Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தாம்பரம், 
தாம்பரத்தில் நகை பாலீஷ் போடுவது போல நடித்து 10 பவுன் தங்க நகைகளை அபேஸ் செய்த வடநாட்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பாலீஷ்
சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் 4–வது தெருவைச் சேர்ந்தவர் பஷீரா (வயது 45). இவரது உறவினர் ரெஜினாபேகம் (48). 2 பேரும் கடப்பேரி எம்.இ.எஸ் சாலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த வடநாட்டு வாலிபர்கள் 2 பேர் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர்.
இருவரும் கொலுசுகளை கழற்றி பாலீஷ் போட கொடுத்தபோது அதை பாலீஷ் போட்டு புதிது போல மாற்றி கொடுத்தனர். உடனே அவர்கள் தங்க நகைகளுக்கும் பாலீஷ் போடுவோம் என கூறினர். இதைத் தொடர்ந்து இருவரும் 10 பவுன் தங்கச் சங்கிலிகளை பாலீஷ் போட கொடுத்தனர். நகைகளை வாங்கி பாலீஷ் போடுவது போல ஒரு சட்டியில் போட்டு நீண்ட நேரம் மஞ்சள்நிற பொடியை போட்டு கிளறினர்.
10 பவுன் நகை மோசடி
இதன் பின்னர் தங்கச்சங்கிலிகளை கண்இமைக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்ட அவர்கள், ‘சட்டியில் நகைகள் உள்ளன. சிறிது சூடுபடுத்தி அதன் பின்னர் குளிர்ந்தவுடன் எடுத்து விடுங்கள் நகை புதிதாக இருக்கும்’ என கூறி கூலியாக ரூ.600 வாங்கிக் கொண்டு வடநாட்டு ஆசாமிகள் கம்பி நீட்டி விட்டனர்.
அவர்கள் சென்றபின்னர் சட்டியை சூடுபடுத்தி குளிரவைத்து சட்டிக்குள் கைவிட்டு பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது தொடர்பாக தாம்பரம் போலீசில் புகார் செய்தனர். தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
செங்குன்றம், 
மனைவி, மகளை கொன்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி, புழல் ஜெயிலில் மர்மமான இறந்து கிடந்தார்.
ஆயுள்தண்டனை கைதி
சென்னை அடையாறு பேங்கர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 50). இவர் கடந்த 2011–ம் ஆண்டில் தனது மனைவி, மகளை எரித்துக் கொலை செய்த வழக்கில் கடந்த 10.9.2014 இரட்டை ஆயுள்தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று இரவு உணவை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்றார்.
இரவு 7 மணிக்கு புழல் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடைபட்டது. சிறை போலீசார் அனைத்து கைதிகளையும் சிறையில் அடைப்பதற்காக பார்த்த போது அசோக்ராஜை மட்டும் காணவில்லை.
மர்மச்சாவு
உடனே சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜேந்திரன், சூப்பிரண்டு அன்பழகன், கூடுதல் சூப்பிரண்டு ருக்மணி மற்றும் சிறை போலீசார் அசோக்ராஜை தேடிப்பார்த்தனர். அவரை காணவில்லை. அப்போது சிறை அறையில் இருந்து ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே மர்மமான முறையில் அசோக்ராஜ் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நல்ல ஆரோக்கியமாக இருந்த கைதி அசோக்ராஜ் திடீரென எப்படி இறந்தார்? சக கைதிகள் சேர்ந்து தண்ணீர் தொட்டியில் அமுக்கி அவரை கொலை செய்து விட்டார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
பூந்தமல்லி, 
பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் பாகிஸ்தான் உளவாளி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலுக்கு அனுப்புவது பற்றி இன்று நீதிபதி அறிவிப்பார்.
பாகிஸ்தான் உளவாளி
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான தமீம் அன்சாரியை தேசிய புலனாய்வு போலீசார் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கல்பாக்கம் அனுமின் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் அடங்கிய சி.டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தன்னைப்போல் உளவாளிகள் 3 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக அவர் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த வருடம் மண்ணடியில் ஜாகீர் உசேனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது உளவு பார்த்தல் மற்றும் கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன.
இவருக்கு உடந்தையாக இருந்ததாக முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அருண் செல்வராசன்
இதையடுத்து விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மற்றொரு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு போலீசார் கடந்த 10–ந் தேதி கைது செய்து பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அருண் செல்வராசனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேசிய புலனாய்வு போலீசார் கடந்த 12–ந் தேதி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.
கோர்ட்டில் ஆஜர்
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண் செல்வராசன் கோர்ட்டில் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி மோனி, அருண் செல்வராசனிடம் போலீஸ் விசாரணைக்கு செல்ல விருப்பமா? என்று கேட்டார்.
அதற்கு அருண் செல்வராசன் எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார். எத்தனை நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறித்து நாளை (அதாவது இன்று) தெரிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். இதையடுத்து அருண் செல்வராசனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து அரசு தரப்பு வக்கீல் பிள்ளை கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு கொடுக்கப்பட்டிருந்தது. எத்தனை நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்படும் என்பதை இன்று (புதன்கிழமை) நீதிபதி தெரிவிப்பார். மேலும் அருண் செல்வராசனிடம் விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. அதிகாரிகளும் மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கருங்கல் அருகே மிடாலம் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் நிலவி வருவதால், கடற்கரையோர மக்கள், உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடல் சீற்றம்

குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக கடல்சீற்றம் நிலவி வருகிறது. கடலில் ராட்சத அலைகள் தோன்றி, தடுப்பு சுவர் இல்லாத இடங்களிலும், தடுப்புசுவர் பழுதடைந்த பகுதிகளிலும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், கடற்கரையோர சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கருங்கல் அருகே மிடாலம், மேல்மிடா லம் பகுதியில் நேற்றும் கடல் சீற்றம் தொடர்ந்து நீடித்தது. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் 1986-ம் ஆண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. தற்போது, இந்த தடுப்புச்சுவர் சேத மடைந்த நிலையில் காணப் படுகிறது.

உறவினர் வீடுகளில் தஞ்சம்

இந்த பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கடலரிப்பு ஏற்பட்டு பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளன.

இதனால், கடற்கரையோர பகுதி மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள் ளனர். எனவே, இந்த பகுதியில் கடலரிப்பை தடுக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிடாலம் பங்கு அருட் பணியாளர் ஜாண்ராபின்சன், ஊர்தலைவர் சிவில் ஆகியோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சபரிமலை அய்யப்பன் கோவிலில் செறுவள்ளி நாராயணன் நம்பூதிரி தலைமையில் நடத்தப்பட்ட அஷ்ட மங்கல்ய தேவ பிரசன்ன உத்தரவு படியான பரிகார பூஜைகள் நேற்று திருவனந்தபுரம் பத்ம நாப சாமி கோவிலில் தொடங்கியது.
அருள் வாக்கு கேட்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடத்தப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள், கட்டுமான பணிகள் தொடர்பாக செறுவள்ளி நாராயணன் நம்பூதிரி தலைமையில் கடந்த ஜூன் 18– ந் தேதி முதல் 3 தினங்கள் சபரிமலை சன்னிதானத்தில் தேவபிரசன்னம் (தெய்வ அருள் வாக்கு கேட்டல்) பார்க்கப்பட்டது. அப்போது கேரளாவில் உள்ள பிரபல கோவில்களில் பரிகார பூஜைகள் நடத்த அருள் வாக்கு கூறப்பட்டது.
பரிகார பூஜை
அதன் படி நேற்று பரிகார பூஜைகள் தொடங்கியது. திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் காலை 9.30 மணியளவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் தலைமையில், முதலில் அக்ரக சாலை கணபதி கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சாமியின் ஆசிர் வாதத்துடன், நாலம்பலகத்தினுள் சென்று, நரசிங்க சாமியை வழிபாடு நடத்திய பின், பத்மநாபனுக்கு துளசி மாலை சாத்தி, பால் பாயாசம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்பலத்தை சுற்றி வலமாக வந்து கிருஷ்ண பகவானை தொழுது வணங்கி வழிபாடு நடத்திய பின், தர்ம சாஸ்தா கோவிலுக்கு சென்று, நீராஞ்சனம் வழிபாடு நடத்தப்பட்டது. பரிகார பூஜையின் போது பத்மநாபனுக்கு பால்பாயாசம் படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நரசிங்க மூர்த்திக்கு புஷ்பாஞ்சலியும், கணபதிக்கு ஹோமமும் நடத்தப்பட்டது. ஆஞ்சநேய சாமிக்கு வெண்ணை முழுக்காப்பும், தர்ம சாஸ்தாவிற்கு நீராஞ்சனம் வழிபாடுகளும் நடத்தப்பட்டது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் தலைமையில் உறுப்பினர்கள் சுபாஷ் வாசு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.கெ. குமாரன், கமிஷனர் வேணுகோபால் ஐ.ஏ.எஸ், தலைமை பொறியாளர் ஜோலி உல்லாஸ், சபரிமலை செயல் அதிகாரி ஜெயகுமார், பத்மநாபசாமி கோவில் செயல் அலுவலர் கெ.என். சதீஷ், பாதுகாப்பு அதிகாரி ஜெ. சுகுமாரபிள்ளை, சபரிமலை முன்னாள் மேல் சாந்தியும், பத்மநாபசாமிகோவில் சாந்தியுமான கோசால விஷ்ணுவாசுதேவன் நம்பூதிரி, ஆகியோர் சிறப்பு பரிகார பூஜை வழிபாடுகளை நடத்தி வழிபட்டனர்.
மேலும் 15 கோவில்களில்
பரிகார பூஜையின் தொடர்ச்சியாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு கிழ் செயல்படும் 10 கோவில்களிலும் மேலும் 5 கோவில்களிலும் பரிகார பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என்று சபரிமலை அய்யப்பன் கோவில் மக்கள் தொடர்பு அதிகாரி முரளி கோட்டைக்ககம் தெரிவித்தார்.
நடை திறப்பு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. 21– ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், உட்பட பூஜைகள் நடைபெறும்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகர்கோவில் கீழபெருவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகள் தேவிகலா (வயது 17) பிளஸ்–2 படித்துள்ளார். இவர் கடந்த 9–ந்தேதி முப்பந்தல் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் சுப்பிரமணியம் புகார் செய்தார். இந்தநிலையில் மறுநாள் போலீஸ் நிலையத்தில் தேவிகலா ஆஜரானார். அப்போது தோவாளை கமல் நகரை சேர்ந்த சரவணன் (31) என்பவரை காதலிக்கிறேன். வீட்டில் கண்டித்ததால், உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வந்தேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தேவிகலாவை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று தோவாளையில் திருமண வயதை எட்டாத தேவிகலா–சரவணன் ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராஜபதிக்கு தகவல் வந்தது. உடனே அவர் உத்தரவின் பேரில் அலுவலர் அஜிதா, தோவாளை கிராம நிர்வாக அதிகாரி கலைவாணி, ஆரல்வாய்மொழி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டில் திருமண ஏற்பாடு நடந்தது தெரிய வந்தது. தேவிகலாவுக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து தேவிகலா மற்றும் சரவணன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தேவிகலாவுக்கு 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்யலாம். அதற்கு முன்பு திருமணம் செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், திலகர் திடல் பின்புறமும் தலா ரூ.30 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த 2 உணவகங்களையும் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சை மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் அவர்கள் சமையலுக்கு தேவையான உபகரணங்களையும் பார்வையிட்டனர்.
இவர்களுடன் தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சந்திரபோஸ், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணை தலைவர் புண்ணியமூர்த்தி, நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன், 38–வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் பூவை.சரவணபவன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணை முகாமில் ஒரே நாளில் 323 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

சிறப்பு விசாரணை முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலு வையில் இருக்கும் மனுக்களை சிறப்பு முகாம்கள் நடத்தி தீர்வு காண மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார். அவருடைய உத்தர வின் பேரில் தேனி, போடி, சின்னமனூர், உத்தம பாளை யம், ஆண்டிப்பட்டி, கட மலைக்குண்டு, பெரியகுளம் ஆகிய 7 இடங்களில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடத்தப்பட்டது.

இந்த முகாமிற்கு அந்தந்த பகுதி போலீஸ் துணை சூப்பி ரண்டுகள் தலைமை தாங்கி னர். தேனியில் நடந்த முகாமில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் முத்துக்குமார், வெங்கடாசல பதி, சப்-இன்ஸ்பெக்டர் உதய குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையம் வாரியாக தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டன. இதில் 130 மனுக்கள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, 115 மனுக்கள் தீர்வு காணப்பட்டன.

323 மனுக்கள் தீர்வு

அதேபோன்று போடி, சின்னமனூர் பகுதிகளில் 79 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 54 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. உத்தம பாளையத்தில் 87 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, 67 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. ஆண்டிப்பட்டி, கடமலைக் குண்டு ஆகிய இடங்களில் 85 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 58 மனுக்களும், பெரியகுளத்தில் 52 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு 29 மனுக்களும் தீர்வு காணப்பட்டன. மாவட் டம் முழுவதும் மொத்தம் 533 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 323 மனுக்கள் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது.

இந்த முகாம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறுகையில், ‘பொது மக்களுக்கு காலதாமதம் இல் லாமல், நேரம் மற்றும் அலைச் சலை குறைக்கவும், விரைவில் நீதி கிடைக்கவும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை குறைக்கவும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேனி மாவட்டத் தில் இதுபோன்ற சிறப்பு முகாம் கள் நடத்தப்படும்’ என்றார்.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில், சட்டவிரோதமாக திராவகம் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

திராவகம் விற்பனை

கல்லூரி மாணவிகள் மீது திராவகம் (ஆசிட்) வீசப்படும் சம்பவம் எதிர்பாராத வகை யில் நடந்து வருகிறது. இத னால் திராவகம் விற்பனை செய்ய ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 2 கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் திராவகம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்ப வத்தின் எதிரொலியாக சட்ட விரோதமாக திராவகம் விற் பனை செய்வதை தடுக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் திராவகம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் சோதனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார்.

அதன்படி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வை யில் அந்தந்த உட்கோட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர சோதனை நடத்தினர். மாவட்டம் முழு வதும் போலீசார் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடைகளில் சோதனை

தேனியில் போலீஸ் இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் தலை மையில், சப்-இன்ஸ் பெக்டர் ரேகா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் திராவகம் விற் பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதா? என்றும், திராவகம் விற்பனை செய்யும் கடைகளில் அதற்கான உரிமம் பெற்றுள் ளனரா? என்றும் சோதனை நடத்தப்பட்டது. ரசாயனம் வைக்கப்பட்டு உள்ள குடோன் களுக்கு சென்றும் போலீசார் சோதனை செய்தனர்.

திராவகம் விற்பனை செய் யும் உரிமம் பெற்ற சில்லறை கடைகளில் அதன் உரிமையா ளர் யாருக்கு, எவ்வளவு திராவ கம் விற்பனை செய்கிறார் என்ற விவரம் அடங்கிய விவர பதி வேட்டை பராமரிக்க வேண் டும். 18 வயதுக்கு குறைவான வர்களுக்கு திராவகம் விற்பனை செய்யக்கூடாது. உரிமம் பெறாமல் சட்ட விரோ தமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோதனையின் போது போலீசார் அறிவுறுத்தினர்.