலக முக்கிய பிரமுகர்கள் அமர மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தர்ம தேவ தைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட் டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந் தது.
உண்ணாவிரதத்துக்கு காலை 8 மணிக்கே திரை யுலகினர் வரத் தொடங்கி னார்கள். தமிழ் திரைப்பட தயா ரிப்பாளர் சங்க செயலா ளர் டி.சிவா பே, ஜெயலலிதாவுக்கு வழங்கப் பட்ட தீர்ப்பு குறித்து எங்கள்  உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம். ஜெய லலிதா எல்லா சோதனை களையும் வென்று வெளியே வருவார். தர்மம் வெற்றி பெறும். மீண்டும் அம்மா அரியணை ஏறுவார். இது ஒட்ட மொத்த தமிழ் திரையுலகினரின் பிரார்த்தனை. அது விரைவில் நிறைவேறும் என்றார். பின்னர் உண்ணாவிரதம் துவங்கியது.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செய லாளர் ராதாரவி, நடிகர் கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த், ராமராஜன், சக்தி, எம்.எஸ். பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர்அலிகான், சரவணன், குண்டு கல்யா ணம், மனோபாலா, நடிகை கள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, குயிலி, பாத்திமா பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர். கே.செல்வமணி, ஆதி ராம், தயாரிப்பாளர் கள் கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், காஜாமைதீன், இப் ராகிம்ராவுத்தர், ராதாகிருஷ் ணன், கில்டு ஜாகுவார் தங் கம், சவுந்தர், சுப்பை, விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, தென்னிந்திய திரைப் பட தொழிலாளர் சம்மே ளனம் (ªபப்சி) செய லாளர் சிவா, விநியோ கஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் திரைப்பட துறை யின் பல்வேறு  சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெகளும் உண்ணாவிரதத்தில் பங் கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது.
உண்ணாவிரதம் நடந்த பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. ண்ணாவிரதத்தை தொடர்ந்து சென்னையிலும் சென்னை புறநகர் பகுதியி லும் சினிமா படப்பிடிப்பு கள் இன்று ரத்து செய்யப் பட்டன.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று காலை தியேட்டர் அதி பர்கள் உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கினார்கள்.. தியேட்டர் உரிமையாளர்கள் ஹரி கோவிந்த், லேனாசுப்பு, கஜேந்திரன், மனோகரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழு வதும் இன்று சினிமா காட்சி கள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தது.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
இந்தியா-சீன எல்லை பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வெளியில் இருந்து மத்தியஸ்தர்கள் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். 
இந்தியாவும் சீனாவும் எல்லைப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளும் திறனை கொண்டுள்ளன. எனவே மத்தியஸ்தம் செய்வதற்கு யாரும் தேவையில்லை என்று வெளியுறவு கவுன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகு ஒன்றிற்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.


இந்தியா- சீனா எல்லைப்பிரச்சினையில் மத்தியஸ்தம் அல்லது தீர்ப்புக்குழு ஆகீயவற்றை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதற்கான தேவை எதுவும் இல்லை இரு நாடுகளும் நேரடியாக பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்ளும் என்று தெரிவித்தார்". மேலும் அருகாமையில் இருக்கும் அனைத்து நாடுகளுடன் நட்புறவை வளர்க்கவே இந்தியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் உடுமலையை அடுத்துள்ள சின்ன வீரம்பட்டி கிராமத்தில் முன்னோடி விவசாயி குமரவேல் தோட்டத்தில் நேற்று நடந்தது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.ஜெயமணி வரவேற்றார். உடுமலை தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெ.பெரியநாயகம் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை தென்னை வளர்ச்சி வாரிய கள அலுவலர் ஆர்.பரமசிவம் தொடங்கி வைத்தார்.
கிராமபுற இளைஞர்கள் 40 பேருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. நவீன கருவிகள் மூலம் எளிதாக தென்னை மரம் ஏறுதல், தென்னை பராமரிப்பு பற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களுக்கு ஏ.மகேஷ்பிரபு, எஸ்.கணேஷ்குமார் ஆகியோர் பயிற்சியளித்தனர். இந்த பயிற்சி முகாம் வருகிற 4–ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தர வேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜிடம் ஒரு பெண் மனு கொடுத்தார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது உடுமலையை அடுத்த போடிபட்டி பகுதியை சேர்ந்த அம்பிகாவதி என்பவர் பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தனது கணவரை மீட்க கோரி மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் உடுமலையை அடுத்த போடிபட்டி பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சத்தியநாராயணன். எங்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் இருக்கிறார்கள். எனது கணவர் கடந்த 1–11–2010–ந்தேதி பக்ரைன் நாட்டில் உள்ள தனியார் கணினி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைக்காக சேர்ந்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து எனது கணவர் இந்தியாவுக்கு திரும்பி வர தயாரான சமயத்தில், அவர் வேலை பார்த்த நிறுவனம் எனது கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை திரும்ப கொடுக்காமல் முடக்கி வைத்து மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்காக பல ஆதாரமற்ற பொய்யான காரணங்களையும் கூறி வருகின்றனர்.
இதை தொடர்ந்து பக்ரைனில் சிக்கிதவிக்கும் எனது கணவரை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் விளைவாக, எனது கணவர் வேலை பார்த்த அந்த நிறுவனம் பழைய பாஸ்போர்ட்டை முடக்கி விட்டு புதிய பாஸ்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளது. ஆனால் விசா திரும்ப கிடைக்காததால் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
மேலும் பல பொய்யான வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளதால் அந்த நாட்டு சட்டத்தின்படி அவர் கைது செய்யப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளார். தூதரகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து முறைபடி தகவல் தெரிவித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனது கணவரை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய–மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
உடுமலை கார்த்திகை விழா மன்றத்தின் சார்பில் 53–ம்ஆண்டு நவராத்திரி இசை இலக்கிய கலை விழா உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் கடந்த 25–ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவையொட்டி தினசரி மாலையில் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி திருமுறை இசை அரங்கம், சிறப்பு இசை நிகழ்ச்சி, சிறப்பு வீணை இசை நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.
நேற்று முன்தினம் உடுமலை டாக்டர்கள் எம்.தாமரைச்செல்வன், பி.கே.ஸ்ரீதேவி தாமரைச்செல்வன் தம்பதியினரின் மகன் 6–ம் வகுப்பு மாணவர் டி.அதீதன் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் எம்.அசோக் தலைமை தாங்கினார். கார்த்திகை விழா மன்ற செயலாளர் அங்கு பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கார்த்திகை விழா கமிட்டி உறுப்பினர் எம்.சாய்சரவணகுமார், சத்யம்பாபு உள்பட பலர் வாழ்த்தி பேசினார்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டராக்ட் மற்றும் இண்டராக்ட் சங்கங்கள் தொடக்க விழா உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிட ஹாலில் நடந்தது. விழாவிற்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஸ்ரீதரன்நம்பியார் தலைமை தாங்கினார். விழாவில் ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், உடுமலை அரசு கலைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்.கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், ஸ்ரீ ஜி.வி.ஜி மேல்நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், வித்யநேத்ரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், செப்பைரஸ் பள்ளி இண்ட்ராக்ட் சங்கம் ஆகிய சங்கங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த சங்க நிர்வாகிகளுக்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஸ்ரீதரன்நம்பியார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரிடம் ஜம்முகாஷ்மீர் வெள்ள நிவாரண தொகையாக வித்யநேத்ரா மற்றும் செப்ரைஸ் இண்ட்டராக்ட் சங்கம் ரூ.1லட்சத்து 16ஆயிரத்து 600–ம், ஸ்ரீ ஆதர்ஷ் பள்ளி இண்ட்ராக்ட் சங்கம் ரூ.1லட்சத்து 13 ஆயிரத்து 380–ம், சைனிக் பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் ரூ.5ஆயிரம், ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் ரூ.45 ஆயிரமும், காந்திநகர் ரோட்டராக்ட் சங்கம் ரூ.25ஆயிரம், உடுமலை ரோட்டரி சங்கம் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 100 வழங்கியது. விழாவில் ரோட்டர் சங்க மாவட்ட செயலாளர்கள் டி.ஜெகதீசன், வக்கீல் மோகன்ராஜ், ஸ்ரீ.ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் ஜி.சுகுணா, ரோட்டராக்ட் இளைஞர் பிரிவு தலைவர் ஆர்.அருண்கார்த்திக், உடுமலை ரோட்டரி சங்க தலைவர் தேவசிகுட்டி ஜோஸ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் டி.ரத்தினவேல் ஆகியோர் பேசினர். முடிவில் சங்க செயலாளர் ஆடிட்டர் எஸ்.சிவப்பிரகாஷ் நன்றி கூறினார்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட வக்கீல் பிரிவு அவைத்தலைவர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்புக்கு காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியசாமியை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் நேற்று முதல் வருகிற 5–ந்தேதி வரை புறக்கணிப்பு செய்வது, இது சம்பந்தமான அடுத்தகட்ட கூட்டத்தை வருகிற 5–ந்தேதி கூட்டி அடுத்த கட்ட முடிவு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள 150–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வக்கீல்கள் நேற்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கோர்ட்டு வழக்கு பணிகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடந்த 27–ந்தேதி பெங்களூர் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததன் எதிரொலியாக தாராபுரத்தில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தியது தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் மோதிக்கொண்டனர்.
அப்போது கார் மற்றும் சில மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த சிவசங்கர், மகாமுனி, பெருமாள்சாமி ஆகிய 3 பேரை நேற்று தாராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
சென்னை, 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோனாஷா டி சன்னா (வயது 19) சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்து, தனது வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்போல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி (17) தனது உடலில் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பியதுடன், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே வகுப்புகளுக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் ஆய்வு மையத்தின் வெளியே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது ஆராய்ச்சி மையத்தின் தரத்தை உயர்த்தியதில் முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் கைது செய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’, என்றனர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக நேற்று மதியம் 12 மணி அளவில் கல்லூரி நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகள் திரண்டனர். அங்கு ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி, கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, பாடப்புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிய ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 1,800 பேரும், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் 3,925 பேரும், அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 1,490 பேரும் வகுப்புகளை புறக்கணித்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை அடுத்த மேலூரில் உள்ள அரசினர் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.