Tuesday, March 13, 2018

On Tuesday, March 13, 2018 by Tamilnewstv   
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு

கல்வியாண்டிற்கான (2017-2018) சாதனையாளர் தின விழா 13.03.2018
செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்லூரி திறந்த வெளி
கலையரங்கத்தில் அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது.
ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர்மதிப்பெண்
பெற்ற 235 மாணவர்கள் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவிற்கு நிதித்துறை மேனாள் கணக்கியல் இணைப்பொது
நெறியாளரும் லக்க்ஷ்மி குமரன் & ஸ்ரீதரன் குழும (புது தில்லி) தலைமை
வணிகப் பங்காளருமாகிய திரு எஸ். சீதாராமன் அவர்கள் சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றி பரிசுகளை
வழங்கினார்கள். மதிப்புறு விருந்தினராக திருச்சி அகமது பிரதர்ஸ் ஜவுளி
நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் திரு.எச். முகமது சித்திக் அவர்கள்
கலந்துகொண்டு சாதனையாளர்களை வாழ்த்தினார்கள். சமூகசேவை நோக்கில்
சமூகப் பணியாற்றிய எட்டு வகுப்பு மாணாக்கர்களுக்கு Heber Philanthrophy
விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் வென்ற
30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கும், 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்
பரிசளித்து சிறப்பு செய்யப்பட்டது.
கல்லூரியில் கருத்தரங்குகள் நிகழ்த்திதந்த கருத்தரங்க
ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றிய சுமார் இருபது பேராசிரியர்களுக்கு
சிறப்பு செய்யப்பட்டது.
முன்னதாக இவ்விழாவினை கல்லூரி சமய நெறியாளர் அருள்திரு
பி.செல்வராஜ் அவர்கள் இறைவேண்டல் செய்து தொடங்கி வைத்தார். கல்லூரி
பாடகர் குழுவினர் இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரி பாடல்
ஆகியவற்றை பாடினர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Wednesday, March 07, 2018

On Wednesday, March 07, 2018 by Tamilnewstv   
திருவெறும்பூரை அடுத்துள்ள பெல் கணேஷா பஸ் ஸ்டாப் அருகே ஹெல்மெட் கேஸ்போடும் போலீஸாரின் அத்துமீறலால் புதுமணப்பென் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலை மார்க்கத்தில் போக்குவரத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி திருவெறும்பூரை அடுத்த பெல் கணேஷா பஸ் ஸ்டாப் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் கையைக் காட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியினர் நிற்காமல் சென்றதால் போலீஸார், அவர்களை மற்றொரு பைக்கில் விரட்டிச்சென்று மறித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் பைக்கில் இருந்த தம்பதியினரை எட்டி உதைத்துள்ளார்.
இதனால் பைக்கை ஓட்டி வந்த ராஜா நிலை தடுமாற பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி உஷா சாலையில் கீழே விழுந்துள்ளார்.
அதேநேரம் அந்தப்பகுதியை கடந்த வேன் ஒன்று பைக் ஓட்டி வந்த ராஜா என்கிற தர்மராஜ் மனைவி உஷாவின் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாத கர்ப்பிணியான உஷா துடிதுடித்து கணவன் கண் முன்னேயே பலியானார். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். பின், போலீஸ்மீது பொதுமக்கள் கல்வீசித் தாக்க, சக போலீஸார் அவரை அலக்காக தூக்கி திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகேயுள்ள காவிரி அதி நவீன மருத்துவமனையில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்த விபத்தையும் போலீஸாரின் நடவடிக்கைகளையும் பார்த்த பொதுமக்கள் ஆவேசமடைந்த தங்களது மொபைல் போன் மூலம் சமூக ஊடகங்களுக்கும், ஊடகங்களுக்கும் தகவல் கொடுக்க அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதனிடையே உஷாவின் இறப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜை கைது செய்துள்ளதாக எஸ்.பி. கல்யாண் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் கேஸ் போட்டு வசூலைப்பார்க்கும் போலீஸ் மனித உயிர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றாலும் சரி இப்படி கேவலமா நடந்துக்கறது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் போலீஸாரை அர்ச்சனை செய்யத்துவங்கி விட்டனர்.


Monday, March 05, 2018

On Monday, March 05, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 
திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் பல்வேறுகட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் புகார் மனு

மக்கள் அரசு கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அரவிந்த்ஜெய்
அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம் மாநில தலைவர்  வழக்கறிஞர் அருண்சித்தார்த்தா  மக்கள்மறுமலர்ச்சி கழகம்நிறுவனர் வழக்கறிஞர் பொன்.முருகேஷன் ஆகியோர்திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீதும்அதனை நடத்தி வரும்ஈஸ்வரன் மீதும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்
அப்போது மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் பொன்.முருகேஷன் கூறுகையில் செவிலியர் (நர்சிங்) பயிற்சிக்கு போலி சான்றிதழ் அளித்து வரும்திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீதும்அதனை நடத்தி வரும்ஈஸ்வரன் மீதும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்பல்வேறு இடங்களில் நிறுவனம் நடத்தி மக்களையும் அதில் பயிலும் மாணவிகளுக்கு போலிசான்றிதழ் அளித்து ஏமாற்றி வருகிறார் அதனை தடுக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்
பேட்டி .....பொன்.முருகேஷன் வழக்கறிஞர் (மக்கள்மறுமலர்ச்சி கழகம்நிறுவனர்)
On Monday, March 05, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி        

ஸ்ரீரங்கம்,அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று காலை காவிரி ஆற்றில் தென்கரையில் மேல சிந்தாமணி படித்துறை பகுதியில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில் கால யாக பூஜையும் தொடர்ந்து நேற்று காலை கால யாக பூஜையும், பிரசாதம் வழங்குதல் நடைப்பெற்றது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைப்பெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜையும், மஹா பூர்ணாஹீதியுடன் கலசங்கள் புறப்பாடு நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து திருக்குடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் யாக சாலை பிரவேஷம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் விமானத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Saturday, March 03, 2018

On Saturday, March 03, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி 3.3.18
திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்
திருச்சி திருவாணைக்காவல் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இது குறித்து தெரிவித்தது திருச்சி மக்களின் போக்குவரத்து நெரிசலை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் (தற்போது மாநில நெடுஞ்சாலையில்) உள்ள குறுகிய திருவாணைக்காவல் ரயில்வே மேம்பாலத்திறற்கு மாற்றாக நான்கு வழித்தட புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டிருந்தது அதன்படி இப்பாலம் பணிகள் சென்னை- திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும் கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுவருகிறது.இப்பால பணி சென்னை திருச்சி கல்லணை ஆகிய மூன்று சாலைகளையும்  இணைக்கும் சாலையாக  உள்ளது
இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 2.10 லட்சம்மக்கள் தொகை கொண்ட திருவரங்கம்ääதிருவாணைக்காவல் மற்றும் லால்குடி புள்ளம்பாடிääதிம்மராய சமுத்திரம் மேலூர் திருச்சி மாநகரம் மற்றும் கரூர்ää குளித்தலை நகரத்துடன் இணைக்கும்.தற்போது திருவானைக்காவல் பழைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது
இப்பால வேலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்புதிய மேம்பாலத்தின் நீளம் 1430.284 மீட்டரும் 17.20 அகலமும் பாலப்பகுதியில் மட்டும் கட்டுமான பணிகள் 907.76 மீட்டரும் பாலத்தின் ஓடுதள அகலம் 7.50மீட்டரும் (நான்கு வழிச்சாலை )ஆகும் 
இப்புதிய மேம்பாலத்திற்கு 48 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது பாலத்தின் மீதம் உள்ள பணிகளை முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு முடிபெரும் தறுவாயில் உள்ளது என்றும் அதனால் சென்னை- திருச்சி திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் திருவானைக்காவல் மேம்பாலம் ரூ47.3கோடி மதிப்பில் கட்டப்பட்டு தற்போது 85 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுமெனவும் தடுப்பு சுவர் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணி முடிந்தவுடன் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

On Saturday, March 03, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி      3.3.18

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை  அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட கழக சார்பில் அனைத்து வார்டுகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அன்னதானம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி பெரியகடை வீதி சந்துக் கடை பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு    எழை எளிய மக்கள் 200 பேருக்கு மதியம் உணவுகள் மற்றும் 200 பேருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை  அமைச்சர்கள்

வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியானது சந்துகடை வார்டு வட்ட பிரதிநிதி  சந்துரு  ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம்ம
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு சால் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

Sunday, February 25, 2018

On Sunday, February 25, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி      25.2.18

இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி  என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனாளி தேர்வு

2016ம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 எழுத்துத் தேர்வில் திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற கும்பகோணத்தை சேர்ந்த காதர் மூசா மகள் ஆஃப்ரின் ஷிபானா (21) என்ற மாணவி வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிள அளவை பிரிவில் பணியில் சேர தேர்ச்சி பெற்றார். இவர் பிறவிலேயே இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்று திறனாளி ஆவார்.

இப்பணி கிடைத்தது பற்றி மாணவி கூறும் போது :
எனது கனவு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதே - அதற்காக மேலும் படித்து சாதிப்பேன் என்று கூறினார். மேலும் தாம் பிறவிலேயே இருந்து இந்த குறைபாட்டுடன் இருப்பதாகவும், வேறு பயிற்சி அகடாமியில் சேர்க்க முன்வராததால் வருந்தம் அடைந்தேன். ஆனால் என் .ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குனர் விஜயாலயன் எனக்கு பயிற்சி அளித்து என் மீது தனிக்கவனம் எடுத்து பயிற்சி அளித்ததால் எனக்கு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. எனது இந்த வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முக்கியமாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் இயக்குனர் விஜயாலயன் தான் காரணம். என்னை போன்ற மாற்று திறனாளிகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.

NR IAS அகடாமி இயக்குனர் விஜயாலயன் கூறும்போது : நாங்கள் 2003 முதல் பயிற்சி அகடாமி நடத்தி வருகிறோம். இது போன்று 2013ம் ஆண்டு குருப் -2 வில் பார்வையில்லாத மாற்று திறனாளி ஒருவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தற்போது 5 க்கும் மேற்ப்பட்டோர் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவர்தாகவும், இவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறினார். மேலும் தற்போது போட்டிகள் அதிகம் இருந்தாலும் எங்களின் இலக்கு வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளுடனும், அடுத்த இடத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும் தான் என்று கூறினார்.

பேட்டி : அப்ரீன் ஷிஃபானா - மாணவி
On Sunday, February 25, 2018 by Tamilnewstv   
திருச்சி      25.2.18

இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி  என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனாளி தேர்வு

2016ம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 எழுத்துத் தேர்வில் திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற கும்பகோணத்தை சேர்ந்த காதர் மூசா மகள் ஆஃப்ரின் ஷிபானா (21) என்ற மாணவி வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிள அளவை பிரிவில் பணியில் சேர தேர்ச்சி பெற்றார். இவர் பிறவிலேயே இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்று திறனாளி ஆவார்.

இப்பணி கிடைத்தது பற்றி மாணவி கூறும் போது :
எனது கனவு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதே - அதற்காக மேலும் படித்து சாதிப்பேன் என்று கூறினார். மேலும் தாம் பிறவிலேயே இருந்து இந்த குறைபாட்டுடன் இருப்பதாகவும், வேறு பயிற்சி அகடாமியில் சேர்க்க முன்வராததால் வருந்தம் அடைந்தேன். ஆனால் என் .ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குனர் விஜயாலயன் எனக்கு பயிற்சி அளித்து என் மீது தனிக்கவனம் எடுத்து பயிற்சி அளித்ததால் எனக்கு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. எனது இந்த வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முக்கியமாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் இயக்குனர் விஜயாலயன் தான் காரணம். என்னை போன்ற மாற்று திறனாளிகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.

NR IAS அகடாமி இயக்குனர் விஜயாலயன் கூறும்போது : நாங்கள் 2003 முதல் பயிற்சி அகடாமி நடத்தி வருகிறோம். இது போன்று 2013ம் ஆண்டு குருப் -2 வில் பார்வையில்லாத மாற்று திறனாளி ஒருவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தற்போது 5 க்கும் மேற்ப்பட்டோர் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவர்தாகவும், இவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறினார். மேலும் தற்போது போட்டிகள் அதிகம் இருந்தாலும் எங்களின் இலக்கு வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளுடனும், அடுத்த இடத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும் தான் என்று கூறினார்.

பேட்டி : அப்ரீன் ஷிஃபானா - மாணவி
On Sunday, February 25, 2018 by Tamilnewstv   
திருச்சி      25.2.18

இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி  என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனாளி தேர்வு

2016ம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 எழுத்துத் தேர்வில் திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற கும்பகோணத்தை சேர்ந்த காதர் மூசா மகள் ஆஃப்ரின் ஷிபானா (21) என்ற மாணவி வெற்றி பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிள அளவை பிரிவில் பணியில் சேர தேர்ச்சி பெற்றார். இவர் பிறவிலேயே இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்று திறனாளி ஆவார்.

இப்பணி கிடைத்தது பற்றி மாணவி கூறும் போது :
எனது கனவு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதே - அதற்காக மேலும் படித்து சாதிப்பேன் என்று கூறினார். மேலும் தாம் பிறவிலேயே இருந்து இந்த குறைபாட்டுடன் இருப்பதாகவும், வேறு பயிற்சி அகடாமியில் சேர்க்க முன்வராததால் வருந்தம் அடைந்தேன். ஆனால் என் .ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குனர் விஜயாலயன் எனக்கு பயிற்சி அளித்து என் மீது தனிக்கவனம் எடுத்து பயிற்சி அளித்ததால் எனக்கு தேர்வில் வெற்றி பெற முடிந்தது. எனது இந்த வெற்றிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், முக்கியமாக என்.ஆர்.ஐ.ஏ.எஸ் இயக்குனர் விஜயாலயன் தான் காரணம். என்னை போன்ற மாற்று திறனாளிகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று கூறினார்.

NR IAS அகடாமி இயக்குனர் விஜயாலயன் கூறும்போது : நாங்கள் 2003 முதல் பயிற்சி அகடாமி நடத்தி வருகிறோம். இது போன்று 2013ம் ஆண்டு குருப் -2 வில் பார்வையில்லாத மாற்று திறனாளி ஒருவர் தேர்ச்சி பெற்றார். மேலும் தற்போது 5 க்கும் மேற்ப்பட்டோர் பயின்று வருவதாகவும், அவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுவர்தாகவும், இவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்குவதாகவும் கூறினார். மேலும் தற்போது போட்டிகள் அதிகம் இருந்தாலும் எங்களின் இலக்கு வெற்றி மட்டுமே என்ற குறிக்கோளுடனும், அடுத்த இடத்தை பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும் தான் என்று கூறினார்.

பேட்டி : அப்ரீன் ஷிஃபானா - மாணவி