Monday, June 10, 2019

Sunday, June 02, 2019

On Sunday, June 02, 2019 by Tamilnewstv   
திருச்சி புற்றுநோயை வென்றவர்கள் அவர்களுக்கான மறுவாழ்வு தினம் இன்று கொண்டாடப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை புற்று நோய் மறுவாழ்வு தினமாக கொண்டாடப்படுகிறது இதன் நோக்கம் புற்றுநோய் வந்த பின்பும் வாழ்க்கை இருக்கிறது என்று புற்று நோயை வெல்ல முடியும் என்பதையும் இவ்வுலகிற்கு பறைசாற்றுவதாகும் உலகம் முழுவதும் தோராயமாக 32 மில்லியன் புற்றுநோயாளிகள் நோயை வென்று மறுவாழ்வு பெற்று இவ்வுலகில் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

 இந்த சமுதாயம் அவர்களை நினைவுகூர்ந்து மீண்டும் நமது சமுதாயத்திற்கு ஒரு அங்கத்தினராக அவர்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது 26 நவம்பர் 2004 லான்செட் என்ற மருத்துவ மனை மருத்துவ இதழில் வெளியிடப்பட்டு தகவலின்படி இந்தியாவில் புற்று நோய் குணமடையும் சதவீதம் மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது 50 சதவீதம் குறைவாகவே உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது இதன் முக்கிய காரணமாக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மற்றும் தொடர் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால் ஆகும்
இந்நிலையில் மாறவேண்டுமானால் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நமது சமுதாயத்தை மிகவும் அவசியமாகிறது புற்றுநோய் வந்தால் குணப்படுத்த முடியும் என்று புற்று நோய் வந்தவர்களும் உண்டு என்பதை சொல்லும் விதமாக அமைந்திருக்கும் இந்த நாளை தீபாவளி பொங்கல் போன்ற விழாவாகக் கொண்டாடப்படுகிறது
இந்நிகழ்ச்சியில் செந்தில்குமார் மருத்துவர் வரவேற்புரையாற்றினார் மருத்துவர் ஜெயபால்  மருத்துவர் அருண் சேஷாசலம்சிறப்புரை ஆற்றினார் அஷ்ரப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மருத்துவர் பாலாஜி நன்றி உரையாற்றினார்

Saturday, June 01, 2019

திருச்சி

திருச்சியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.


கோடைவிடுமுறை முடிந்து வருகிற திங்கள் கிழமை  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு திருச்சியில் நடைபெற்றது.





இதில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி மற்றும் அவசரகால வழி  போன்றவை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. ஆகஸ்போர்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு முகாமில் டாக்டர் அகர்வால்  கண் மருத்துவமனை சார்பில், பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் மாவட்ட துணை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசும்போது பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை குறிப்பிட்ட வேகத்திலேயே இயக்கவேண்டும், பேருந்தில் இருக்கும் தீயணைப்பு கருவிகள் செயல்படுவது குறித்து அறிந்து கொள்ளவேண்டும்.  பேருந்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் உடனடியாக தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதை சரிசெய்ய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து செல்வது ஒவ்வொரு ஓட்டுநரின் கடமை என கூறினார்.

இதில் பள்ளிபேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறையினரால்  செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Thursday, May 30, 2019

On Thursday, May 30, 2019 by Tamilnewstv   
திருச்சி 

 உதயநிதிக்கு இளைஞர் அணியில் பதவி கொடுக்க வேண்டும்  - திருச்சி திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

 திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. அவைத்தலைவர் அம்பிகாபதி தலைமை வைத்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என் நேரு பேசுகையில், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலாவதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் ஜூன் 15ஆம் தேதி நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. இதில் திருச்சி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறச் செய்ததற்காக ஒருங்கிணைந்த நன்றி அறிவிப்பு கூட்டம் ஆக இது நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலை கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அடுத்த கட்டமாக வரும் ஜூன் 3ம் தேதி திமுக தலை கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நம்பிக்கையுடன் மக்கள் அதிக அளவில் திமுக கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர். தேர்தல் முடிவுக்கு பின்னர் தான் கடன்களை செலுத்த விவசாயிகள் முன்வந்துள்ளனர். இன்னும் ஒரு ஆண்டு இதே நிலைதான் நீடிக்கும். அதனால் நமது சிறப்பான பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து பணியாற்றினால் 1971 ஆம் ஆண்டு திமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம். திமுக தலைவர் ஸ்டாலின் மீது பிரதமர் மோடி அதிக அளவில் கோபத்தில் உள்ளார். அதனால் தான் அவரது பதவி ஏற்பு விழாவுக்கு கூட ஸ்டாலினை அழைக்கவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளை மீறி தான் நாம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். டெல்டாவில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் வெற்றி பெறமுடியாத நிலையை உருவாக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் காரணமாக டெல்டாவில்  பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. சிறுபான்மை இன மக்களை சமமாக நடத்துவோம் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். ஏனெனில் உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தியுள்ளோம் இந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உள்ளது என்றார். கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவிப்பது, கடுமையான தேர்தல் பணியாற்றிய திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி பதவி நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Friday, May 24, 2019

On Friday, May 24, 2019 by Tamilnewstv in ,    
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர்



திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருநாவுக்கரசர் கூறினார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ராகுல்காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மாபெரும் வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.

எனக்கு வாக்காளர்கள் வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசியுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நினைத்தேன். மூன்று லட்சம் வித்தியாசம் எதிர்பார்த்தேன். ஆனால் 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

திருநாவுக்கரசர்

பரப்புரையின்போது உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து எம்.பி. வளர்ச்சி நிதியை ஆறு தொகுதிகளுக்கு பிரித்து கொடுத்து திட்டங்களை நிறைவேற்றுவேன்.

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எம்.பி. என்ற முறையில் அமைச்சர்கள், அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தி தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். மக்களவையில் அழுத்தம் கொடுப்பேன். தேவைப்பட்டால் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன். உண்ணாவிரதம் இருப்பேன்" என்றார்.

Monday, May 20, 2019

On Monday, May 20, 2019 by Tamilnewstv   

ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அனைத்து  கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வைத்தார். ஆனால் இது வரை அவர்கள் விடுதலை செய்யவில்லை.  தற்போது உச்சநீதிமன்றமும் இந்த விடுதலை விவகாரம் கவர்னர் முடிவில் உள்ளது என கூறி விட்டது. இந்நிலையில் இன்று காலை

 27 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தினர் இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில்
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் 500 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் 20க்கு மேற்ப்பட்டன்  ஈடுப்பட்டனர்.
பேட்டி : லெனின்,
   இந்திய ஜனநாயக      வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்

Sunday, May 19, 2019

On Sunday, May 19, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி ராக்போர்ட் அசில் அமைப்பு சார்பாக சேவல் கண்காட்சி


அனைத்து மாவட்ட சேவல் சங்கம் இணைந்து மாபெரும் முதலாம் ஆண்டு கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது அதில் அனைத்து மாநில மாவட்ட சேவல் அழைப்பாளர்கள் கலந்து கொண்ட னர்
இந்நிகழ்ச்சியில் விஸ்வநாதன் தேவர் குணா மேலூர் மணி ஆனந்த் கீதா பாலசுப்ரமணியன் இலக்கியா சரவணன் கார்த்திக் ஆகியவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் நடைபெற்ற விழாவில் அலங்காநல்லூர் ஆலடி முள்ளி கரும்பூர் திருக்கை வேலன் திண்டுக்கல் இன்ஜினியர் மணிகண்டன் திண்டுக்கல் திண்டுக்கல் சித்திக் பாய் சென்னை ஜஹாங்கீர் சென்னை நவாஸ்கான் திண்டுக்கல் நெல்சன் பெரியகோட்டை முருகன் திண்டுக்கல் ஹாஜி சலீம் கரூர் குகன் ராம் கோவில்பட்டி பரமசிவம் காரைக்குடி கம்பன் மதுரை ஒத்தக்கடை மச்ச ராஜா பொள்ளாச்சி செந்தில் அரசு உடுமலைப்பேட்டை மணிகண்டன் சுல்தான் கோபிசெட்டிபாளையம் நித்தியானந்தன் மணப்பாறை ரெங்கராஜ் மதுரை ராஜமாணிக்கம் மதுரை ஒத்தக்கடை சிவா சிங்கம்புணரி ஆனந்தன் உடுமலைப்பேட்டை நடப்பன் அய்யம்பாளையம் நாகராஜ் நிலக்கோட்டை மரக்கடை ராஜா கேரளா மாட்டின் தெலுங்கானா சவுதி அரேபியா பெங்களூர் ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து கலந்து கொண்டனர்


நடைபெற்ற நிகழ்ச்சியில் லோகநாதன் சரவணன் திருச்சி பாலு ஆகியோர் தலைமை வகித்தனர்
அப்போது அக்பர் உசேன் என்பவர் பேட்டியின் கூறியபோது ஆதிசேஷன் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக நாங்க விசிறிவால் சேவல் கண்காட்சி நடந்த தமிழ்நாட்டில் இருந்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டுள்ளது பரிசுகள் வழங்கப்படுகிறது மேலும் இந்த அரிய வகை சேவல்கள் தமிழகத்தில் பாரம்பரியமான சேவல்கள் ஆகும் தற்போது இந்த சேவல்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கண்காட்சி நடத்தி வருகிறோம் மேலும் இந்த சேனல்கள் சண்டைகளுக்கு பயன்படுத்துவதில்லை அழகு என்பதை பொறுத்து படுத்தியே சேவல்கள் வளர்க்கப்படுகின்றன இந்த சேவல்கள் நவதானியங்கள் மட்டுமே உண்ணுகின்றன
இந்த சேவல்கள் ஒரு லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது அழகான சேவல்களுக்கு மட்டுமே முதல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்
பேட்டியின்போது தலைவர் லோகநாதன் செயலாளர் சரவணன் பொருளாளர் லிங்க் வாசு துணைச் செயலாளர்கள் கோபிநாதன் பொன்னர் இணைச் செயலாளர்கள் மணிகண்டன் தர்மலிங்கம் துணை பொருளாளர்கள் வாசு துறை  சேகர் சட்ட ஆலோசகர் சுரேஷ்குமார் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்


பேட்டி ...அக்பர் உசேன்

Friday, May 10, 2019

On Friday, May 10, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர் அவர்களிடம் லெனின் மாவட்ட செயலாளர் மனு அளித்தனர்


இன்னைக்கு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து அரசு பள்ளிகள் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை அதிகமாக கொடுக்கணும் என்று தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஏற்படுத்தக்கூடிய மாணவ மாணவிகளின் தேர்ச்சி


தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஏற்படுத்த கூடிய மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற அதிகமாயிருக்கு உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் அதிகப்படுத்த அரசு பள்ளிகளில் மாணவர்களை இன்னும் அதிகப்படுத்த அதேபோல இன்னைக்கு தனியாருக்கு வந்து அரசு பள்ளிகளில் சேர்க்கை இல்லை அப்படின்னு சொல்லிட்டே இன்னைக்கு தனியார் மயப்படுத்தும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இதே நேரத்தில் கேரளா இன்னைக்கு அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30,000 பிள்ளைகளை வந்து இன்னைக்கு தனியார் பள்ளிகளில் அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றங்கள் அதேபோல ஒரு சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்த அரசு பள்ளிகளை பாதுகாக்க முடியும் அதே நேரத்தில் இன்னைக்கு வந்து தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு அதிகரித்து போயிருக்கு அரசாங்கம் இன்னைக்கு அதற்காக சில கமிட்டிகளை அறிவிக்கப்பட்டு உள்ளது  அதை எவ்வளவு சொல்லி அறிவதற்கான அந்த வெப்சைட் இயங்க மாட்டேங்குது இது வந்து பெற்றோர்கள் என்ன என்று தெரியாமல் பள்ளிகள் நிர்ப்பந்தப்படுத்தி கூடிய தொகையை கட்ட கூடிய சூழலில் இந்த வெப்சைட்டை வெளியிடும் அரசாங்க நிர்ணய தொகையை தனியார் பள்ளிகள்  தன்னுடைய அறிவிப்பு பலகையில் கட்டண தொகையை வெளியிட வேண்டும் அதே போல எனக்கு அரசு அறிவித்துள்ள கூடிய 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அதற்கு பதிவு செய்யக்கூடிய அந்த வெப்சைட் முழுமையாக வேலை செய்வதே கிடையாது 18ஆம் தேதியோடு இறுதிகட்ட வந்து இன்னைக்கு பல மாணவர்களை மாணவியர்களை பதிவு செய்யப்படாமல் பெற்றோர்கள் பரிதவித்து  நிற்கிறார்கள் அரசாங்க அதையும் மூடுவதற்கான ஏற்பாடு 18ஆம் தேதி அதை இன்னும் காலநீட்டிப்பு செய்யணும் அந்த வெப்சைட்டை ஒழுங்காக இயக்கப் படவேண்டும் ஒரு கோரிக்கையோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம் இந்த மனுவின் மீது நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை இந்திய ஜன வாலிபர் சங்கம் நடத்தும் என்ற எச்சரிக்கையோடு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதற்கு நாங்கள் எங்களுடைய மனுவை அளித்துள்ளோம்  லெனின் மாவட்ட செயலாளர் கூறினார்



பேட்டி மாவட்ட செயலாளர் லெனின்