Saturday, October 18, 2014

On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர் வெங்கமேடு வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பிரபல கல்வியாளர்கள், சமூக அறிஞர்கள் பங்கேற்று கருத்துரைகள் வழங்கினர்.
திருப்பூர் வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வெற்றிக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி சனியன்று ஜெகா கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி வளர்ச்சிக்குழுத் தலைவர் டிக்ஸன் குப்புசாமி தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.சிதம்பரநாதன், 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன், பெற்றோர் ஆசிரியர் குழுத் தலைவர் ஜெகநாதன், பொருளாளர் கே.முருகேசன், நிர்வாகக்குழு உறுப்பினர் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். இவர்களுடன் பத்மாவதிபுரம் அறிவுத்திருக்கோயில் நிர்வாகிகள் குணசேகரன், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் 266 பேருக்கும், பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் 264 பேருக்கும் தனித்தனி அரங்குகளில் ஆலோசனை வழங்கப்பட்டன. அதேபோல் பள்ளி ஆசிரியர்கள் 60 பேருக்கும், மாணாக்கர்களின் பெற்றோர்கள் சுமார் 300 பேருக்கும் தனித்தனியாக நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
இதில் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் கே.செல்வராஜன், அமிர்தா பல்கலைக்கழக மக்கள் தொடர்பு இயக்குநர் பேராசிரியர் எஸ்.ரங்கநாதன், கே.பி.ஆ்ர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர், பயிற்சியாளர் பொறிஞர் எம்.தேவதாஸ், மனோதத்துவ ஆலோசகர் டாக்டர் எம்.எஸ்.கே.முகையதீன், தைரோகேர் இயக்குநர் ஏ.ரத்தினசாமி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் புவியரசு, கோவை பிஎஸ்ஜி எப்எம் ரேடியோ திட்ட இயக்குநர் பி.சுதாகர், யுவதி பெண்கள் அமைப்பின் நிறுவனர் ஏ.எஸ்.மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அவர்களது சமூகப் பொருளாதார நிலைக்கு ஏற்ப சிறந்த எதிர்காலத்தைத் தேர்வு செய்வதற்கான பொருத்தமான ஆலோசனைகள் வழங்கினர்.
மாணவர்களுக்கு பாடம் பயிலும் முறை, நினைவில் வைத்துக் கொள்வதற்கான நுட்பம், தேர்வு அச்சத்தில் இருந்து விடுபடுதல், தாழ்வுமனப்பான்மையை புறந்தள்ளுதல், உற்சாகப்படுத்துதல், உடல்நலம் பேணுதல் கையெழுத்து நுட்பம், நேர மேலாண்மை குறித்து விரிவாக விளக்கினர்.
அதேபோல் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் திறனை கண்டறிந்து பயிற்சி அளிப்பது, அவர்களை ஊக்கப்படுத்துவது, ஆளுமையை மேம்படுத்துவது தொடர்பாகவும் விளக்கினர். பெற்றோர்கள் மாணவர்களிடம் வைத்துக் கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றது, மாநில அளவில் ஐந்தாம் இடம் பெற்றது. இந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் படிக்கும் சாமானிய வீட்டுப் பிள்ளைகள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் வெற்றி பெறுவதற்காக தேர்ந்த வல்லுநர்களைக் கொண்ட இந்த முகாம் நடத்தப்பட்டதாக பள்ளி வளர்ச்சிக்குழுவினர் தெரிவித்தனர்.


On Saturday, October 18, 2014 by farook press in ,    
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே 
              அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் 
                      திருப்பூர் மேயர் விசாலாட்சி சூளுரை 

திருப்பூர்,அக்.18-
ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் என திருப்பூர் மேயர் விசாலாட்சி கூறினார்.
திருப்பூர் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு விடுதலை ஜாமீன் கிடத்ததையடுத்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பழைய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்டனர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களும் எழுப்பினர்.மேலும்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 21நாட்களாக அணிந்திருந்த கருப்புச்சட்டையை கழற்ற்றி விட்டு வெள்ளை சட்டையை அணிந்துக்கொண்டனர். 
ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது குறித்து மேயர் அ.விசாலாட்சி கூறியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும்,உள்நோக்கத்துடனும்,பகைமையுணர்ச்சியோடும்,வெறுப்புடனும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீது அரசியல் எதிரிகளால்,அவர் மீது கொடுக்கப்பட்ட பொய் வழக்கில் எதிரிகளுக்கு தற்காலிகமான வெற்றி கிடைத்தது.அதன் அடிப்படையில் ஜெயலலிதா 21நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, அவர் விடுதலை பெற வேண்டி அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களின் அறப்போராட்டத்தினாலும்,அருள் வேண்டுதல்களாலும் ஜாமீனில் வெளியானது மனதிற்கு நிம்மதி தருகிறது.கூடிய விரைவில் அவர் பொய் வழக்கில் இருந்து முழு வெற்றிப்பெற்று முற்றிலுமாக வழக்கிலிருந்து விடுப்பட்டு நரகாசுரர்களை அழித்து நாடாளும் நாள் வெகு தொலைவில் இல்லை.ஜெயலலிதா நாடாளும் நன்நாளே தமிழர்களுக்கு தீபாவளி திருநாள்,
இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி கூறினார்.
முன்னதாக நேற்று காலை மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் அக்கட்சியின் 43 வது ஆண்டு துவக்கவிழா குள்ளிச்செட்டியார் வீதியில் உள்ள  தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் எளிமையான முறையில் கொடியேற்று விழா நடந்தது.அதன் பின்னர் பார்க் ரோட்டில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் சிலைக்கு நடந்து சென்று நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெயலலிதாபேரவை செயலாளர்வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி.மார்க்கெட் நா.சக்திவேல், அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், ஏ.ஸ்டீபன்ராஜ்,ஏ.எஸ்,சதீஷ், 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், கோமதிசம்பத், வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், பூளுவபட்டி பாலு, வேலம்பாளையம் அய்யாசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி, ஹரிஹரசுதன், சி.எஸ்.கண்ணபிரான், ரகுநாதன், பி.கே.எஸ்.சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், அசோக்குமார்,பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், குணசேகர்,  விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, சபரீஷ்வரன், செந்தில்குமார், பேபி தர்மலிங்கம், முன்னால் கவுன்சிலர்கள் சு.கேசவன்,ருக்குமணி, ராஜகோபால், பேபி பழனிசாமி மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், பொன்.அன்பரசன், நீதிராஜன், ஆண்டவர் பழனிசாமி, பங்க் என்.ரமேஷ், என்.சரவணன், கிளை கழக செயலாளர்கள் விவேகானந்தன்,ராஜேந்திரன், மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், வேங்கை விஜயகுமார், எம்.ஜி.குணசேகரன், மதுரபாரதி உள்ளிட்டவர்களும், பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன்,மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தராம்பாள் கேசவன்,  மும்தாஜ், இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

On Saturday, October 18, 2014 by farook press in ,    
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் விடுதலையை கொண்டாடினார்கள். ஈரோட்டில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் முன்பு கூடினார்கள். அவர்கள் உற்சாக மிகுதியால் துள்ளிக்குதித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். மகளிர் அணியினர் சிலர் மகிழ்ச்சி காரணமாக மேயர் மல்லிகா பரமசிவத்தை சுமந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தங்கள் நேர்ச்சையை செலுத்தினார்கள். பெரிய மாரியம்மனுக்கு அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்தனர்.
பின்னர் அங்கிருந்து அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். தொண்டர்கள் அ.தி.மு.க. கொடிகளை கையில் ஏந்தி உற்சாகமாக `அம்மா வாழ்க` என்ற கோஷங்கள் எழுப்பினார்கள். சிலர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஈரோடு முனிசிபல்காலனி விநாயகர் கோவிலில் ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நகர அ.தி.மு.க. சார்பில் ஏராளமான அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன்கோவில், கோட்டை பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் என 5 கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, தலா 108 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை சார்பில் காளைமாடு சிலை பகுதியில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார். வார்டு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் காளைமாடு சிலை பகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஈரோடு நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இந்த கொண்டாட்டங்களில் ஈரோடு மாநகர் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாவட்ட பிரதிநிதி பி.பி.கே.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், காசிபாளையம் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கேபிள் ரமேஷ், வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.எஸ்.ஆர்.ராஜ்கிரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–இலங்கை அகதி 
ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர் இலங்கேஸ்வரன் (வயது 49). அவருடைய மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு இந்துமதி (25), துர்கா (22) ஆகிய 2 மகள்களும், ஜெகதீஸ்வரன் (16), வெங்கடேஸ்வரன் (14) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 2010–ம் ஆண்டு இலங்கையில் இருந்து இங்கு வந்து தங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் திடீரென இலங்கேஸ்வரன் யாரிடமும் சொல்லாமல் அகதிகள் முகாமை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பதிவேட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அகதிகள் முகாமுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது பெயரை மீண்டும் அரசு பதிவேட்டில் சேர்த்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினார்.
இதற்கிடையில் இலங்கேஸ்வரன் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இலங்கேஸ்வரன் நேற்று மாலை அகதிகள் முகாமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இலங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்களின் மகன் ரஞ்சித்குமார்(22).இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்து கடந்த 6 மாதமாக வேலை தேடிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தை பழனிசாமி கட்டிட வேலை செய்தபோது அடிபட்டு வேலைக்கு போக முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.ரஞ்சித்குமாரும் தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டு இருந்துள்ளார்.இந்த நிலையில் தனக்கும் வேலை கிடைக்கவில்லை, தந்தை நிலையும் இப்படி ஆகிவிட்டதே என்று வேதனையடைந்த ரஞ்சித்குமார் பூச்சி மருந்தை சாப்பிட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி விஜயமங்கலம் ரோட்டில் தியானேஸ்வரன்(வயது 26) என்பவர் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலைக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மாற்றி உயர் அழுத்த மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தினர் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் தியானேஸ்வரன் தனது அரிசி ஆலைக்கு உயர் அழுத்த மின்இணைப்பு அனுமதிக்க கேட்டு திருப்பூர் அவினாசி ரோடு குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த செயற்பொறியாளர் சுப்பிரமணியம் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பை மாற்றி கொடுப்பதாக கூறியுள்ளார்.அவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாது என்று தியானேஸ்வரன் கூறவே, இருவரும் பேரம் பேசி முடிவில் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பை மாற்றி கொடுக்கிறேன் என்று சுப்பிரமணியம் கூறியுள்ளார். ஆனால் தியானேஸ்வரனுக்கு லஞ்சம் கொடுப்பதில் சிறிதும் விருப்பம் இல்லை. இதனால் அவர் இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
உடனே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூ.20 ஆயிரத்துக்கு ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை தியானேஸ்வரனிடம் கொடுத்து, அதை செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி நேற்று காலை தியானேஸ்வரன் போலீசார் கொடுத்த பணத்துடன் திருப்பூர் அவினாசி ரோடு குமார்நகரில் உள்ள திருப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றார்.அங்கு தனது அலுவலக அறையில் இருந்த செயற்பொறியாளர் சுப்பிரமணியத்திடம் ரசாயன பொடி தடவிய 20 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுக்களை தியானேஸ்வரன் கொடுத்தார். அதை சுப்பிரமணியம் வாங்கி தனது மேஜை டிராயரில் வைத்ததாக தெரிகிறது. உடனே அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் பொறியாளர் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் சுப்பிரமணியத்திடம் லஞ்சஒழிப்பு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். இதைதொடர்ந்து பொறியாளர் சுப்பிரமணியத்தின் மீது ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் சுப்பிரமணியத்தை ஆஜர்படுத்தி அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுதிருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடகைக் கட்டணம் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி முதல் 18 கிலோ மீட்டர் தூரம் வரையில் குறைந்தபட்ச வாடகை ரூ.25–ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12–ம், காத்திருத்தல் கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50–ம் வசூலிக்க வேண்டும். இரவு நேர கட்டணமாக (இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) மேற்கண்ட கட்டண விகிதங்களில் வாடகை கட்டணம் கணக்கிட்டு மொத்த தொகையில் கூடுதலாக 50 சதவீதம் வசூல் செய்துகொள்ளலாம்.ஏற்கனவே சென்னை மாநகரில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகை திருத்தி அமைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மற்றும் இதர மாவட்டங்களுக்கு ஆட்டோ ரிக்ஷா ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி நிர்ணயம் செய்து இயக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாடகை ஆட்டோ ரிக்ஷா கட்டணம் இன்று(சனிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. எனவே ஆட்டோ ஓட்டுபவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களில் தற்போது பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் மீட்டர் கட்டணமானிகளில் புதிய கட்டணத்தை திருத்தி அமைக்க 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட கட்டண விகிதத்தை எழுதப்பட்டோ, அல்லது அச்சடிக்கப்பட்டோ வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பார்வையில் படும்படியாக ஒட்டப்பட வேண்டும்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
பல்லடம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 கிளை மாநாடுகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம் வருமாறு: பல்லடம் 4, 5வது வார்டு - எஸ்.காஜா, பல்லடம் 6வது வார்டு - அங்குராஜ், 15வது வார்டு - வி.எம்.இஸ்மாயில், சிடிசி - கிருஷ்ணசாமி, வடுகபாளையம் - ஏ.கிருஷ்ணசாமி, பகத்சிங் நகர் - செல்வராஜ், கிடாத்துறை புதூர் - சென்னியப்பன், வி.அய்யம்பாளையம் (வடக்கு) - ஏ.இ.சுப்பிரமணி, வி.அய்யம்பாளையம் (தெற்கு) - ஈஸ்வரமூர்த்தி, கரடிவாவி - முருகசாமி, காளிவேலம்பட்டி (மாதர்) - பரிமளா, காளிவேலம்பட்டி - ரவிராஜ், ராசக்கவுண்டன்பாளையம் - பழனிசாமி, சின்னியகவுண்டம்பாளையம் - ஜெயபிரகாஷ், உப்பிலிபாளையம் - பழனிசாமி, காமநாயக்கன்பாளையம் - வைஸ் சுப்பிரமணியம், கணபதிபாளையம் - முருகசாமி, செல்வலட்சுமிநகர் - ஜெயராமன், டெக்ஸ் கலாஸ் - ஜாகீர் உசேன், பல்லடம் 14, 16 வார்டுகள் - ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாடுகளில் பல்லடம் ஒன்றியக்குழுச் செயலாளர் ப.கு.சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பரமசிவம், வி.பழனிச்சாமி, ஆஸாத், ஆர்.பால்ராஜ், ஆர்.ஜி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி ஆட்டோ காம்போனன்ட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்க உடன்பாடு காணப்பட்டது.
சக்தி நிறுவனத் தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டு போனஸ் வழங்குவது குறித்து நிர்வாகத்துக்கும் சிஐடியு நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்கனவே மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது கட்டப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தரப்பில் முதுநிலைத் துணைத் தலைவர் (மனிதவளம்) முத்துவேலப்பன், துணைப் பொது மேலாளர் (தொழில் உறவு மற்றும் நலம்) கே.ஆர்.ராஜேந்திரன், துணை மேலாளர் எஸ்.சுரேஷ்குமார் (தொழிலாளர் நலப்பிரிவு) ஆகியோர் பங்கேற்றனர்.
சிஐடியு சார்பில் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மகாலிங்கம், பொதுச் செயலாளர் ஜெ.கந்தசாமி, பொருளாளர் வி.காமராஜ், துணைத் தலைவர் ஆர்.பழனிச்சாமி, துணைச் செயலாளர் கே.கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் நடப்பு ஆண்டு தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்குவதென்று முடிவு காணப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.66 சதவிகிதம் உயர்வு ஆகும். ஒரு தொழிலாளிக்கு சராசரியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாகக் கிடைக்கும். நிரந்தரத் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் இதில் பயனடைவார்கள். 
பயிற்சி பழகுநர் (அப்பரன்டிஸ்) மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் வழங்கவும் இருதரப்பு உடன்பாடு காணப்பட்டது. இதன் மூலம் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் பயனடைவர் என்று சிஐடியு சங்கச் செயலாளர் ஜெ.கந்தசாமி தெரிவித்தார்.