Saturday, October 04, 2014
ஜெயலலிதா விரைவில் விடுதலை செய்யக்கோரி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி
சர்வசமய பிரார்த்தனை நடந்தது. தீர்ப்புக்கு எதிர்ப்பு
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனிக்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை, தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி கலையரங்கில் சர்வ சமய பிரார்த்தனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், மேயருமான கணபதி ராஜ் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்து மதம் சார்பில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கிறிஸ்தவ மதம் சார்பில் பாதிரியார் அசோக்குமார் (டி.இ.எல்.சி), முஸ்லிம் மதம் சார்பில் ராம்நகர் ஜமாத் தலைமை இமாம் முகமது பாரூக் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.முன்னதாக மேயர் கணபதி ராஜ்குமார் பேசும்போது தாயை இழந்த குழந்தை போல்
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்புக்கு தமிழக மக்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை காட்டிவருகின்றனர். பொதுவாக பல்சமய பிரார்த்தனையில் மிகுந்த பலன் உண்டு. இந்த வகையில் சதிகாரர்களால் புனையப்பட்ட பொய்வழக்கால் சிறைக்கு சென்றுள்ள கழக பொதுக்செயலாளரை விடுதலை செய்யக்கோரி இந்த கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் சாதி, இன, சமய வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபட்டு மனம் உருகி பிராத்தனை செய்வோம். இந்த பிரார்த்தனையில் மிகுந்த வலிமை உண்டு. இந்த பிரார்த்தனையால் தாயை இழந்த குழந்தை போன்று தவிக்கும் தமிழகத்துக்கு விடிவு ஏற்படும் என்று நம்புவோம். மீண்டும் அவர் முதல்–அமைச்சராக வந்து தமிழக மக்களின் கண்ணீரை துடைப்பார். அதற்காக நாம் கையில் தீபங்கள் ஏந்தி கடவுளிடம் மனம் உருக பிரார்த்திப்போம்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தா.மலரவன், வி.சி.ஆறுக்குட்டி, மண்டல தலைவர்கள் கே.ஆர்.ஜெயராமன், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்தீபன், பெருமாள்சாமி, குழுத்தலைவர்கள் அம்மன் அர்ஜூனன், பிரபாகரன், சாந்தாமணி, வக்கீல் ராஜேந்திரன், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜூ, அண்ணா தொழிற்சங்க தலைவர் நா.கருப்புசாமி, சி.டி.சி.கருணாகரன், முன்னாள் எம்.பி யு.ஆர்.கிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் பீளமேடு துரை, சிங்கை ரங்கநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் மெழுகு வர்த்தி தீபம் ஏந்தி மவுன பிரார்த்தனை செய்தனர்.
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கோவை மாவட்ட தக்னி சுன்னத் ஐக்கிய ஜமாத் சார்பில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.அகமத் பாஷா தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கலிமுதீன், அப்துல் ரஷீத், நசீர் ஷரீப், அன்வர் பாஷா, ஷேக்பாபு, அப்துல் ஜப்பார், முகமது ஷரீப், அப்துல் மன்னார் சையத்குத்தூஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி செல்வபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் அந்த பகுதியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி நேற்று செட்டிவீதி முதல் ஆண்டிபாளையம் வரை, செல்வபுரம் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் செல்வபுரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த கண்டன கூட்டத்தில், சங்க தலைவர் கருப்பையா, செயலாளர் சிவசேகர், பொருளாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் மெடிக்கல் நாராயணன், லட்சுமிசேகர், துணைதலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் கோவை தியாகி குமரன் மார்க்கெட் காய், கனி சிறுவியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்கெட் சபூர் பாய் தலைமை தாங்கினார். முத்தலி, உமர்அலி, முஸ்தபா, கிருஷ்ணன், சங்கர், சுக்கூர்பாய், கரீம், விசாலாட்சி, யூசுப், ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் கோவை உக்கடம் லாரிப்பேட்டை முகமதுஅலி பழைய இரும்பு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
சர்வசமய பிரார்த்தனை நடந்தது. தீர்ப்புக்கு எதிர்ப்பு
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனிக்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை, தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி கலையரங்கில் சர்வ சமய பிரார்த்தனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், மேயருமான கணபதி ராஜ் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்து மதம் சார்பில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கிறிஸ்தவ மதம் சார்பில் பாதிரியார் அசோக்குமார் (டி.இ.எல்.சி), முஸ்லிம் மதம் சார்பில் ராம்நகர் ஜமாத் தலைமை இமாம் முகமது பாரூக் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.முன்னதாக மேயர் கணபதி ராஜ்குமார் பேசும்போது தாயை இழந்த குழந்தை போல்
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்புக்கு தமிழக மக்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை காட்டிவருகின்றனர். பொதுவாக பல்சமய பிரார்த்தனையில் மிகுந்த பலன் உண்டு. இந்த வகையில் சதிகாரர்களால் புனையப்பட்ட பொய்வழக்கால் சிறைக்கு சென்றுள்ள கழக பொதுக்செயலாளரை விடுதலை செய்யக்கோரி இந்த கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் சாதி, இன, சமய வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபட்டு மனம் உருகி பிராத்தனை செய்வோம். இந்த பிரார்த்தனையில் மிகுந்த வலிமை உண்டு. இந்த பிரார்த்தனையால் தாயை இழந்த குழந்தை போன்று தவிக்கும் தமிழகத்துக்கு விடிவு ஏற்படும் என்று நம்புவோம். மீண்டும் அவர் முதல்–அமைச்சராக வந்து தமிழக மக்களின் கண்ணீரை துடைப்பார். அதற்காக நாம் கையில் தீபங்கள் ஏந்தி கடவுளிடம் மனம் உருக பிரார்த்திப்போம்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தா.மலரவன், வி.சி.ஆறுக்குட்டி, மண்டல தலைவர்கள் கே.ஆர்.ஜெயராமன், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்தீபன், பெருமாள்சாமி, குழுத்தலைவர்கள் அம்மன் அர்ஜூனன், பிரபாகரன், சாந்தாமணி, வக்கீல் ராஜேந்திரன், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜூ, அண்ணா தொழிற்சங்க தலைவர் நா.கருப்புசாமி, சி.டி.சி.கருணாகரன், முன்னாள் எம்.பி யு.ஆர்.கிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் பீளமேடு துரை, சிங்கை ரங்கநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் மெழுகு வர்த்தி தீபம் ஏந்தி மவுன பிரார்த்தனை செய்தனர்.
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கோவை மாவட்ட தக்னி சுன்னத் ஐக்கிய ஜமாத் சார்பில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.அகமத் பாஷா தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கலிமுதீன், அப்துல் ரஷீத், நசீர் ஷரீப், அன்வர் பாஷா, ஷேக்பாபு, அப்துல் ஜப்பார், முகமது ஷரீப், அப்துல் மன்னார் சையத்குத்தூஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி செல்வபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் அந்த பகுதியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி நேற்று செட்டிவீதி முதல் ஆண்டிபாளையம் வரை, செல்வபுரம் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் செல்வபுரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த கண்டன கூட்டத்தில், சங்க தலைவர் கருப்பையா, செயலாளர் சிவசேகர், பொருளாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் மெடிக்கல் நாராயணன், லட்சுமிசேகர், துணைதலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் கோவை தியாகி குமரன் மார்க்கெட் காய், கனி சிறுவியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்கெட் சபூர் பாய் தலைமை தாங்கினார். முத்தலி, உமர்அலி, முஸ்தபா, கிருஷ்ணன், சங்கர், சுக்கூர்பாய், கரீம், விசாலாட்சி, யூசுப், ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் கோவை உக்கடம் லாரிப்பேட்டை முகமதுஅலி பழைய இரும்பு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்து உள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியி ருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் தொடங்கி உள்ளதால், அவை கோவை வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் போது காட்டு யானைகள் அருகே உள்ள குடியிருப்புகளில் நுழைந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமலை வனப்பகுதியில் இருந்து 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் யானைமடுவு பகுதிக்குள் நுழைந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கிருந்த வாழைத்தோட்டங் களில் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. இதை அறிந்த பொதுமக்கள் தீவிர முயற்சி செய்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
ஆனால் அவை வனத்திற்குள் செல்லாமல் அங்கிருந்து தாளியூர் வழியாக தீனம்பாளையம் பகுதிக்கு சென்றன. பின்னர் தீனம்பாளையம் மெயின் ரோட்டில் சிறிதுநேரம் நின்று கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு ரேஷன் கடையின் கதவை காட்டுயானைகள் உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் ரேஷன் கடையில் இருந்த அரிசியை யானைகள் தின்று தீர்த்தன.
இதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானைகளை விரட்ட முயன்றனர். மேலும் வனத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் காட்டுயானைகள் நின்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்து உள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியி ருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் தொடங்கி உள்ளதால், அவை கோவை வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் போது காட்டு யானைகள் அருகே உள்ள குடியிருப்புகளில் நுழைந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமலை வனப்பகுதியில் இருந்து 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் யானைமடுவு பகுதிக்குள் நுழைந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கிருந்த வாழைத்தோட்டங் களில் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. இதை அறிந்த பொதுமக்கள் தீவிர முயற்சி செய்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
ஆனால் அவை வனத்திற்குள் செல்லாமல் அங்கிருந்து தாளியூர் வழியாக தீனம்பாளையம் பகுதிக்கு சென்றன. பின்னர் தீனம்பாளையம் மெயின் ரோட்டில் சிறிதுநேரம் நின்று கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு ரேஷன் கடையின் கதவை காட்டுயானைகள் உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் ரேஷன் கடையில் இருந்த அரிசியை யானைகள் தின்று தீர்த்தன.
இதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானைகளை விரட்ட முயன்றனர். மேலும் வனத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் காட்டுயானைகள் நின்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்படும்படியாக சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது கோணிப்பையில் 25 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார்(வயது 25) என்பதும், டாஸ்மாக் கடையில் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி டாஸ்மாக் கடை விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி அன்று திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. சிவகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
சென்னை தண்டையார்பேட்டை ரெயில்வே யார்டில் மின்வயரில் சிக்கிய காற்றாடியை எடுக்க சென்றபோது மின்சாரம் தாக்கி 10–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 15). இவன், அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 1–ந் தேதி தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் ரெயில்வே யார்டில் உள்ள மின்சார கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க அங்கிருந்த ரெயில்வே பணி வண்டியில் ரமேஷ் ஏறினான். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்வயரில் அவனது உடல் உரசியது.
இதில் அவன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். படுகாயம் அடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி வ.உ.சி. நகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரம் கம்ப்யூட்டர் பழுதானது. இதனால் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென குடியுரிமை பகுதி, போர்டிங் பாஸ் வழங்கும் பகுதி ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர்கள் பழுதாகி செயல் இழந்தது.
அப்போது சென்னையில் இருந்து லண்டன், குவைத், கொழும்பு, மஸ்கட், பக்ரைன் உள்பட 10 நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. அதில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனை மற்றும் குடியுரிமை சோதனை செய்வதற்காக நீண்ட வரிசையில் கவுண்ட்டர்களில் காத்து இருந்தனர்.
ஆனால் கம்ப்யூட்டர் பழுதானதால் விரைவாக சோதனை நடத்த முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் வந்து பார்த்தனர்.
இது பற்றி கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்களில் பலர் தசரா மற்றும் பக்ரீத் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். இதையடுத்து பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்து மீண்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
5 மணிநேர போராட்டத்துக்கு பிறகு காலை 7.30 மணி அளவில் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதுவரை பயணிகள் சோதனை மற்றும் போர்டிங் பாஸ் வழங்கும் பணிக்காக கூடுதலான ஆட்களை நியமித்து வழங்கப்பட்டன.
இதனால் 10 விமானங்களும் சுமார் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி சென்னை புறநகர் பகுதியில் அ.தி.மு.க.வினர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நந்தம்பாக்கத்தில் மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான எஸ்.ராஜசேகர் தலைமை தாங்கினார். மண்டலக்குழு தலைவர் பரிமளா நந்தகுமார், கவுன்சிலர்கள் ஹேமாபரணிபிரசாத், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் ப.தன்சிங், வி.என்.பி.வெங்கட்ராமன், ஒன்றிய தலைவர் என்.சி.கிருஷ்ணன், பட்ரோடு தேன்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மூவரசம்பட்டில் மாவட்ட பாசறை செயலாளர் கோவிலம்பாக்கம் ராஜேஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்தவச்சலம் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் 10 பேர் மொட்டை போட்டுக்கொண்டனர்.
கொட்டிவாக்கத்தில் பெருங்குடி மண்டலக்குழு தலைவர் கொட்டிவாக்கம் ராஜாராம் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் டி.வி.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஆலந்தூர் நகர ஜெயலலிதா பேரவை சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. மாநகராட்சி கவுன்சிலரும், பேரவை செயலாளருமான சீ.வேம்பரசன் தலைமை தாங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் என்.தனசேகரன், எஸ்.வரதராஜன், பி.சிவராஜ், ஜி.பி.குணா, எம்.எச்.உமர்கத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 5 அ.தி.மு.க. தொண்டர்கள் மொட்டை போட்டுக் கொண்டனர்.
தென்சென்னை மாவட்ட இலக்கிய அணி சார்பில், ஜெயலலிதா விடுதலை கோரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஷேக்அலி, மஜித் ஆகியோர் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ஜி.செந்தமிழன், எம்.கே.அசோக், மாநகராட்சி கவுன்சிலர் என்.எஸ்.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நந்தம்பாக்கத்தில் அ.தி.மு.க. செயலாளர் பர்மா கண்ணன் 108 அலகு குத்தி கொண்டு தேர் இழுத்தார். நீலாங்கரையில் சென்னை மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையில் மனித சங்கிலி பேரணி நடந்தது. கோவிலம்பாக்கம் ஊராட்சி அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து மணலியில் அ.தி.மு.க.வினர் மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் தலைமையில் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜோசப், எஸ்.ஆர்.ரவி, சங்கர் உள்பட 101 அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்துக்கொண்டனர். மேலும் மும்மத வழிபாடும், யாக சாலை வழிபாடும் செய்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.குப்பன், மண்டலக்குழு தலைவர் தங்கசிவம், நகர செயலாளர் டாக்டர் கே.சி.சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அனைவரும் ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல எண்ணூரில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வம், எழிலரசி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
அம்பத்தூரில் நகர அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூர் ஓ.டி.பஸ்நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அம்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
ரெயில் நிலையங்களில் தூய்மை படுத்தும் பணி தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தொடங்கி வைத்தார்
சென்னை ரெயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணியை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.
இந்தியாவை சுத்தப்படுத்தும் வகையில் தலைநகர் டெல்லியில் ‘தூய்மையான இந்தியா–2014’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க.வினர் இந்தியா முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் முக்கிய ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களில் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தில் ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சென்னையில் ரெயில் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களிலும் ‘தூய்மையான இந்தியா’ திட்டம் ஒரேநேரத்தில் செயல்படுத்தப்பட்டது. ரெயில்வே அலுவலக சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. கழிப்பறைகள் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. ரெயில்வே தண்டவாளங்கள், காலனிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மேலும், பணி செய்யும் அலுவலக வளாகங்கள் அடிக்கடி தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோட்ட அதிகாரிகளிடம் எடுத்து கூறப்பட்டது.
இந்தநிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சென்னை கோட்டை ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மின்சார ரெயிலில் ஏறி கோட்டை–தாம்பரம் மற்றும் தாம்பரம்–சென்னை எழும்பூர் மார்க்கம் வரை ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். மின்சார ரெயிலில் வந்த பயணிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் பயணிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களிடம் ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்த முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் ராகேஷ் மிஸ்ரா தூய்மைப்படுத்தும் முகாமை ஏற்படுத்தி, அவரே ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.
அதேபோல் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே மகளிர் நல மேம்பாட்டு ஆணைய தலைவர் மஞ்சுளா மிஷ்ரா தலைமையில் நடந்த தூய்மை முகாமிலும் அவர் கலந்துகொண்டார்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், மூர்மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மண்டல மேலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தில் ஈடுபட்டனர். மனித சங்கிலி, பேரணி, கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் பொதுமக்கள்–பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
‘தூய்மையான இந்தியா’ திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ரெயில் நிலையத்துக்கு வரும் குழந்தைகளை கவர்வதற்காகவும், ரெயில்வே ஊழியர்கள் புகழ்பெற்ற ‘கார்ட்டூன்’ கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து இருந்தனர். தெற்கு ரெயில்வே முழுவதும் நடந்த சுத்தப்படுத்தும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி–கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தாம்பரத்தில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் நடந்த தூய்மையான இந்தியா விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் மண்டல முதன்மை ஆணையாளர் மதியழகன் தொடங்கி வைத்தார்.
இதில் தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஏந்திய பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சென்றனர். இதில், ஆணையாளர்கள் முருகவேல், விஸ்வநாதன், பாலசுப்பிரமணியன், பிஜயந்த் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மெரினாவில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). கார் டிரைவரான இவர் கடந்த புதன்கிழமை அன்று காலையில், மெரினாவில் விவேகானந்தர் இல்லம் எதிரில் கடற்கரை மணலில் பிணமாக கிடந்தார். கத்தியால் குத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
கார்த்திக்கின் உடலை போலீசார் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்
இந்த நிலையில் டிரைவர் கார்த்திக் எப்படி கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்று துப்புதுலங்கி விட்டதாக நேற்று இரவு பரபரப்பு தகவல்கள் வெளியானது. ஆனால் விசாரணை முடிவடையாததால், போலீசார் தகவல்களை வெளியிட மறுத்தனர்.
கொலை செய்யப்பட்ட டிரைவர் கார்த்திக்கின் மனைவி மற்றும் 4 பேரை போலீசார் நேற்று இரவு பிடித்து வந்தனர். மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கார்த்திக் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு போனார். அண்மையில் தான் விடுதலையாகி வந்தார். விடுதலையாகி வந்தவுடன் அவரை தீர்த்துக்கட்டி விட்டனர். அவரது மனைவியுடன் நல்லபடியான இல்லற வாழ்க்கையில் அவர் ஈடுபடவில்லை என்று தெரிகிறது.
அவர்கள் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இல்லற வாழ்க்கையில் வீசிய புயல்தான், கார்த்திக் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு தொழில் பின்னணியில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற இன்னொரு கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக சென்னையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாக்கள் களையிழந்தன. இதனால் கோயம்பேட்டில் பொரி மற்றும் பூசணிக்காய் போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர், பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக அரசு அலுவலகங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுதபூஜை விழா, இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறவில்லை. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை களை இழந்தத
இதேபோன்று, ஆயுதபூஜை விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடும் ஆட்டோ நிறுத்த சங்கங்களும் ஆயுதபூஜையை புறக்கணித்தன.
இதனால், பூஜை பொருட்களான அவல், பொரி, கடலை மற்றும் திருஷ்டி பூசணிக்காய் போன்றவைகளின் விற்பனை மந்தமானது. கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த இதுபோன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.
பொரி-கடலை வியாபாரியான தினேஷ்குமார்-காளீஸ்வரி தம்பதியினர் கூறும்போது, “வழக்கமாக ஆண்டுதோறும் 350 முதல் 400 மூட்டை பொரி விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு 150 மூட்டை பொரி மட்டுமே விற்பனையாகி உள்ளது” என்றனர்.
பூசணிக்காய் வியாபாரி ஜெயந்தி கூறும்போது, “வழக்கமாக 1 டன் பூசணிக்காய் விற்பனை ஆகும். கடந்த ஆண்டு ஒரு பூசணிக்காய் 80 முதல் 120 ரூபாய் வரை விற்றபோதும் அனைத்து காய்களும் விற்றுத்தீர்ந்தன. ஆனால் இந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக போராட்டங்கள் நடைபெறுவதால் ஆயுதபூஜை சிறப்பாக இல்லை. இதனால் ஒரு பூசணிக்காய் 30 முதல் 50 ரூபாய் வரை என விலை குறைவாக இருந்தாலும் 50 சதவீதம் கூட விற்பனை ஆகவில்லை” என்றார்.
பழ வியாபாரி பேபி கூறும்போது, “கடந்த ஆண்டு அதிகமான விலை என்றாலும் அனைத்து பழங்களும் விற்றுவிட்டதால் நல்ல லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு, அதிக லாபமின்றி விற்றபோதும் பழங்கள் விற்பனையாகவில்லை. ஒரு கிலோ ஆப்பிள் 60 முதல் 100 ரூபாய்க்கும், சாத்துக்குடி 50 ரூபாய்க்கும், கொய்யாப்பழம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடவில்லை என்பதால் பழங்கள் விற்பனை மந்தமாக உள்ளது” என்றார்.
மழை இல்லாததால் பூக்கள் வரத்து வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்த பூக்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன என்று பூ வியாபாரிகள் சங்க தலைவர் எம்.டி.அருள் விசுவாசம் கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர், பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக அரசு அலுவலகங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுதபூஜை விழா, இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறவில்லை. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை களை இழந்தத
இதேபோன்று, ஆயுதபூஜை விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடும் ஆட்டோ நிறுத்த சங்கங்களும் ஆயுதபூஜையை புறக்கணித்தன.
இதனால், பூஜை பொருட்களான அவல், பொரி, கடலை மற்றும் திருஷ்டி பூசணிக்காய் போன்றவைகளின் விற்பனை மந்தமானது. கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த இதுபோன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.
பொரி-கடலை வியாபாரியான தினேஷ்குமார்-காளீஸ்வரி தம்பதியினர் கூறும்போது, “வழக்கமாக ஆண்டுதோறும் 350 முதல் 400 மூட்டை பொரி விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு 150 மூட்டை பொரி மட்டுமே விற்பனையாகி உள்ளது” என்றனர்.
பூசணிக்காய் வியாபாரி ஜெயந்தி கூறும்போது, “வழக்கமாக 1 டன் பூசணிக்காய் விற்பனை ஆகும். கடந்த ஆண்டு ஒரு பூசணிக்காய் 80 முதல் 120 ரூபாய் வரை விற்றபோதும் அனைத்து காய்களும் விற்றுத்தீர்ந்தன. ஆனால் இந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக போராட்டங்கள் நடைபெறுவதால் ஆயுதபூஜை சிறப்பாக இல்லை. இதனால் ஒரு பூசணிக்காய் 30 முதல் 50 ரூபாய் வரை என விலை குறைவாக இருந்தாலும் 50 சதவீதம் கூட விற்பனை ஆகவில்லை” என்றார்.
பழ வியாபாரி பேபி கூறும்போது, “கடந்த ஆண்டு அதிகமான விலை என்றாலும் அனைத்து பழங்களும் விற்றுவிட்டதால் நல்ல லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு, அதிக லாபமின்றி விற்றபோதும் பழங்கள் விற்பனையாகவில்லை. ஒரு கிலோ ஆப்பிள் 60 முதல் 100 ரூபாய்க்கும், சாத்துக்குடி 50 ரூபாய்க்கும், கொய்யாப்பழம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடவில்லை என்பதால் பழங்கள் விற்பனை மந்தமாக உள்ளது” என்றார்.
மழை இல்லாததால் பூக்கள் வரத்து வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்த பூக்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன என்று பூ வியாபாரிகள் சங்க தலைவர் எம்.டி.அருள் விசுவாசம் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...



