Thursday, March 14, 2019

On Thursday, March 14, 2019 by Tamilnewstv in ,    
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு  திருச்சி  ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் தடுப்பு முறை மற்றும் ஆரம்பநிலை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

 சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் சிறுநீரக நோய்கள் தடுப்பு முறை மற்றும் ஆரம்பநிலை சிகிச்சைக்கான முகாம் நாளை பரண்ட்லைன் மருத்துவமனையில் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் சிறுநீரக பாதிப்புகளான சிறுநீரில் புரதசத்து கசிவு, ரத்த டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான ஆலோசனை, தற்காலிக சிறுநீரக செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு  மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரத்தம் கலந்து சிறுநீர் போவது, சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீரக கல் தொந்தரவு, கட்டுப்பாடின்றி சிறுநீர் கசிவு, சிறுநீரகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ ஆலோசகர் டாக்டர் எஸ் கந்தசாமி, டாக்டர் எஸ் பாலமுருகன், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் என் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச ஆலோசனை வழங்குகினார்கள்.

மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் யூரியா கிரியேட்டின், யூரின் ரொட்டின், ரேண்டம் பிளட் சுகர் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது.

தேவைப்படும் நபர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது.  இம்முகாமில் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் முதலமைச்சரின்  விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சைக்காக 25 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன், உதய பாஸ்கர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர் .

Saturday, March 09, 2019

On Saturday, March 09, 2019 by Tamilnewstv   


திருச்சி மக்கள் அரசு கட்சி தலைவர் பேட்டி
கட்சித் தலைவர் பேட்டி



இதுநாள்வரை 22 நாட்கள் ஆன பிறகும் அவர் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்று எந்த பதிலும் இல்லை நீதிமன்றத்திலே வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்புக்களும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அதைப்போல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக முகிலனை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிலை பற்றி அறிவித்திட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியும் கூட தமிழ்நாட்டினுடைய அதிமுக அரசு எடப்பாடி தலைமையிலான இந்த அரசு மெத்தனமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது குறிப்பாக இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் கூட நான் என்ன நானே சென்று அவர் என்ன தேட முடியும் என்று மிகவும் கேலியும் நக்கலும் ஒரு பதிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து இருப்பது என்பது இந்த தமிழ்நாடு மக்கள் மீதும் குடிமகன் மீதும் அவருக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது அந்த அடிப்படையில் உடனடியாக பல்வேறு நபர்களை இதுபோல குறிப்பாக சொன்னால் 1980களில் மக்களுக்காக போராடிய அப்பு என்பவர் காணாமல் போய்விட்டார் என்று சொல்லி இதனால் வரை அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை ஆனால் உண்மையில் நடந்தது அவர் படுகொலை செய்யப்பட்டு அவர் தீர்த்துக்கட்டிய பட்டு விட்டார் என்பது உண்மை ஆனால் இதுவரை அரசு ஆவணங்களில் அரசு ரெக்கார்டில் என்ன இருக்குன்னு சொன்னாங்க அப்போது காணாமல் போய்விட்டார் அதேபோல மூத்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கரசுப்பு அவருடைய மகன் காணாமல் போனார் அவருடைய உடல்நிலை உயிரற்ற உடலம் மீட்கப்பட்டது திருச்சியில் அவருடைய முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் காணாமல் போனார் அவர் உடல் உயிரற்று மீட்கப்பட்டது இதுபோல ஆனால் இதுவரை கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை அந்த வரிசையில் முகிலனும் சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நிலவிக்கொண்டிருக்கிறது அந்த கம்பெனிக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் கம்பெனிக்கு ஆதரவாக கார்ப்பரேட் முதலாளிகள் கூட்டு சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அரசு முடித்து விட்டார்களோ என்று அவருடைய உயிருக்கு ஒரு ஆபத்தை ஏற்படுத்தி விட்டது என்கிற ஐயம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது ஆகவே தமிழ்நாடு அரசு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனடியாக முகிலனை குறித்த உண்மைத் தகவலை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் முகிலன் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்று மக்கள் அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்



பேட்டி மக்கள் அரசுக் கட்சி தலைவர் ரஜினிகாந்த் வழக்கறிஞர்

Friday, March 08, 2019

On Friday, March 08, 2019 by Tamilnewstv   
திருச்சி


திருச்சியில்

மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.


ஸ்ரீ பகவன் நாம பிரச்சார சேவா மண்டலி சார்பில்   11ஆம் ஆண்டு மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண

3 நாள் வைபவம் திருச்சி திருவானைக்காவல் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவங்கியது.

முதல் நாள் காலை

6 மணி அளவில் மகாகணபதி ஹோமம் அதனைத்தொடர்ந்து சப்தஜென்மபாப விமோசனம் மற்றும் சர்வரோஹ நிவாரணி யக்ஞம் நடைபெற்றது. மாலை சங்கீத உபன்யாசம் கலைமாமணி

வைஜெய்ந்திமாலா குழுவினரின் சங்கீத  உபன்யாஸம் நடைபெற்றது.  இரண்டாவது நாளான இன்று காலை

சித்தி புத்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து        ராஜாராம் பாகவதரின் பஜனை  நடைபெற்றது.  மாலை மூவர் தேவாரம் மற்றும் டெல்லி ஸ்ரீசங்கர் பாகவதரின் மூவர் தேவாரம் கச்சேரி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நாளை காலை  மீனாட்சி கல்யாண வைபவம் மற்றும் வாத்தியார் வெங்கட்ராமராவின் வாத்யலஹரி  மற்றும் நாட்டிய நடைபெற்றது
On Friday, March 08, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி


திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது


நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்களாக பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் துறைகள் ஈமானிய சட்டமன்ற கூட்டத் தொடரின் போது சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக போராட்டத்தையே டாஸ்மார்க்கில் உள்ள இதர சங்கங்களை சந்தித்து அழைத்து இணைந்து போராட்டமாக நடத்திட அறைகூவல் விடுப்பது என்றும் அடுத்த சட்டமன்ற தொடரின்போது அரசியல் கட்சிகளின் சட்டமன்ற தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது என்றும் விற்பனை கடைகளில் வேலை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைத்திட அரசை கேட்டு கொள்வது என்றும் விற்பனைத் தொகையில் பிற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள நடைமுறை போல் அரசு வங்கிகள் மூலம் நேரடியாக வசூலித்து விட நடவடிக்கை மேற்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் பாலுச்சாமி மாநில பொதுச் செயலாளர் ராஜா மாநில பொருளாளர் அருள்மணி அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்

Sunday, January 27, 2019






ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா 
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார்.






 ஆண்டவன் ஆசிரம தேசியத்தலைவர் ராஜகோபால் தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராதிகா அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்களையும் கல்லூரியில் 20 ஆண்டுகள் பணி புரிந்தவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.  இயக்குனர் ராமானுஜம் முன்னிலை வகித்தார் துணை முதல்வர் பிச்சைமணி நன்றி கூறினார்

Friday, January 18, 2019

On Friday, January 18, 2019 by Tamilnewstv in ,    

பட்டமளிப்பு விழா ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் இருபதாவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் மாலை மூன்று முப்பது மணி அளவில் நடைபெற்றது



சிறப்பு விருந்தினராக கரூர் வைசியா வங்கி நிர்வாக இயக்குனர் சேஷாத்திரி பங்கேற்கிறார்

மேலும் ஸ்ரீ ரங்கநாதர் பாதுகா வித்யாலயா தலைவர் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தேசிய தலைவர் ராஜகோபால் கல்லூரி செயலர் அம்மன்கி பாலாஜி இயக்குனர் ramanujam முதல்வர் ராதிகா துணை முதல்வர் பிச்சைமணி உட்பட துறைத்தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் பட்டமளிப்பு விழாவில் 736 இளங்கலை மாணவர்களும் 162 முதுகலை மாணவர்களும் பட்டம் பெற்றனர்

Sunday, January 06, 2019

On Sunday, January 06, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பேட்டி

மாநிலம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் அவர்களை அடிமைகளாக நடத்தி வருகிறார் பணியாளர்களுக்கு பணி வாய்ப்புகள் வரும் குறைபாடுகளும்  தலைவிரித்து ஆடுகின்றன 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை

ஊதிய விகிதம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை ஏற்கப்படவில்லை ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் பணியாளர்கள் சுமார் 30,000 பேர் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் இதுகுறித்து  22.1. 2019 அன்று திருச்சியில் கருத்தரங்கம் நடத்தி டாஸ்மாக்கில் நடப்பது என்ன என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் p.முருகானந்தம் மாவட்டத் தலைவர் t.ஜவஹர்லால் நேரு மாவட்ட செயலாளர் என் கண்ணன் மாவட்ட அமைப்பு செயலாளர் s.பெருமாள் மாவட்ட இணை செயலாளர் g.பழனிச்சாமி மாவட்ட துணைச் செயலாளர் ஆர் ஆர் செல்வம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் a.சுப்பிரமணி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் d.தமிழரசன் மற்றும்k. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்


திருச்சி சோமரசம்பேட்டை அருகில் டாஸ்மாக் ஊழியர்கள் இடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அதில் பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் இருவரும் தமிழரசன் குணசேகரன் பாதிக்கப்பட்டனர் இவர்கள் இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது பேட்டியின்போது உடனிருந்தனர்

பேட்டி பாலசுப்பிரமணியம் சிறப்புத் தலைவர் டாஸ்மாக் பணியாளர் சங்கம்

Saturday, December 29, 2018

On Saturday, December 29, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி

தமிழ்நாடு மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பாக திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ER மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது


நிகழ்ச்சியில் ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர் தலைமை வகித்தார் சந்திரசேகரன் மாவட்ட தலைவர் வரவேற்புரையாற்றினார் மாநில அமைப்பு செயலாளர் முனைவர் மு உதயகுமார் சிறப்புரையாற்றினார் மாநில பிரச்சார செயலாளர் பிரேம்குமார் சிறப்புரையாற்றினார் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் 50க்கும் பள்ளி மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்


இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில அமைப்பு செயலாளர் உதயகுமார் கூறியபோது மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற மாநில பொதுக்குழு தீர்மானத்தை இப்போது குழு மீண்டும் வலியுறுத்துகிறது என்று தலைமையாசிரியர் ஆசிரியைகளின் முழு வேலை நேரத்தை கற்றல்-கற்பித்தல் பணிகளுக்கு பயன்படுத்த ஏதுவாக நலத்திட்டங்களுக்கு ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளி க்கும் நல திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது மேலும் விலையில்லா மடிக்கணினி வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் இருப்பு வைத்து பொது பாதுகாப்பு ஏற்பாட்டினை செய்து குறுகிய கால அளவில் அனைத்து பள்ளிகளும் பெற்று வழங்க ஆவன செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்


பேட்டி ...
மாநில அமைப்பு செயலாளர்
முனைவர் உதயகுமார்

ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர்

Sunday, December 23, 2018

On Sunday, December 23, 2018 by Tamilnewstv   
திருச்சி     23.12.18

தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி  திருச்சியில் கருஞ்சட்டை பேரணியும், தமிழர் உரிமை மீட்பு மாநாடும் நடைபெறுகிறது

பெரியார் கொள்கைகளைப் பின்பற்றிவரும்
திராவிடர் கழகம், மே 17 இயக்கம் தேர்தல் அரசியலை முன்னெடுக்காத அமைப்புகள்
என உள்ளிட்ட
150-க்கும் மேற்பட்ட
பல்வேறு அமைப்புகள் பங்கேற்றுள்ளன.இம்மாநாடுக்கு முன்னதாக சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் `கருஞ்சட்டை’ அணிந்து திருச்சி தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது தென்னூர் ரோடு வழியாக மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானம் வந்தடைந்தனர்.
இந்த மாநாட்டில் சுப.வீரபாண்டியன்,
மே.17 இயக்கம் திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி உட்பட பலர் பங்கேற்கின்றனர்